IT’S  A  WONDERFUL  LIFEசினிமா விமர்சனம்

ஒரு அதிஅற்புதமான ஃபீல்குட் படம் பார்க்கவேண்டுமா ? தயங்காமல் இத்திரைப்படத்தை பாருங்கள் . இளகிய மனமுடையவராய் இருந்தால் , படத்தின் கிளைமேக்சில் ஆனந்தகண்ணீர் தாரைதாரையாக ஊத்தும் என்பதில் துளி சந்தேகமுமில்லை . அவ்வளவு அருமையான படம் . அதற்காக படத்தில் அப்பா அம்மா சென்டிமென்ட் , குடும்ப சென்டிமென்ட் , நண்பர்கள் சென்டிமென்ட் என்று ஏதாவது ஒரு சென்டிமென்டை திணித்து ஹீரோவின் கஷ்டத்தை நம்முன் நிறுத்தி , கடைசியில் பெரும் வெற்றி பெறுகிறார் என்று சாதாரணமாக சொல்லிவிடமுடியாத திரைப்படம் .



பூலோகத்தில் BEDFORD FALLS எனும் இடத்தில் இருக்கும் சில வீடுகளில் இருந்து ஒருவரைக்காப்பாற்றுங்கள் எனும் பிரார்த்தனை ஒலிப்பதை கேட்கும் இறைவன் , அவரைக்காப்பாற்றுவதற்காக க்ளாரன்ஸ் எனும் தேவதையை அழைக்கிறார் . இறக்கை இல்லாத கிளாரன்ஸிற்கு , தேவதைகளுக்குரிய இறக்கைகள் கிடைக்கவேண்டுமெனில் பூலோகத்தில் இருக்கும் ஜார்ஜ் பெய்லி என்பவனின் தற்கொலையை தடுத்து நிறுத்துமாறு அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது . ‘முந்திரிக்கொட்டை’யான கிளாரன்சிற்கு இறைவன் ஜார்ஜ் என்பவனின் வாழ்க்கையை காட்டுகிறார் .



ஜார்ஜ் பெய்லி , தன் சகோதரனை சிறுவயதில் ஒரு ஆபத்திலிருந்து காப்பாறுகிறான் . அந்த நிகழ்ச்சியின்போது அவனுக்கு ஒரு காது கேட்காமல் போகிறது .அவன் வேலை செய்யும் இடத்தில் (மெடிக்கல் ஷாப் என்று வைத்துக்கொள்ளுங்கள்) , அவனுடைய முதலாளி ஒரு மனவருத்தத்தில் , தவறான மருந்தை ஒரு சிறுவனுக்கு தருகிறார் . அவரிடம் அதைப்பற்றி சொல்லமுடியாமல் , அந்த மருந்தையும் உரியவரிடத்தில் தராமல் முதலாளியிடம் அடிவாங்குகிறான் . பின் முதலாளிக்கு உண்மை தெரிந்து ஜார்ஜிடம் மன்னிப்பு கேட்கிறார் .சிறுவயதிலேயே மேரி என்பவள் ஜார்ஜ் மீது காதல்கொள்கிறாள் . வளர்ந்து பெரியவர்களானதும் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள் .


ஜார்ஜின் தந்தை இறந்தபின் அவருடைய வங்கியை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஜார்ஜ் நெருக்கப்படுகிறான் .  ஒருவேளை வங்கியை மூடிவிட்டால் , அந்நகரில் இருக்கும் பாட்டர் எனும் முதலாளியிடம் ஏழைமக்கள் மாட்டி சின்னாபின்னமாவார்கள் என்பதை உணர்ந்து மக்களுக்காக அந்த வங்கியை ஏற்று நடத்துகிறான் . அதற்கு விலையாக தான் ஆசைப்பட்ட மேற்படிப்பையும் , உலகம் சுற்றி வேலை செய்வது , மில்லியனராக வேண்டும் போன்ற ஆசைகளை தியாகம் செய்கிறான் . தன் படிப்பிற்காக சேமித்துவைத்த பணத்தினை கொண்டு தன் சகோதரனை மேற்படிப்புக்கு அனுப்புகிறான் . அவன் படிப்பை முடித்ததும் தந்தையின் தொழிலை அவனிடத்தில் ஒப்படைத்துவிட்டு , தன் குறிக்கோள் நோக்கி செல்லலாம் என முடிவெடுக்கிறான் . விதிவசத்தால் அவனுடைய சகோதரனுக்கு வேறுவேலை கிடைக்க , வழியில்லாமல் தானே மீண்டும் ஏற்று நடத்துகிறான் . அந்த வங்கியின்மூலம் ஏழைகளுக்கு பெய்லி கார்டன் எனும் குறைந்தவிலையிலான குடியிருப்புகளை கட்டிக்கொடுக்கிறான் . மேலும் தன்னாளான உதவிகளை மக்களுக்கும் , நண்பர்களுக்கும் ஏன் ? எதுக்கு என்று கேட்காமலே செய்கிறான் . இடையில் பாட்டர் பலமுறை அவனை சோதனைக்குள்ளாக்குகிறான் .

ஜார்ஜின் சகோதரன் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று பலரை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றியதால் அதிபரிடம் விருது பெறுகிறான் .அதை ஊரெல்லாம் காட்டி பெருமையடைகிறான் ஜார்ஜ் . ஒரு கிறிஸ்துமசின்போது  ஜார்ஜின் மாமா  , பேங்கிற்கு செலுத்தவேண்டிய 8000 டாலரை , பாட்டரிடம் தொலைத்துவிட ஜார்ஜ் ஒன்றும்புரியாமல் குழம்பிப்போகிறான் .அவனை ஊழல் வழக்கிற்காக கைதுச்செய்யப்போகிறார்கள் என அஞ்சுகிறான் . இவ்வளவு நாள் தான் காப்பாற்றி வந்ததை ஒரே நாளில் இழந்துவிட்டோமே என  புலம்புகிறான் . தன் வீட்டில் இருப்பவர்களிடம் தன்னுடைய கோவத்தைக்காட்டுகிறான் . பாட்டரிம் உதவிக்கு செல்லும் ஜார்ஜிடம் , உன் இன்சூரன்ஸ் பணத்திற்கு இருக்கும் மதிப்பு உனக்கில்லை . எனவே நீ உயிருடன் இருப்பதற்கு சாவதே மேல் என அனுப்பிவிடுகிறான் . தான் வாழ்க்கையை வெறுத்து சாவதற்காக நதியில் குதிக்க முயற்சிக்கிறான் .



ஆனால் அவனுக்குமுன் ஒருவன் நதியில் குதித்துவிட , அவனைக்காப்பாற்ற ஜார்ஜ் உதவுகிறான் . குதித்தவன் யார் என்று பார்த்தால் அது கிளாரன்ஸ். தான் ஒரு தேவதை எனவும் , ஜார்ஜைக்காப்பாற்றுவதற்காகவே தான் குதித்தாகவும்  ஜார்ஜூக்கு தெரிவிக்க , அதை ஜார்ஜ் நம்ப மறுக்கிறான் . தான் இருப்பதற்கு சாவதே மேல் எனவும் ஒருவேளை தான் பிறக்காமலே இருந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கும் ஜார்ஜின்  மனதை தற்கொலையில் இருந்து காப்பாற்ற க்ளாரன்ஸ் முடிவு செய்கிறார் .  அதாவது ஜார்ஜ் ஒருவேளை பிறக்காமலிருந்தால் அந்நகரம் என்னவாகியிருக்கும் என்பதை அவனைவைத்தே விளக்குவார் .

முதலில் ஜார்ஜின் சகோதரன் இறந்துவிடுகிறான் . அவன் காப்பாற்றிய வீரர்களும் இறக்கிறார்கள் . ஜார்ஜின் மனைவி மேரி , யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறாள் . ஜார்ஜ் உதவி செய்த ஏழைகள் அனைவரும் சமூகத்தில் மிக்ககேவலமான நிலையிலேயே இருக்கிறார்கள் . ஜார்ஜின் வங்கி இல்லை . பாட்டர் அந்நகரில் மது , மாது என மூழ்கடித்துவிடுகிறான் . ஜார்ஜின் முதலாளி , தவறான மருந்தினை கொடுத்து ஒரு சிறுவனின் உயிரைப்பறித்த காரணத்தினால் சிறைதண்டனை பெற்று பித்துபிடித்து போகிறார் . இவ்வளவையும் ஜார்ஜைக்கொண்டே கிளாரன்ஸ் விளக்குகிறார் . அதன்பின் ஜார்ஜ் மனம் மாறினானா ?  அந்த பணம் என்ன ஆனது ?போன்றவற்றையும் கூறிவிட்டால் இப்படமே முடிந்துவிடும் என்பதால் நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .

இப்படத்தில் ஒன்றும் மாபெரும் திரைக்கதையோ , தொழில்நுடபமோவெல்லாம் கிடையாது . 12 ANGRY MAN படம் எப்படி நம்மைக்கவர்ந்ததோ , அதேபோல் தான் இப்படமும் . இப்படத்தில் குறிப்பிட்டு சொல்லும் காட்சிகள் பல இருக்கின்றது . அதிலும் காதல் காட்சிகள் எல்லாம் அருமை ரகம் . நடிகர் ஸ்டீவர்ட் , ஜார்ஜாக இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்( மனிதர் இபடத்தில் நடிக்குமுன் போர்விமானியாக வேலை செய்தவர் . இவரைப்பற்றிய பல அபூர்வ தகவல்கள் விக்கியில் கொட்டிக்கிடக்கிறது ). தன் சகோதரன் வந்து தந்தையின் தொழிலை கவனிப்பான் என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது , அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது என்பதை அறியும்போது மனிதர் காட்டுவார் பாருங்கள் ஒரு எக்ஸ்பிரஸ்சன் , சான்சே இல்ல ரகம் தான் . காதலியுடன் கொஞ்சும்போது , பாட்டரின் சதியால் பேங்க் இழுத்துமூடப்பட்டது என்று நம்பி ஜார்ஜை முற்றுகையிடும் மக்களிடம் பேசும்போது , தன் சகோதரன் மிலிட்டரியில் சாதித்ததை எல்லோரிடமும் சொல்லி பெருமைப்படும் போது , கடைசியில் தன் குழந்தைகளிடம் எறிந்துவிழுந்து உடனே அவர்களிடம் மன்னிப்பு கேட்கும்போது என பல காட்சிகளில் சிக்சர் அடித்துத்தள்ளுகிறார் . அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட்டில் தலைசிறந்த நடிகர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தை இவர் பிடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல் .

இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் டோன்னாவை பற்றி குறிப்பிடவில்லையெனில் , இப்படத்தைப்பார்த்தவர்கள் நீயெல்லாம் விமர்சனம் எழுதற ஆளா என்று கேட்டுவிடுவார்கள் என்பதால் அந்த பாட்டி , ச்சீ ப்யூட்டியைப்பற்றியும் தெரிவித்தாகவேண்டிய கட்டாயம் . இவர் மட்டும் இக்காலத்தில் பிறந்திருந்தால் தேடிப்போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றவில்லையெனில் ஆச்சரியம் தான் . அழகும் , அழகைத்தாண்டிய நடிப்பும் வாய்க்கப்பட்ட அபூர்வ நடிகைகளில் இவரும் ஒருவர் .மற்ற நடிகர் நடிகைகளைப்பற்றியும் குறிப்பிட்டால் இந்ம விமர்சனத்தின் நீளம் தாருமாறாய் போய்விடும் என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன் . இப்படத்தின் இயக்குநர் ஃப்ராங்க் எப்படிதான் இபடத்தை எடுத்தாரோ என்று எண்ணவைக்கிறது . இன்னும் 50 ஆண்டுகள் கழித்துப்பார்த்தாலும் இப்படம் துளி அலுப்பை தராத அளவிற்கு அற்புதமான படைப்பை உருவாக்கியிருக்கிறார். அதனால் தான் பல ஆண்டுகள் கழித்து கோல்டன் க்ளோப் விருதினை தட்டிச்சென்றிருக்கிறார் .


இன்றளவும் சிறந்த இன்ஸ்பிரேசனல் மற்றும் ஃபீல்குட் படங்களின் வரிசையில் முதலிடத்திலும் , IMDB யில் 26 –வது இடத்திலும் , AFI தரவரிசையில் 3வது இடத்திலும் , 93% பெற்று ரோட்டன் டொமேட்டோவில் இருக்கும் இப்படத்தினைப்பார்க்காமல் இருந்தால் , உடனே பாருங்கள் . 133  நிமிடம் வாழ்க்கையில் உருப்படியாய் செலவழித்தற்கான அர்த்தமாய் இருக்கும் . FORREST GUMP , LIFE IS BEUTYFUL , THE SHAWSHANK REDEMPTION , THE TERMINAL , போன்ற படங்களைவிட சிறந்த அனுபவத்தை இத்திரைப்படம் கொடுக்கும் .  

ஆங் ! சொல்லமறந்துவிட்டனே ! படம் ரிலிசான தேதி டிசம்பர் 20 , 1946





Comments

  1. நமது நாட்டின் விடுதலைக்கு முன்பே வந்த படம்... !
    இதன் போஸ்டர் இன்றைய தலைமுறையை தள்ளிவைத்தாலும் உங்கள் பதிவு அவர்களையும் படிக்கத் தூண்டும்...
    கலக்குங்க ..
    தொடர்க

    ReplyDelete
    Replies
    1. என்னதான் பழைய படமென்றாலும் பார்ப்பவர்களை இது ரசிக்கத்தூண்டும் என்பதில் துளி சந்தேகமுமில்லை அண்ணா ! வருகைக்கு நன்றி அண்ணா !

      Delete
  2. நம்ம ஓர் பாசமலர் காலத்தில் ,ஆங்கிலத்திலும் இப்படி சென்டிமென்ட் படங்கள் வந்திருப்பதை அறிய வியப்பு !இவர் பிறந்திருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும் ?நல்ல பாணியாய் தெரிகிறதே ,நம்மாட்கள் எப்படி விட்டு வைத்தார்கள் ?

    ReplyDelete
    Replies
    1. அது எனக்கும் ஆச்சரியமாய்த்தானிருக்கிறது அண்ணா ! இந்தமாதிரியான திரைப்படங்களையெல்லாம் விட்டுவிட்டு , அட்டு திரைப்படங்களில் இருந்து உருவுவதே நம்மாட்களின் வேலையாகிவிட்டது

      Delete

  3. Sir,

    Write review about FORREST GUMP

    ReplyDelete
    Replies
    1. நன்றி தல ! அந்த படத்தைப்பத்தி எழுதனும்னு எனக்கும் ரொம்ப ஆசை ! ஆன , மொக்கையா போயிடக்கூடாதுனு ஒரு பயத்தாலேயே எழுதாமா விட்டுட்டேன் . ஞாயிறு இல்லைனா திங்கள் பப்ளிஷ் பண்ணிடறேன் !!

      Delete
  4. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா !

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை