ROAD TO PERDITION - சினிமா விமர்சனம்




கேங்க்ஸ்டர் பிண்ணனியில் ,  தந்தை – மகன் உறவை அழகான காட்சியமைப்புடன் , அற்புதமான இசையும் கலந்து படைத்திருக்கும் கலவையே , Road To Perdition .  

கதை –


படம் நடக்கும் காலகட்டம் 1931 . ஜான் ரூனி எனும் கிழவர் , ஒரு மிகப்பெரிய கேங்க்ஸ்டர் . அவரின் மகன் , கான்னர் ரூனி . அநாதையான மைக்கேல் என்பவனை , சிறுவயதிலிருந்து  ஆதரித்து , தன்னுடனே வளர்த்தி  , எதுவுமற்ற அவனுக்கு எல்லாமுமாக இருக்கிறார் ஜான் . கிட்டத்தட்ட மைக்கேலை , தன் மகன் போலவே நடத்தும் ஜான் , எது சொன்னாலும் உடனே செய்துவிடுவார் மைக்கேல் . மைக்கேலுக்கு அழகான குடும்பம், இரண்டு ஆண்பிள்ளைகள் . தான் விழுந்த இந்நரகத்தில் , தன் மகன்களும் விழுந்துவிடக்கூடாது என்ற நினைப்பில் வாழ்ந்துவருகிறார் . துரதிருஷ்டவசமாக , மைக்கேலும் கான்னரும் சேர்ந்து செய்யும் கொலையை கண்கூடாக பார்க்கிறான் மூத்தமகன் . கான்னர் , தன்னைவிட தன் தந்தை , மைக்கேலுக்கு அதிக இடம் அளிப்பதாக நினைத்துக்கொண்டு , மைக்கேலை கொல்ல ஆள் செட் செய்கிறார் . அதே நேரத்தில் , மைக்கேலின் குடும்பத்தை அழிக்கவும் முனைந்து , இளைய மகனையும் , மனைவியையும் கொன்றுவிடுகிறார். மைக்கேல் , கான்னரின் சூழ்ச்சியிலிருந்து தப்பி வீட்டிற்கு வந்தால் , மனைவியும் இளைய மகனும் இறந்துகிடப்பதை பார்த்து , மூத்தமகனை அழைத்துக்கொண்டு வேறொரு இடத்திற்கு செல்கிறார் . கான்னரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மைக்கேலின் மனதில் ஆழ்ந்து பதிகிறது .அதே நேரம் , மூத்தமகன் கண்முன்னே நடந்த இந்நிகழ்ச்சியால் , அவனும் தன்னைப்போன்று நரகத்தில் சிக்கிவிடக்கூடாது என்ற எண்ணமும் அவனை வாட்டியெடுக்க , ஒருவனிடம் உதவிகேட்டு செல்கிறான் . அவனோ , ஜானை எதிர்த்து எதுவும் செய்யமுடியாது என்று கூறிவிட , அங்கிருந்து வெளியேறி தன் மனைவியின் சகோதரி இருக்கும் Perdition என்ற பகுதிக்கு செல்கிறான் . மைக்கேல் உதவிகேட்டு வந்ததை அறிந்த ஜான் , மைக்கேலை கொன்றால்தான் , தன் சொந்த மகனை காப்பாற்ற முடியும் என்பதால் , வேறுவழியின்றி மைக்கேலை கொல்ல , ஒருவனை செட் செய்கிறார் . ஜானை எதிர்த்து தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று அறிந்த மைக்கேல் , ஜான் பணத்தை பதுக்கியிருக்கும் வங்கிகளுக்கு சென்று , ஜானின் பணத்தை , தன் மகனின் உதவியோடு , கொள்ளையடிக்கிறான் . ஒரு கட்டத்தில் , ஜான் செட் செய்திருந்த அடியாளுடன் ஏற்படும்துப்பாக்கி சண்டையில் , மைக்கேலின் கையில் புல்லட் பாய்ந்துவிட , அங்கிருந்து தப்பி , ஒரு கிராமத்தின் பண்ணைவீட்டில் தங்குகிறார்கள் .மைக்கேலுக்கு குணமானதும் , ஜானிடம் பேசுகிறான் .ஜானோ , தான் இறந்தபின் தன் மகன் என்ன ஆனாலும் பரவாயில்லை , ஆனால் உயிருடன் இருக்கும்வரை மகனை எதுவும் செய்யமுடியாது எனக்கூற , மைக்கேல் ஜானை கொன்றுவிட்டு , அவனது மகனையும் பழிவாங்குகிறான் . பின் , தன் மனைவியின் சகோதரி வீட்டுக்கு , மகனுடன் செல்லும் மைக்கேல் , அங்கு மறைந்திருக்கும் , அடியாளின் மூலம் சுடப்படுகிறான் .அந்நேரத்தில் , அங்கு துப்பாக்கியுடன் வரும் மைக்கேலின் மகன் , அந்த அடியாளை சுடுவதற்கு முயல , அந்நேரத்தில் அறைகுறை உயிருடன் இருக்கும் மைக்கேல் , தன் மகனும் தன்வழியே பயணித்து , நரகத்தில் மாட்டிக்கொள்வானோ என்று வருந்த , அந்த அடியாளோ , மகனின் அருகில் செல்ல ஒரு கனத்த சோகத்துடனும் , மெல்லிய புன்னகையுடனும் முடிகிறது படம் .  

சிறப்பு



இப்படத்தில் , முதலில் பாராட்டவேண்டியவர் தாமஸ் நியூமேன் எனும் இசையமைப்பாளர் .மனுஷன் பிச்சியெடுத்திருக்கிறார் . எனக்கு இசைஞானம் இல்லையெனினும் , ரசிப்புத்தன்மை அதிகம் . அவ்வகையில் , இப்படத்தில் என்னை பெரிதும் கவர்ந்தது , படத்தின் பிண்ணனி இசை  ! ஐரிஷ் நாட்டு இசையை , அவர் ஒலிக்கும்போதெல்லாம் மனதில் ஒரு புது உற்சாகமே வந்தது. இப்படத்தில் இறுதிக்காட்சியில் , மைக்கேல் , மழைபொழியும் ஒரு பொது இடத்தில் ஜானின் அடியாட்களை சுட்டுக்கொன்றுவிட்டு , ஜானையும் கொல்ல வருவார் . அந்த காட்சியில் , மெல்லிய மெலோடியுடன் இசையை கோர்த்து , அந்த காட்சியை அற்புதமாக மாற்றியிருப்பார் .இதே போன்றதொருகாட்சிதான் ‘ஆரண்ய காண்டம்’ படத்திலும் வரும் . சண்டைக்காட்சியின் நடுவே அற்புத மெலோடியை யுவன் வழங்கியிருப்பார் .  இப்படத்தின் இசையமைப்பாளர் தாமஸ் தான் , WALL-E , SKYFALL போன்ற படங்களுக்கும் இசை . எனக்கு மட்டும் இசைப்பற்றிய அறிவிருந்திருந்தால் , இப்படத்தின் பிண்ணனி இசையை , 20 தொடர்பதிவுகளாகவே வெளியிட்டு , உங்களை வாட்டியெடுத்திருப்பேன் .


(இந்த காட்சியில்தான் நான் மேலே கூரிய இசை வரும்)


மைக்கேல் சுல்லிவனாக , டாம் ஹேங்க்ஸ் . இவரை ஒரு கேங்க்ஸ்டர் பாத்திரத்தில் , நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. பால் வடியும் முகத்துடன் அம்மாஞ்சி போலிருக்கும் மனிதர் , இப்படத்தில் காட்டியெடுத்திருக்கிறார் . இந்த கேங்க்ஸ்டர் படத்தில் , வன்முறை இல்லாமல் எடுத்திருக்கிறார்கள் என்றால் , அது டாம் ஹேங்ஸின் வேண்டுகோளுக்காக மாத்திரமே . தன் மனைவி , குழந்தையை இழந்து கதறும்போதும் , கிளைமேக்ஸ் முந்தைய காட்சியில் தன்னை வளர்த்து ஆளாக்கிய தந்தை போன்ற ஜானை , சுடும் இடத்திலும் , இவரின் நடிப்பு , அற்புதம் .கிளைமேக்சில் தன் மகன் எங்கே அந்த கொலைகாரனை சுட்டுவிடுவானோ , என்று பதறும் இடத்தில் , அழகான நடிப்பை வாரி வழங்கியுள்ளார் .


அடுத்து , ஜான் ரூனியாக வரும் பால் நியூமேன் . டாம் ஹேங்க்ஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் , அவரது நடிப்பின்முன் அனைவரையும் மறக்கடித்துவிடுவார் . அவர் மாத்திரமே தனியே தெரிவார் .ஆனால் , இப்படத்தில் டாம் ஹேங்சை , தூக்கி சாப்பிட்டுவிட்டார் இந்த கிழவர் . டாமை கொல்ல சொல்லும்போது , இவரின் கண்களில் வருத்தமும் , கவலையும் ஒருசேர கோர்த்தவாறு ஒருவித குழப்ப ரியாக்சன் தரும்போது , அவ்வளவு அருமையாக இருக்கும் . டாமை மாத்திரமே கொல்லவேண்டும் , அவன் மகனின்மேல் சிறுதுரும்பும் படக்கூடாது என கொப்பளிக்கும்போது , அவ்வளவு அருமையான மேனரிசங்களை காட்டுவார் . கடைசிக்காட்சியில் , தன்னை டாம் கொல்லவரும்போது  , தன் வளர்ப்பு மகனான மைக்கேலே தன்னை கொல்லவருகிறான் என்பதை அறியும் காட்சியும் , அதன்பின் அவரது அழகான நடிப்பும் சொல்லிமாளாது .மனுஷன் ஏற்கனவே மார்ட்டின் ஸ்கார்சோசியின் படத்தில் ஹீரோவாக நடித்து ஆஸ்காரை அள்ளியவராம் . சரி 50 ஆண்டு நடிப்பு அனுபவம் ஆயிற்றே !!!


கான்னராக , இன்றைய ஜேம்ஸ் பான்டு , டேனியல் க்ரேய்க். ஆர்வக்கோளாறான மனிதராக இப்படித்தில் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார் .

பிற நடிகர்கள் தேர்வு , நடிப்பு , ஒளிப்பதிவு , எடிட்டிங் உட்பட அனைத்தும் சிறப்பாக கையாண்டு , ஒரு திருப்திகரமான படத்தினை வழங்கியுள்ளார்  சாம் மென்டஸ் . இவர்தான் SKYFALL படத்தின் இயக்குனர் . படத்தின் ஆங்காங்கே ஒருசில குறைகள் இருப்பினும் , இது ஒரு தரமான படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை . PERDITION என்பதற்கு நரகம் என்ற பொருளாம் .நரகம் போன்ற கேங்க்ஸ்டர் வாழ்க்கையில் , தன் மகன் பயணிக்கூடாது என்று விரும்பும் தந்தை என்ற குறியீடு தான் , டைட்டில் .

மொத்தத்தில் ,


FEEL GOOD வகையறா படங்கள் , சென்டிமென்ட் படங்கள் , எதார்த்த படங்கள் பார்ப்பவர்கள் , தவறவிடக்கூடாத படம் . இசை ரசிகர்கள் , கேமரா விரும்பிகளும் கண்டிப்பாக பார்க்கலாம் . மெல்ல நகரும் படம் .ஆனால் , டாம்ஹேங்சின் மற்ற படங்களை காட்டிலும் இது கொஞ்சம் வேகம் அதிகம் என எனக்கு தோன்றுகிறது . குடும்பத்துடன் கானும்படியான நேர்த்தியான படைப்பு .



Comments

  1. //மைக்கேல் ஜானை கொன்றுவிட்டு , அவனது மகனையும் பழிவாங்குகிறான் . பின் , தன் மனைவியின் சகோதரி வீட்டுக்கு , மகனுடன் செல்லும் ஜான் , அங்கு மறைந்திருக்கும் , அடியாளின் மூலம் சுடப்படுகிறான் .அந்நேரத்தில் , அங்கு துப்பாக்கியுடன் வரும் மைக்கேலின் மகன் , அந்த அடியாளை சுடுவதற்கு முயல , அந்நேரத்தில் அறைகுறை உயிருடன் இருக்கும் ஜான் //
    இறந்தது ஜானா அல்லது மைக்கேலா என்று குழப்பமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. // மகனுடன் செல்லும் ஜான் , // மன்னிச்சிடுங்கண்ணே !! அது ஜான் இல்ல . மைக்கேல் . :-(

      Delete
  2. //மகனுடன் செல்லும் ஜான் , // மன்னிச்சிடுங்கண்ணே !! அது ஜான் இல்ல . மைக்கேல் . :-(//
    எண்ணன்னே இதுக்கு போயி மன்னிப்பு அது இதுன்னுட்டு
    மொதல்ல பதிவுல சரி பண்ணுங்க.அதுதான் எல்லோருக்கும் புரியும் விதமா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சரி பண்ணிட்டேங்ணா !!! நன்றிணா ! சுட்டிக்காட்டியமைக்கு !!

      Delete
  3. எனது மனசுக்குப் பிடித்த படம் ...
    நானும் எழுதுவேன்

    ReplyDelete
    Replies
    1. உங்களோட REVIEW-காக வெயிட்டிங் ணா !!!

      Delete
  4. ஆனால் நீங்க ஜோரா எழுதீட்டீங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை