பயணம் @ டைம்மெஷின் -6
முந்தைய பதிவுகள்
பயணம் @ டைம்மெஷின்
அத்தியாயம் -3
கி.மு. 2 ஆம் நூற்றாண்டு
பகுதி -4
தஞ்சாவூர் பயணம்
செந்நிறக்கதிர்களுடன்
, இருளைக்கிழித்து உதயமானன் சூரியன் . ஏற்கனவே காலைக்கடன்களை எவ்வாறு முடிக்கவேண்டும்
, எங்கே எவ்வாறு குளிக்கவேண்டும் என்பதை கடந்த இரு காலைப்பொழுதுகளில் அவர்கள் கற்றுக்கொண்டபடியால் , இன்றைய தினம் அவர்களுக்கு
எளிமையாக இருந்தது . இரண்டுநாட்களில் , அவர்கள் வாழ்க்கை திக்குத்தெரியாத காட்டாற்றைப்போல்
பயணித்திருப்பது அதிசயமாய் இருந்தது. மேலும் பல விஷயங்கள் அவர்களை அதிசயப்படுத்தும்
என்பதனை சொல்லித்தெரிவதில்லை . அன்றைய காலைப்பொழுதில்
குளிக்க , செய்யாறு நதி உதவியது . அந்நதியைச்சுற்றி அமைந்துள்ள கிராமமே , திருவத்திபுரம்
. அவ்வூரைச்சுற்றி காணப்படும் புனித மண்ணில் நடக்காமல் சுற்றிக்கொண்டு செல்ல முடிவெடுத்து , தங்களின் பயணத்தை
தொடங்கினர் . பின்னாளில் , வேங்கடனை வழிபடும் வைணவர்கள் , திருநீறு எனும் நாமக்கட்டியை
தயாரிக்க , அவ்வூரைச்சுற்றிலும் இருந்த திருமண்ணையே எடுத்தார்களாம் . இன்னமும் , ஶ்ரீரங்கம்
உட்பட பல கோயில்களுக்கு திருமண் அனுப்பும் வழக்கம் இன்னும் தொடர்கிறது என்றும் கூறுகிறார்கள்
. சரி அதைவிடுவோம் . தங்களின் பயணத்தை தொடர்ந்த மூவரும் , வழியில் காணப்பட்ட ஒரு சிவன்
கோவிலில் நிறுத்தி , வணங்கினர் .
‘இது
என்ன கோயிலுங்க ?’ -சந்த்ரு
‘இதுதான்
வேதபுரீஸ்வரர் ஆலயம் . முன் நாம் காஞ்சியில் இருந்தோமல்லவா ? அப்போது தொண்டைமான் வம்சத்தின்
அரசனுக்கு உதவியவர் , இந்த சிவன் ’
‘அப்படியா?
எப்படி கடவுள் வந்து உதவினாரு ?’ - சந்த்ரு
‘முன்னொரு
காலத்தில் விசுவாவசு எனும் கொடியவன் , தொண்டைமானை எதிர்த்து போர்தொடுக்க வந்தான் .
தொண்டைமானும் உயிர்போனாலும் பரவாயில்லை என்று தன் மக்களை காப்பாற்ற , வீரத்தோடும் தீரத்தோடும்
போரிட்டான் . ஆனால் , விசுவாவசு அரக்ககுலத்தை சார்ந்தவன் ஆதலாலும் , பெரும்படையை கைவசம்
கொண்டிருந்ததாலும் போர்நெறிகளைப்பற்றி கவலைப்படாமல் , தொண்டைமானின் படைகளை சிதறடித்தான்
. தொண்டைமான் , திக்கு தெரியாமல் இச்சிவபெருமானின் முன் வந்துநின்றான் . சிவனோ , நந்தியை
தளபதியாக கொண்டு , சிவகணங்கள் அனைத்தும் குதிரைகளாகவும் யானைகளாகவும் மாற்றி , தொண்டைமானின் படையை புதுப்பித்து அனுப்பினார்
. பின் என்ன , சிவகணங்களின் ஆக்கிரோஷமான தாக்குதல்களாலும் , நந்தியின் அபரீதமான வழிகாட்டுதலாலும்
, தொண்டைமானின் வீரத்தாலும் , விவாவசுவை வென்று தொண்டைமண்டலத்தை மீட்டெடுத்தார் , தொண்டைமான்
. ’
இரண்டுநாட்களுக்குமுன்
இக்கதைகளை கூறியிருந்தால் , வயிறுவலிக்க சிரித்திருப்பார்கள்
, பாலாவும் சந்துருவும் . ஆனால் , இவ்விரண்டுநாட்களில் நிகழும் நிகழ்ச்சிகள் , அவர்களுக்குள்
பெரும் மாற்றதை பதிந்துவிட்டது . நம் மாபெரும் தமிழர்களின் பழந்தமிழ்வாழ்க்கையை நினைத்தால்
புல்லரிக்க ஆரம்பித்தது . கோசனின் கோட்டைக்குள் வீரப்புலியாய் பாய்ந்த இளங்கோட்சென்னியின்
கதையை நம்ப முடியாமல் தவித்தவர்களின் அறியாமையை , முந்தைய இரவில் புலியை விரட்டியடித்த
பெண் , இவர்களின் அறியாமையையும் சேர்த்துவிரட்டிவிட்டாள் .
‘அப்படிங்களா
?. -சந்த்ரு
சிறிது நேரம் , அவர்களின் மனக்கண்களின்முன் அந்நிகழ்ச்சிகள்
, ஒரு திரைப்படமாக ஓடின .
சரிங்க . கிளம்பலாம் ’ - பாலா
பயணம் , தொடங்கியது
. ஏற்கனவே போதுமான அளவு தமிழகத்தின் இயற்கையை வர்ணித்துவிட்டோம் . செய்யாறை பொறுத்தவரை
, அது ஒரு வேளாண் நகரம் .பின்னாளில் , பல்லவ மன்னர்களின் ஆட்சிக்கும் , விஜய மன்னர்களின்
ஆட்சிக்கும் , ராஜராஜசோழனின் ஆட்சிக்கும் உட்பட இருக்கும் பகுதி . முன்னே , அவ்வணிகன்
அமர்ந்து வண்டியை செலுத்த , பின்னால் , சிறிது தூரம் காலாற நடந்துவருவதாக கூறிவிட்டு
நடக்க ஆரம்பித்தார்கள் . வெறும் கால்கள் தான் . ஒரு அழகிய மண்சாலையின் ஊடே , தென்னைமரங்கள்
காவலிருக்க , சுற்றியும் நெல் மற்றும் பருப்புவகைகளை விளைவிக்ககூடிய பயிர்கள் , காட்டில்
தன் இளந்தண்டையும் புதிதாக அரும்பிய இலைகளுடனும் காட்சிக்கு அகப்பட்டன . அறுவடைத்திருநாளிற்குபின்
, நடப்பட்ட நாற்றுகளாக இருக்கும் .
‘பாலா
! உன்னால நம்பமுடியுதா ?’
‘என்னத்த டா ?’
‘இங்க
நடக்கற விஷயங்களத்தான்டா ?’
‘நம்பவும் முடியல . நம்பாம இருக்கவும் முடியல
’
‘இத்தனைக்கும்
, நாம இங்க வர வெறும் பத்து செகன்ட் தான் ஆச்சுல ? ’
‘ம் .நம்ம டைம் மெஷின் வேகம் அப்படி மச்சி ’
‘அது
என்னடா வேகம் ?’
‘உனக்கு புரியற மாதிரி சொல்லனும்னா , டைம்
ட்ராவல் பன்ற YEARS வச்சி , ஸ்பீட் மெஷர் பண்ணிக்கலாம் , ’
‘சரி
. இதோட ஸ்பீட் எப்படி இருக்கும் ?’
‘200 years Per Second’
‘ப்பா
!! அவ்வளவு வேகமாடா ?’
‘அடப்போடா .இது என்ன வேகம் .கார்ல் சாகன்னு
ஒரு ஆளு 475 years per second ல , ஒரு காலாண்டரே போட்டுருக்காரு.’
‘அது
யாருடா கார்ல் ?’
‘அவரு அமெரிக்க சயன்டிஸ்ட் . 20த் சென்சுரி
அப்போ , ஒரு காலாண்டர் தயாரிச்சாரு . இதுவரைக்கும் , இந்த யுனிவர்ஸ் பிறந்ததுல இருந்து
20த் சென்சுரி முடியற வரைக்கும் ஒரு வருஷத்துல எல்லாத்தையும் அடக்குனாரு . அவரு காலாண்டர்
படி பார்த்தோம்னா , ஒரு செகன்ட்கிறது 475 Years’
‘சத்தியமா
புரியல மச்சி’
‘இப்போ ஜனவரி 1ந்தேதி இருக்கா ? அன்னைக்கு
நைட் 12 மணிக்குதான் BIG-BANG நடந்துச்சாம் ’
‘BIG
BANG மீன்ஸ் , இந்த கேலக்ஸி வெடிச்சி , ஒவ்வொன்னா உருவாசினு சொல்லுவாங்களே ? அதுதான
?’
‘YES. அதேதான் .ஆனா , அது கேலக்ஸி வெடிச்சதால
ஏற்படல . யுனிவர்ஸ் உருவான நிகழ்ச்சிதான் BIG BANG . அதுக்கப்பறம்தான் கேலக்ஸி உருவாச்சி
. அவரு கணக்குப்படி செப்டம்பர் 8ந்நேதி சூரியனும் 12ந்தேதி நம்ம பூமியும் ,13ந்தேதி
நிலாவும் உருவாச்சி. பூமில காத்தும் தண்ணியும் உருவானது செப்டம்பர் 20ந்தேதி .இப்போ
நாம இருக்க காலம் , அவருகணக்குப்படி டிசம்பர் 31ந்தேதி , நைட்டு 11 மணிக்கு மேல இருக்கனும்
.’
‘சரி
, ஃப்யூச்சர்ல இத எப்படி DEFINE பண்ணுவாங்க ?’
‘அவரோட காலண்டர் வேலிடிட்டி , 2000மாவது
வருஷத்தோட முடியுது . அன்னைக்கு நைட் 12 மணி தான் டெட் லாஸ்ட் .’
‘டேய்
எப்படி மச்சி உனக்கு இவ்வளவு விஷயம் தெரியுது ’
‘டைம் ட்ராவல் பத்தின ஆர்ட்டிகல்ஸ்ல இதுவும்
ஒன்னுடா’
‘ஓகே
மச்சி’
பாலா ஒன்றும் அரைகுறை
விஞ்ஞானி கிடையாது . அவனுக்கு திறமைகள் இருந்தாலும் வாழ்வியல் அழகு தெரியாமல் லேப்பிலேயே
கிடப்பவன் என்று சந்துருவுக்கு புரிந்தது . மெல்ல , பேசிக்கொண்டே சென்றார்கள் .அன்றைய
தினம் விரைவான பயணமாக அமைந்தது அவர்களது அதிர்ஷ்டம் என்றே கூறலாம் . ஏனெனில் , உறையூரில்
மீண்டும் ஒரு அதிர்ஷ்டமும் , ஆச்சரியமும் , கஷ்டமும் காத்திருந்தன . மெல்ல வெள்ளாற்றை
தாண்டி , மதிய உணவை உண்டனர் . அங்கிருந்து அடுத்த இரண்டு மணிநேரத்தில் காவிரியை அடைந்தனர்
. காவிரியை ஆழம் குறைந்த இடத்தினில் கடினப்பட்டு கடந்தனர் .காவிரத்தாயைப்பற்றிய வரலாற்றை
பற்றி அவர்களுக்கு தேவையில்லையெனினும் நாம் அறிந்துகொள்ளலாம் .
காந்தன் எனும்
சோழமன்னன் , தன்நாடு மழையில்லாமல் வருந்துவதைப்பார்த்து வேதனையுற்றான்
. எப்படியாயினும் தன்நாட்டை காக்கவேண்டும் என்ற முடிவுடன் , அகத்தியமாமுனியை காணச்சென்றான்
. அகத்தியரின்பால் , அதீத அன்புடையவன் சிவபெருமான் மீது சிறந்த பக்தியுடையவன் .அந்நேரத்தில்
, அகத்தியமுனி , குடகு மலையின்கண் , தவம் செய்யும் பொருட்டு வாழ்ந்துகொண்டிருந்தார்
. அகத்தியரை சந்தித்து , தன் நாட்டின் நிலையையும் , தம் மக்களின் கவலையையும் கூறி
, தனக்கு உதவுமாறு மன்றாடி கேட்டான் .தாய்ப்பாலுக்கு அழும் குழந்தையும் , நீருக்கு
ஏங்கும் பயிர்களும் ஒன்றுதான் என்பதை உணர்ந்திருந்த அகத்தியரும் , தன் கமண்டலத்தில்
அடைத்து வைத்திருந்த , நீரை கீழே ஊற்றி, சோழநாடு செல் என பணித்தாராம் . அச்சிறுநீர்
, மலைகளின் ஊடே பரவி , கிளைநதிகளையும் இணைத்து , மாபெரும் வற்றாத ஜீவநதியாகி , சோழநாட்டை
அடைந்தது . கோள்கள் நிலைதிருத்து , அதனால் கோடைகாலம் நீடித்தாலும் , தன்நிலை திரியாமல்
நீர் தந்தாள் அவள் . அவளே இன்றைய தமிழகத்தைக்காத்துக்கொண்டிருக்கும் வற்றாஜீவநதியான
காவிரி .
காவிரியைத்தாண்டியதும்
, சீத்தலை எனும் கிராமத்தை அடைந்தார்கள் . அதுவே அவ்வணிகனின் சொந்த ஊர் ஆகும் . அன்றைய
இரவை அவன் வீட்டில் தங்கிவிட்டு செல்லலாம் என முடிவு எடுத்தார்கள் . அவ்வணிகனின் மனைவியின் கனிவான நடத்தையில் , பாலாவும்
சந்துரும் கிறங்கிப்போனார்கள் .அவனின் , குழந்தையோ
, மழலை மொழி பேசி , இவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தது .பின் , உணவருந்திவிட்டு துயில்
செல்ல சென்றார்கள் . வணிகனும் , பாலாவும் சந்துருவும் வீட்டின் வெளியில் ஆளுக்கொரு கயிற்றுக்கட்டிலில்
படுக்க , அக்குழந்தை வணிகனின் மாரில் ஏறிக்கொண்டு , கதை சொல்லுமாறு கெஞ்சியது .
‘முன்னொருகாலத்தில்
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே கலகம் ஏற்பட்டது . வாழ்வினை அமர வாழ்வாக்கும்
மருந்தாகிய அமிர்தத்தை அடைய , தேவர்களும் அரக்கர்களும் மேரு எனும் மலையை அச்சாக கொண்டு
, வாசுகி எனும் பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலில் அமிர்தம் பெற கடைந்தார்கள் . அமிர்தம்
வரும் நேரத்தில் ’
‘ஏங்க.
இதுலாம் உண்மையா ? அப்படி ஒரு மலையும் கடலும் இருக்கா என்ன ?’
‘ஒவ்வொரு
கதையினூடும் , நம் வாழ்க்கைக்கு தேவையான பல கருத்துகள் இருப்பதானாகவே நான் அறிகிறேன்
சந்து .இப்போது மேரு மலைக்கு பதில் புவியை வைத்துக்கொள்ளலாம் . தேவர்களுக்கு பதில்
பகலும் , அசுரர்களுக்கு பதில் இருளும் என கொள்ளலாம் .இப்போது பாருங்கள் , இரவும் பகலும்
இழுக்க இழுக்க , புவியில் உள்ள , கனிமங்களான
இரும்பு , தங்கம் , செம்பு போன்ற அமிர்தங்கள் கிடைக்கின்றன .இப்படி கூட இக்கதைக்கு
பொருள் தரலாம் .’
ஆச்சரியத்துடன்
, அவன் கூறியதை கேட்டுக்கொண்டிருந்த இருவரும்
‘ஓ சரிங்க
.’
என்று பதிலளித்தார்கள்
. வேறு என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பியிருக்கலாம் .
மூவரும் , மெல்ல தென்றல் வீசும் காற்றிற்கு உருகி , துயிலை தற்சமயம்
மேற்கொண்டனர் .
மறுநாள் காலை
, வணிகன் காவிரிப்பூம்பட்டிணம் எனும் கடற்கரை நகரத்திற்கு பொருள்களை ஏற்றிச்செல்ல
, அப்போதைய தலைநகரான உறையூரில் பாலாவும் சந்துருவும் அவ்வணிகனிடம் இருந்து பிரியா விடை
பெற்றனர் . மணிமேகலை எனும் மாபெரும் காப்பியத்தினை படைத்த சாத்தனாரின் , முப்பாட்டனாரான
அவ்வணிகன் , மெல்ல புன்முறுவல் பூத்தவாறு கிளம்பினான் .
திடிரென தூரத்தில்
, ஒரு தேரும் உள்ளே ஒரு இளைஞனும் இருந்தனர்
. அத்தேர் , கட்டுப்பாட்டை இழந்து , புயல்போன்று இவர்களை கடந்து சென்றது . ஒரேநொடியில் தாங்கள் தப்பிப்பிழைத்ததை
எண்ணி சந்தோஷமும் , அதே நேரத்தில் யாருடா அவன் என்கிற கோபமும் ஒன்றுசேர , சந்துரு அத்தேர் சென்ற திசை நோக்கி பார்த்தான்
.
அதே நேரத்தில்
, சீனாவில் இருக்கும் அனைத்து மாகாணங்களையும்
ஒன்றிணைத்து , ஒரு வலிமைமிக்க பேரரசினை உருவாக்கிக்கொண்டிருந்தான் கின் ஷிஹுஆங்டி
.
இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
arumai innun satru viruvurppu serkalame sakothara
ReplyDeleteசேர்த்துடலாம்ணே !! கொஞ்சம் ஸ்மூத்தான பயணமாகவே இருக்கனும்னு நினைச்சித்தான் , மெதுவா உருட்டிட்டுப்போறேன் . இனிமேல் , நீங்க கேட்கற மாதிரியான பயணமா மாறிடும் அண்ணே !!
Delete