tag:blogger.com,1999:blog-75963122560448096902024-03-27T12:07:57.178+05:30விமர்சன உலகம்மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comBlogger155125tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-47674786598602731992017-01-12T15:36:00.000+05:302017-01-12T15:36:57.069+05:30பைரவா – சினிமா விமர்சனம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE-qVgoquOTj9w9MpMvBnLkLJeA6fG8kRStgCc2J1LOFbTCd-uPMwhf7HiUw-OUAYrGKTzSHzztUDl9I6Z7AnwQkUdFn0UJfRDERbY5RAgVMm7lasYyMyBurwAz4-w-f_2bguIJHis1nw/s1600/3c523fc23870ae6b008614a3a8a9d253.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE-qVgoquOTj9w9MpMvBnLkLJeA6fG8kRStgCc2J1LOFbTCd-uPMwhf7HiUw-OUAYrGKTzSHzztUDl9I6Z7AnwQkUdFn0UJfRDERbY5RAgVMm7lasYyMyBurwAz4-w-f_2bguIJHis1nw/s640/3c523fc23870ae6b008614a3a8a9d253.jpg" width="456" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அடுத்தடுத்து
தொடர்ச்சியாக ஹிட் அடித்துக்கொண்டிருந்த விஜய், மீண்டும் பரதனிடம் ‘பைரவா’-வை ஒப்படைத்த
போது அதிர்ந்தவர்களுல் நானும் ஒருவன். போதாக்குறைக்கு சந்தோஷ் நாராயணன் இசைமைப்பாளர்
என்றதும் டரியலே ஆகிவிட்டேன். டீசரும் ட்ரைலரும் கொஞ்சநாட்களாக விஜய்க்குள் தூங்கிக்கொண்டிருந்த
‘காடுனா புலி! வூடுனா கரடி’ விஜயை மொத்தமாக ஏலமெடுத்தது போலிருக்க, பாடல் மட்டுமே கொஞ்சம்
ஆறுதலாக இருந்தது. காலையில் பிகைன்ட் வூட்ஸ் மற்றும் சில ப்ளாக்கர்களின் விமர்சனங்கள்,
இதுக்கு சுறாவே தேவலாம் என்ற ரீதியில் வெளிவர, இருமனமாகவே திரையரங்குக்குள் சென்றேன்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">கதையை
என்னவென்று சொல்வது; தலயும் தளபதியும் கதையைத் தேர்ந்தெடுத்து நடித்த காலமெல்லாம் மலையேறி
விட்டது. யாருக்கோ நடக்கும் பிரச்சனையில் வான்டேடாக வண்டியிலேறி ரவுடி அவதாரம் எடுப்பதையே
கடந்த சில திரைப்படங்களாக இருவரும் கையான்டு வருகின்றனர். அதேரீதியில் தான் காதலிக்கும்
பெண்ணிற்கு இருக்கும் பிரச்சனையை தானே தலையிலேற்றி (‘விக்’க சொல்லல) அதை வழக்கம்போல
தீர்த்து சுபம் போட்டுவிடுகிறார்கள். இடையிடையே காமெடியைப் பொழிய நண்பன், காதலியுடன்
காதல் எபிசோட், ஆக்சன் எபிசோடுகள், ப்ளாஷ்பேக்
மற்றும் மிகமுக்கியமான இன்டர்வெல் சண்டையைத் தொடர்ந்து ‘ஐ யம் வெய்ட்டிங்’ ரீதியிலான
வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் போன்
உரையாடல். அதனால் இந்த க்ளிஷேக்களையெல்லாம்
ஓரங்கட்டிவிடலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இப்போது
மேட்டர் என்னவென்றால் மேலே சொன்ன க்ளிஷேக்களை எவ்வாறு அடுக்கி, அதை எவ்வளவு வேகமாக
திரையில் கடத்தப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தே திரைப்படத்தின் வெற்றி அமையும். அந்த வகையில் பைரவா ஓரளவு திருப்தி படுத்தியுள்ளது
என்றே சொல்லவேண்டும். ஜாலியாக ஆரம்பித்து, எந்த லாஜிக்கும் தேவையில்லாத, பக்கா லோக்கலான
விஜய் திரைப்படமாக வெளிவந்துள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை ஆங்காங்கே சறுக்கினாலும்
, கொஞ்சம் வேகமாகவே பயணிக்கிறது திரைக்கதை. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">படத்தின்
மைனஸ்களை பட்டியலிட வேண்டுமானால் விஜய்யின் மேனரிசம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது;
பல இடங்களில் க்யூட்டாக தெரியும்; சில இடங்களில் படுகேவலமாகவும் உள்ளது. வில்லனை புத்திசாலி
போல் காட்டிவிட்டு, அவனை வழக்கம்போல் மூளையற்றவனாக ஆக்கிஉள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் அவ்வளவு ஈர்க்காதது பெரும் லாஸ்; விஜய்யைப் பொறுத்தவரை
பாடல்களின் தாக்கம் பட்டிதொட்டியெங்கும் நிறைந்திருக்கும். சின்னஞ்சிறு குழந்தைகள்
கூட ரைம்ஸ் சொல்லுவது போல் , விஜய்யின் திரைப்படம் வெளிவந்தால் அத்திரைப்படத்தின் பாடலைப்
பாடிக்கொண்டிருக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் அந்த சாத்தியம் நிறைவேறவில்லை. விஜய்யின்
நடனத்தை எதிர்பார்த்துவிடாதிர்கள், அதேபோல் இந்த படத்தில் சுத்தமாக வொர்க்கவுட் ஆகாத
மற்றொரு விசயம் காமெடி; எவ்வளவோ முயற்சித்தும் இந்த திரைப்படத்தின் காமெடிக்காக சிரிப்பதென்பது
அசாத்தியமானதொன்றாகவே எனக்கு இருந்தது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ப்ளஸ்கள்
என்று பார்த்தால் விஜய்யின் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ்; சந்தோஷ் நாராயணின் பிண்ணனி இசை; ரிச்சான
ஒளிப்பதிவு. காதல் மற்றும் ஆக்சன் காட்சிகள். மொத்தத்தில்
ஒருமுறை பார்க்கும் ஜாலியான டைம்பாஸ் திரைப்படம். மற்ற விமர்சனங்கள் கூறுமளவுக்கு மட்டமான
திரைப்படமெல்லாம் இல்லை; விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்; மற்றவர்கள்
பொங்கல் விடுமுறைக்காக குடும்பத்தோடு போகலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-20778653789620420662016-11-19T09:48:00.000+05:302016-11-19T09:48:23.088+05:30சிறந்த பக்தன் - சிறுகதை<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDxvUUpJsjKVbCmxzMdnbVKkfYJ6xRf_TEquy8Ib7quJ_3-CRkgn0-5Kar74H7OVj6N1pJwMMpzOYhgdpooxYNEBnHxD2lkVpCrsPtOjpXGyMr6BfDprTN9PiIDAllMsfaS9pMH_VbBJg/s1600/201509071508080186_Devotion-to-the-best-atipattar_SECVPF.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="512" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDxvUUpJsjKVbCmxzMdnbVKkfYJ6xRf_TEquy8Ib7quJ_3-CRkgn0-5Kar74H7OVj6N1pJwMMpzOYhgdpooxYNEBnHxD2lkVpCrsPtOjpXGyMr6BfDprTN9PiIDAllMsfaS9pMH_VbBJg/s640/201509071508080186_Devotion-to-the-best-atipattar_SECVPF.gif" width="640" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘இன்றும்
ஒன்றுகூட தேறாது போலிருக்கிறதே’ என்றான் முத்தண்ணன் ஏக்கத்துடன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘கடலம்மாவிற்கு
நம் பரதவர்குலம் மீது ஏனிந்த கோபமோ தெரியவில்லை’ என்று பதில் சொல்லி தன் மைத்துனனைத்
தேற்ற முயன்றான் களமன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அந்த
பெரிய மரக்கலம் ஆர்ப்பரிக்கும் வங்கக்கடலில் இரண்டு நாட்களாக ஊசலாடிக்கொண்டிருந்தது.
இருப்பினும் இன்னும் ஒரு மீனைக்கூட பிடிக்கமுடியவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘என்ன
சிந்தனை முத்தண்ணா?’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘எல்லாம்
உன் தமக்கையை எண்ணித்தான்.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘அவளுக்கென்ன?
பரதவர்களில் வலிமையான உமக்கல்லவா மணம்புரிந்து கொடுத்துள்ளோம். பின் என்ன கவலை?’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘நீ
அறியாததா? இக்கடல்மாதா தொடர்ந்து நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள். பாவம் என்னவள்;
பசிப்பிணி எனும் பாவியால் சூழப்பட்டிருப்பாள். ’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘இது
இறைவனின் திருவிளையாடலேயன்றி வேறெண்ண சொல்ல?’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘நம்
தலைவர் ஏதோ குற்றம் புரிந்திருப்பாரென்று நினைக்கிறேன்’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘என்ன
மூடத்தனமிது? நம் பரதவக்குலத்தலைவர் மீது பழிசுமத்தினால் உண்ண ஒருபருக்கை நெல்லும்
கிடைக்காது முத்தண்ணா’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘இப்போது
மட்டும் இங்கே என்ன வாழ்கிறது?’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘சரி
வா. வீசிய வலையை எடுக்கலாம். ’ என்றவாறே இருவரும் அங்கிருந்து கலத்தின் ஓரத்தினை அடைந்தனர்
அவர்களிருவரும் சோழமண்டலத்தின் ஆளுகைக்குட்பட்ட நாகை மாவட்டத்தின் தென்கோடி முனையிலிருக்கும்
சிற்றூரான முளைப்பாடியில் வசித்துவரும் பரதவ குலத்தோர். சில நாட்களுக்கு முன் வரை கடல்தாயின்
அருளால் அளவிடற்கரிய மீன்கள் பிடித்து பசியெனும் சொல்லின் பொருளறியாது சிறப்பாக வாழ்ந்துவந்த
குடியினர். ஆனால் இப்போதோ ஒருவேளை உணவிற்கு வழியில்லாமல் பழங்கருவாடுகளையும் வீட்டிலுள்ள
பெண்டுகள், குழந்தைகளின் நகைகளையும் விற்று வயிற்றை நிரப்பிவந்தனர். ஏறத்தாழ அச்செல்வமும்
தீர்ந்து போய் அடுத்தவேளை உணவிற்கு என்ன செய்வதென்று அச்சத்துடன் வாழ்ந்துவருகிறார்கள்.
தம் வாணிகம் சார்ந்த மருதநிலத்தில் வாழும் உற்றார், உறவினரிடம் கடன் வாங்கவும் அவர்களுக்கு
மனம் வரவில்லை. இயற்கையின் அதிசயம் அவ்வப்போது கெடுதலாகவும் முடியும் என்பதை அவர்களுக்கு
உணர்த்தும்படியாக கடந்த ஒருமாத காலம் இருந்தது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">கடல்
தாய் இவ்வளவிற்கும் எதுவும் தராமல் விடவில்லை. ஆரம்பத்தில் பல மீன்களிலிருந்து சிலவாக்கி
தற்போது தினமும் ஒரே ஒரு பெரியமீன் மட்டும் எண்ணித் தருகிறாள். அவ்வொரு மீனையும் அதிதீவிர
சிவபக்தனாகிய முளைப்பாடி பரதவர்களின் தலைவன் கடலில் விட்டுவிடுகிறான். ஏதோ அம்மீனை
வைத்து தாணுன்னா விட்டாலும் தன் குழந்தைகளாவது உண்டு பசியாறும் என்றெண்ணிய அங்கிருந்த
குடும்பங்களுக்கு இது பேரடியாக இருந்தது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">வலையில்
ஏதோ சிக்கியது போலுணர்ந்தான் முத்தண்ணா. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘மைத்துனனே!
ஏதோ பெரும் திமிங்கலம் சிக்கியுள்ளது என எண்ணுகிறேன்’ என்று கூறிய முத்தண்ணாவும் அவன்
மைத்துனனும் சிரமப்பட்டு வலையை இழுத்தார்கள். இருவரும் வலையில் துடித்துக்கொண்டிருந்த
அந்த மீனைப் பார்த்து அதிசயித்து நின்றனர். தங்கள் வாழ்நாளில் அப்படியொரு மீனை அவர்கள்
பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம். தங்கத்தால் ஆன உடலில் ரத்தினங்களால் ஆன செதில்களும்,
மாணிக்கத்தால் ஆகிய கண்ணும், வைர, வைடூரியத்தால் ஆன வாலுமென அது ஒரு புதையலாய்க் காட்சியளித்தது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘முத்தண்ணா!
இவ்வதிசயத்தைப் பார்த்தாயா? யாருக்கும் கிடைக்காத பெரும்பேறு நமக்கு கிட்டியுள்ளது.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘ஆம்
மைத்துனனே! இதைக் கொண்டு சென்று புகாரில் விற்றால் பெரும்பொருள் கிடைக்கும். அதைக்கொண்டு
நம் குலத்தோர் இன்னல்களைத் தீர்த்துவிடலாம்’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘ஏன்
இப்படி உன் சிந்தனை மாறிப்போகிறது? கடலில் கிடைக்கும் பொருளை நம் தலைவனிடம் சமர்பிக்கவேண்டுமென்று
தெரியாதா உனக்கு?’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘சொல்வதைக்
கேள் களமா. நம் தலைவரிடம் இதைக்கொண்டு சென்றால் இதையும் கடலில் விட்டுவிட்டு, சிவபெருமானே
உனையும் உணர்வேன் நன்காய் எனப்பாடத்துவங்கி விடுவார். என் பேச்சைக் கேள். பொருளீட்டினால்
ஒழிய உன் தமக்கையையும் அவளின் மகனையும் இன்றிரவு பசியினில் இருந்து காக்க முடியாது.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘உடல்
வாடினாலும் பசிமீறினாலும் வழிமாறாமலே வாழ்ந்திடுவோம் முத்தண்ணா.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அதற்குமேல்
முத்தண்ணாவினால் பேச முடியாமல் போய்விட அக்கலம் கரையை நோக்கித் திரும்பியது. அந்த நவரத்தின
மீனைப் பார்த்தவாறே திக்கில் ஆழ்ந்திருந்த முத்தண்ணன், தன் மைத்துனன் களபனிடம் கேட்டான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘ஒருவேளை
இதையும் நம் தலைவன் கடலில் விட்டுவிட்டால்?’ <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘அவரை
வெட்டி கடல்மீன்களுக்கு உணவாய்ப்போடவும் அஞ்சேன்’ என்றான் களபன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">கரை
வந்தடைந்த இருவரையும் எதிர்பார்த்து அவர்களின் குடும்பம் காத்திருந்தது. அவர்கள் இருவரும்
ஒருசேரத் தூக்கிவந்த நவரத்தின மீனைப் பார்த்ததும் அங்கிருந்த நெய்தல்நில பரதவர்கள்
அதிசயத்து நின்றனர். ஊரே ஒன்று கூடியது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘எம்மக்களே!
இம்மீனைப் புகார்ப்பட்டிணத்திலோ மதுரை அறுவை வீதியிலேயோ விற்றால் பெரும்பொருள் கிடைக்கும்.
அப்பொருள்கொண்டு நம் துயர் தீர்த்துவிடலாம். ஆனால்,’ என்றவாறே இழுத்தான். அவன் இழுத்த
ஆனாலின் அர்த்தம் அங்கிருப்பவர்களுக்கும் தெரியும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘அப்படியாகாது
முத்தண்ணா. நம் தலைவரிடம் பேசிப்பார்க்கலாம். ஏற்றுக்கொள்ளவில்லையெனில் நாம் ஒருசேர
அவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். வாயினால் அல்ல; கையினால்’ என்றான்
கூட்டத்திலிருந்த ஒரு இளைஞன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அக்கூட்டத்திலுள்ளோர்
அம்முடிவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு பரதவக்குடித் தலைவனின் தாழைமடல் குடிலை அடைந்தனர்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘பரதவக்குடி
காக்கும் பெருமானே! வெளியே வரவும்.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">உள்ளேயிருந்து
அமைதியே உருவெடுத்த சிவபக்தனும் பெரும் வீரனுமான தலைவன் வெளியே வந்தான். கடந்த சில
நாட்களாக உண்ணாமல் இருந்ததால் அவனின் முகம் வாடியிருந்தாலும் அம்முகத்தின்வழி ஒழுகும்
கருணை ஒளி, அன்பைப் போதிப்பதாய் இருந்தது. வெளியே நின்றவர்கள் அவனிடம் நடந்ததைக் கூறி
மீனை ஒப்படைத்து அதைவைத்து தங்கள் துன்பத்தை நீக்கவேண்டும் என்றும் வேண்டினர். அம்மீனைப்
பார்த்த தலைவன் ,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘சிறந்வையெல்லாம்
தென்னாடுடைய எம்பெருமானுக்கே அர்ப்பணம்’ என்று கூறிவிட்டு நேராய் கடலில் சென்று அதை
விட்டான். சிறையிலிருந்து விடுபட்ட கைதிபோல் மிகவேகமாக கடலில் சென்று அம்மீன் மறைந்தது.
குழுமியிருந்த கூட்டத்தினரின் முகத்தில் கோபம் கொப்பளிக்க, மக்கள் அனைவரும் ஒருசேர
அத்தலைவனை நோக்கி வந்தனர். அப்போது வானில் பிரகாசமான ஒளி அத்தலைவன் மீது பரவ, அசரீரி
‘அதிபத்தா’ என்றது. கூடியிருந்தவர்களின் வயிறும், மனமும் நிறைந்தது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">நன்றி
– அதிபத்தர் வரலாறு, பெரியபுராணம்.<o:p></o:p></span></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-15595603137219938062016-11-17T13:46:00.001+05:302016-11-17T13:46:51.079+05:30MALENA (18+) – சினிமா விமர்சனம்<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihZ1E53nLDguEDHZs82-JrhMBNY8Trb_B5yWFSeahp9-VITKCUKj-p01Tzxcr0panTkuh-qc1N4mt86o4XqIAYfkdwCBVr3D34mtd75XZ_zEV4_hJhWbNlVcxmks4KG1dTbNSO2sOMJTU/s1600/28504-b-malena.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihZ1E53nLDguEDHZs82-JrhMBNY8Trb_B5yWFSeahp9-VITKCUKj-p01Tzxcr0panTkuh-qc1N4mt86o4XqIAYfkdwCBVr3D34mtd75XZ_zEV4_hJhWbNlVcxmks4KG1dTbNSO2sOMJTU/s640/28504-b-malena.jpg" width="480" /></a></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">பொறாமை
– தன் சகமனிதன் தன்னைவிட எதாவது ஒருவகையில் உயர்ந்தவராய் இருந்தால் நமக்குள் அரிப்பெடுத்து
அலையும் உணர்ச்சி. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகம். அதேநேரம் நம்மைவிட எதாவது
ஒருவகையில் உயர்ந்தவராய் இருந்தால் ஆண்களின் எண்ணம் அதை அடைந்தே ஆகவேண்டும் என்ற கோரவெறி.
அடைய முடியாவிட்டால் உயர்ந்தவரை தாழ்மைப்படுத்த வேண்டும் என்ற சிறுமைத்தனம். இது எல்லா மனிதர்களுக்குள்ளும் புதைந்துகொண்டிருக்கும்
மிருகத்தனத்தின் எச்சம். அது வெளிப்பட்டால்? அதனால் பாதிக்கப்பட்டால்? அப்படி பாதிக்கப்பட்டவள்
தான் மலெனா. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அதற்குமுன்
உலகசினிமாக்களில் ஈரானியத் திரைப்படங்களைத் தவிர வேறு எந்த மொழிப்படங்களைப் பார்ப்பதாய்
இருந்தாலும் தனியாகவே பாருங்கள். அற்புதமான படம் என்பதால் குடும்பத்துடன் அமர்ந்து
பார்க்கலாம் (!) என்று நினைத்தால் ஜிகிர்தண்டாவில் வரும் வேட்டையாடு விளையாடு கிளைமேக்ஸ்
தான் உங்கள் வீட்டிலும் நடக்கும். அதிலும் இத்தாலிய, ப்ரெஞ்ச் திரைப்படங்கள் என்றால்
ஹெட்போனை மாட்டிக்கொண்டே பாருங்கள். எந்த இடத்தில் இருந்து காம மொனகல்கள் வரும் என்று
எதிர்பார்க்கவே முடியாது. பேசிக்கொண்டே இருப்பார்கள்; பட்டென்று உடையைக் கழட்டிவிட்டு
ஆரம்பித்துவிடுவார்கள். அதிலும் இத்தாலிய சினிமாக்களில் பெரும்பான்மையான கலைப்படைப்புகள்
(லா பெட்டா ஈ பெல்லா, த லீபேர்ட், இல் ஜியார்டினோ டை ஃபின்சி கான்டினி மாதிரியான கமர்சியல்
படங்கள் இல்லை) செக்ஸ் என்ற வட்டத்தைச் சுற்றியே நிகழும். ஈரானியர்களுக்கு பேமஸ் குழந்தைகள்
என்றால் இத்தாலியர்களின் பேமஸ் பெண்கள். பெண்களின் அழகை அவர்களிடம் சிக்கும் கேமரா
வெளிப்படுத்தும் அளவிற்கு வேறு யாராலும் வெளிப்படுத்திவிட முடியாது. இத்தாலியின் டாப்
10 படைப்புகளை எடுத்துப் பார்த்தால் அதில் பாதிக்கும் மேல் செக்சை முக்கியமானதொரு புள்ளியாக
வைத்தே நகரும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இப்போது
மலேனாவை பார்க்கும்முன் இவ்வளவு விசயங்களைக் கூறுவதற்கு காரணம், அழகுக்கும் அருவெறுப்புக்கும்
இடையே இருக்கும் நூலிழைக் கோட்டில் இத்திரைப்படம் பயணிக்கும். அருவெறுப்பு என்று கூறுவது
பதின்ம வயது சிறுவனின் காமத்தினூடே இத்திரைப்படம் பயணிக்கும். சரியானபடி புரிந்துகொள்ளாமல்
இது ஒரு பிட்டு படம் எண்ணும்படியாகவும் நேர்ந்துவிடலாம். அதனால் பார்க்கும்முன் சில
விசயங்களை உணர்ந்துகொள்ள வேண்டும். படம் தீவிர அடல்ட்ரீ கன்டென்டை உடையது. உலகமெங்கும்
பிட்டு படங்களுக்கு கூட 18 வயது ஆகாத நடிகர்களை நடிக்கவைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ப்ரேசர்ஸ், பார்ன்ஹப், நாட்டி அமெரிக்கா முதலான
பிட்டுப்பட தளங்களில் சைல்ட் செக்ஸ் வீடியோக்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
அப்படி இருக்கும்போது 14 வயது சிறுவனின் காதல் கலந்த காமப்போராட்டம் திரைப்படத்தில்
இடம்பெறுகிறது என்பதால் ஒரு சிலருக்கு தவறான புரிதலுக்கு வித்திட வாய்ப்பு உண்டு (படம்
வெளியான நேரத்தில் இது பெரும் பிரச்சனையாக கிளம்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது).
அதனால் இத்திரைப்படத்தின் கருவை விளக்கிக்கொள்ள இத்தாலியத் திரைப்படங்களை இதற்குமுன்
பார்க்கவிட்டாலும் சரி; குறைந்தபட்சம் ஸ்டான்லி குப்ரிக்கின் EYES WIDE SHUT, A
CLOACKWORK ORANGE, THE SHINING போன்ற திரைப்படங்களையாவது பார்த்திருக்க வேண்டும்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">1940-களில்
இத்தாலியின் சிசிலி பகுதியில் வந்திறங்குகிறாள் மலேனா. கணவன் இத்தாலிக்காக போரிடும்
மேஜர். இரண்டாம் உலக யுத்தத்தில் கலந்துகொள்ள சென்றிருக்கிறான். அவளின் தந்தை ஒரு காது
கேட்காத பள்ளி ஆசிரியர். மலேனா – பெயருக்கேற்றார்போல் பேரழகி. அழகு என்பதன் முழு அடையாளமாய்
விளங்குகிறாள். இது அந்நகரில் வசிக்கும் பெண்களுக்கு பொறாமையையும் ஆண்களுக்கு அவளை
அடையவேண்டும் என்ற வெறியையும் தூண்டிவிடுகிறது. அதேநேரத்தில் ரொனட்டோ எனும் 14 வயது
நடுத்தர குடும்பத்து சிறுவன் அவளைப் பார்க்கின்றான். பார்த்ததும் காதல். அவளை மனமார
விரும்புகிறான். அவளை எண்ணியே தினமும் இரவு தூங்காமல் காமக்கனவுகளில் கழிகிறது. மலேனாவைப்
பற்றிய வதந்திகள் கூடிய சீக்கிரம் உலாவர ஆரம்பிக்கிறது. அவளுக்கு கள்ளக்காதலன் இருக்கின்றான்
என்று ஊரெல்லாம் வதந்திகளைக் கிளப்புகிறார்கள். ரெனோட்டாவால் தாங்க முடியவில்லை; அவளை
பின்தொடருகிறான். ஆனால் அவள் தினமும் சந்திப்பது அவளின் தந்தையை. இப்படியாக இருக்க,
அவளின் கணவன் போரில் இறந்துவிட்டான் என்ற செய்தி தெரியவருகிறது. இதுவரை அமைதிகாத்தவர்கள்
இஷ்டத்திற்கு வதந்திகளைக் கிளப்ப ஆரம்பிக்கிறார்கள். ஆண்துணை என்று எங்கோ இருந்த ஒருவனும்
இறந்துவிட்டதால் அவள் வீட்டை பிற ஆண்களும் நோட்டமிடுகிறார்கள். ஒவ்வொருத்தனாய் வந்து
உதவுவதாக கூறிக் கூறி அவளை நெருங்க முயற்சிக்கிறார்கள். இப்படியாக இருக்க, அவளின்மேல்
கள்ளக்காதல் கேஸ் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்துவரப்படுகிறாள். கோர்ட்டில் ஒரு வக்கில் அவளுக்கு ஆதரவாய் பணம் வாங்காமல்
வாதாடி விடுதலையாக்குகிறான். பணத்திற்கு பதில் அவளைக் கேட்க, அவளோ மறுக்க, அவளை வன்புணர்ச்சிக்குள்ளாக்குகிறான்.
அதன்பின் அவளை மணந்துகொள்வதாக அவன் கூற, அவனைப் பிடிக்காவிட்டாலும் அவளும் வேறுவழியின்றி
அவனை நம்புகிறாள். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">வக்கிலின்
தாயார் திருமணத்திற்கு சம்மதிக்காததால் அவளுடைய உறவையும் முறித்துக்கொள்கிறான் வக்கில்.
இன்னொருபுறம் தந்தையும் இறந்துவிட முழுக்க அநாதையாகிறாள் மலேனா. வறுமையும் சேர்ந்துவிடுகிறது. ரொட்டி கொடுப்பவன்கூட
அவளை மேய நினைக்கிறான். பசிக்காக வேறுவழியில்லாமல் அவனுடன் படுக்கிறாள். ஒருகட்டத்தில்
சிசிலி நகரை ஜெர்மானியர்கள் கைப்பற்றுகிறார்கள். இதன்பின் வேறுவழி தெரியாமல் அவள் விபச்சாரி
ஆகிறாள். ஏற்கனவே வயித்தெரிச்சலில் இருக்கும் கூட்டம் வயித்தெரிச்சலுக்கு ஏற்றமாதிரியான
விசயம் கிடைத்ததும் ஊரிலேயே மட்டமானவளாக அவளை நினைக்கின்றனர். சிலநாட்களுக்குப்பிறகு
ஜெர்மானியர்கள் போரில் தோற்க, அமெரிக்கப்படை நாட்டினூடே நுழைகிறது. வெற்றிக்களிப்பில்
நகரே ஆராவரமடைகிறது. அந்நேரத்தில் ஜெர்மானியர்களின் கைக்கூலி இவள் என்று கூறி அதுவரை
ஆள்மனதில் பொதிந்து வைத்திருந்த அத்தனை வன்மத்தையும் அந்நகர பெண்கள் மலேனாவின் மீது
பிரயோகப்படுத்துகிறார்கள். அவளை அடித்து, உடையைக் கிழித்து, மொட்டைஅடித்து ஊரைவிட்டே
துரத்துகிறார்கள். அவளும் ரயிலில் ஏறி கிளம்பிச்செல்கிறாள். அவளின் அழகுக்காக என்னவேனாலும் கொடுப்பதாய் கூறிய அத்தனை ஆண்களும்
அவளை இழிபிறவியாய் பாவித்து, நமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதைபோல் ஒதுங்கிக்கொள்கிறார்கள்.
இத்தனையையும் நாம் பார்ப்பது ரெனோட்டாவின் வழியே. அவனாக நாம் மலேனாவைப் பார்க்கிறோம்.
அவளை அடித்துத்தொரத்திய சிலநாட்களில் இறந்ததாக கூறப்படும் மலேனாவின் கணவன் ஊருக்குள்
வருகிறான். அவன் யார் யாரிடமோ அவளைப் பற்றி
விசாரிக்கிறான். அவனைக் கண்டாலே உச்சா போகுபவர்கள் கூட, போரில் கையிழந்த அவனைப் பார்த்து
அந்த வேசியைப் பற்றி யாரிடம் கேட்கிறாய் எனக்கூறி அவமானப்படுத்தி தொரத்துகிறார்கள்.
இதன்பின் என்ன ஆனாது என்பது கிளைமேக்ஸ்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இந்த
மையக்கதை ஒருபுறம்; அடுத்தது இதன் மேலோட்டமான கதை – அதாவது ரெனோட்டாவின் கதை. டீனேஜ்
ஆரம்பத்தில் ஒவ்வொருவருக்கும் பிறக்கும் காமம் கலந்த காதல். மலேனாவைப் பார்த்த நொடியிலிருந்து.
அவளின் வாழ்க்கையை எப்படியாவது மீட்டெடுத்து அவளுக்கு நல்லவாழ்க்கையை அவன் அமைத்துத்தர
ஆசைபட்டான். அவளை அவ்வூரிலிருக்கும் ஆண்களிடமிருந்து எப்படியாவது காப்பாற்றிவிட ஆசைப்பட்டான்.
தான் பார்த்த நாடகங்களில் வரும் காட்சிகளைப்போல் பறந்துசென்று அவளை காப்பாற்றவேண்டும்
இந்த சதிகாரர்களிடமிருந்து என தினமும் எண்ணினான். அவனுக்குத் தெரிந்தது எல்லாம் மலேனா.
அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் மனதினுள் படம்பிடித்தான். அவளை அடைய நினைத்தான். ஆனால்
அவளை வற்புறுத்தி அடையும் வழியைக் காட்டிலும் தன் ஹீரோயிசத்தால் அவளைக் காதலில் வீழ்த்தவேண்டும்
என்று எண்ணினான். அவளைப் பற்றி யாராவது தவறாக பேசினால் கோபம் பொத்துக்கொண்டு வர ஆரம்பித்தது
அவனுக்கு. இத்தனைக்கும் ஒருமுறை கூட அவன் மலேனாவிடம் பேசியது கூட இல்லை. அவளுக்கு தெரியாமல்
அவள் வீட்டில் நடப்பதை ஒளிந்துகொண்டு கவனித்தான். அவளைப் பற்றிய உண்மை அறிந்த மூன்றாவது
ஆள். சூழ்நிலையையும் நிலைகெட்ட மாந்தாராலும் அவள் அடையும் கஷ்டங்களை அவளுக்கு தெரியாமலே
அவளுடன் இருந்து புரிந்துகொண்டு வந்தவன். ஒருகட்டத்தில் அவளது கணவனைப் பார்த்ததும்
அவளுக்கான வாழ்க்கையை அவளிடம் கொடுத்துவிட ஆசைப்பட்டான். ஒருகாதலனாய் தான் காதலித்த
பெண்ணிற்கு நல்ல வாழ்க்கையை அமைத்தும் கொடுத்தான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">THE
GOOD THE BAD THE UGLY உள்ளிட்ட பல படங்களில் இணைக்கதாசிரியராக பணியாற்றிய லுசியானா
வின்சென்சோனி எழுதிய சிறுகதையைப் படித்து அந்த பாதிப்பில் இருந்த இயக்குநர் ஜ்யோசபே
தர்னேத்தோர் ஒரு ஷூட்டிங்கில் மோனிக்கா பெலுசுசியைப் பார்த்ததும் அந்த சிறுகதையைத்
திரைப்படமாக்க முடிவு செய்தார். அதன்படி உருவானதுதான் மலேனா. பொதுப்படையாக பார்க்கும்போது
காமச்சுவை வெளிப்பட்டாலும் இது முழுக்க முழுக்க அவலச்சுவையை உள்ளடக்கிய ஒரு அற்புதப்படைப்பு.
மலேனாவை மார்க்கெட்டில் வைத்து பிற பெண்கள் அடிக்கும் காட்சியில் அவள் பரிதாபமாக அங்கு நிற்கும் ஆண்களைப் பார்க்கும் பார்வை,
நம் ஒவ்வொருவரையும் ஒருநிமிடமாவது யோசிக்கவைத்துவிடும். அற்புதமான ஒளிப்பதிவும் அழகியல்
இசையும் படத்தை, படைப்பாக மாற்றிவிடுகிறது. ஒரு சாதாரண சிறுகதையை வைத்து அதை எப்படியெல்லாம்
மெருகேற்ற முடியுமோ அவ்வளவு வித்தையும் திறம்பட செய்து சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தினைக்
காட்டிலும் பலமடங்கு தாக்கத்தை நம்முள்ளே ஏற்படுத்திவிடுகிறார் இயக்குநர் தர்னேத்தோர்.
மலேனா பார்த்தபின் அழகான பெண்ணைப் பார்த்தும்
புணர்ந்துவிடவேண்டும் என்று எண்ணும் மனோபாவம் குறைந்தபட்சம் நம்மிடமிருந்து ஒருமாதமாவது
ஓடிஒளிந்துகொள்ளும். நமக்குக்கிடைக்காத ஒரு அழகான பெண்ணை, நம் நண்பர்களின் மத்தியில்
ஐட்டம் என்று கூறும் கேவலமான சேடிச எண்ணம் ஓரளவாவது ஓடி ஒளிந்து கொள்ளும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">பின்குறிப்பு
– படத்தில் ரெனோட்டாவின் அப்பாவாக வருபவர் செய்திருக்கும் அட்டகாசங்கள் கண்டிப்பாக
சிரிக்கவைத்துவிடும். மலேனாவின் அழகிற்காக இரண்டு முறை எனில் அவருக்காக மூன்றாவது முறை
பார்க்கவைத்துவிடும் இத்திரைப்படம்.<o:p></o:p></span></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-88151216931355363562016-11-15T08:49:00.001+05:302016-11-15T08:49:11.509+05:30JAFFER PANAHI-யின் THE WHITE BALLOON – சினிமா விமர்சனம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTguZcUNwZtIqVHkQa9VlfrnsiQ5-l9oVwE5LDw_XBBCLe0ZGC19jhCq5ALLbo5XYNeJKr4rXLcnHkaeEWzWMMr0ht-X7GtJwzfvJ-qOiadoU6Nb6m0LIf2AiTVOidxnVf3Ctv2TNiu7s/s1600/ZM1qr.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTguZcUNwZtIqVHkQa9VlfrnsiQ5-l9oVwE5LDw_XBBCLe0ZGC19jhCq5ALLbo5XYNeJKr4rXLcnHkaeEWzWMMr0ht-X7GtJwzfvJ-qOiadoU6Nb6m0LIf2AiTVOidxnVf3Ctv2TNiu7s/s640/ZM1qr.jpg" width="640" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">சினிமா
என்பது பொழுதுபோக்கிற்கு மட்டுமல்ல; அது ஒரு கலை. காவியத்திற்கு சரிசமமான மற்றொரு உறுதியான,
எளிமையான வடிவம். அது நாம் சார்ந்த இனம், மொழி, மதம், நாடு என எல்லாவகையான பரிமாணங்களையும்
கலாசாரத்தோடும் பாரம்பரியத்தோடும் பிண்ணப்பட்டிருக்க வேண்டும். இதை ஈரானியர்கள் உணர
கிட்டத்தட்ட 60 வருடங்கள் பிடித்தது. ஒரு குறிப்பிட்ட அழுத்ததிற்கு மேல் வெடித்துச்
சிதறும் எரிமலையாய் 90-களில் வெடித்து சிதறியது ஈரானிய சினிமா அலை. உலகின் மிகக் கட்டுபாடுகளுக்குட்பட்டு
திரைப்படங்கள் எடுக்கப்படும் இடமாக தாரளமாக ஈரானை சொல்லலாம். ராணுவ ஆட்சி, மதக்கட்டுப்பாடு,
பழமைவாதிகள், போர், அரசியல் காரணங்கள் என வெளிப்படையான பல பிரச்சனைகளுக்கிடையே கதை
எழுதுவதிலிருந்து சென்சார் வரை என ஏகப்பட்ட மறைமுக பிரச்சனைகளைத் தாண்டியே ஒவ்வொரு
ஈரானியத் திரைப்படமும் இன்றுவரை வெளியாகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">உதாரணமாக
நீங்கள் ஒரு கதை எழுதியிருக்கிறீர்கள் எனில் நேரடியாக தயாரிப்பாளரை அணுகி படத்தை எடுத்துவிட
முடியாது. கதையை அரசிடம் காட்டி அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக செய்யவேண்டும். எனக்குத்
தெரிந்து எழுதும் கதைக்கே தணிக்கை குழு இருந்த ஒரே சினிமா ஈரானிய சினிமா தான். கதையை
அப்ரூவ் செய்துவிட்டால் போதுமா? திரைக்கதைக்கும் இதே நிலமை தான். அப்படியே நீங்கள் நினைத்தமாதிரி கதை, திரைக்கதை எழுதி படத்தை
எடுத்துவிட்டாலும் ரிலிசில் ஒரு பிரச்சனை இருக்கிறது. நம்மூரில் யு, ஏ என சான்றிதழ்
வழங்குவது போல் அரசு அங்கு A,B, C என மூவகையாக ஒரு திரைப்படத்தை வகைப்படுத்தும். ஏ,
என்றால் நிறைய திரையரங்குகளில் ரிலிஸ் செய்யலாம் என்று அர்த்தம். பி என்றால் சுமாரான திரையரங்குகளிலும் சி என்றால்
மட்டமான ஒருசில திரையங்குகளில் லிமிடேட் எடிசனாகவும் ரிலிசாகும். நீங்கள் 1000 கோடியில்
எடுத்தாலும் சி சான்றிதழ் வழங்கிவிட்டால் தெருக்கோடி தான். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஈரானிய
சினிமாவில் இருக்கும் அரசியலைப் பற்றியும் சினிமாவின் பின்புலத்தைப் பற்றியும் பேசினால்
பொங்கிக்கொண்டே போகலாம் 1500 பக்கங்களுக்கு. அவ்வளவு பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டிருக்கிறார்கள்
அங்குள்ள இயக்குநர்கள். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஈரானிய
சினிமா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரவேண்டிய ஆள் அப்பாஸ் கியராஸ்டமி. சத்யஜித்ரேயின்
இறப்பைக் கண்டு மனம் வெதும்பிய அகிரா குரசோவா இவ்வாறு கூறினார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="color: red; font-family: "Latha","sans-serif";">‘சத்யஜித்ரேயின் இறப்பைக் கண்டு என் மனம் சொல்லமுடியாத வேதனையில் இருக்கிறது.
ஆனால் சத்யஜித்ரேயின் இழப்பை ஈடுகட்ட, அவருக்கு சரிசமமான திறமையுடன் ஒருவரை இவ்வுலகிற்கு
தந்த கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இப்படி
அகிரா கூறியது அப்பாஸ் கியராஸ்டமியைத் தான். யோசித்துப் பாருங்கள். உலகசினிமா பிதாமகர்களில்
ஒருவரான அகிரா, மற்றொரு ஜாம்பவனான ரே-க்கு சரிசமமானதொருவராக அப்பாஸ் கியராஸ்டமியைக்
கூறுகிறார் எனில் அவரின் திறமை எப்படியிருந்திருக்க வேண்டும். இம்மனிதர் மாத்திரம்
சினிமா எடுக்காமல் ஓவியத்திலயே இருந்துவிடலாம் என்று தன் சிறுவயதில் எண்ணியிருந்தால்
ஈரானிய சினிமா ஒட்டுமொத்தமாக அழிந்திருக்கும் என்றே கூறுவேன். ஈரானிய சினிமாவின் புரட்சிக்காரன்
ஜாபர் பனாஹி, கலகக்காரன் மொஹ்சன் மக்மல்பப்
மட்டுமின்றி இன்னும் எத்தனையெத்தனையோ கலைப்படைப்பாளிகள் தடம் மாறி எங்கோ ஒரு மூலையில்
இருந்திருப்பார்கள். ஆனால் நல்லவேளையாக கியராஸ்டமி அம்முடிவை எடுக்கவில்லை. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஜாபர்
பனாஹியின் திரைப்படம் இது எனக்கூறிவிட்டு அப்பாஸ் கியாராஸ்டமியை புகழ்ந்து கொண்டிருக்கிறானே
என்ற எண்ணம் தோன்றலாம். நியாயமாக பார்த்தால் அப்பாஸ் கியாராஸ்டமியின் திரைப்படங்களைப்
பற்றி தான் முதலில் எழுதியிருக்க வேண்டும். ஆனால் கியாராஸ்டமியின் திரைப்படங்களைப்
பற்றி எழுத போதுமான அறிவு என்னிடத்தில் இல்லை. அதுமட்டுமின்றி இப்படத்தைப் பொருத்தவரை
அப்பாஸ் கியாராஸ்டமி இல்லையெனில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்காது என்பதே உண்மை.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">நான்கு
தொலைக்காட்சி குறும்படங்களை IRIP (ஈரானிய தொலைக்காட்சி குழுமம்) உதவியின்றி தன் சொந்த
பணத்தில் தயாரித்த பனாஹி, தன் நண்பர் பர்விஷ் கூறிய ஒரு குட்டிக்கதைப் பிடித்துப் போக,
அதையே குறும்படமாக எடுக்க முடிவெடுத்து எட்டு பக்கங்களில் எழுதிய கதையே THE WHITE
BALLOON. அதை அப்ரூவலுக்காக IRIB-கு அனுப்ப, வழக்கம்போலவே அவரது கதை நிராகரிக்கப்பட்டது
(இதுவரை ஜாபர் பனாஹியின் ஒரு கதை கூட ஈரானிய அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை; அதுமட்டுமின்றி
ஈரானில் திரையிட அனுமதி வழங்கப்பட்ட ஒரே திரைப்படம் THE WHITE BALLOON மட்டும்தான்).
பனாஹியின் இம்முயற்சியைக் கேள்விபட்ட அப்பாஸ் கியாராஸ்டமி, பனாஹியின் கதையை வாங்கிப்
படித்து, தானே திரைக்கதை எழுதித் தருவதாக ஒப்புக்கொண்டார். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அதற்குமுன்
ஒரு குட்டி ப்ளாஷ்பேக். கியாராஸ்டமியின் ட்ரையாலஜி என்றழைக்கப்படும் முப்படைப்புகளில்
பெரும்புகழடைந்த UNDER THE OLIVE TREES திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்
பனாஹி. அப்போதே கியாரஸ்டமி கூறிய ஒரு வாக்கியம் <b><span style="color: red;">‘நம் திரைப்படத் துறையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்
நம்பிக்கை நட்சத்திரம் பனாஹி.’ ‘பனாஹி எந்தவொரு சூழ்நிலையிலும் தவறான திரைப்படத்தை
எடுக்கமாட்டார்’</span></b><span style="color: red;"> </span>என்று ஓப்பன் டாக் கொடுக்குமளவுக்கு
கியராஸ்டமிக்கு பனாஹியின் மேல் நம்பிக்கை இருந்தது. அதை இன்றுவரை காப்பாற்றியும் வருகிறார்.
2015-ல் வெளிவந்த TAXI திரைப்படம்கூட அந்த நம்பிக்கையை காப்பாற்றியது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இப்போது
நிகழ்காலத்திற்கு வருவோம். கியராஸ்டமி இப்படத்தின் திரைக்கதையை எழுதிக்கொடுக்க முன்வந்த
இருகாரணங்களில் முக்கியமானதொன்று பனாஹியின் திறமையின் மீது இருந்த நம்பிக்கை; மற்றொன்று
இத்திரைப்படம் குழந்தைகள் பற்றியது. (கியராஸ்டமியின் முதலிரு தொலைக்காட்சி திரைப்படங்களும்
குழந்தைகளைப் பற்றியதே. ஸ்பில்பெர்க்கை விட குழந்தைகளை அதிகமாக நேசக்கும் கலைஞன் கியராஸ்டமி.)
தான் கூறியது போலவே அற்புதமான திரைக்கதையை அசால்டாக எழுதிக்கொடுத்தது மட்டுமின்றி,
அதை IRIB-யிடம் கொடுத்து அப்ரூவலும் வாங்கி தந்தார் கியராஸ்டமி. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அப்ரூவல்
கிடைத்தாயிற்று; ஆரம்பித்து விடலாம் ஷூட்டிங்கை என்று உடனுக்குடனே முடிவு செய்யாமல்,
தன் கதைக்குத் தேவையான பாத்திரங்களைத் தேடி அலைந்தார் பனாஹி. படத்தில் பெண்குழந்தையின்
அண்ணனாக நடிக்க ஒரு சிறுவனுக்காக 6000 சிறுவர்களைக் கண்டெடுத்து அவர்களில் இருந்து
மொஹ்சன் எனும் சிறுவனைப் பிடித்தார். படத்தில் வரும் ஒரு ராணுவ வீரன் வேடத்திற்காக
டெஹ்ரானிலிருந்து 300 கிமி பயணம் செய்து தேடியலைந்து ஒருவரைக் கொண்டுவந்தார். மீன்
விற்கும் கடைக்காரராக நடிக்க ஒரு நிஜ கடைக்காரரையே நடிக்கவைத்தார். ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது
நாயகியான குட்டிப்பெண் ஐதாவிற்கு தவறுதலாக கொதிநீர் காலில் விழுந்து அதற்காக 20 நாட்கள்
தள்ளிவைத்தது போக ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்தார் பனாஹி. புதிய டெஹ்ரானின் லுக் படத்திற்கு
இடஞ்சலாக இருக்கும் என கியராஸ்டமி நம்பியதால் பழைய டெஹ்ரானின் எச்சமாக இருந்த பஷன்
நகரில் படத்தை எடுத்து முடித்தார். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">படத்தின்
கதையை ஒரே பத்தியில் சொல்லிவிடலாம்; புத்தாண்டு அன்று தங்கமீன் வைத்திருக்கவேண்டும்
என்பது ஒவ்வொரு பாரசீக குடும்பத்திலும் பின்பற்றும் வழக்கம். வீட்டில் ஏற்கனவே மீன்கள்
இருந்தாலும் கடையில் பார்க்கும் அழகான ஒரு தங்கமீனை வாங்க நினைக்கிறாள் ரசியா எனும்
ஏழு வயது பெண்குழந்தை. செல்லும் இடத்தில் தவறுதலாக அம்மாவிடம் அடம்பிடித்து வாங்கிய பணத்தை தொலைத்துவிடுகிறாள்.
அது ஒரு அன்டர்க்ரவுண்டில் மாட்டிக்கொள்கிறது. மீன் வாங்க சென்ற தன் தங்கையைத் தேடி
வரும் அண்ணன் . இவர்களிருவரும் சந்திக்கும் பல்வேறு மனிதர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைச்
சூழ்நிலை இவற்றையெல்லாம் 80 நிமிடத்தில் சொல்லும் திரைப்படமே THE WHITE BALLOON. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இவ்விடத்தில்
பாராட்டப்பட வேண்டியது கியரஸ்டமியின் திரைக்கதையைத் தான். படத்தின் மேலோட்டமான கதை,
மையக்கதை என இருவகையாக பிரித்து எழுதப்பட்ட திரைக்கதை. அதாவது மேலோட்டமான கதை என்னவென்றால்
ரசியா மீன் வாங்குவது; மையக்கதை என்பது அவள் சந்திக்கும் மனிதர்கள். மேலோட்டமான கதையை
நாம் மையக்கதையாக நம்பும் சூழ்நிலையில் படம் துவங்கியிருக்கும். முடியும்போது மேலோட்டமான
கதை எது , மையக்கதை எது என நம்முள் உணரவைத்திருப்பார் பனாஹி. மையக்கதையை நாம் உணரும்
நேரத்தில் இதுவரை நாம் எதை உண்மையென நம்பினோமோ அத்தனையையும் மறந்து சிலாகித்துக் கொண்டிருப்போம்.
ரசியாவின் அண்ணன் பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதை மறந்து ராணுவ வீரனின்
ஏக்கத்தை நினைத்து நாம் மனம் கசிவோம். ரசியா
மீன் வாங்கியது நம் மனதுள் நிற்காது. பலூனை விற்கும் அந்த ஆப்கானிய அகதி சிறுவனின்
தனிமையே நம்மை வாட்டியெடுக்கும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">பனாஹியின்
மிகச்சிறந்த துவக்கம் என இத்திரைப்படத்தைத் தாரளமாக சொல்லலாம். ஈரானிய அரசின் மெத்தனத்தால்
ஆஸ்கார் அனுப்பப்பட்ட இத்திரைப்படம் திரும்ப பின்வாங்கப்பட்டது. டைம்ஸ் இதழ் பட்டியலிட்ட
உலகின் சிறந்த 50 படங்களுல் ஒன்றாக தேர்வானது இத்திரைப்படம். அது மட்டுமின்றி கேன்ஸ்
உட்பட பல உலகத்திரைப்பட விழாக்களில் பங்கேற்ற திரைப்படம். மிஸ் செய்யாமல் பார்த்துவிடுங்கள்.
யூட்யூப்பிலேயே கிடைக்கிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">பின்குறிப்பு
– அப்பாஸ் கியரோஸ்டமி, மக்மல்பப், ஜாபர் பனாஹி ஆகியோரின் பிற திரைப்படங்களைப் பற்றி
வரிசையாக எழுத இருப்பதால் இப்பதிவில் சொல்லமறந்த, சொல்லவேண்டிய பல விசயங்கள் பின்வரும்
பதிவுகளில் தொடரும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-47509532253332487342016-11-14T19:06:00.002+05:302016-11-14T19:06:12.069+05:30அச்சம் என்பது மடமையடா – சினிமா விமர்சனம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5khY5Z8hMsgTPfRqsWjLoUs9azP9BDkcdzrac5-sBi5XmZ2_aaL2TjQo88xNLX4h7NNfAwxQCA4iL-3J3HpTirssaJwt5G-6EYiKceiaqNI15EnzW8EmiSxYgK7TnjNjRdf6S1djc7tA/s1600/Achcham-Yenbadhu-Madamaiyada-2016-MovieImg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5khY5Z8hMsgTPfRqsWjLoUs9azP9BDkcdzrac5-sBi5XmZ2_aaL2TjQo88xNLX4h7NNfAwxQCA4iL-3J3HpTirssaJwt5G-6EYiKceiaqNI15EnzW8EmiSxYgK7TnjNjRdf6S1djc7tA/s640/Achcham-Yenbadhu-Madamaiyada-2016-MovieImg.jpg" width="640" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஒரு
நாவலின் சாராம்சம் கெட்டுவிடாமல், அது கொடுக்கும் தாக்கத்தை அப்படியே திரையில் காட்டும்
வல்லமை வெகுசிலருக்கே அமையும். ஆங்கிலத்தில் மார்ட்டின் ஸ்கார்சேசே இதில் வல்லவர்.
ஒரு நாவலின் முழுமையான திரைவடிவத்தை அவர் திரைப்படங்களில் காணலாம். அந்த திறமை வாய்த்த
தமிழின் ஒரே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மட்டுமே. அவரின் திரைப்படங்களுல் வேட்டையாடு
விளையாடு, மின்னலே, நடுநிசி நாய்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் ஒரு நாவல் வாசிக்கும்
அனுபவத்தைத் தரக்கூடியது. படத்தில் வரும் மெயின் கேரக்டர்களின் மனதையும் நம்மிடம் உணர்ச்சியுடன்
வெளிப்படுத்துவார். அதுதான் கௌதம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஆனால்
எது ஒருவரின் திறமையோ, அது அவரின் மிகப்பெரிய மைனஸ் பாயின்டாகவும் இருக்கும். கௌதம்
வெளிப்படுத்தும் இலக்கியத் தன்மையை, அவருடைய கதாபாத்திரங்கள் நொடிக்கு ஒரு முறை கூறிக்கொண்டே
இருக்கும். ஒருநிமிடம் கூட நமது காதுக்கு ரெஸ்ட் கிடைக்காது. எதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள்.
அந்த கொஞ்சநஞ்ச ரெஸ்ட் மட்டும் நமக்கு விட்டால் போதும்; கௌதமால் ஆகச்சிறந்த இலக்கிய
படைப்பை உருவாக்கிவிட முடியும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">படத்தின்
ட்ரைலரை வைத்தே கதையை எல்லோரும் புரிந்துகொண்டிருக்க முடியும். வேலை வெட்டி இல்லாத
சிம்பு; சிம்புவின் தங்கையின் தோழியாக வழக்கம்போல் ஒரு கசங்கல் கூட இல்லாத உடையில்
ஹீரோயின்; ரோட் ட்ரிப்; திடீர் ஆக்சன். படம் முழுக்க நம்மை ரெஸ்ட்டே எடுக்கவிடாத வசனங்கள்.
ஆனாலும் சலிக்கவில்லை. எவ்வளவு நேரம் வசனங்கள் வந்தாலும் நமக்குப் பிடித்திருக்கிறது.
ஆங்காங்கே ப்ரில்லியன்டான வசனங்கள் நம்மை கிறங்கடிக்கிறது. காதல் எனும் அழகிய உணர்வை
வழக்கம்போல் அழகாய் கடத்திக்கொண்டு செல்கிறார். ஆனால் அவர் செய்த ஒரு காரியம் முதல்பாதி
முழுமையும் 5 பாடல்களைப் போட்டது தான். ஒருவேளை இரண்டாம்பாதி த்ரில்லர் கம் ஆக்சன்
என்பதால் பாடல் போட்டு அந்த வேகத்தைக் குறைக்க வேண்டாம் என்று எண்ணியிருக்கலாம். அது
ஓரளவு வொர்க்கவுட்டும் ஆகியுள்ளது. ஏனெனில் தள்ளிப்போகாத, ராசாளி ஆகிய இரு பாடல்களைத்
தவிர்த்து மற்ற அனைத்துப் பாடல்களும் ஏதோ விசுவலால் நன்றாயிக்கிருக்கிறதே ஒழிய, தனியாய்
கேட்கும்போது சுத்தம். அதிலும் சோக்காளி பாடல் ரஹ்மான் கேரியரில் எரிச்சலூட்டிய முதல்
பாடல் என்றே சொல்லலாம். RAB போடுவதாய் கூறி நம் காதை RABE செய்துள்ளார் ரஹ்மான். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">டேன்
மெக்கார்த்தர் ஒளிப்பதிவு பெரிதாய் தெரியவில்லை. ஆனால் ஆக்சன் காட்சிகளில் உதவியிருக்கிறது.
எடிட்டிங் மற்றும் நான் லீனியர் எடிட்டிங் இரண்டும் அட்டகாசம். சிறிது தடம்பிறழ்ந்தால்
கூட குழப்பியிருக்கும் படியான திரைக்கதையை, மிகச்சரியாக கத்தரித்து பார்வையாளனுக்குள்
கடத்தியிருக்கிறார் ஆன்டனி. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">சிம்புவின்
எனர்ஜி இரண்டாம் பாதியில் மட்டுமே பிரதிபலிக்கிறது. தள்ளிப்போகாதே பாடலில் அவரிடம்
எனர்ஜியே இல்லை. அவர் நினைத்திருந்தால் இன்னும் அற்புதமாக அந்த உணர்ச்சியைக் காட்டியிருக்கலாம்.
சாமியார் ஆனதிலிருந்து சாந்த சொருபியாகிவிட்டார் என நினைக்கிறேன். ஆனால் இரண்டாம் பாதியில்
அவரின் நடிப்பு வழக்கம்போல அருமை. என்ன! எதற்கெடுத்தாலும் அடி தொண்டையிலிருந்து ‘கூட
வரலாம்ல, ஒவ்வொருத்தனா போடனும்’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு டயலாக் டெலிவரி செய்திருப்பது
தான் உதைக்கிறது. மஞ்சிமா மோகனை கௌதம் தவிர வேறு யார் கையாண்டிருந்தாலும் அழகாய் காட்டியிருக்கமுடியாது.
சுமாரான அழகியை அருமையாகக் காட்ட முயற்சித்திருக்கிறார்; அது ஓரளவு வொர்க்கவுட்டும்
ஆகியுள்ளது. நண்பன் மகேஷ் கேரக்டர் அட்டகாசம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">பாடல்களை
படமாக்கிய விதம், எப்போதும் போலில்லாமல் கொஞ்சம் விறுவிறுப்பான திரைக்கதை, ஏ.ஆர்.ரஹ்மானின்
பிண்ணனி இசை, சிம்புவின் நடிப்பு ஆகியவை படத்தின் பலம். ஒரு பயணமானது எப்படி வேண்டுமானாலும்
இருக்கலாம்; அதுதான் இரண்டாம் பாதி. அதன் போக்கை நாம் உணர்வதற்குள் பல அசம்பாவிதங்கள்
நடந்துவிடுகின்றன. அதை அப்படியே தத்ரூபமாக நம் பார்வைக்கு கடத்தியுள்ளார் கௌதம். முதல்
பாதி தட்டுத் தடுமாறி சென்றாலும் இரண்டாம்பாதியில் எழுந்து நின்று விறுவிறுவென நகர்த்திக்
கொண்டு செல்கிறது திரைக்கதை. கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்கலாம்.<o:p></o:p></span></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-53830515934089115372016-11-13T19:21:00.001+05:302016-11-13T19:21:48.343+05:30SOURCE CODE - சினிமா விமர்சனம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr8cFrUUFjgFhTW7UY2L_SG_whr0-sreIFCHV3T36gaCgbOBt69oaNJkPs6mcgCbCYW8ZwWX3laLRtgnzXsYrc6Go0Z6frBudNmQFnOkyVEq7hnlfR_2ktjAGPWxf6dYuWh52Z5S4TQpQ/s1600/331162-source-code.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr8cFrUUFjgFhTW7UY2L_SG_whr0-sreIFCHV3T36gaCgbOBt69oaNJkPs6mcgCbCYW8ZwWX3laLRtgnzXsYrc6Go0Z6frBudNmQFnOkyVEq7hnlfR_2ktjAGPWxf6dYuWh52Z5S4TQpQ/s640/331162-source-code.jpg" width="640" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இந்த
ஹாலிவுட்காரர்கள் இருக்கிறார்களே! நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று சொன்னால்
யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் நான் எடுத்த படத்தில் முயலுக்கு இரண்டே இரண்டுகால் தான்
என்று நம்மை நம்பவைத்துவிடுவார்கள். இவர்களிடம் சிக்கிய சயின்ஸ் பிக்சன் ஜானரானது நமக்குள்ளே
இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று அதுவே தன்னை நினைத்து ஆச்சரியம் கொள்ளவைக்கும்
அளவு ஏகப்பட்ட பிக்சன்காளால் திணறடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக
இந்த ‘நேரம்’ என்ற வஸ்துவை வைத்துக்கொண்டு இவர்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே! இன்னும்
நேரம் என்றால் என்னவென்று தெளிவான அறிவியலைக் கண்டறிவதற்குள்ளே தங்களின் மூளையை உபயோகித்து
இவர்கள் திரைப்படத்தில் காட்டும் விசயங்களைப்
பார்க்கும்போது அறிவியலறிஞர்களே வாயைப் பிளந்துவிடுகிறார்கள். சும்மா பேச்சுக்காக இதைச்சொல்லவில்லை.
இன்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தின் பணியாற்றிய விஞ்ஞானி கிப் தோர்ன் , திரைப்படத்தில்
வெளியான விசுவல் எஃபெக்ட்களை வைத்து வார்ம்ஹோல் பற்றிய தனது ஆய்வினை விரிவுபடுத்தியுள்ளார்
என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஏற்கனவே
டைம் லூப் பற்றிய பல திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள்.
EDGE OF TOMMORROW, TRIANGLE, ABOUT TIME, HAUNTER, MINE GAMES, PREMATURE,
TIMECRIMES என ஏகப்பட்ட லிஸ்ட்டை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த டைம் லூப்போடு இந்த
திரைப்படத்தில் வேறொரு விசயத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுதான் யுக்ரோனியா
எனப்படும் ஆல்டர்நேட்டிவ் டைம்லைன் (அ) பாரல்லல் டைம்லைன். இந்த ஆல்டர்நேட்டிவ் டைம்லைனை
பார்க்கும்முன் இந்த வகையில் வெளியான திரைப்படங்களைப் பற்றி கூறிவிடுகிறேன். அதைவைத்துக்கொண்டு
இதைப்பார்த்தால் உங்களுக்கு ஓரளவு விளங்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">INGLORIOUS
BASTARDS, THE GOOD DINOSAUR, BACK TO THE FUTURE போன்ற திரைப்படங்கள் இதற்கு உதாரணமாக
கொள்ளலாம். முதல் திரைப்படமான இன்க்ளோரியஸ் பாஸ்டார்ட்ஸ் திரைப்படத்தின் கதைக்களமானது
ஹிட்லரை கொல்வது. வரலாற்றின்படி ஹிட்லர் தானாக தற்கொலை செய்துகொள்வார். ஆனால் அவரை
தன் திரைப்படத்தில் வரும் தன் கதாபாத்திரங்கள் கொலை செய்யமுயன்று அதில் வெற்றியடைந்ததாக
க்வென்டின் காட்டியிருப்பார். இப்போது டைனோசருக்கு வருவோம். பூமியின் மீசோசோயிக் காலத்தில்
(ஏறத்தாழ 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு ) முன்பே டைனோசர் இனம் பூமியில் மோதிய பெரும்
விண்கற்களால் அழிந்தது எனப் படித்துள்ளோம். ஆனால் THE GOOD DINOSAURS திரைப்படத்தில்,
பூமியைத் தாக்கவந்த விண்கல்லானது திசைமாறி வேறிடத்திற்கு சென்றுவிடும். அதனால் டைனோசர்
இனம் தொடர்ந்து பூமியில் வாழும். வாழ்வது மட்டுமின்றி தாவரஉண்ணிவகை டினோசர்களான அபடோசர்ஸ்
விவசாயம் செய்து வாழ்வதுபோல் காட்டியிருப்பார்கள். அதன்பின் பிறக்கும் மனிதர்களை அந்த
டைனோசர்கள் எலிகளாக கருதுவதும் , ஒரு மனிதக்குழந்தைக்கும் ஒரு டைனோசர்குட்டிக்கும்
இடையே நடக்கும் நிகழ்வுகளென திரைப்படம் தொடர்ந்து பயணிக்கும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இப்போது
மேட்டர் என்னவென்றால் இதுதான். வரலாற்றில் நடந்த விசயங்கள், ஒருவேளை நடக்காமல் போனாலோ,
மாற்றி நடந்திருந்தாலோ என்ன ஆகும் என்பதுதான் இந்த ஆல்டெர்நேட்டிவ் டைம்லைன். ஒருவேளை
வரலாறு மாற்றமடைந்திருப்பின் எல்லாமே மாறியிருக்கவேண்டுமே என்று நீங்கள் கூறுவது புரிகிறது.
அங்கேதான் இந்த தியரி ஒரு ட்விஸ்டை வைக்கிறது. இப்போது THE GOOD DINOSAURS திரைப்படத்தை
எடுத்துக்கொள்வோம். விண்கற்கள் பூமியைத் தாக்காததால் இந்த பூமியில் இருக்கும் டைனோசர்கள்
நன்கு வாழ ஆரம்பிக்கிறது. ஒருகட்டத்தில் தாவரவகை உண்ணிகள் நாகரிகமடைந்து, விவசாயம்
செய்ய ஆரம்பிக்கிறது. அதன்பின் தோன்றும் மனிதன் அதனுடன் இணைந்து வாழ்கிறான். பூமியில்
இப்போது மனிதனைவிட புத்திசாலித்தனமான டைனோசர்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும்.
மனிதன் அவைகளின் பணியாட்களாக கூட இருக்கலாம். ஆனால் இது நடைபெறவில்லை. அப்படி நடந்திருந்தாலும்
அது வேறொரு காலக்கோட்டின்கீழ் நடக்கும். அதாவது ஒருவேளை டைனோசர் இனங்கள் தப்பித்திருந்தாலும்,
அவை வேறொரு காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும். அந்த காலக்கோட்டைப் பொறுத்தவரை மேலே
சொன்ன கதைகள் நடைபெறலாம். ஆனால் அது நடந்திருந்தாலும் நாம் வாழும் இக்காலக்கோடானது
மாறாது. நாம் வாழும் காலமானது தொடர்ந்தாற்போல் இயங்கிக்கொண்டிருக்கும். அதேபோல் அந்த
காலக்கோட்டில் டைனோசர்களும் வாழ்ந்துகொண்டிருக்கும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">நன்கு
குழப்பி எடுக்கிறேன் என நினைக்கிறேன். காலத்தை அதன் நிகழ்வுகளின் அடிப்படையில் பல்வேறு
காலக்கோடுகளாக பிரித்துக் கொள்ளுங்கள். 12 B திரைப்படத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவிசயம் நடந்தால், நடக்காமல் இருந்தால் என இருவேறு
விசயங்களின் அடிப்படையில் இந்த காலக்கோட்டை வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் காதலித்த
பெண்ணையே திருமணம் செய்தால் நடப்பவை ஒரு காலக்கோடாகவும், அவளே நம்மை கழட்டிவிட்டு வேறொருவருடன்
திருமணம் செய்துகொண்டால் நடப்பதை ஒரு காலக்கோடாகவும் பிரித்துக் கொள்ளுங்கள். இப்போது
ரியாலிட்டியில் நீங்கள் திருமணம் செய்யவில்லை. ஒருவேளை உங்களால் இறந்தகாலத்திற்கு சென்று
அவளின் திருமணத்தை நிறுத்தி, உங்களையே திருமணம் செய்துகொள்ளும்படி செய்கிறீர்கள். இப்போது மீண்டும் உங்களின் காலத்திற்கு,
அதாவது ரியாலிட்டிக்கு வருகிறீர்கள். இப்போது உங்கள் வாழ்க்கையில் அவள் இருப்பாள் என
நினைத்தால் அதுதான் இல்லை. உங்களின் தற்போதைய வாழ்க்கை அதேபோல்தான் இருக்கும். ஆனால்
கடந்த காலத்தில் நீங்கள் மாற்றீனீர்கள் அல்லவா? அந்த வாழ்க்கை தனியாக வேறொரு டைம்லைனில்
இயங்கும். இந்த கருமத்திற்கு பெயர்தான் ஆல்டர்நேட்டிவ் டைம்லைன். இது ஒன்னும் தெளிவான
அறிவியல் இல்லை என்பதை நினைவில் கொள்க. இது ஒரு புனைவு. இதற்கும் ஐன்ஸ்டைனின் ரியாலிட்டி
தியரிக்கும் பற்பல மடங்கு எதிர்வினை இருப்பதால் நாம் ரொம்ப போட்டு குழப்பிக் கொள்ள
வேண்டாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அது
எப்படி ? இறந்தகாலம் மாறினால் எதிர்காலமும் மாறவேண்டுமே என்று உங்களுக்கு சந்தேகம்
வந்தால் நீங்கள் ரியாலிட்டி தியரியையும், ஆல்டர்நேட்டிவ் டைம்லைனையும் ஒருமுறை ரெபர்
செய்துவிட்டு தொடர்ந்து படியுங்கள். இல்லையெனில் இந்த பத்தியைப் படியுங்கள். ‘உன் பதிவைப்
படித்தால் கீழ்பாக்கத்திற்கு தான் செல்லவேண்டும்’ என நினைப்பவர்கள் இப்பத்தியைத் தாண்டிவிட்டு
செல்லுங்கள். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என ஆப்பிள் மரத்தடியில் அடிவாங்கிய
நியூட்டன் கூறியிருக்கிறார். அதே கான்சப்ட் தான் இங்கும். இறந்தகாலம் மாறினால் எதிர்காலமும்
மாறும் எனக் கோட்பாட்டின் எதிர்வினை தான் இது. இறந்தகாலம் மாறினால் அது வேறொரு ட்ராக்கிலும்,
எதிர்காலமானது மாறாமல் அப்படியே தான் இருக்கும் என்பதும்தான் இந்த தியரியின் சுருக்கம்.
இந்த கணிதத்தில் நேர்மாறல், எதிர்மாறல், ப்ரபோசனல் டு, ஆப்போசனல் டூ என்றெல்லாம் சொல்லுவார்களே!
அதே தான். ஸ்ஸ்ஸ்ப்பபா!!!! ஒருவழியாக சொல்லவந்ததை ஓரளவு தெளிவாக
சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். இவைகளெல்லாம் மனிதனின் புனைவே தவிர நிருபிக்கப்பட்ட
ஒன்றல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஏறத்தாழ
நான்கு பக்கத்திற்கு அறிவியலை ஜூஸ் போட்டு கொடுத்துவிட்டேன். எனவே இப்போது திரைப்படத்திற்கு
வந்துவிடுவோம். இல்லையெனில் நான் என்னிடம் இல்லாதவொன்றான அதிமேதாவித்தனத்தைக் காண்பிப்பதற்காக
எனக்கே புரியாத பல தியரிகளைச் சொல்லி, உங்களை உளவியல் ரீதியாக பித்தனாக்கிவிடுவேன்.
காலை 7.40 மணிக்கு சி்காகோவை நோக்கி ஒரு ரயில் சென்றுகொண்டிருக்கிறது. ரயிலில் உள்ளே
தூங்கிக்கொண்டிருந்த ஒரு ஆள் திடுக்கிட்டு எழுகிறான். அவன் எதிரே இருக்கும் பெண் சாதாரணமாக
அவனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். அவன் முகத்தில் பற்பல குழப்பங்கள். அவனுக்கு எதிரில்
இருப்பவள் யார் என்று தெரியவில்லை. தன்னுடைய பெயர் கேப்டன் ஸ்டீவ் கோலின்ஸ் எனவும்
தான் ஆப்கானிஸ்தானில் போரிட்டுக்கொண்டிருக்கும் ஒரு அமெரிக்க கேப்டன் என்றும் அவளிடம்
தெரிவிக்கிறான் ; மேலும் நான் எப்படி இங்கு வந்தேன் என அவளிடம் கேட்கிறான். அவளோ சிரித்துவிட்டு
‘நீ சான் ஃபென்ட்ரஸ் (SEAN FENTRESS). நீ ஒரு பள்ளி ஆசிரியர். நான் கிறிஸ்டீனா’ எனக்கூறுகிறாள்.
ஷாக் ஆகும் ஸ்டீவ் பாத்ரூம் நோக்கி செல்கிறான்.
அங்குள்ள கண்ணாடியில் பார்க்கும்போது அவனுடைய முகம் மாறியிருக்கிறது. ‘இன்னாடா இது
வம்பாக்கீதே’ என்று அவன் குழப்பத்தில் ட்ரைனில் அலைய, அந்நேரம் கிறிஸ்டீனா அவனிடம்
வந்து ‘நாம் அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிடலாம். உனக்கு என்ன ஆயிற்று எனக் கண்டறிந்துவிடலாம்.
எல்லாம் சரியாகிவிடும்’ என்று கூறி முடிப்பதற்குள் ரயில் வெடித்து சிதறுகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">மீண்டும்
ஸ்டீவ் கண்விழிக்கிறான். அவன் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். ஒரு பெண்குரல்
அவனை எழுப்புகிறது. ‘கேப்டன் ஸ்டீவ். நீங்கள் அந்த ரயிலில் பாம் வைத்தவனை கண்டுபிடித்தீர்களா
’ எனக்கேட்க, ‘நீ யார்? இங்கு நான் எப்படி வந்தேன். இது என்ன இடம்’ என்று ஸ்டீவ் குழம்புகிறான்.
சிறிதுநேரத்தில் தன்னுடன் பேசும் பெண்ணின் உருவம் அவன் அறையில் இருக்கும் டி.வியில்
தெரி்கிறது. அவள் மீண்டும் மீண்டும் பாம் வைத்தவனைக் கண்டுபிடித்தீர்களா? எனக் கேட்க,
இல்லை என்று ஸ்டீவ் சொல்கிறான். அப்போதுதான் அவனுக்கு அவள் பெயர் குட்வின் என நியாபகம்
வருகிறது. ‘சரி, மீண்டும் முயற்சியுங்கள் . உங்களுக்கு முன்பு போலவே 8 நிமிடம் மட்டுமே
இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு அவனை மீண்டும் ரயில் வெடிவிபத்து நடைபெறுவதற்கு 8 நிமிடங்களுக்கு
முன்பு அனுப்பி விடுகிறாள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இம்முறை
பாமைக் கண்டுபிடிக்கும் ஸ்டீவ், அதை எப்படி செயலிழக்கச் செய்வது எனத் தெரியாமல் விழிக்கிறான்.
அதனால் பயணிகளிடம் செல்போன், லேப்டாப், பேஜர் போன்றவற்றை அணைக்கச் சொல்கிறான். ஆனால்
பாம் வெடித்துவிடுகிறது. மறுபடியும் அறைக்குள் இருக்கிறான். குட்வின் அவனிடம் மீண்டும்
அனுப்புவதாக கூறுகிறாள். ஆனால் ஸ்டிவ் தன் தந்தையிடம் பேசவேண்டுமென கோரிக்கை வைப்பதற்குள்
ரயிலுக்குள் அணுப்பப்படுகிறான். ரயிலில் சந்தேகத்துக்கிடமானவர்களை பார்க்கிறான். அதில்
ஒருவனை பாலோவ் செய்து கிறிஸ்டீனாவுடன் சிகாகோவிற்கு முன்னாடி ரயில் நிலையத்தில் இறங்குகிறான்.
அந்த சந்தேகத்துக்கிடமான ஆசாமியுடன் சண்டை போடும் நேரத்தில் ரயில் தூரத்தில் வெடிக்கிறது. அதேநேரம் ஸ்டீவ் தவறி ட்ராக்கில் விழுந்து
வேறொரு ரயிலில் அடிபட்டு இறக்கிறான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">மீண்டும்
அறை. இம்முறை தன்முன்னுள்ள டி.வி. ஸ்க்ரீனீல் பேசிக்கொண்டிருக்கும் குட்வின்னிடம் உன்னுடைய
பாஸிடம் பேசவேண்டுமென வற்புறுத்துகிறான். வேறுவழியில்லாமல் டாக்டர்.ரட்லஜ் ஸ்டீவ்விடம்
பேசுகிறார். இம்முறை பிளானை முழுமையாக விவரிக்கிறார் ரட்லஜ். சோர்ஸ் கோட் என தான் கண்டறிந்த
ஒரு சமாச்சாரமானது, ஒரு நிகழ்வு நடந்ததற்கு 8 நிமிடத்திற்குமுன் அந்த நிகழ்வில் இருந்த
ஒருவரின் மூளையோடு, இப்போதிருக்கும் ஒருவரின் மூளையை கனெக்ட் செய்யும் ஒரு டெக்னாலஜி
என்றும் அதைவைத்து அந்த பாம் வைத்தவனைக் கண்டறிந்தால் மட்டுமே, இன்னும் சிறிதுநேரத்தில்
சிகாகோவில் வெடிக்க இருக்கும் மிகப்பெரிய வெடிவிபத்தை தடுக்க இயலும் என்றும் கூறுகிறார்.
ஆனால் இந்த சோர்ஸ் கோடினால் இறந்தகாலத்தை மாற்றமுடியாது எனவும் கூறுகிறார். அப்படியே
மாற்றப்படும் இறந்தகாலமானது ஆல்டர்நேட்டிவ் டைம்லைனில் இயங்கும் எனக் கூறுகிறார். ஆனால்
தான் கிறிஸ்டீனா எனும் பெண்ணைக் காப்பாற்றியதாக ஸ்டீவ் தெரிவிக்க, கிறிஸ்டீனா தற்போது
இறந்தவிட்டாள், ஆனால் அவள் வேறொரு டைம்லைனில் உயிருடன் இருக்கலாம் என ரட்லஜ் கூறுகிறார்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இதற்குபின்
மீண்டும் ரயில்; மீண்டும் அறை; இடையில் கிறிஸ்டீனா மீது காதல் வேறு. தன் தந்தையிடம்
ஒருமுறையாவது பேசிவிட வேண்டும் என பரிதவிப்பு வேறு; யார் அந்த பாமர் என்ற பெரும் கேள்வி
வேறு. தான் எப்படி இங்கு வந்தோம்? தன் குழுவில் பணியாற்றிய சக ராணுவ வீரர்கள் என்ன
ஆனார்கள் என பற்பல சந்தேகங்களைக் கொண்டிருக்கும் ஸ்டீவ்விற்கு எல்லா குழப்பங்களும்
பிரச்சனைகளும் எப்படி முடிவுக்கு வந்தது என்பது மீதிப்படம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">மூன்
என்ற ஒற்றைப் படத்திலே உயரம் தொட்ட டங்கன் ஜோன்ஸ் , தனது இரண்டாவது திரைப்படத்திற்காக
நடிகர் ஜேக் கில்லன்ஹாலை சென்று சந்தித்தார். தான் ம்யூட் (MUTE) எனும் திரைப்பட ஸக்ரிப்ட்
எழுதி இருப்பதாக தெரிவித்த ஜோன்ஸ், அதை இயக்க ஒரு வருடத்திற்கு மேலாகும் என்றார். சரி
அதுவரைக்கும் எதற்கு சும்மா இருக்கவேண்டும்? ஸ்பிசியஸ் போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை
எழுதிய பென் ரிப்லியின் ஒரு திரைக்கதை என்னிடம் இருக்கிறது. படித்துப்பாருங்கள்; அட்டகாசமாக
இருக்கிறது என்றாராம் ஜேக். டங்கன் ஜோன்சும் படித்துப் பார்க்க அப்படி உருவானது தான்
இந்த சோர்ஸ்கோட். ஆனால் பாருங்கள்; டங்கன் அதன்பின் வார்க்ராப்ட் எடுத்தார். தன் கனவுத்திரைப்படம்
என்று சொன்ன ம்யூட் இப்போதுதான் எடுத்துக்கொண்டிருக்கிறார் . ஹைலைட் என்னவென்றால் ம்யூட்
திரைப்படத்தில் இப்போது ஹீரோவாக நடித்துக்கொண்டிருப்பவர் நம் லெஜன்ட் ஆஃப் டார்சன்
ஹீரோவான அலெக்சான்டர் ஸ்கார்ஸாட்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஒருவகையில்
இந்த திரைப்படம் EDGE OF TOMMORROW-வின் முன்னோடி எனலாம். அத்திரைப்படம் உங்களுக்கு
பிடித்திருந்தால் இதுவும் கண்டிப்பாக பிடிக்கும். திரைக்கதை பிரியர்களுக்கு ஏற்ற தீனி இந்த திரைப்படம்
என்றும் சொல்லலாம். ஒரு அட்டகாசமான திரைக்கதையை வைத்துக்கொண்டு பட்டாசாக நகர்த்தியிருக்கும்
திரைப்படம் தான் சோர்ஸ்கோட்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-61631291243250382692016-11-09T08:35:00.001+05:302016-11-09T08:35:23.722+05:30MIRACLE IN CELL NO. 7 – சினிமா விமர்சனம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_R-MWYjUQ7AmM4OQnob8gjgp_yVoPijz-iyKhvyTSydo3ZgWdA0FtmzCAGdFzGXo29NOrm7ZkQ_IbU7YuJEINRJgDS9K1OszbuUShNG0ML_6V4V_Y_p5QN8_Dq7lv7pAMqtDYJ4j8G0Q/s1600/MIRACLE+IN+CELL+NO.+7+-+A4+Poster+%252820+June%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_R-MWYjUQ7AmM4OQnob8gjgp_yVoPijz-iyKhvyTSydo3ZgWdA0FtmzCAGdFzGXo29NOrm7ZkQ_IbU7YuJEINRJgDS9K1OszbuUShNG0ML_6V4V_Y_p5QN8_Dq7lv7pAMqtDYJ4j8G0Q/s640/MIRACLE+IN+CELL+NO.+7+-+A4+Poster+%252820+June%2529.jpg" width="432" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">என்னதான்
ஹார்ரர், சயின்ஸ்-பிக்சன், த்ரில்லர், ஆக்சன் என்று பலவகையான திரைப்படங்களைப் பார்த்தாலும்
இந்த ஃபீல்-குட் திரைப்படங்கள் தரும் அனுபவம் அலாதியானது. பெரும்பாலான ஃபீல்-குட் திரைப்படங்கள்
நம்மையறியமால் நம் மென் உணர்வை தூண்டிவிடக்கூடியவை. அதனால்தான் இந்த வகையறா திரைப்படங்களில்
நடித்துவரும் டாம் ஹேங்ஸ் உலகின் மோஸ்ட் பவர்ஃபுல் ஹீரோவாக இருக்கிறார் (மோஸ்ட் வான்டட்
ஹீரோ – ஜானி டெப்). <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஃபீல்
குட் திரைப்படங்கள் ஹாலிவுட்டில் தாராளமாய் ஏராளம் உள்ளது. ஹாலிவுட் தவிர்த்து வேற்றுமொழிகளில்
வரும் அற்புதமான பல திரைப்படங்கள் தற்போது தான் நம் பார்வையில் விழுகின்றன. பாரசீக
நாடுகளில் மஜித் மஜிதி போன்றோர் கலக்கிக் கொண்டிருக்க,
சைலன்டாக கொரியர்கள் உலகத்தரத்தில் பல அற்புத படைப்புகளைத் தந்துகொண்டிருக்கிறார்கள்.
கிம்-ஜி-வூன், கிம்-கி-டுக், சான்-வூக்-பார்க்
போன்றோர் எடுக்கும் திரைப்படங்கள் தற்போது உலகளவில் ட்ரென்டாகி வருகிறது. கொரியர்களின்
சினிமாக்கள் அழகியலைக் கவித்துமாக பேசுகிறது. அந்த கொரியர்களின் படைப்புதான் இந்த திரைப்படம்
. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">லீ-வான்-க்யுன்க்
இயக்கத்தில் 2013-ல் வெளிவந்த இத்திரைப்படம் அப்போதைய கொரிய பாக்ஸ் ஆபிசை அடித்து நொறுக்கியது.
சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன், ஐ யம் சாம் போன்ற திரைப்படங்கள் பிடிக்குமெனில் கண்டிப்பாக
இந்த திரைப்படமும் உங்களுக்கு மிகமிகப் பிடிக்கும். கதையானது மனநலம் குன்றிய தந்தைக்கும்
அவனுடைய மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை அடிப்படையாக கொண்டது. லீ-யாங்-கோ
எனும் மனநலம் குன்றியவர் தன் ஆறு வயது மகள் யே-சங்குடன் சந்தோஷமாக வசித்து வருகிறார்.
தன் மகள் ஆசைப்படும் ஒரு ஸ்கூல்பேக்கை வேறொரு குழந்தையின் பெற்றோர் வாங்க, அந்த பேக்
என் மகளுடையது என வம்பு செய்கிறார் லீ. அப்பிரச்சனைக்குப் பின் ஒருநாள் மார்க்கெட்டில்
நடந்துசென்று கொண்டிருக்கும் ஒரு பெண் , லீ-யாங்-கோ ஒரு பெண்குழந்தையை ஏதோ செய்துகொண்டிருப்பதைக்
கண்டு போலிசை அழைக்கிறாள். அந்த பெண்குழந்தை தான் ஸ்கூல் பேக்கை வாங்கியவள். அவளை வல்லுறவில்
ஈடுபடுத்தி கொடூரமாக கொன்றுவிட்டான் லீ-யாங்-கோ என்று கேஸ் போட்டு போலிஸ் கைது செய்கிறது.
இறந்த பெண்ணின் குடும்பமோ பெரும் வசதி படைத்தது. லீ-யாங்-கோவிற்கு மரணதண்டனை அளித்து
கோர்ட் தீர்ப்பளிக்கிறது. அவன் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறான். ஜெயிலில் அவனுடன்
சில கிரிமினல்கள் இருக்கிறார்கள். அந்த அறையின் எண் தான் 7.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">தன்
தந்தையை பிரிந்த யே-சாங் எப்படியாவது அவருடன் வாழவேண்டும் என துடிக்கிறாள். சிறையில்
இருக்கும் கைதிகளுக்கு ஒருமுறை லீ-யாங்-கோ உதவ, அவனுக்கு என்ன வேண்டுமானாலும் செய்து
தருவதாக அவர்கள் வாக்களிக்கிறார்கள். அதன்படி அவனுடைய குழந்தையை சிறையில் ஒருநாள் யாருக்கும்
தெரியாமல் கொண்டு வருகிறார்கள். இந்த உண்மையை ஜெயில் வார்டனுக்கு தெரிய வருகிறது. அவரோ
தன் மகளை நோயினால் பறிகொடுத்தவர். இதன்பின்
யே-சாங் சிறைக்கு யாருக்கும் தெரியாமல் பலமுறை வருகிறாள். ஒருகட்டத்தில் லீயின் அறையில்
இருப்பவர்களுக்கும், ஜெயில் வார்டனுக்கும் லீ எந்த தவறும் செய்யவில்லை என்ற உண்மை தெரியவருகிறது.
மறு விண்ணப்பம் அளித்து மீண்டும் சரிவர விசாரனை நடத்த வேண்டும் என்று எல்லோரும் கோரிக்கை
வைக்கிறார்கள். மறுவிசாரணையில் தான்தான் அக்குழந்தையைக் கொன்றதாக லி-யாங்-கோ வாக்குமூலம்
அளிக்கிறான். எதனால் அவன் அப்படி செய்தான்? யே-சாங்கின் நிலை என்ன? அந்த அறையில் இருந்தவர்களின்
கதி என்ன? என்பது போன்றவை மீதிப்படம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">படத்தில்
பாராட்டப்படவேண்டிய விசயம் ஒளிப்பதிவு. இவ்வளவு ரிச்சான ஒளிப்பதிவை நான் எந்தவொரு திரைப்படத்திலும்
பார்த்ததே இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் கேமரா கவிதை பாடுகிறது. கொரியர்களுக்கென்று
தனி கேமரா செய்து விற்பார்கள் போல. A BITTERSWEET LIFE –வை விட மிகத் தெளிவான அற்புதமான
ஒளிப்பதிவு. இத்திரைப்படத்தின் கேமரா ஆங்கிள் , கலரிங், வி.எப்.எக்ஸ் போன்றவற்றை நம்
தமிழ் ஆட்களும் பின்பற்றவேண்டும். இவ்வளவு அழகான ஒளிப்பதிவைத் தந்தமைக்காக ஒளிப்பதிவாளர்
காங்-ஸ்யூங்-கி-யை எவ்வவளவு பாராட்டினாலும் தகும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">லீ-யாங்-கோவாக
வரும் ர்யூ-ஸ்யூங்-ர்யாங் –கும் (இவனுங்க பேர எழுதறதுக்குள்ள விடிஞ்சிடும் போல) மகளாக
வரும் கால்-சோ-வான் இருவரும் ஏதோ ஒரிஜினல் தந்தை-மகள் என நினைக்கத் தோன்றும் அளவுக்கு
நடித்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் கூட ஆர்ட்டிபிஷியலை பார்க்க இயலவில்லை. அவ்வளவு
இயற்கையான நடிப்பு. ஏதோ திரைக்குள் இருவரும் வாழ்ந்தது போன்றதொரு உணர்வு. யாருக்காக
இல்லையென்றாலும் இவர்களிருவரின் நடிப்புக்காக கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இப்படத்தின்
இயக்குநர் ஏற்கனவே நான்கைந்து திரைப்படங்களை எடுத்திருந்தாலும் பெரிய அளவில் பேர்வாங்கி
கொடுத்த திரைப்படம் இதுதான். இத்திரைப்படம் கொரியன் என்றாலும் ஏதோ ஒரு அழகான தமிழ்ப்படம்
பார்த்தது போல் உணர்வைத் தந்தது. யே-சாங் தன் தந்தையை ‘அப்பா’ (கொரியனிலும் தந்தைக்கு
அப்பா தான்) என்று அழைக்கும்போது ஏதோ ஒரு தமிழ்க்குழந்தையே பேசுவது போலிருந்தது. பிரம்மாதமான
இசை, ஆங்காங்கே குட்டிக்குட்டி சிரிப்பலைகள், மனதை உருக்கும் சோகக்காட்சிகள் என ஒரு
கலக்கலான ஃபீல்குட் திரைப்படமாக இது இருக்கிறது. சமீபத்தில் என்னை அழவைத்த ஒரே திரைப்படம்
இதுதான். <o:p></o:p></span></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-12151576595762462392016-07-07T14:44:00.000+05:302016-07-07T14:44:28.635+05:30தில்லுக்கு துட்டு - சினிமா விமர்சனம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEuLgmL5NjkHC567mWxMCiL3pyxnTlp8JU6amASmpDsQp6s2pEx1uM3piRlHPRPlpFxMKi4jxSkK6Ao8Jb1ovNWzIvcsPpWN1skxGCu81OcLRDCXJPHsE25uKfZb3G8uReEJcqeDPf2bo/s1600/maxresdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEuLgmL5NjkHC567mWxMCiL3pyxnTlp8JU6amASmpDsQp6s2pEx1uM3piRlHPRPlpFxMKi4jxSkK6Ao8Jb1ovNWzIvcsPpWN1skxGCu81OcLRDCXJPHsE25uKfZb3G8uReEJcqeDPf2bo/s640/maxresdefault.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தபின் வெளிவந்த முதலிரண்டு படங்களும் சுமாராகவே செல்ல , மூன்றாவதாக தமிழ்சினிமாவின் இன்றைய கலெக்ஷன் ஜானரான ஹாரர்ரைக் கையில் எடுத்திருக்கிறார். அதுவும் அவருக்கு பக்காவாகவே கைக்கொடுத்திருக்கிறது. கதை என்று பெரிதும் அலட்டிக்கொள்ளாமால் , நம்மிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது காமெடியைத் தான் என்று நன்குணர்ந்து ஒரு பக்காவான காமெடி கம் ஹாரர்ரை திகட்டத் திகட்ட தந்திருக்கின்றனர் ராம்பாலாவும் சந்தானமும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவன்மலைக்கோட்டை எனும் ஊருக்கு ஒருகாலத்தில் வியாபார விசயமாக வந்த திபெத்திய மகாராஜாவை வசியம் செய்து திருமணம் செய்துகொள்கிறாள் ஒரு வசியக்காரி. ராஜா வியாபாரத்துக்கு வெளியூர் போகும்போதெல்லாம் தன் கள்ளக்காதலனுடன் சரசம் செய்து அவன்மூலம் ஒரு பையனை பெற்றெடுத்து ராஜாவுக்கு தெரியாமல் வளர்க்கிறாள். ஒருநாள் அறிந்துகொள்ளும் ராஜா அவளின் கள்ளக்காதலனையும், குழந்தையையும் கொன்றுவிட்டு, அவளுக்கு கடுமையான தண்டனையைக் கொடுக்கும்படி ஆனையிட்டுவிட்டு , தன் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கே கிளம்பிவிடுகிறார். பழிவாங்கவேண்டும் என்ற வெறியுடன் இருக்கும் அந்த வசியக்காரி, தன் உயிரை சாத்தானுக்கு காணிக்கையாக்கி விட்டு அந்த பங்களாவில் பேயாக அலைகிறாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி டைட்டில் கார்டில் சொல்லப்பட்டதும் ஒரு புத்த சாமியார் பெட்டியில் பேயை அடைக்கிறேன் என்று பங்களாவிற்குள் செல்ல, ஏதேதோ விபரீதங்களுக்குப் பின் ஸ்ட்ரெச்சர் கட்டி அவரை அள்ளிச் செல்கிறார்கள். சென்னையில் பணக்கார ஹீரோயின் இன்ட்ரோ. அவளின் ப்ளாஷ்பேக்கில் தன் பள்ளியில் படித்த குமாரை தான் இன்னமும் விரும்புவதாக கூறுகிறாள். மோதலில் துவங்கி காதலில் முடிய, அதையறியும் ஹீரோயினின் தந்தை லோ-கிளாசான குமாரைப் போட்டு தள்ள முடிவெடுத்து மொட்டை ராஜேந்திரனை அணுகுகிறார். கொல்வதற்காக பல ப்ளான்களை யோசிக்கும் ராஜேந்திரன், கல்யாணத்தை சிவன்மலைக்கோட்டையில் உள்ள பங்களாவில் நடத்துமாறு நைசாக சொல்லி அங்கே வைத்து போட்டு விட முயற்சிக்கிறார். பங்களா சென்றதும் என்ன ஆனது என்பது மீதிக்கதை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சந்தானம், மொட்டை ராஜேந்திரன் கூட்டணி பட்டாசு கிளப்புகிறது. கலகலப்பு திரைப்படத்தை தியேட்டரில் பார்க்கும்போது தொடர்ந்தாற்போல் வாய்விட்டு சிரித்தது. அதன்பின் எத்தனையோ திரைப்படங்களைப் பார்த்திருந்தாலும் சிரிப்பு அந்தளவிற்கு இருக்காது. என்னையும் மறந்து வாய்விட்டு, கண்ணில் நீர்வழிய சிரித்தது இத்திரைப்படத்தில்தான். அதுவும் இரண்டாம் பாதி அட்டகாசம். முதல்பாதியை வழக்கம்போல மெதுவாக நகர்த்திக்கொண்டு வந்து இரண்டாம்பாதியில் வெளுத்து வாங்கியிருக்கிறார் ராம்பாலா. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சந்தானம் பார்க்க பக்காவாக இருக்கிறார்; கெட்டப், டான்ஸ், ஸ்டைல், சண்டை என அனைத்திலும் நன்கு தேறி , ஒரு ஹீரோவுக்கான அந்தஸ்தை அடைந்துவிட்டார். முதல் பாடலில் மட்டும் திணறித் திணறி டான்ஸ் ஆடுவது போலிருந்தது. சந்தானம் முதல் ஹீரோ என்றால் ராஜேந்திரன் இரண்டாவது ஹீரோ. மனுசரின் கேரியரில் இந்தளவு இவரை வேறு எந்த திரைப்படத்திலும் பயன்படுத்தியதில்லை என்றே சொல்லலாம். ஆனந்தராஜ், கருணாஸ் வரும் காட்சிகளில் ரகளை கட்டுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வசனங்கள் அனைத்தும் கவுண்டர் ரகம். நினைத்து நினைத்து சிரிக்கவைக்கும் அளவிற்கு இருந்தது. திரைக்கதையை கொண்டுபோட விதம், ஒளிப்பதிவு, எடிட்டிங், கார்த்திக் ராஜாவின் பிண்ணனி இசை என அனைத்தும் அட்டகாசம். தமனின் பாடல்கள் மட்டுமே ரொம்ப சுமார் ரகம். சந்தோஷமாக சென்று பார்த்து விட்டு வரலாம். செம ரகளையான திரைப்படம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-21148983257321112822016-06-13T20:33:00.001+05:302016-06-13T20:33:13.894+05:30THE CONJURING 2 – சினிமா விமர்சனம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWysD4v4VbFg-XWtl-26lvv83Tg9ffYS6dk-jUeNxohGh2pKPXW7lBexDz5I1LJcFskkj8lcF_h43482EzguU4Kalv_1os28vPbXuIrEsgo5nO4Soe86PKZUwMixqAUWndFf7vUTPJq-U/s1600/the-conjuring-2-banner.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWysD4v4VbFg-XWtl-26lvv83Tg9ffYS6dk-jUeNxohGh2pKPXW7lBexDz5I1LJcFskkj8lcF_h43482EzguU4Kalv_1os28vPbXuIrEsgo5nO4Soe86PKZUwMixqAUWndFf7vUTPJq-U/s640/the-conjuring-2-banner.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேய் திரைப்படம் என்றாலே உடனே நினைவுக்கு வரும் ஆள் ஜேம்ஸ் வான். ஆள் பார்க்க பாஸ்ட்புட் கடையில் நூடுல்ஸ் கிளறும் வட இந்திய பையன்போல் இருந்துகொண்டு ஹாரர் ஜானரில் கலக்கியெடுத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் குறிப்பாக பேய் திரைப்படங்களில் ஜேம்ஸ் வான் செய்த சாதனைகளை மறக்கவே முடியாது. DEATH SILENCE, THE CONJURING, INSIDIOUS இரண்டு பாகங்கள் இயக்கியதோடு ANNABELLE , INSIDIOUS 3, வெளிவர இருக்கும் LIGHTS OUT ஆகிய பேய்த் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இது போதாதென்று SAW திரைப்படங்களைத் துவக்கி வைத்ததோடு மட்டுமில்லாமல் 6 பாகங்களை தொடர்ந்தார்போல் தயாரித்துள்ளார். என்னால் இன்னும் நம்பமுடியாத விசயம் FAST AND FURIOUS 7 திரைப்படம் இவர் இயக்கத்தில் உருவானது என்பதுதான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
THE WARREN FILES எனப்பெயரிடப்பட்டு இன்ஷிடியஸ் முதல் சாப்டரை முடித்த கையோடு ஜேம்ஸ் வான் இயக்க ஆரம்பித்த திரைப்படம் தான் கான்ஜுரிங். வெறும் 20 மில்லியன் பட்ஜெட்டில் உருவான அத்திரைப்படம் அடித்த கலெக்ஷனைப் பார்த்து ஹாலிவுட்டே ஸ்தம்பித்தது எனலாம். கிட்டத்தட்ட 320 மில்லியன் டாலர் வசூல்வேட்டை நடத்திய அமிட்டிவில்லி பேயைப் பார்த்து உலகமே நடுநடுங்கியது (இந்த அமிட்டிவில்லியானது ஹாலிவுட் பேய்த்திரைப்பட இயக்குநர்களுக்கென்றே நேர்ந்து விடப்பட்ட இடம்போன்றது. எப்போது பார்த்தாலும் அமிட்டிவில்லியிலேயே பேய் உள்ளது என எக்கச்சக்கமாக அடித்து துவைத்துள்ளார்கள். இரண்டாவது பேவரைட் ஸ்பாட் கனெக்டிக்கட்). ஹாலிவுட்டில் ஒரு திரைப்படம் ஹிட் ஆனாலே சீக்குவல்ஸ் அல்லது ப்ரீக்குவல்ஸ் எடுத்து கல்லா கட்டாமல் விடமாட்டார்கள். சூப்பர்ஹிட் அடித்தால் சும்மா விடுவார்களா ???</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எட்வர்ட் வார்ரன் மற்றும் லோரைன் வார்ரன் தம்பதியினர் பேய் ஓட்டுவதில் வல்லவர்கள் என சென்ற பாகத்திலேயே பார்த்துவிட்டோம். சென்ற பாகமான அமிட்டிவில்லி கொலைகளைப் பற்றிய ஆய்வு செய்யும்போது லோரைன் தன் கணவரும் பார்ட்னருமான எட்வர்ட் கொடூரமாக கொல்லப்படுவதையும், ஒரு கன்னியாஸ்திரி பேய் (கன்னியாஸ்திரினா ஏதோ மோகினிப் பிசாசு போல சின்ன வயசு பேயா இருக்கும் என்று எண்ணிவிடாதீர்கள். அதற்கு 60-க்கும் மேல் இருக்கும் வயது.) தன்னை எச்சரிப்பதையும் உணருகிறாள். இனிமேல் பெண்டிங்கில் இருக்கும் கேஸ்களை முடித்துவிட்டு இத்தொழிலை விட்டொழித்துவிடலாம் என லோரைன் முடிவெடுக்கிறாள். அதேசமயம் இங்கிலாந்தில் கணவரைப் பிரிந்து தன் 4 குழந்தைகளுடன் ஏழ்மையாக வாழ்ந்துவருகிறாள் பெக்கி ஹாட்க்சன். அவளுடைய குழந்தைகளில் ஒருத்தியான ஜானெட்டிற்கு அமானுஷ்ய குரலும் தொடர்ந்தாற்போல் அமானுஷ்ய விசயங்களும் நடக்கிறது. ஒருகட்டத்தில் அவளை வழக்கம்போல பேய் கடித்துவிட, அதைத்தொடர்ந்து காவலர்கள் வர, அவர்களும் வீட்டில் நிகழும் அமானுஷ்யங்களை கண்டு கதிகலங்க, இவ்விஷயமெல்லாம் டி.வி மற்றும் பேப்பரில் வர, இதைக் காணும் சர்ச் ஆட்கள் அமெரிக்காவிலிருக்கு வார்ரன் தம்பதியினருக்கு போன் போட்டு அங்கு வரசொல்லுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அங்கு வேண்டா வெறுப்பாக செல்லும் லோரைனால் அங்கு இருக்கும் ஆவியுடன் பேசமுடியவில்லை. ஆனால் அங்கு அமானுஷ்யமாக ஏதோ நடக்கிறது என்பதை உணருகின்றனர். வழக்கம்போல திடீர் திடீர் என டி.டி.எஸ் சவுண்டோடு பேய் வந்து அலப்பறை செய்ய அதைப் படமெடுத்து சர்ச்சுக்கு அணுப்பலாம் என முடவெடுகிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இம்மாதிரியெல்லாம் ஜானெட்டே செய்து நடிக்கிறாள் என்பது வீடியோ ஆதாரத்தில் தெரியவர , அவர்கள் அவ்வீட்டை விட்டு கிளம்பும்படியாக ஆகிறது. அதன்பின் ஜானெட் என்ன ஆனாள், அவர்களைப் பாடாய் படுத்தும் ஆவி எது, வார்ரன் தம்பதியினரின் நிலை, லோரைன் கண்ட காட்சிகள் போன்றவற்றிற்கெல்லாம் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையைச் சொல்லவேண்டுமெனில் எனக்கு படத்தின் முதல்பாதி சுத்தமாக பிடிக்கவில்லை (முதல்பாதி என்றால் நம்ம ஊர் ஆட்கள் அவர்களாக இஷ்டப்பட்டு இடைவேளை விடும் நேரம் வரை) . ஒரு கட்டத்தில் கொட்டாவி மேல் கொட்டாவியாக விட்டு தூங்கும் அளவிற்கே சென்று விட்டேன். ஏனென்ற காரணத்தையும் சொல்லிவிடுகிறேன். பேய் திரைப்படங்கள் என்றாலே ஃபுல் சவுண்டில் தன்னந்தனியாக பார்த்து பார்த்து பழகியவன் நான். அதுவும் லேப்டாப்பில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு சரியாக இரவு நேரங்களில் 11 மணிக்கு மேல்தான் எந்தவொரு பேய்த்திரைப்படத்தையும் பார்ப்பேன். எனக்கு அப்படிப் பார்ப்பதில்தான் பிரியம். அந்த அனுபவங்களாலோ என்னவோ தான் என்னை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாமல் இயக்குநர்கள் திணறுவார்கள். என்னால் நன்றாகவே உணரமுடியும்; இந்திந்த இடங்களில் சவுண்ட் எஃபெக்ட், இங்கெல்லாம் கோரக்காட்சிகள் என முன்னதாகவே என் மனதையும் உடலையும் தயார் செய்துவிடுவேன். அது நடந்தாலும் நடக்காவிட்டாலும் எனக்குள் எந்தவித படபடப்பும் இருக்காது. நான் தனியாக பார்த்த பல பேய்த்திரைப்படங்களை என் நண்பர்கள் பார்த்து விட்டு அடிவயிறு கலங்கியெல்லாம் வந்துள்ளார்கள். அதற்காக என்னைப் பெரிய தைரியசாலி என்றெல்லாம் சொல்லவில்லை; நிறைய படங்களைப் பார்த்த அனுபவத்தால் அந்த படபடப்பைக் கையாள பழகிக்கொண்டேன். போதாக்குறைக்கு நாங்கள் 12 பேர் தியேட்டருக்கு காலைக் காட்சி சென்றோம். தியேட்டரில் பீதியிலிருந்த பலர் பேய் வரும்போதெல்லாம் சிரித்துக் கொண்டும், தான் பயப்படவில்லை என காண்பிப்பதற்காக பேசிக்கொண்டும் இருந்ததெல்லாம் எனக்கு எரிச்சலைத் தான் வரச்செய்தது. அதிக பயத்தில் இருந்தவர்கள் தான் பயப்படுவதை மறைக்க கலாய்த்துக் கொண்டிருந்தவர்கள் என்பது தான் உளவியல் உண்மை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் இரண்டாம்பாதியில் வழக்கம்போல கொட்டாவி விட வாயைத் தொறந்த எனக்கு வைத்தார் பாருங்கள் ஷாக். சாமி; உடம்பே தூக்கிப்போட்டுவிட்டது. முதல்பாதியில் மெதுவாக நகர்த்திக்கொண்டு சென்ற படத்தை இரண்டாம்பாதியில் திடுக் திடுக் சவுண்ட் எபக்டோடு அட்டகாசமாக சென்று முடித்தார். என் நண்பர்களெல்லாம் முதல் பாதியிலேயே அடிவயிறு கலங்கிவிட்டது; எழுந்து ஓடிவிடலாம் போலிருக்கிறது என்று கூறினார்கள். ஆனால் இரண்டாம் பாதியில் என்னை நன்றாகவே ஏமாற்றி திடுக்கிட வைத்துவிட்டார் ஜேம்ஸ் வான். இத்தனைக்கும் படத்தில் முதல் காட்சி மட்டுமே கொடூரமாக இருக்கும். மற்றபடி டீசன்டாகவே செல்லும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தில் ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், லொகேசன் எல்லாம் பிரம்மாதம். சோர்ஸ் கோட் மற்றும் ஆர்பன் புகழ் வெரா பார்மிகா அருமையாக நடித்துள்ளார். பேய் பிடித்து திரியும் ஜேனட்டாக வரும் மேடிசன் நடிப்பு அட்டகாசம். படத்தில் ஓஜா போர்டு காட்சிகளும் தொடர்ந்தாற் போல் பேய் பற்றிய காட்சிகளும் பார்க்கும்போது எனக்குள் ஆச்சரியம். சென்ற வாரம் நண்பர்களுடன் சேர்ந்து நானும் ஓஜா போர்ட் விளையாடினேன். ஆனால் பேயெல்லாம் வரவில்லை. நாங்கள் பேயை வரவைக்க பேசிய பல வசனங்கள் திரைப்படத்தில் இடம்பெற்றது. ஓஜா போர்ட் விளையாடும்போது வராத பேய், அதன்பின் வரும். அதேபோல் நாம எத்தன பேய உசுப்பிவிட்டமோ தெரியலையேனு யோசிக்கும்போதே ‘நல்லவேளை. நாம் பேயிற்கு குட்பை சொல்லிவிட்டுதான் ஓஜா போர்டை அழித்தோம்’ என்றான் நண்பன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மொத்தத்தில் கண்டிப்பாக பார்க்கலாம். இதயம் பலவீனமானவர்கள் தவிர்ப்பது நலம். இம்மாதிரியான திரைப்படங்களால் ஸ்ட்ரோக் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. என்னது? சாகற அளவுக்கு வொர்த்தா என்று ஆச்சரியப்படாதீர்கள். 3 காட்சிகள் நம் நெஞ்சை அடைத்துக்கொள்ளும் வண்ணம் சவுண்ட் எஃபெக்ட்களைக் கொண்டுள்ளது. மற்றபடி முதல் பாகத்தின் ரெக்கார்டை அடித்துத் துவைத்துவிடும் இந்த லண்டன் பேய். எனக்கே பிடித்திருக்கிறது என்றால் கண்டிப்பாய் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன்.</div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-89135699337502019672016-06-05T09:43:00.001+05:302016-06-05T09:43:40.124+05:30THE PURGE – சினிமா விமர்சனம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEircu8aQj8DHWt3VNzLo74XJPx99BXpFnoxkOrhKiRQSZ8fiTAU6lcRrv30vTmsMFqQxItOHNaFI6e8Zmz6SxzRAukwozdEFIh_snWqed5EFLyAqmUJfjyX8xiTKdYoo4PRNgBYdLHAh70/s1600/The_Purge_poster.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEircu8aQj8DHWt3VNzLo74XJPx99BXpFnoxkOrhKiRQSZ8fiTAU6lcRrv30vTmsMFqQxItOHNaFI6e8Zmz6SxzRAukwozdEFIh_snWqed5EFLyAqmUJfjyX8xiTKdYoo4PRNgBYdLHAh70/s640/The_Purge_poster.jpg" width="404" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சயின்ஸ் பிக்சன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அந்த சயின்ஸ் பிக்சனிலேயே நெறைய வகையறா உள்ளது. ஸ்பேஸ் அட்வெஞ்சர், டைம் ட்ராவல், எதிர்காலத்தில் நிகழும் த்ரில்லர், க்ரைம் என எடுத்துக்காட்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த சயின்ஸ் பிக்சன் ஜானரில் வெளிவந்த ஒரு சீட்எட்ஜ் ஹார்ரர் கம் த்ரில்லர் தான் இந்த பர்ஜ். 2022-ல் அமெரிக்கா மிகசுத்தமாக இருக்கிறது. க்ரைம் ரேட் 1 சதவீதமாக குறைந்து நாடே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் எப்படி? வருங்கால அமெரிக்கர்கள் குற்றங்கள் குறையவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒரு தினத்தை ஆண்டவன் பெயரில் அறிவிக்கிறார்கள். அதுதான் பர்ஜ். அந்த தினத்தில் மனதில் உள்ள துவேஷத்தையும், கொலைவெறியையும், வஞ்சத்தையும் இன்னபிற கெட்டவை அனைத்தையும் தீர்த்துக்கொள்ளலாம். அன்றிரவு 7 மணியிலிருந்து அடுத்தநாள் 7 மணி வரை போலிஸ் கிடையாது; மருத்துவமனை கிடையாது; இவ்வளவு ஏன்? அரசாங்கமே 12 மணிநேரம் செயல்படாது. அன்றைய தினம் யாரும் யாரையும் கொலை செய்யலாம்; யாரை வேண்டுமானாலும் ரேப் செய்துகொள்ளலாம். கொலை செய்வதற்குக்கூட குறிப்பிட ஆயுதங்களைப் பயன்படுத்த அரசாங்கமே பரிந்துரை செய்யும். அன்றைய தினத்தை ரேடியோக்களும், டி.விக்களும் ஏதோ பொங்கல் திருநாள் நிகழ்வுபோன்று கொண்டாடும். அந்த தினம்தான் பர்ஜ்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கதைப்படி ஜேம்ஸ் எனும் பணக்காரர் தன் மனைவி மேரி, டீன் ஏஜ் மகள் ஷோயி மற்றும் மகன் சார்லி வசித்து வருகிறார். அன்றைய தினம் இரவு 7 மணியிலிருந்து மறுநாள் காலை 7 மணிவரை அந்த வருடத்தின் சுத்திகரிப்பு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அன்றிரவு அவர்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளே இத்திரைப்படம். ஜேம்ஸ் ஒரு செக்யூரிட்டி சிஸ்டத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி. அவர் உருவாக்கிய செக்யூரிட்டி சிஸ்டத்தையே அமெரிக்காவின் மிகப்பெரும்பாலான வீடுகள் பயன்படுத்துகின்றன. மகள் ஷோயி அவளின் காதலன் ஹென்றியுடன் ஜாலியாக இருக்கிறாள். ஜேம்ஸ் அலுவலகம் முடித்து காரில் வீடு திரும்புவதாக படம் துவங்குகிறது. இதைக் கண்டு ஷோயி தன் காதலன் ஹென்றியை வீட்டிலிருந்து அனுப்புகிறாள். இன்னொருபுறம் சார்லி தான் கண்டுபிடித்த ஸ்பூகேமராவை வைத்துக்கொண்டு வீட்டில் நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறான். வீட்டிற்கு ஜேம்ஸ் வந்ததும் டின்னர் முடிகிறது. மணியும் 7-ஐத் தொடுகிறது. பர்ஜ் தினத்திற்கான அறிவிப்பு சத்தம் கேட்டதும் தன் வீட்டின் செக்யூரிட்டி சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டு அனைவரும் அவரவர் அறைக்குச் செல்கிறார்கள். ஷோயியின் அறையில் ஹென்றி வீட்டிற்கு செல்லாமல் ஒளிந்துகொண்டிருக்க, ஷோயி வந்ததும் அவளிடம் ஜேம்ஸிடம் நம் காதலைச் சொல்லவேண்டும் என்று கிளம்புகிறான். இன்னொருபுறம் வீட்டிற்கு வெளியில் இருக்கும் சிசிடிவி புட்டேஜ்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் சார்லி ஒரு மனிதன் ஓடிவருவதையும் அவனைக் காப்பாற்றுமாறு கதறுவதையும் கண்டு அவனுக்கு உதவ முயற்சிக்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
செக்யூரிட்டி சிஸ்டத்தை அன்லாக் செய்துவிட்டு அந்த மனிதனைக் காப்பாற்றுகிறான் சார்லி. சிஸ்டம் அன்லாக் ஆனதை உணரும் ஜேம்ஸ் கதவருகே வர, அதேநேரம் ஹென்றியும் அங்கே வருகிறான். பட்டென்று ஹென்றி துப்பாக்கியை எடுத்து ஜேம்சைக் கொல்ல முயற்சிக்க, நடக்கும் சண்டையில் ஹென்றி ஜேம்சால் கொல்லப்படுகிறான். அந்த கேப்பில் உள்நுழைந்த அந்த மனிதன் வீட்டிற்குள் எஸ்ஸாகிறான். சிறிது நேரத்தில் ஒரு டீன்-ஏஜ் ஆண்களும் பெண்களும் முகமுடி அணிந்து சைக்கோக்கள் போல வீட்டிற்கு வந்து ஜேம்சை மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். உள்நுழைந்த ஆசாமியை வெளியில் பிடித்துத் தந்தால் ஜேம்ஸின் குடும்பத்தை விட்டுவிடுவதாக சொல்கிறார்கள். வீட்டிற்குள் சார்லி அந்த மனிதனுக்கு உதவி செய்ய, இன்னொருபுறம் ஷோயி மனதளவில் ஹென்றியின் இறப்பை ஜீரணிக்கமுடியாமல் எங்கோ ஒளிந்து கொள்கிறாள். அந்த மனிதனை ஜேம்ஸ் பிடித்தாரா, ஜேம்ஸின் குடும்பம் என்ன ஆனது என்பது மீதிக்கதை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த திரைப்படத்தில் உள்ள மிகப்பெரிய ப்ளஸ் என்னவென்றால் அதிவேக பரபர திரைக்கதையே ஆகும். ஒரு ஆசாமி ஜேம்ஸ் வீட்டினுள் துழையும்போது ஆரம்பிக்கும் வேகம் படம் முடியும்வரை துளிகூட குறையாமல் நகர்ந்துகொண்டே இருக்கும். கான்செப்ட் ரீதியாக நம்பமுடியாததாக இருந்தாலும் திரைக்கதையானது அதையெல்லாம் ஓரங்கட்டி நம்மையும் அந்த வீட்டிற்குள் இழுத்துச்செல்லும். வில்லனாக வரும் ரைஸ் வேக்ஃபீல்டின் நடிப்பு அசத்தலாக இருக்கும். ‘மிஸ்டர் சான்டின். உங்கள் வீட்டிலிருக்கும் அந்த மனிதனைக் கொன்று எங்கள் மனதைத் தூய்மைப் படுத்தவேண்டும். தயவு செய்து அவனை வெளியே அனுப்புங்கள்’ என்று ரைஸ் கேட்கும்போது கூட இருக்கும் ஒரு பர்ஜர் கெட்ட வார்த்தையில் ஹீரோவைத் திட்டும்போது படக்கென்று அவனைச் சுட்டுவிட்டு ‘சீக்கிரம் அனுப்புங்கள். இவன் என் நண்பன்; ஆனால் நீங்கள் என் நண்பன் இல்லை’ என்று கூலாக மிரட்டும்போது நமக்கே உடல்சிலிர்க்கும். உள்ளே நுழையும் ஆசாமியான எட்வின் ஹாட்ஜ் உயிர்பிழைக்கவேண்டும் என்று துடிக்கும்போது நமக்கேபாவமாக இருக்கும். இவர்களையெல்லாம் தூரத்தூக்கிப்போட்டு கலக்குகிறார் உமா தெர்மனின் முன்னாள் கணவரும் ‘அந்த குழந்தையே நீங்க தான் ’ புகழ் ப்ரிடெஸ்டினேசன் ஹீரோவுமான ஈதன் ஹாக். ஜேம்சாக வரும் இவர் வீட்டில் பதுங்கியிருக்கும் எட்வின் ஹாட்ஜை சேரில் கட்டிப்போடும்போது ஏதோ சமையல் குறிப்பு சொல்வதுபோல மனைவியிடம் ‘கத்தியை எடுத்து அவன் உடலில் புல்லட் இறங்கிய இடத்தில் சொருகு’ என்று சொல்லிவிட்டு ‘இங்கே பாருங்க. இப்படி பண்ண உங்களுக்கு வலிக்கும். தயவு செஞ்சு என் குடும்பத்த காப்பாத்தறதுக்காக வெளிய போய் செத்துடுங்க’ என்று சொல்வதெல்லாம் ரணகளம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தில் மூன்றுபேரை மிகமுக்கியமாக பாராட்டவேண்டும். ஒளிப்பதிவாளர் ஜாக்கஸ், இசையமைப்பாளர் நாதன் வைட்ஹட் மற்றும் எடிட்டர் பீட்டர். ஒளிப்பதிவு ஏதோ பிரம்மாண்ட திரைப்படங்களைப் பார்ப்பதைப் போன்றதொரு குவாலிட்டியில் உள்ளது. இயக்குநர் ஜேம்ஸ் டீமொனாக்கோ (இவர் பெயரும் ஜேம்ஸ் தான்) எழுதி, இயக்கிய இரண்டாவது படம் இது. 3 மில்லியனில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 90 மில்லியன் வசூல் செய்த காரணத்தால் தொடர்ந்தாற்போல் இரண்டாண்டுகளுக்கு ஒரு பர்ஜ் திரைப்படத்தை இயக்கிக்கொண்டே போகிறார். 2014-ல் வெளிவந்த இத்திரைப்படத்தின் இரண்டாம்பாகமும் செம ஹிட் ஆனதைத் தொடர்ந்து இவ்வருடம் ஜூலை மாதம் இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகம் ரிலிசாக இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வருங்காலத்தில் இப்படியெல்லாம் ஆகுமா? ஆகாதா என்பதை யோசிப்பதற்கு பதில் ஆகாமல் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வதில் தவறில்லை; ஏனென்றால் நம் மனதில் இருக்கும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட வாய்ப்பு கிடைக்கும்போது என்னென்ன விபரீதங்கள் நிகழும் என்பதை படத்தின் கிளைமேக்ஸில் பார்க்கும்போதும் அதைப் பற்றி யோசிக்கும்போதும் மனது துடிதுடிக்கிறது. இன்று உத்தமர்களாக மெச்சக்கொள்ளும் ஹோமோசெப்பியன்ஸ் ஒரு காலத்தில் நியான்டர்தால் மனித இனத்தையே கூண்டோடு அழித்த பழிக்கு சொந்தக்காரர்கள் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஏற்கனவே மதம்,இனம்,சாதி,நாடு, மொழி எனப்பல்வேறு காரணங்களால் மனிதர்கள் தங்கள் வெறுப்பைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் இம்மாதிரியெல்லாம் அறிவிக்கப்பட்டால் அவ்வளவு தான். அதையெல்லாம் விடுங்கள்; இந்த திரைப்படம் ஒரு மஸ்ட் வாட்ச் என்டெர்டெயினர் என்பதில் சந்தேகமில்லை. படம் முடிந்தபின் ரேடியோவிலும், டி.வி.யிலும் வரும் அறிவிப்புகளைக் கேட்க மறக்காதிர்கள்.</div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-5282671436199765342016-06-04T09:30:00.000+05:302016-06-04T09:30:31.124+05:30SNATCH - சினிமா விமர்சனம்<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmYLyoDO5YfM-0hpPV-4TBcDkCgNaMcUTllqIRkzJGjz3bbZSAy0L2tNeZzmllAa_nH0JdmDP4gkNxbnm7yQWPdC48L6AieoirgdCVIoYRjFMBApSd7PxzBV1DQYlaGdgcxFZX2iFfidY/s1600/Snatch_ver4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="478" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmYLyoDO5YfM-0hpPV-4TBcDkCgNaMcUTllqIRkzJGjz3bbZSAy0L2tNeZzmllAa_nH0JdmDP4gkNxbnm7yQWPdC48L6AieoirgdCVIoYRjFMBApSd7PxzBV1DQYlaGdgcxFZX2iFfidY/s640/Snatch_ver4.jpg" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
கிட்டத்தட்ட ப்ளாக்கில் சுறுசுறுப்பாக இயங்கி நான்குமாதங்களுக்கும் மேலாகின்றது என நினைக்கிறேன். சில பர்சனல் காரணங்களால் எழுதுவது மட்டுமில்லாமல் வாசிப்பது, திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற மகத்தான காரியங்களையும் தடைசெய்யவேண்டியதாகி விட்டது. இந்நான்கு மாத காலத்தில் அதிகபட்சமாக பார்த்த திரைப்படங்களின் எண்ணி்க்கை 20 இருக்கலாம். அதேபோல் இக்காலகட்டத்தில் படித்த நாவல்களின் எண்ணிக்கையும் 10-ஐத் தாண்டவில்லை என்பது எனக்கே வாய்த்த சோகம். வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு நாவல், 3 திரைப்படம் என்று சூளுரைத்த சபதத்தை நிறைவேற்ற கடைசி 20 நாட்களாக போராடி வருகிறேன். கிட்டத்தட்ட தினமும் 3 திரைப்படங்களும் 3 நாளுக்கு ஒரு நாவலும் படித்துவருகிறேன். இதைத்தவிர வேறு வேலையே இல்லையா என்று என்னைப்பார்த்து நீங்கள் பொறுமுவது புரிகிறது. சரி இப்போது எதற்கு இந்த ப்ளாஷ்பேக்? தேவையற்ற ஒரு பத்தி. பரவாயில்லை விட்டுத்தள்ளுங்கள். எல்லாம் க்வென்டின் திரைப்படம் பார்த்து என்னைத்தாண்டி இப்படி ஒட்டிக்கொண்டது.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
உங்களுக்கு பரபர வேகத்தில் கேங்ஸ்டர் காமெடி திரைப்படம் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தால் சிறிதும் தாமதிக்காமல் இந்த திரைப்படத்தை டவுன்லோட் செய்துவிடுங்கள்; ரிவியூகூட படிக்கத் தேவையில்லை. திரையுலகைப் பொறுத்தவரை ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும்; இந்த கேட்டகரியில் 95 சதவீத இயக்குநர்களை அடக்கிவிடலாம். ஸ்டைல் இல்லையென்று காட்டுவதுகூட ஒரு ஸ்டைல் தான்; ஸடான்லீ குப்ரிக் போன்ற ஒரு சிலரை இதில் சேர்க்கலாம். இயக்குநர் கெய் ரிட்சி (GUY RITCHIE) எழுதும் திரைக்கதைகள் அலாதியானவை. அசால்டாக போகிறபோக்கில் காமெடியைத் தூவிவிட்டு, அழகாக திரைக்கதையை நகர்த்திச் செல்வார். LOCK,STOCK AND TWO SMOKING BARRELS, SNATCH, ROCKNROLLA என இவர் எழுதிய இயக்கிய படங்கள் எல்லாம் சுந்தர்.சி ரகம். அதுவும் வெறும் காமெடியை மட்டும் பிரதானப்படுத்தாமல் ஒரு கேங்ஸ்டர் கதையில் பயங்கரமான சூழலில் தன் கேரக்டர்களை உலாவவிட்டு அதனுள் காமெடியைத் திணித்து நமக்கு ஒரு கலக்கல் கா்கடெய்லைக் கொடுத்துவிடுவார். அதுதான் கய் ரிட்சி ஸ்பெஷல். </div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
சினிமா எடுக்கப்படும் விதத்திலும் திரைக்கதை அமைப்பைக் கொண்டும் பல்வேறு வகையாக சினிமாவை வகைபடுத்துவார்கள் என்பது ஊரறிந்ததே. அந்தாலஜி, ஃப்லிம் நாய்ர், ஆர்ட் ஃப்லிம், எக்ஸ்பிரமென்டில் ஃப்லிம் இப்படி ஏகப்பட்ட ஸ்டைல்களை சொல்லிக்கொண்டே போகலாம். 2005-ல் டான் ரூஸ் எனும் பிட்டுப்பட இயக்குநர் இயக்கிய ஹாப்பி என்டிங்ஸ் எனும் ஹாலிவுட் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய அலைசா முதன்முதலில் அப்படத்தின் ஸ்டைல் குறித்து ஒரு புது வார்த்தையை உதிர்த்தார். அதுதான் ஹைபர்லிங்க் சினிமா எனும் பதம் (முன்குறிப்பு – ஸ்டைல் வேறு; ஜேனர் வேறு. திரைப்படம் எடுக்கப்படும் விதத்தைக் கொண்டு சொல்வது ஸ்டைல் எனப்படும். திரைப்படம் கொண்டு செல்லப்படும் விதத்தைப் பொறுத்து ஜேனர் குறிக்கப்படும். எடுத்துக்காட்டாக இத்திரைப்படத்தின் ஸ்டைல் ஹைபர்லிங்க் சினிமா; அதேநேரம் ஜேனர் என்றால் இது காமெடி க்ரைம் ஜானரை வந்து சேரும்). </div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
அதாவது ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத பல கேரக்டர்கள் கடைசியில் ஒருமுறை தெரிந்தோ, தெரியாமலோ சந்திக்கும்போது படத்தின் கதை திசை திரும்புவதே இந்த பதம். தமிழில் தசாவதாரம், சூதுகவ்வும் போன்ற படங்களைக் கூறலாம். இந்த பதம் வழக்கிற்கு வந்தபின் இதற்கு முன்வந்த திரைப்படங்களையெல்லாம் வகைப்படுத்த ஆரம்பத்தார்கள். அப்படி வகைப்படுத்திய பின் ஹைபர்லிங்க் சினிமாவில் கெத்துக்காட்டியவர்கள் இருவர் என கண்டறிந்தனர். ஒன்று கய் ரிட்சி; மற்றொருவர் தொடர்ந்தார்போல் இந்த ஆண்டும் கடந்த ஆண்டும் ஆஸ்கார் அடித்த அலயேந்த்ரோ கொன்சாலஸ் இன்அரிட்டு. ஆனால் அலயேந்த்ரோ ஆரம்பத்தில் ஸ்பானிஷில் இயக்கியவர் என்பதால் ஹாலிவுட் ஹைபர்லிங் சினிமாக்களில் அவர் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் ஹைபர்லிங்க் சினிமாவில் உலகளவில் முன்னோடி யாரென்று பார்த்தால் நமக்கெல்லாம் உடல் சிலிர்க்கும். ஆம்; அவர் ஒரு இந்தியர் தான். சினிமா என்றதும் நினைவுக்கு வரும் சத்யஜித்ரே எனும் அந்த மேதை தான் உலகின் முதல் ஹபைர்லிங் சினிமாவை இயக்கிய பெருமைக்குரியவர்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
சரி; இத்திரைப்படத்திற்கு வருவோம். திரைப்படமானது டர்கிஷ் (ஜேசன் ஸ்டாதம்) வாய்ஸ் ஓவரில் ஆரம்பிக்கிறது. ‘வைரங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் ஒரு பாக்ஸிங் ப்ரமோட்டர். இது என் பார்ட்னர் டாம்மி’ என்று அவர் தன்னையும் தன்னுடன் இருப்பவரையும் அறிமுகப்படுத்தும் அதேநேரம் பெல்ஜியத்திலுள்ள ஆன்ட்வெர்ப் வைரப்பாதுகாப்புக் கிடங்கில் நான்கு ஆசாமிகள் ஜாலியாக க்வென்டின் திரைப்படத்தில் வருவதுபோல் பேசிக்கொண்டு வருகின்றனர். மெயின் டோரை அடைந்து உள்நுழைந்ததும் படபடவென்று ஆடைக்குள் பதுக்கியிருக்கும் துப்பாக்கிகளை எடுத்து ஒரு பெரிய வைரக்கல்லைக் கொள்ளையடித்துச் செல்கின்றனர். அக்கூட்டத்தின் தலைவன் ஃப்ராங்கி தி ஃபோர் பிங்கர்ஸ் (பெனிசியோ டெல் டோரா). தடதடவென திரைப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் (ஆக்சுவலி காட்சிகளில் வரும் அனைவருமே முக்கிய கதாபாத்திரங்கள்தான்) நமக்கு அறிமுகமாகின்றன. </div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
கொள்ளைக்கு பின்பு அனைவரும் லண்டன் சென்று பிரிகின்றனர். பிரியும் நேரத்தில் ஒரு ரஷ்யன் ஃப்ராங்கிடம் ‘உனக்குத் துப்பாக்கி வேண்டுமெனில் இவரைப் பார்’ என்று கூறி ஒரு அட்ரஸைத் தருகிறான். அந்த ரஷ்யனின் அண்ணன் தான் அந்த ஆயுத விற்பனையாளர் ; போரிஸ் தி ப்ளேட் (அ) போரிஸ் த புல்லட் டாட்ஜர் (ரேட் செர்பெட்ஷீசா). ஃப்ராங் , போரிசைப் பார்த்து துப்பாக்கி வாங்குகிறான். அவனிடம் போரிஸ் கேம்ப்ளிங்கைப் பற்றிக்கூறுகிறான். ஃப்ராங்கிற்கு கேம்ப்ளிங் மேல் அதீத ஆர்வம். இன்ஃபாக்ட் ஃப்ராங் தி ஃபோர் பிங்கர்ஸ் எனும் பேர் உண்டானதே சூதாட்டத்தில் தன் ஒருவிரலை பந்தயம் கட்டி இழந்ததால்தான். ஏற்கனவே போரிஸின் சகோதரன் ஃப்ராங்கைப் பற்றியும் அவனிடம் இருக்கும் வைரத்தைப் பற்றியும் போரிஸிடம் தெரிவித்ததால் கேம்ப்ளிங்கை வைத்து ஃப்ராங்கை கவிழ்த்துவிடுவான் போரிஸ். </div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
அதேநேரம் டர்கிஷ் ஒரு பாக்ஸிங் ப்ரமோட்டர். லண்டனில் வெய்ட்டு கையான ப்ரிக் டாப் (ஆலன் ஃபோர்ட்) ஏற்பாடு செய்யும் ஒரு அன்லைசென்ஸ்டு பாக்ஸிங்கில் தன் ஆளான பாக்சர் கோர்ஜியஸ் ஜார்ஜை விளையாட வைக்கிறான். டர்கிஷ்கு அவசரமாக ஒரு கேரவன் தேவைப்பட, வாங்கிவர டாமியையும் கோர்ஜியஸ் ஜார்ஜையும் அனுப்பி வைக்கிறான். சிப்பாக கிடைக்குமென்பதால் டாமி செல்லுமிடம் பைக்கி என்றழைக்கப்படும் ஐரிஷ் நாடோடிகள் இனத்திற்கு. அங்கே மைக்கி எனப்படும் ப்ராட்பிட்டைச் சந்தித்து கேரவன் வாங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் வாய்க்கால் தகராறாக கோர்ஜியஸ் ஜார்ஜுக்கும் மைக்கிக்கும் சண்டை வர, ஜார்ஜை ஒரே அடியில் வீழ்த்திவிடுகிறான் மைக்கி. டர்கிஷ் இப்போது சண்டையில் பங்கேற்க வைக்க ஆளில்லாமல் தவிக்க, மைக்கியையே சண்டையில் கலந்துகொள்ள செய்யவைக்கிறான். அதற்காக ப்ரிக் டாப்பிடம் சென்றுபேச, ப்ரிக்டாப் ‘உன்னுடைய ஆளை 4 ரவுண்ட் வரைத் தாக்குபிடித்து விளையாடி தோற்க வேண்டும்’ என்று கட்டளையிடுகிறான். ப்ரிக்டாப் பற்றி சின்ன முன்னோட்டம்; தனக்கு ஆகாதவர்களே, தன் சொல் கேட்காதவர்களைத் துண்டுதுண்டாக வெட்டி ஒரு வாரம் பசியோடு இருக்கும் பன்றிகளுக்கு உணவாக்கிவிடுவான் (தடையறத்தாக்க நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை). டீலை ஏற்றுக்கொள்கிறான் டர்கிஷ்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
அதேநேரம் போரிஸ், அடியாள்களை வைத்து ஃப்ராங்கியைக் கடத்தி, அவன் கையுடன் இணைக்கப்பட்டுள்ள வைரத்தைக் கடத்த முடவெடுக்கிறான். அதற்காக அவன் தேடிச்செல்வது அடகுக்கடை ஓனரான வின்னி. வின்னியின் பார்ட்னர் சால் மற்றும் தைரன். அவர்களிடம் பாக்சிங் நடக்கும் இடத்தில் கொள்ளையடிக்கவேண்டும் மற்றும் ஒருவனைக் கடத்தவேண்டும் என்று போரிஸ் கூற, மூவரும் கொள்ளையடிக்கச்செல்லும்போது ப்ரிக் டாப் ஆபிசில் இருக்கும் CCTVயில் மாட்டிக்கொள்கிறார்கள். எப்படியோ அடித்துப்பிடித்து அவர்கள் ஃப்ராங்கியைக் கடத்தி வருகிறார்கள். ஃப்ராங்கியிடம் இருக்கும் வைரத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் மூவரும் போரிசிடம் அதிக அமௌன்ட் கேட்க, போரிசோ ஃப்ராங்கியைக் கொன்றுவிட்டு கிளம்புகிறான். அதேநேரம் பாக்சிங் மேட்சில் தோற்கவேண்டிய மைக்கி, ஒரேஅடியில் எதிரியை வீழ்த்திவிடுகிறான். இதனால் செம காண்டாக இருக்கும் ப்ரிக்டாப், டர்கிஷ்ஷை மிரட்டி, மீண்டும் மைக்கியை சண்டையில் கலந்துகொண்டு தோற்கவைக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறான். டர்கிஷ், மைக்கியிடம் சென்று கேட்க அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறான் மைக்கி. இதனால் காண்டாகும் ப்ரிக்டாப் , மைக்கியின் அம்மாவை கேரவனில் வைத்து எரித்துவிடுகிறான். அதனால் தான் மீண்டும் சண்டையிடுவதாக ஒப்புக்கொள்கிறான் மைக்கி.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
அதேநேரம் அமெரிக்காவின் ஃப்ராங்கியின் சொந்தக்காரரும் வைரவியாபாரியுமான கசின் ஏவி, ஃப்ராங்கி கடத்தப்பட்டதை அறிந்து கிளம்பி லண்டன் வருகிறார். அங்கே அவனுடைய தோழன் டஃப் த ஹெட்டைச் சந்தித்து, ஃப்ராங்கியையும் வைரத்தையும் கண்டறிவதற்காக புல்லட் டூத் டோனி என்பவனை நியமிக்கிறான். இவர்கள் மூவருக்கும் போரிஸ் பற்றி தெரியவர, போரிஸ் மாட்டிக்கொள்கிறான். </div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
ப்ரிக்டாப் தன் ஆபிசில் மிரட்டிய வின்னி குழுவினரைக் கொல்லமுயற்சிக்க, அவர்கள் வைரத்தைப் பற்றித் தகவல் தர, வைரத்தைக் கண்டுபிடித்துக்கொண்டு வர 2 நாள் கெடு விதிக்கிறான் ப்ரிக்டாப். அதேநேரம் போரிஸ் ஒரு கட்டத்தில் ஏவி குழுவிடம் இருந்து தப்பிக்கிறான். வைரம் என்ன ஆனது? மற்ற கதாபாத்திரங்களின் நிலை என்ன? போன்ற பல என்ன-க்களைப் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். </div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
அடேங்கப்பா. சிம்பிளாக வைரக்கொள்ளை என்று ஒரு வார்த்தையில் எவனும் கதையைச் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே மாய்ந்து மாய்ந்து இத்தனை கேரக்டர்களை நுழைத்து மிகத்துல்லியமாக தான் நினைத்ததைச் சாதித்திருக்கிறார் கெய் ரிட்சி. கதையை ஒரு பத்தியில் எழுதிவிடலாம் என்று நினைத்த என்னையே இந்த வாங்கு வாங்கவைத்துவிட்டார். கதை பயங்கர குழப்பகரமானதாக படிக்கும்போது உங்களுக்கு தோனலாம். ஆனால் திரையில் பார்க்கும்போது துல்லியமாக, மிகத்துல்லியமாக விளங்கவைத்திருப்பார் இயக்குநர். ஒவ்வொரு கேரக்டரைப் பற்றியும் முன்பே அறிமுகப்படுத்திவிட்டு (ஒரே செகன்டில்) அவர்களைப் பற்றிய பின்னூட்டங்களை ஆங்காங்கே விவரித்திருப்பார். எடுத்துக்காட்டாக ஃப்ராங்கி தி ஃபோர் பிங்கர்ஸ் என்று கூறப்பட்டவன் எதற்காக ஃபோர் பிங்கர்ஸ் என்று அழைக்கப்படுகிறான் என்பதை நடுவில் கூறப்படும். இதேபோல் ஒவ்வொரு அடைமொழிக்கும் ஒவ்வொரு விசயத்தைக் குறிப்பிட்டிருப்பார். தீப்பொறித் திருமுகம், அட்டாக் ஆறுமுகம், படித்துறை பாண்டி என நமக்கு இந்த அடைமொழியெல்லாம் புதுசல்ல. எம்.ஜி.ஆர் காலத்து படங்களிலேயே கத்தி கபாலி, பயில்வான் பாண்டியன், கருந்தேள் கண்ணாயிரம் (கருந்தேள் அண்ணன சொல்லலிங்க) போன்று பல அடைமொழிகளைப் பார்த்துவிட்டோம். ஆனால் ஆங்கிலத்தில் பார்க்கும்போது இன்னும் ஜாலியாக இருக்கிறது. </div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
படத்தில் ஒன்லைன் காமெடிகள் கொடிகட்டி பறக்கிறது. டர்கிஷ் , டாமியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது (நம்மிடமும் தான்) சமையல் செய்து கொண்டிருப்பவனைப் பார்த்து</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
What's with those sausages,Charlie? என்று கேட்க,</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
Two minutes, Turkish. என்பான் சமையல் செய்பவன். சிறிதுநேரம் கேரவன் பற்ற டாமியிடம் பேசிவிட்டு மீண்டும்,</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
What's happening with them sausages? என்று கேட்க</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
-Five minutes. என்பான் .</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
It was two minutes five minutes ago. என்று டர்கிஷ் சொல்லும்போது நமக்கே சிரிப்பு முட்டும். </div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
அதேபோல் வின்னி, தன் பார்ட்னர்ஸ் சால் மற்றும் தைரனுடம் காரில் செல்லும்போது, குண்டாக இருக்கும் தைரன் கார் ஓட்ட உட்காருவான். அவனை எதற்கு உட்கார வைக்கிறாய் என்று சால் கேட்க, அவன் ஹவிவெய்ட் ட்ரைவ்விங்கில் ஸ்பெசல் ட்ரைனிங் எடுத்தவன் என்று வின்னி கூறுவான். காரைக்கொண்டுபோய் பார்க் செய்யும்போது அங்கே பார்க்கிங் இடம் இருக்கிறது தைரன் என்று சால் சொல்ல, அது மிக மிக நெருக்கமாக இருக்கிறது என்று தைரன் சொல்லுவான். திரும்பி வின்னியும் சாலும் பார்க்க, 20 மீட்டர் அகலத்திற்கு இடைவெளி விட்டு கார் நிறுத்தப்பட்டிருக்கும். ஆம் இவன் ஹெவிவெய்ட் ட்ரைவர் தான் என்று சால் சொல்வதும் தாறுமாறு.. மைக்கியிடம் டாமும் டர்கிஷ்ஷும் மீண்டும் சண்டை போட வா என்றழைக்க மைக்கி ஐரிஷ் கலந்த இங்கிலிஷில் பல கண்டிசன்களை போட, இரு என் பார்ட்னரிடம் கேட்டுவிடுகிறேன் என்று திரும்பி டர்கிஷ் டாமிடம் ‘அவன் பேசியதில் ஒருவார்த்தையாவது உனக்கு புரந்ததா?’ என்று அப்பாவியாய் கேட்குமிடம் குபுக் சிரிப்பு. இதேபோல் எண்ணற்ற காமெடிகளைப் பார்க்கலாம் . அதுவும் கடைசி 30 நிமிடம் காமெடிக்கென்று நேர்ந்துவிட்ட திரைப்படம் இது. </div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
பைக்கிகளைப் பற்றி சொல்லவேண்டுமெனில் எக்கச்சக்கம் உள்ளது. நம் ஊரில் குறவர், குறத்தியர் போன்ற நாடோடி இனமக்கள் தான் இந்த பைக்கிகள். அவர்களின் ஆங்கிலமானது ஐரிஷ் உச்சரிப்போடு கூடியது. டாக் (நாய்) என்பதை , டேக் என்று சொல்லுவார்கள். படபடவென பேசிக்கொண்டே செல்வார்கள். அந்த கேரக்டரில் ப்ராட்பிட் அசத்தியிருப்பார் . பிராட் பிட்டின் ரசிகர்கள் தவறவிடக்கூடாத திரைப்படம் இது (மற்றொன்று 12 மங்கிஸ்). ஜேசன் ஸ்டாதமை ஆக்சன் ஹீரோவாக மட்டும் பார்த்தவர்களுக்கு இத்திரைப்படம் ஒரு ஷாக். அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, வேலைக்காகதவர்களை வைத்துக்கொண்டு அவர் படும்பாட்டைப் பார்க்கும்போது தானாகவே புன்னகைப் பூக்கும். புல்லட் டாக் டூத்தாக வரும் வின்னி ஜோன்ஸ் மிரட்டியிருக்கிறார். படத்தில் என்னால் நம்பமுடியாதது இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளம் எப்படி இத்திரைப்படத்தில் இணைந்தது என்பதுதான். பெனிசிலோ டெல் டோரா, ஆலன் ஃபோர்ட், பிராட் பிட், ஸ்டேதம் என எங்கு திரும்பினும் பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. </div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
படத்தில் இதைத்தாண்டிய விசயம் இசை. கிக் ஆஸ் திரைப்படத்திற்கு இசையமைத்த ஜான் மர்பி தான் இத்திரைப்படத்திற்கும் இசை. டேனி பாய்ல்லின் ஆஸ்தான இசையமைப்பாளரான இவர், கெய் ரிட்சியின் முதலிரண்டு திரைப்படங்களும் இசையமைத்தார். அதில் இத்திரைப்படம் கிளாஸிக்கல் என்றுகூட சொல்லலாம். ஆட்டகாசமான பிண்ணனி இசை. நான் இதுவரை பிஜிஎம்களை அவ்வளவு எளிதாக டவுன்லோட் செய்யமாட்டேன். Road To Perdition, Departed, Kill-Bill என என்னிடம் இருக்கும் மியூசிக் ட்ராக்குகளில் இப்போது இத்திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. எடிட்டர் ஜோன்ஹாரிஸ் மிகச்சிறப்பாக எடிட்டிங் செய்துள்ளார். ஒரு காட்சியில் கிட்டத்தட்ட 30-லிருந்து 40 டேக்குகள் வரை சொருகப்பட்டுள்ளன. ஆனால் அத்தனையும் மிகத்தெளிவாக கத்திரித்து ஒட்டியிருப்பதில் இவரின் திறமை வெளிப்படுகிறது.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
மொத்தத்தில் காமெடி பிரியர்கள், வித்தியாசமான திரைக்கதைக் கொண்ட படங்களின் பிரியர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரைப்படம் இது. ஒரே ஒரு இடத்தில் அரைநிர்வாண காட்சி இடம்பெறுகிறது என்பதையும் முன்னமே சொல்லிவிடுகிறேன். வன்முறைக்காட்சிகள் படத்தில் காட்டப்படவில்லை என்பது ஆறுதல் விசயம். </div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-55472135664103647432016-05-20T20:53:00.000+05:302016-05-20T20:53:48.943+05:30X-Men : APOCALYPSE – சினிமா விமர்சனம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjREch4h2_KTvgS1s_uiZv_ruCSefnEDgYd7vRuWovcmgR-T_9apnEw3s6h6-WydcywvFAGTW7Cf2RLHGw8y6_ndY7RIZnMM-yQTG-x_1I9Suj3ZKm8cCknskN5tSltGUINJ1imLYjXQdo/s1600/12348023_948965528519227_3184525951975867155_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjREch4h2_KTvgS1s_uiZv_ruCSefnEDgYd7vRuWovcmgR-T_9apnEw3s6h6-WydcywvFAGTW7Cf2RLHGw8y6_ndY7RIZnMM-yQTG-x_1I9Suj3ZKm8cCknskN5tSltGUINJ1imLYjXQdo/s640/12348023_948965528519227_3184525951975867155_n.jpg" width="430" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெல், X-MEN சீரிஸ்களைப் பற்றித் தனியாக சொல்லத்தேவையில்லை. ஹாலிவுட் ரசிகர்கள் அனைவருக்கும் பரிட்சயமான பெயர்களில் மிகமுக்கியமான ஒன்று X-MEN. சூப்பர்ஹீரோக்கள் என்றாலே உடனுக்குடன் நியாபகம் வரும் மார்வல் காமிக்ஸ் படைத்த மிகமுக்கியமான காமிக்ஸ்களில் எக்ஸ்மேனும் ஒன்று. காமிக்ஸ் உலகபிதாமகன் ஸ்டான் லீயால் 1963 உருவாக்கப்பட்ட X-MEN இன்று 2016-ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 10 திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. அதற்கு மிகமுக்கிய மூன்று காரணங்கள் என்று பார்த்தால் இயக்குநர் ப்ரைன் சிங்கர், FIRST CLASS-ன் இரண்டாம் படைப்பான DAYS OF FUTURE மற்றும் இதுவரை சூப்பர் ஹீரோக்கள் கண்டிராத மிகபலசாலியான வில்லன் என் சபா நர் என்றழைக்கப்படும் அபோகலிப்ஸ். வெளிவர இருக்கும் அபோகலிப்சை, உருவான இடமான அமெரிக்காவிற்கு முன்பே நாம் காண இருக்கிறோம். ஆம், இத்திரைப்படம் உலகெங்கும் வெளியாகுவதற்குள் ஒருவாரம் முன்பே இந்தியாவில் ரிலிஸ் செய்யப்படுகிறது. இந்தியாவில் X-MEN ஃப்ரான்சீஸ்களுக்கென மிகப்பெரிய ஃபேன் பேஸ் இருப்பதால் இந்தியாவில் முதலில் ரிலிஸ் செய்வதாக ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. (இப்போதெல்லாம் ரிலிசாகும் பெரும்பான்மையான ஹாலிவுட் திரைப்படங்கள் மற்ற நாடுகளில் ரிலிசாகும் முன்பே இந்தியாவிலும் சீனாவிலும் ரிலிசாகிவிடுகிறது.)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுவரை வெளிவந்த X-MEN திரைப்படங்களை மூன்றாக பிரிக்கலாம். முதலில் வெளிவந்த X-MEN, X-2 மற்றும் THE LAST STAND ஆகியவற்றை ஒரு ட்ரையாலஜி ஆகவும், WOLVERINE இரு பாகங்களாகவும், FIRST CLASS, DAYS OF FUTURE மற்றும் வரவிருக்கும் APOCALYPSE ஆகியவற்றை ஒரு ட்ரையாலஜி எனவும் காலத்தைக் கணக்கில் கொண்டு மூன்றாக பிரிக்கலாம். இவற்றில் முதல் மூன்று திரைப்படங்கள் நிகழ்காலத்தில் நடப்பது போலவும், WOLVERINE-ன் இரு பாகங்களும் (தற்போது வரவிருக்கும் மூன்றாம் பாகத்தையும் சேர்த்துக்கொள்ளவும்) லோகன் யார் என்பதைக் கூறும் தனிக்கதையாகவும், FIRST CLASS ட்ரையாலஜி இறந்த காலத்தில் (1980-களின் மத்தியில்) நடப்பதாகவும் எடுக்கப்பட்டிருக்கும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மார்வலின் தந்தை ஸ்டான் லீ உருவாக்கிய இந்த X-MEN கதாபாத்திரங்களை திரையில் கொண்டு வர, இன்று நேற்றல்ல, கிட்டதட்ட 32 வருடங்களுக்கு முன்பே பரபரப்பாக வேலைகள் நடந்தன. மார்வல்லின் எடிட்டரான ராய் தாமஸ் மற்றும் கெர்ரி ஆகியோர் X-MEN-கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டு, அப்போதைய காபிரைட் ப்ரொடக்சன் கம்பனியான ஒரியனை அணுகியது. ஆனால் அந்த திரைக்கதையைத் திரைப்படமாக்க போதிய அமௌன்ட் இல்லை என்று ஒரியன் நிறுவனம் கைவிரித்துவிட்டது. அதன்பின் ஸ்டான் லீயின் முயற்சியால் ஒரியனிடம் இருந்து X-MEN கரோல்கா நிறுவனத்திற்கு கைமாறியது. X-MEN –ஐத் திரையில் கொண்டுவர நடத்தப்பட்ட டிஸ்கஷனில் இடம்பெற்ற மிகமுக்கியமான இருவர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் கேத்ரின் பிஜ்லோ. கேமரூனைப் பற்றி நாயக்கன்பட்டியில் 7-வது படிக்கும் மாணவருக்குக் கூடத் தெரியும் என்பதால் கேத்ரீனைப் பற்றிப் பார்க்கலாம். 2008 அகாடமி அவார்டைத் தட்டிய இவர் ஹர்ட் லாக்கர் திரைப்படத்தை இயக்கி ஓவர்நைட்டில் உலகப்புகழ் பெற்றவர். அதைத்தொடர்ந்து இயக்கிய ஜீரோ டார்க் தர்ட்டியும் விருதுகளைச் சம்பாதிப்பதற்காக உருவாக்கப்பட்டதுபோல் எண்ணற்ற விருதுகளைத் தட்டிச் சென்றது. கேமரூன் தயாரிப்பில் கேத்தரின் இயக்குவதாக இருந்த அந்த ப்ராஜக்ட்டும் மேகரூனின் குளறுபடியால் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக இத்திரைப்படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கார்கோலோ நிறுவனம், பல்வேறு காரணங்களால் தயாரிப்பைவிலக்கிவிட்டு, காமிக்ஸ் மீதான தன் உரிமையை மார்வலிடமே வழங்கியது. மார்வல் வந்த விலைக்கு விற்றுவிடலாம் என்ற முடிவில் கொலம்பியா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த, அக்காலக்கட்டத்தில் அனிமேசன் X-MEN டி.வி. சீரியஸ் ஒருபுறம் வெற்றியடைந்தது. இதைக்கண்ட ஃபாக்ஸ் நிறுவனம் உரிமையை மார்வலிடம் பேசி வாங்கியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உரிமையை வாங்கியதும் ப்ராட் பிட் நடிப்பில் டேவிட் ஃபிஞ்சரின் இயக்கித்தில் வெளியான செவன் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதிய ஆன்ட்ரூ, ஸ்கைஃபால், த அவியேட்டர், ஸ்பெக்டர், ஹுகோ, க்ளாடியேட்டர் போன்ற திரைப்படங்களிடன் திரைக்கதை ஆசிரியர் ஜான் லோகன், த கேபின் இன் தி வுட்ஸ், அவெஞ்சர்ஸின் இருபாகங்களை இயக்கிய ஜோஸ் வேடன் மற்றும் எழுத்தாளர் மைக்கேல் கேபோன் போன்றோர்களை அணுகியது. இவர்களிடமெல்லாம் காமிக்ஸை திரைப்படமாக்கும் சாத்தியத்தைப் பற்றி விசாரித்த ஃபாக்ஸ் நிறுவனம் 1996-ல் காமிக்ஸைத் திரைக்குக் கொண்டுவரும் தன் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொதுவாக காமிக்ஸ்களில் பெரும் வெற்றிபெற்ற கேரக்டர்களைத் திரைப்படமாக்க முயற்சிக்கும் எந்தவொரு நிறுவனமும், முதல் திரைப்படத்தைப் பெரிய இயக்குநர்களைக் கொண்டே இயக்கத் திட்டமிடும். எடுத்துக்காட்டாக 1966-ல் வெளியான பேட்மேனிற்கு திரைத்துறையில் பலவிதமான அனுபவம் வாய்ந்த லெஸ்லியை ஃபாக்ஸ் நிறுவனம் பணிக்கு அமர்த்தியது. இதேபோல் சூப்பர்மேன் திரைப்படத்தையும் குறிப்பிடலாம். 1978-ல் வெளிவந்த சூப்பர்மேன் திரைப்படத்தை இயக்கியவர் ரிச்சர்ட் டோன்னர். ஓமன் திரைப்படத்தை இயக்கி உலகப்புகழ் பெற்றிருந்த அவருக்கு சூப்பர்மேன் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதித் தந்தவர் மரியோ பூசா. இப்படி இருக்க ஃபாக்ஸ் நிறுவனம் X-MEN ஃப்ரான்சீஸின் முதல் திரைப்படத்தை இயக்க நியமித்த இயக்குநர் ப்ரைன் சிங்கர். பப்ளிக் அக்ஸஸ் எனும் சுமாரன திரைப்படத்தை தந்திருந்த ப்ரைன் சிங்கருக்கு பேர் வாங்கிக்கொடுத்த திரைப்படம் என்றால் அது யூசுவல் சஸ்பெக்ட்ஸ். ப்ரைன் சிங்கரை அப்போது எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் ஏற்றுக்கொள்ள முன்வராத காரணத்தால் யூசுவல் சஸ்பெக்ட்ஸ் திரைப்படத்தைத் தன் சொந்தக்காசில் தயாரித்து வெளியிட்டார். போதிய விளம்பரமின்மை காரணத்தால் பெரும் வெற்றியடைய வேண்டிய திரைப்படம் சூப்பர்ஹிட்டோடு நின்றது. இந்த திரைப்படத்தின் தாக்கம் ஸ்கேரிமூவியின் முதல்பாகத்திலேயே இடம்பெறும் அளவுக்கு சென்றது. இப்போது ப்ரைன் சிங்கருக்கு மீடியா வெளிச்சம் கிடைத்தது. அடுத்த என்ன செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தபோது அப்ட் பிப்புள் எனும் திரைப்படத்தை இயக்கினார். யூசுவல் சஸ்பெக்ட்ஸ் இயக்குநர் என்பதால் சோனியின் ட்ரைஸ்டார் நிறுவனம் திரைப்படத்தை வாங்கி திரையிட்டது. படம் அட்டு ப்ளாப் ஆகியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போது யோசித்துப் பாருங்கள். இதுவரை வெறும் இரண்டே திரைப்படங்கள் மட்டுமே ஒரு இயக்குநர்; அதிலும் ஒரு திரைப்படம் அட்டு ப்ளாப். இவரை நம்பி ஃபாக்ஸ் நிறுவனம் 60 மில்லியனைக் கொட்டத் தயாராக இருந்தது. இதற்கு இரண்டு காரணங்களில் ஒன்று யூசுவல் சஸ்பெக்ட்ஸ்; மற்றொன்று இத்திரைப்படத்தை இயக்குவதற்காக இதற்குமுன் நியமித்த இருவரில் ஒருவரான சின் சிட்டி இயக்குநர் ராபர்ட் இத்திரைப்படத்தை நிராகரிக்க, மற்றொருவரான ப்ரெட் ராட்னருக்கும் ஃபாக்ஸ் நிறுவனத்திற்கும் சண்டை வர இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய டாம் டீசாண்டோ சிங்கரை இத்திரைப்பபடத்திற்கு இயக்குநராக்கி விட்டார். ப்ரைன் சிங்கரை அப்ட் பிப்புள் திரைப்படம் வருவதற்குமுன்பே X-MEN-காக புக் செய்துவிட்டதால் ஃபாக்ஸ் நிறுவனத்திற்கும் வேறுவழி தெரியவில்லை. இத்தனைக்கும் சூப்பர்ஹீரோ கான்செப்ட் பற்றி சரிவரத்தெரியாதவர் சிங்கர்; ஆனால் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் இயக்கவேண்டும் என்பது அவர் கனவு. அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்கள் மற்றும் குறும்படம் ஆகியவை அனைத்துமே மிகமெதுவாகத்தான் நகரும். இது ஒருபுறம் இருக்க முதல்பாகத்திற்கு திரைக்கதை எழுத நியமிக்கப்பட்ட டேவிட் ஹெய்டருக்கு முதல் திரைப்படமே இதுதான். அதற்குமுன் நடிகராக பெயர் தெரியாத சில படங்களில் நடித்தும், ஒன்றிரண்டு திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்த டேவிட் ஹெய்டர் இத்திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இதுதான் இப்படி என்றால் படத்தின் கதையை எழுத ப்ரைன் சிங்கர் தன்னுடன் இணைத்துக் கொண்டது சிங்கரின் நீண்டகால நண்பரான டாம் டிசான்டோ . அவருக்கும் கதையெழுதுவது இதுமுதல் திரைப்படம். படத்தின் மிகமுக்கியமான மூன்று துறைகளையும் இதுவரை எந்தவொரு அனுபவமும் இல்லாதவர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் நல்லவிஷயம் என்னவெனில் படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உட்பட மற்ற டெக்னீஷியன்கள் அனைவருமே பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வளவு நடந்தபின் படத்திற்கு பூஜைபோட்டு ஆரம்பிப்பார்கள் எனப்பார்த்தால் அதுதான் இல்லை. மீண்டும் மீண்டும் உள்ளுக்குள்ளே பல பூசல். திரைக்கதை ஆசிரியராக தனது நண்பர் க்றிஸ்டோபர் மொக்கொய்ரியை நியமிக்கவேண்டும் என சிங்கர் கேட்க, அது முடியாது என ஃபாக்ஸ் சொல்ல, பின் அடித்துப்பிடித்து அவரையும் உள்ளே இழுத்துவந்தார் சிங்கர். இப்படியாக பல சிக்கல்களுக்கு மத்தியில் திரைப்படத்தின் வேலைகள் துவங்க நடிகர் தேர்வு துவங்கியது. A BEUTYFULL MIND, L.A.CONFIDENTIAL போன்ற திரைப்படங்களின் நாயகன் ரசல் க்ரோவை சென்று பார்த்தார் சிங்கர். இவரை அணுகியதான் காரணம் வொல்வொரின் கேரக்டரில் நடிக்க. ஆனால் ரசல் க்ரோ கால்ஷிட் பிரச்சனையால் மறுத்தார். அந்த சமயத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்த திரைப்படம் ரிட்லி ஸ்காட்டின் க்ளாடியேட்டர். சரி என்று ஹூயு ஜாக்மேனிடம் வந்தார். எதோவொன்று மனதில் உதைக்க மீண்டும் வொல்வரின் கேரக்டருக்கு ஆல்தேடி கிளம்பினார் சிங்கர். இம்முறை அவர் அணுகியது டக்ரே ஸ்காட். அவரோ மிஷன் இம்பாஸிபிள் திரைப்படத்தின் இரண்டாம்பாகத்தில் வில்லனாக பிஸியாக இருக்க, வேறுவழியில்லாமல் ஹாலிவுட்டில் யாரென்றே தெரியாத ஜேக்மேனையே வொல்வரைனாக தேர்ந்தெடுத்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருநிமிடம் அப்படியே 1998-ஐ விட்டுவிட்டு 2012-க்கு வாருங்கள். நோவா, தி மேன் வித் ஐர்ன் பிஸ்ட்ஸ், ராபின் ஹுட், பாடி ஆஃப் லைஸ், எ ப்யூட்டிஃப்ல் மைன்ட் , தி கிளாடியேட்டர் L.A. CONFIDENTIAL போன்று பல படங்களில் கலக்கிய ரசல் க்ரோ 2012-ல் LES MISERABLES எனும் திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்தார். அப்போது முதல் மற்றும் முக்கியமான ஹீரோ யாரென்று கேட்கிறீர்களா? 1998-ல் ஹாலிவுட்டிற்கு யாரென்றே தெரியாத ஹூயூ ஜேக்மேன் தான் அது. </div>
<div style="text-align: justify;">
இப்போது மீண்டும் 1998-ற்கே செல்லலாம். நடிகர் தேர்வில் மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் தேர்விலு பற்பல குழப்பங்கள் ஓடியது. சிங்கர் ஒருவரை நியமித்தால் ஃபாக்ஸ் நிறுவனம் நீ என்ன சொல்றது? நான் என்ன கேக்றது என்பதுபோல் வேறொருவரை நியமிக்க சொல்லி வற்புறுத்தும். சரி தயாரிப்பு நிறுவனம் சொல்வதையாவது கேட்போம் என்று சிங்கர் முடிவெடுத்தால், அந்த ஆள் அவைலபிளாக இருக்கமாட்டார். சரி நாம் முதலில் பார்த்த ஆளையே நியமிப்போம் என்று அங்கு சென்றால் அவரும் பிஸியாகிவிடுவார். என்னடா இது என்று சிங்கர் வாழ்க்கையையே வெறுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்படியோ அடித்துப்பிடித்து ஷூட்டிங்கை நடத்தினால் கொடுத்த பட்ஜெட்டைத் தாண்டிப்போக ஆரம்பித்தது. 60 மில்லியனில் முடிக்கப்பட வேண்டிய திரைப்படம் 70 மில்லியனில் வந்து நின்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும் 5 மில்லியன் கொடுத்தா முடிச்சிடலாம் என சிங்கர் சொல்ல, அவரை ஏதோ சொத்தைப்பிரிக்க வந்த பங்காளியைப் போல் முறைத்தது ஃபாக்ஸ். நீ மட்டும்தான் எங்ககிட்ட இருக்க டைரக்டரா? ஸ்பில்பெர்க்க வச்சி மைனாரிட்டி ரிப்போர்ட் எடுத்துட்டு இருக்கோம். அதுக்கு செலவு பண்ணவா? இல்ல உனக்கு செலவு பண்ணவா? என டோஸ் விட வழக்கம்போல டாம் டீசான்டோ தலையிட்டு பேசி வாங்கி்க்கொடுக்க ஷூட்டிங்கை முடித்துவிட்டு ப்ரி-ப்ரொடக்சன் வேலையை ஆரம்பித்தார். சி.ஜி. செய்தபின் பார்த்த சிங்கருக்கு ஏமாற்றம் வர, வேறொருவரை வரவைத்து சி.ஜியை முடித்து வெளியிட்டார். ஃபாக்ஸின் நம்பிக்கை வீண்போகவில்லை. X-MEN ஃப்ரான்சீஸின் முதல் திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததோடு நல்ல பெயரையும் சம்பாதித்தது. அதுவரை காமிக்ஸ்களைத் தழுவி வெளிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் X-MEN தனியாக ஒளிவிட்டது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வளவு பெரிதாக விக்கிபீடியாவை தமிழில் ட்ரான்ஸ்லேட் செய்து நான் கொடுக்கக் காரணம், இத்திரைப்படம் ஊத்திக்கொண்டிருந்தால் இன்று X-MEN ஃப்ரான்சீஸ் தொடர்ந்து இவ்வளவு தூரம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இத்திரைப்படம் கொடுத்த தைரியத்தில் வதவதவென X-MEN சீரிஸை எடுக்க ஆரம்பித்தது ஃபாக்ஸ்; ஆனால் கவனமாக, மிக கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்தது. ஒவ்வொரு திரைப்படத்தின் தரத்தையும் மெருகேற்றிக் கொண்டே வந்தது. அத்துடன் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு கன்டினியூவிட்டியை முன்பே பிளான் செய்துவைத்தது என்றும் கூறலாம். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கப்பட்ட ஃப்ரான்சீஸின் எட்டாவது திரைப்படமான (ஒன்பதுதான் ஆக்சுவல் கணக்கு. இந்த ஆண்டு சாதாரணமாக வெளியாகி அசாதரண வெற்றி பெற்ற டெட்பூலுடன் சேர்த்து ஒன்பது ) அபோகலிப்ஸ், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ட்ரைலரைப் பார்த்தவர்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கும். உலகின் முதல் மியூட்டன்டான அபோகலிப்ஸ், ஏறத்தாழ 5600 வருடங்களுக்குப்பின் மீண்டும் எழுந்து உலகை அழிக்க ஆரம்பிக்கிறது. அபோகலிப்ஸின் படைப்பிரிவில் 4 ஹார்ஸ்மேன் என்றழைக்கப்படும் நான்கு தளபதிகளாக மெக்னிட்டோ, ஸ்டோர்ம், ஸைலாக், ஏஞ்சல். அவர்களை எதிர்க்கும் ப்ரொபசர் சேவியரின் அணியில் ஸ்காட், ஜேன், க்யூக் சில்வர், மிஸ்டிக், நைட் க்ராலர், பீஸ்ட், ஹவாக் ஆகியோர் இடம்பெறுகின்றனர். நிற்க! இவர்களெல்லாம் யார் மற்றும் இந்த படத்துடன் தொடர்புடைய முந்தைய திரைப்படங்கள் எவை என்பதை முன்னமே கூறிவிடுகிறேன். தெரிந்துகொண்டு பார்க்கும்பட்சத்தில் படத்தில் இடம்பெறும் கேரக்டர்களின் பிண்ணனியை அறியலாம். X, X2, X3, FIRSTCLASS, ORIGINS WOLVARINE, DAYS OF FUTURE ஆகிய ஆறு திரைப்படங்களையும் கண்டிப்பாக பார்த்தாலொழிய இத்திரைப்படத்தின் பிண்ணனி குழப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். எடுத்துக்காட்டாக மெக்னிட்டோவிற்கென்று ஒரு சின்ன ப்ளாஷ்பேக் வரும்போது FIRST CLASS பார்க்காதவர்களுக்கு புரிவது கடினம். சார்ல்ஸ் சேவியருக்கும் மெக்னிட்டோவுக்கும் ரேவனுக்கும் இடைப்பட்ட உறவினை விளக்க அத்திரைப்படம் உதவும். மேலும் இப்போதைய மெக்னிட்டோ எதற்காக தலைமறைவான வாழ்க்கை வாழ்கிறார் என்பதை அறிந்துகொள்ள DAYS OF FUTURE வும் உதவும். இடையே கெஸ்ட்டாக வரும் வொல்வரினுக்கும் ஸ்ட்ரைக்கருக்குமிடைப்பட்ட உறவை உணர DAYS OF FUTURE மற்றும் ORIGINS WOLVARINE தேவைப்படுகிறது. மயுராவிற்கும் சேவியருக்குமான உறவை அறிந்துகொள்ள FIRST CLASS தேவைப்படுகிறது. இப்போது மெயின் கதைக்கு வரலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கி.மு. 3600-ல் எகிப்தில் துவங்குகிறது திரைப்படம். என் சபா நர் என்றழைக்கப்படும் பவர்ஃபுல் மியூட்டன்ட் நமக்கு அறிமுகமாகிறான். அவனுடைய ஸ்பெசணல் என்னவென்றால் அவனால் கூடு விட்டு கூடு பாய முடியும். அவன் யாருடைய உடம்பில் புகுகிறானோ அவர்களுடைய சக்தியைஅப்படியே பெற்றுக்கொள்வான். எகிப்தில் வொல்வரின் போன்று குணமடையும் சக்தியை பெற்ற ஒரு மியூட்டன்ட் உடலில் புகுந்து கொள்ளும்போது அங்கிருக்கும் புரட்சியாளர்களால் நிரந்தர உறக்கமடைகிறார். அவரை மீண்டும் ஒருகட்டத்தில் உறக்கத்திலிருந்து விழித்தெழ வைக்கிறார்கள். விழித்தெழும் அபோகலிப்ஸ் சந்தையில் தன் சக்தியை பயன்படுத்தி திருடும் ஸ்டோர்மைக் கண்டறிந்து தன் அணியில் சேர்த்துக்கொள்கிறார். இவ்வாறே ஏஞ்சல், ஸைலாக் ஆகியோரை சேர்த்துக்கொள்ளும் அபோகலிப்ஸ் மெக்னிட்டோவிடம் வருகிறார். மெக்னிட்டோ DAYS OF FUTURE-ல் ஏற்படுத்திய விபத்துகளால் தலைமறைவாகி சாதாரண இல்லறவாழ்க்கை வாழ்கிறார். ஒருகட்டத்தில் அவர் யாரென்று அறியும் போலிஸ் அவரைச் சுற்றி வளைக்க அந்தநேரத்தில் தன் மனைவியையும் மகளையும் இழந்துவிடுகிறார். மீண்டும் மனிதர்களின் மீது பயங்கர கோவத்தில் இருக்கும் மெ்கனிட்டோ அபோகலிப்ஸ் உடன் சேர்ந்துகொள்கிறார். அபோகலிப்ஸ் தன்னுடைய அல்டிமேட் சக்தியைப் பயன்படுத்தி தன் அணியில் உள்ள நால்வரின் பவரையும் அதிகரிக்க வைக்கிறார். இதை எல்லாம் மிகமிக லேட்டாக ரேவன் மூலமும் மயுரா மூலமும் அறியும் சேவியர் அபோகலிப்ஸைத்தடுக்க முயற்சிக்கும்போது சேவியரைக் கடத்துகிறான் அபோகலிப்ஸ். சேவியரின் உடலில் கூடு விட்டு கூடு பாய முயற்சிக்கிறான் அபோகலிப்ஸ். இதை எல்லாம் மீதி உள்ள மியூட்டன்ட்கள் எப்படித் தடுத்தார்கள் என்பதே மீதிக்கதை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலில் அபோகலிப்ஸைப் பற்றி அறியவேண்டுமெனில் அவன் ஒரு இம்மோர்ட்டல். அதாவது காமிக்ஸ்படி அழிவில்லாதவன். இன்னும் சொல்லப்போனால் க்ளாஸ் மியூட்டன்ட் வகையைச் சார்ந்தவன். அவனால் அனைத்தையும் கன்ட்ரோல் செய்யமுடியும். நியாயப்படி அவனுக்கு டெலிபதி சக்தி உள்ளதாக காமிக்ஸ் சொல்கிறது. ஆனால் திரைப்படத்தில் டெலிபதி பவரை அடைய அவன் சேவியரை அணுகவேண்டியாக காட்டப்பட்டுள்ளது. அவன் ஒரு கடவுள் என விளம்பரப்படுத்தப்பட்டு கடைசியில் அவனுக்கும் அழிவு இருக்கிறது என்று காட்டியது அந்தர்பல்டி வகையறா. அவனால் டெலிபதியை எதிர்க்கமட்டுமே முடியும் என்று திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. காமிக்ஸில் வரும் வெறித்தனமான அபோகலிப்ஸைக் காட்டிலும் திரைப்படத்தில் காட்டப்படும் அபோகலிப்ஸ் படு வீக்கானவன். இதற்கு முந்தைய பாகமான DAYS OF FUTURE-ல் வரும் சென்டினல்ஸ் ரோபாட்டை பார்க்கும்போது நமக்கே ஆச்சரியாகும். படுபயங்கர வில்லனாக முன்னிறுத்தப்பட்ட அபோகலிப்ஸ் சென்டினல்சை விட வீக்காக உருவாக்கப்பட்டிருக்கிறான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மெக்னிட்டோ – எப்பேர்பட்ட வில்லன். எக்ஸ் மேன் ப்ரான்சீஸில் வொல்வரினை விட மெக்னிட்டோவுக்கு ரசிகர்கள் அதிகம். அப்படிப்பட்ட வில்லனும் அபகலிப்ஸுடன் இணைந்து செய்வது படுசப்பை. இதைவிட அதிபயங்கரமான மெக்னிட்டோவை நாம் பார்த்துள்ளோம். ஏதோ செய்யப்போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நமக்கு மிஞ்சுவது ஏமாற்றமே. உலகின் அணுஆயுதங்களையெல்லாம் அபோகலிப்ஸ் ஏவத்தொடங்கும்போது ஏற்படும் ஆச்சரியம் அவை விண்ணில் வீணாக வெடிக்கும்போது அப்படியே புஸ்ஸாகிறது. கடைசியில் எல்லா மியூட்டன்ட்களும் ஒன்றிணைந்து அபோகலிப்ஸை அழிக்க முயற்சிக்கும்போது ஜேன் மட்டுமே அவனை அழிக்கமுடியும் என்று சேவியர் நம்பியது சரியான முடிவெனினும் நம்மால்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வொல்வரின் ஒரே காட்சியில் வருகிறான். கடைசி பாகத்தில் ஸ்ட்ரைக்கரால் பிடிக்கப்பட்ட வொல்வரின் வரும் காட்சியில் விசில் பறக்கிறது.</div>
<div style="text-align: justify;">
பொதுவாக X-MEN சீரிஸ்களைப் பொறுத்த வரைக்கும் திரைக்கதை செம பலமாக விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தின் முதல் 1 மணிநேரம் வரை படுதொய்வாக செல்வது பெரும்பலவீனம். கடைசி 20 நிமிடமும் இடையில் குயிக் சில்வரின் காட்சியையும் தவிர சொல்லிக்கொள்ளும்படியான காட்சிகளும் இல்லை. இத்தனைக்கும் DAYS OF FUTURE-கு திரைக்கதை எழுதிய அதே சைமன் கின்பெர்க் தான் இப்படத்திற்கும் திரைக்கதை. எப்படி இதில் கோட்டைவிட்டார் என்றே தெரியவில்லை. முதல் படத்தில் முட்டிமோதி கஷ்டபட்டு எடுத்த ப்ரைன் சிங்கர் இந்த திரைப்படத்தில் ஏன் இந்த சொதப்பு சொதப்பினார் எனத் தெரியவில்லை. இத்தனைக்கும் X, X2, FIRST CLASS (CO - WRITTER), DAYS OF FUTURE என ப்ரைன் சிங்கரால் படைக்கப்பட்ட அத்தனை திரைப்படங்களும் அட்டகாசமானவை. ஆனால், இத்திரைப்படம் X-MEN தொடர்களில் விழுந்த ஒரு ப்ளாக் மார்க் என்றே கூறலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
X-MEN ரசிகர்களுக்கு வேறு வழியில்லை. நாம் ரசிக்கும்படியான சில காட்சிகளுக்காக பார்க்கலாம். X-MEN பார்க்காதவர்கள், பெரிதும் அபிமானமில்லாதவர்கள் பார்த்தால் X-SERIES களின் மீதான எதிர்மறை எண்ணம் உருவாக வாய்ப்புள்ளது. வெறும் கிராபிக்ஸ் மற்றும் 3D பிரியர்கள் சலுப்புக்கு பார்க்கலாம். X-MEN ப்ரான்சீஸைப் பொறுத்தவரை 3டி எபெக்ட் எப்போதும் பட்டாசாக இருக்கும் என்பதை இத்திரைப்படமும் நிருபித்துள்ளது. டெக்னிக்கலாக ஜெயித்து மெயின் மேட்டரில் ஊற்றிக்கொண்டது அபோகலிப்ஸ். இதுவரை வந்த X-சீரிஸ்களில் நான் மொக்கையென நினைப்பது THE WOLVARIE (2013) மட்டுமே. ஆனால் அந்த திரைப்படமும் நீட்டாக போகும். அதில் ஒரு அட்வெஞ்சர் ஃபில் இருக்கும். ஆனால் இப்போது அபகலிப்ஸ் தான் X-MEN சீரிஸில் படுதொம்மையான படமாக கருதுகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-89269819585489271312016-05-06T15:28:00.000+05:302016-05-06T15:28:58.933+05:3024 - சினிமா விமர்சனம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0-inL4k806jJlIEkzaJU5WDfaRh7-nNDF1Gp4L502HGlZ6Mxsv2Q9QEQqe9cCYsuCm1Jtivj_JaOdrmzxQq7O-VyUPkmw38n99Ti9O4uxnVBxhDeL-Se5d1gSkjuA-v7hG8LUY4X5jHM/s1600/surya-24-movie-new-photos-600x450.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0-inL4k806jJlIEkzaJU5WDfaRh7-nNDF1Gp4L502HGlZ6Mxsv2Q9QEQqe9cCYsuCm1Jtivj_JaOdrmzxQq7O-VyUPkmw38n99Ti9O4uxnVBxhDeL-Se5d1gSkjuA-v7hG8LUY4X5jHM/s640/surya-24-movie-new-photos-600x450.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வழக்கமாக நான் திரைப்படம் செல்வதென்றால் குறைந்தபட்சம் ஒரு ஆறுபேரையாவது உடன் அழைத்துச் செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் என்னுடன் வருபவர்களும் நான் செலக்ட் செய்யும் திரைப்படத்திற்கு ஓ.கே சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த வாரம் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொண்டேன். ஒருபுறம் 24, இன்னொருபுறம் CAPTAIN AMERICA-CIVIL WAR. இரண்டுமே நான் மிகவும் எதிர்பார்த்திருந்த திரைப்படங்கள். அவெஞ்சர்ஸ் சீரீஸ்களில் நான் ரசித்துப்பார்க்கும் திரைப்படமே கேப்டன் அமெரிக்கா தான். வின்டர் சோல்ஜருக்கு அடுத்து மீண்டும் கேப்டனைப் பார்க்க 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதேபோல் என்று 13B பார்த்தேனோ அன்றிலிருந்து விக்ரம் குமாரின் ஒரு திரைப்படத்தையும் விடாமல் பார்த்துவருகிறேன். இப்படி ஒரு இக்கட்டான சிக்கலில் நான் 24-ஐ நண்பர்களுக்கு பரிந்துரைக்க, என்னுடன் ஒருவர் மட்டும் கைகோர்க்க, ஏறத்தாழ 5 பேர் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்யும் நிலையில் இருந்தனர். படம் நன்றாக இல்லையென்றால் டிக்கெட் காசை நான் கொடுத்துவிடுகிறேன் என்று கூறி இழுத்துச் சென்றேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் திரைப்படம் ஆரம்பித்து சரியாக 5-வது நிமிடத்தில் வாயைப் பொழந்து பார்க்க ஆரம்பித்தவர்கள்தான். என்ன படம் முடிஞ்சிடுச்சா எனும் அதிர்ச்சியில் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள். டைம்மெஷின் கான்செப்ட் ஹாலிவுட்டுக்கு புதிதல்ல. ஆனால் தமிழுக்கு ? நேற்று இன்று நாளை தவிர குறிப்பிடும்படியான டைம்மெஷின் திரைப்படம் கிடையாது. நேற்று இன்று நாளை திரைக்கதையில் காட்டிய பிரம்மாண்டத்தை விஷுவலில் காட்டமுடியாத பட்ஜெட்டில் உருவானது. ஆனால் 24 நல்ல பட்ஜெட்டில் உருவாகி உள்ளது; நல்ல திரைக்கதையுடனும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1990-ல் சேதுராமன் எனும் விஞ்ஞானி ஒரு டைம் ட்ராவல் வாட்சைக் கண்டுபிடிக்கும் நாளில் அவரின் அண்ணன் ஆத்ரியா (டியா? காபியானு கேக்காதிங்க) தன் அடியாட்களுடன் வந்து சேதுராமனின் மனைவியைக் கொன்றுவிட்டு வாட்சை அபகரிக்க நினைக்கிறார். அந்நேரம் வாட்ச் மற்றும் குழந்தையை எடுத்துக்கொண்டு தப்பிக்கும் சேதுராமன் ஒரு ரயிலில் ஏறி தன் குழந்தையை ஒரு இளம்பெண்ணிடம் கொடுத்துவிட்டு ஆத்ரேயனிடம் மாட்டிக்கொள்கிறார். ஆத்ரேயன் சேதுராமனைக் கொன்றுவிட்டு குழந்தையைக் கொல்ல நினைக்கும்போது பாம் மாதிரியான ஒரு கேட்ஜெட்டில் கௌன்ட் டவுன் ஓட, பாம் வெடிக்கப்போகிறது என்றெண்ணி ரயிலில் இருந்து ஒரு பாலத்தின்கீழ் குதிக்கிறான். அத்தோடு அவன் கோமாவிற்கு சென்றுவிடுகிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
26-ஆண்டுகளுக்குப் பின் வாட்ச் மெக்கானிக்காக இருக்கும் மணி, தன் தாய் சத்யாவுடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். அவர்தான் சேதுராமனின் மகன் என்று தனியாக சொல்லவேண்டியதில்லை. வாட்சை ஒரு குட்டிப் பெட்டியில் வைத்து அதற்கென சாவியும் செய்திருப்பார் சேதுராமன். வாட்ச் இருக்கும் பெட்டி மகன் மணியிடமும், சாவி கோமாவில் இருக்கும் ஆத்ரேயனிடமும் இருக்கிறது. ஆத்ரேயா கோமாவில் இருந்து எழ, இன்னொருபுறம் சாவி மணியிடம் வந்தடைகிறது. எதேச்சையாக சாவியை உபயோகித்து வாட்சை ஆக்டிவேட் செய்கிறான் மணி. வாட்சின் மூலம் டைம் ஃப்ரீஸ் செய்வதுடன் முன்னும் பின்னும் சென்றுவரலாம் என மணி கண்டறிகிறான். இன்னொருபுறம் ஆத்ரேயனுக்கோ வீணான 26 வருடங்களை சரிசெய்ய, தான் குதித்த அந்த நாளுக்கு சென்றுவர வாட்ச் தேவைப்பட, அதைத் தீவிரமாக கண்டறிய முனைகிறான். ஒரு கட்டத்தில் ஆத்ரேயன் மணியைக் கண்டுபிடித்து கொன்றுவிடுகிறார். இன்டர்வெல். இதன்பின் என்ன ஆனது என்பதை நீங்களே தியேட்டரில் பார்த்து எக்சைட் ஆகுங்கள். அப்படியே இடையிடையே சமந்தா காதல்காட்சிகளும் நடக்கிறது என்பதனையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2010-ல் சிங்கம் திரைப்படத்திற்குப்பின் சூர்யாவால் ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட்டைக் கொடுக்கமுடியவில்லை என்பதே உண்மை. சிங்கம் 2 ஹிட் என்றாலும் பேர் சொல்லும் படம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. இப்போது மீண்டும் அவருக்கு அடித்திருக்கிறது அந்த ப்ளாக்பஸ்டர். 6 வருடக் காத்திருப்புக்கு சரியான பலன் இந்த 24. அதனால்தான் என்னவோ தன் தயாரிப்பு நிறுவனமான 2D-யின் மூலம் தானே தயாரித்துள்ளார். ஏறத்தாழ 80 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம். அதேபோல் நடிப்பிலும் சூர்யா மூன்றுவிதமான தோற்றங்களை மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளார். ஆனால் விளம்பரப்படுத்தியது போல் பெரிய வில்லத்தனம் இல்லை எனினும் ப்ரில்லியன்டான வில்லன் ஆத்ரேயனாக கலக்கியிரு்ககிறார். வீல்சேரில் அமர்ந்துகொண்டே மிரட்டலாக பார்க்கும்போது நம்மையே பயமுறுத்துகிறார். மித்ரன் என்று சூர்யா அஜயைக் கூப்பிடும்போதெல்லாம் ஏதோ பேய் படம் பார்த்த எஃபெக்ட் வருகிறது. மணியாக வரும் சூர்யா , ‘இங்க எல்லாமே இருக்கு. நம்ம கட, நம்பி வாங்குங்க’ என்று சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்ததை அப்படியே செய்திருக்கிறார். ஒருவேளை எல்லா விளம்பரத்திலும் நடித்ததால் எனக்கு அப்படி தோன்றியதா எனத் தெரியவில்லை. அந்த விளம்பர மேனரிசத்தை சூர்யா மாற்றியே ஆகவேண்டும். சயின்டிஸ் சேதுராமனாகவும் சூர்யா நன்கு செய்துள்ளார். அந்த கேரக்டரைசேசன் க்ரிஷ் திரைப்படத்தில் தந்தை ஹிருத்திக்கை நியாபகப்படுத்துகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மணியின் காதலியாக வரும் சமந்தாவை இவ்வளவு அழகாக நான் பார்த்ததே கிடையாது. ஏதோ மெழுகு பொம்மையைப் போல் இருக்கிறார். இந்த படத்தில் சமந்தாவைக் கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும். அதேபோல் நடிக்கவும் ஆங்காங்கே வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. நித்யாமேனனுக்கு பெரிதாக வேலையில்லை. சரண்யா பொண்வண்ணன் இரண்டாம் பாதியில் சூர்யாவிடம் சென்டிமென்டாக பேசும் காட்சியில் கலக்கியிருக்கிறார். சத்யன் கலகலக்க வைக்கவில்லை எனினும் நேரத்தைக் கடத்த உபயோகப்பட்டிருக்கிறார். மற்றகேரக்டர்களில் தெலுங்கு நடிகர் அஜய்யின் கதாபாத்திரவடிவமைப்பு அட்டகாசம். மற்ற கேரக்டர்கள் கொடுக்கப்பட்ட பாத்திரங்களைச் சரியாகச் செய்துள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தின் பெரும்பலம் திரைக்கதையும் விஷுவல்களும் பிண்ணனி இசையும் என்றால் பலவீனம் திராபையான வசனங்கள். சூர்யா குறைந்தபட்சம் 24 முறை I AM A WATCHMECHANIC மற்றும் ஜெனரலா எனக்கு ஜெனரல்நாலேஜ் அதிகம் என்று கூறியிருப்பார். ஒருகட்டத்தில் தாங்கவேமுடியாத கடுப்பு ஏறிவிட்டது. வேண்டுமென்ற கடுப்பேத்த உருவாக்கப்பட்ட வசனம் போலிருந்தது. அதேபோல் ஃப்ரீஸ் செய்தபின் காட்டப்படும் காட்சிகள் X-MEN DAYS OF FUTURE PAST-ல் வரும் மேக்ஸிமாஃப் மியூட்டன்டை நியாபகப்படுத்துகிறது. இருந்தாலும் வேறுவழியில்லை. விக்ரம் குமார் இத்திரைப்படத்தின் திரைக்கதை எழுதிய ஆண்டு 2009 என்பதால் இதை இன்ஸபிரேசன் எனக்கொள்ளலாம். மற்றபடி படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளின் தரத்தை இதுவரை வெளிவந்த எந்தவொரு இந்தியத் திரைப்படங்களோடும் ஒப்பிடமுடியாதவண்ணம் அட்டகாசமாக உருவாக்கியிருக்கிறார்கள். குவாலிட்டியில் அப்படியே ஹாலிவுட் மேக்கிங்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாடல்களில் காட்டப்படும் ஷாட்கள், படத்தின் விஷுவல் அவுட்புட் என தெறிக்கவிட்டிருக்கிறார் விக்ரம் குமார். இதை சாத்தியப்படுத்திய ஒளிப்பதிவாளர் திருவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதேபோல் ஏ.ஆர். ரஹமான் ஒரு இசைச்சாம்ராஜ்யமே நடத்தியுள்ளார். பிண்ணனி இசை படுபயங்கரமாக போட்டிருக்கிறார். படத்தை ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும் நகர்த்திச்செல்லும் அழகே அட்டகாசம். 24 திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் எனக்குப் பிடிக்குமென்றாலும் புன்னகையே பாடல் என்னுடைய பேவரைட். ஆனால் அது படத்தில் வரவில்லை. மற்ற பாடல்கள் எடுக்கப்பட்டவிதம் அருமை எனினும் மெய்நிகரா புன்னகையே பாடல் ஏதோ ஒரு இன்கம்ப்ளிட் ஃபீலையே கொடுத்தது. எடிட்டர் ப்ரவின் புடி தெலுங்கில் செம பேமஸ். அவர் மிகச்சரியாக எடிட்டிங்கைச் செய்துள்ளார்ர எனலாம். எந்த காட்சியும் நீக்கவேண்டியதே இல்லை; சொல்லப்போனால் இன்னும் காட்சிகளைச் சேர்த்திருக்கலாமோ என்ற எண்ணமே வந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்ரம் குமார் ஆரம்பத்தில் இத்திரைப்படத்தை நடிகர் விக்ரமிடம் 2009-ல் கொண்டு செல்ல, விக்ரம் மறுத்துவிட்டார். அதேநேரத்தில் இஷ்க் மற்றும் மனம் ஆகிய திரைப்படங்களில் பிஸியாக வி.குமார் இருக்க, எப்படியோ இந்த கதையை மோப்பம்பிடித்து சூர்யாவே தயாரிக்க ஆரம்பித்தார் என வதந்தி உலவுகிறது. எப்படியிருந்தாலும் படத்தை மிகச்சிறப்பாகவே நமக்குக் கொடுத்துள்ளார். படத்தின் திரைக்கதையைப் பார்க்கும்போது ஏதோ கிறிஸ் நோலன் திரைப்படத்தைத் தமிழில் பார்த்தது போன்றதொரு உணர்வு. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று கொடுக்கும் பழமொழியை அப்படியே ஆடியன்ஸ் ஒன்று நினைக்க டைரக்டர் ஒன்று கொடுக்கிறார் என மாற்றிப் போட்டுக்கொள்ளலாம். தியேட்டரில் நம்மை அடுத்து என்ன சீன் என்று யோசிக்கவே விடாமல் படபடவென நகர்த்திச்செல்கிறது திரைக்கதை. ஒவ்வொரு சீனிலும் வில்லனும் ஹீரோவும் மாற்றி மாற்றி, மாட்டிக்கொள்வாகளோ என்ற பரபரப்புடனே செல்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சயின்ஸ் பிக்சன் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் தவறவிடக்கூடாத திரைப்படம். ஆங்காங்கே ஹாலிவுட் திரைப்படங்களின் தாக்கம் மின்னினாலும் குறையென்று அதை சொல்லிவிடமுடியாது. அட்டகாசமான மேக்கிங், பரபர திரைக்கதை, விசுவல் பிரசன்டேசன், சிஜி செய்யப்பட்ட விதம், பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை போன்றவற்றிற்காக எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்க்கலாம்; சூர்யாவுக்காகவும் தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-61195700286115914812016-04-15T09:14:00.004+05:302016-04-16T14:41:20.622+05:30தெறி – சினிமா விமர்சனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="margin-left: 1em; margin-right: 1em; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWCfLNVKvUZN25awgb8E85E8bIxRpWuqDJ_qfujvCXPjOi-lc4475IY2XhGQZxRInUSozc9JmEzXwd_NwV6j6jfYrmkA_NDnZhkI-oRZAiFisZwNrUCCXC2FYTmK9BI2jepOyGl5f4mX4/s1600/Vijay%25E2%2580%2599s-Theri-Trailer-Review-A-Huge-Sensation.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWCfLNVKvUZN25awgb8E85E8bIxRpWuqDJ_qfujvCXPjOi-lc4475IY2XhGQZxRInUSozc9JmEzXwd_NwV6j6jfYrmkA_NDnZhkI-oRZAiFisZwNrUCCXC2FYTmK9BI2jepOyGl5f4mX4/s640/Vijay%25E2%2580%2599s-Theri-Trailer-Review-A-Huge-Sensation.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இளையதளபதி விஜய் – இன்று தமிழின் மிகமுக்கியமான 4 நடிகர்களில் ஒருவர். தமிழகம்தாண்டி கேரளாவிலும் சூப்பர்ஸ்டாராக ஒளிருபவர். தேமே என்று ஒரே ரோட்டில் பயணித்துக்கொண்டிருந்த விஜயை, சிறிதளவு நடிப்பிலும் கதையிலும் மாற்றம் செய்ய முயற்சித்த திரைப்படம் என்றால் அது காவலன். அதற்குமுன்வரை காது கிர்ரென்று ஆகும்வரை மூச்சுவிடாமல் பேசிக்கொண்டிருந்த <a href="http://vimarsanaulagam.blogspot.in/2016/04/blog-post.html" target="_blank">விஜய் </a>எனும் மாஸ் ஹீரோவை, நடிகர் விஜயாக அடையாளப்படுத்திய திரைப்படம் காவலன். அதன்பின் அவரது சினிமா கேரியரில் அவர் சூஸ் செய்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அவருக்குள் இருக்கும் நடிகரையும், ரசிகர்கள் உண்மையாகவே எதிர்பார்த்த விஜயையும் திரையில் காட்டிக்கொண்டே வந்தது எனலாம். துப்பாக்கி, கத்தி, வேலாயுதம், நண்பண் என ஒவ்வொரு திரைப்படமும் விஜயை ஒவ்வொரு தளத்திற்கு கொண்டு சென்றது. சென்ற ஆண்டு வெளியான புலி சிறிது அதிருப்தியான திரைப்படம் எனினும் , ஒரு மாஸ் ஹீரோவான விஜய் குழந்தைகளுக்காக ஒரு படம் செய்த தில் அவ்வளவு எளிதாக மற்ற ஹீரோக்களுக்கு வராது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆம்; நான் ஒரு தீவிர அஜித் ரசிகன்தான்; எனினும் விஜய் ஹேட்டர் கிடையாது. விஜயின் இடைப்பட்ட காலத்திரைப்படங்கள் மற்றும் அவரின் நடவடிக்கைகள் அவர் பெயரை ஒட்டுமொத்தமாக டேமேஜ் செய்தது. அந்த சமயங்களில் விஜயை ஓட்ட ஆரம்பித்தவர்கள் இன்றுவரை அவர் எது செய்தாலும் ஓட்டுவதையே குறிக்கோளாக கொண்டு திரிகின்றனர். என்ன காரணம் என்றும் தெரியவில்லை; ஏதோ எஸ்.ஏ.சி என்பவரால் மட்டும்தான் விஜய் இந்தளவிற்கு வந்தார் என்பதையெல்லாம் துளிகூட ஏற்றுக்கொள்ளமுடியாது. அப்படிப்பார்த்தால் தெலுங்கு சினிமாவில் சினிமா பிண்ணனியில்லாமல் கடினப்பட்டு வந்த ஹீரோக்களைக் காட்டுவதே அரிது. தமிழில்கூட சிம்பு, ரவி, சூர்யா, கார்த்தி, தனுஷ் என பெரும் பட்டாளமே வாரிசு சினிமாவினால் மட்டுமே இத்துறைக்கு வந்தது. அதேபோல் ரீமேக் விஜய் என்றொரு பெரிய அவப்பெயர் அவரைச்சுற்றி வலம்வருகிறது. உண்மையில் ரீமேக் கிங் என்றால் சல்மான்கானைத்தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு மொழியிலும் ஹிட் அடிக்கும் திரைப்படங்கள் மற்ற மொழியில் ரீமேக் ஆவது சகஜம். அந்த மொழியில் இருப்பதை மாற்றி எடுக்கவேண்டும், அப்படியே காபி அடிக்கக்கூடாது என்று சொல்வதெல்லாம் தவறு; அது டைரக்டரின் விருப்பம். படம் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை விட்டுவிட்டு அது காபி, இது காபி என்று ஒரு ரீமேக் திரைப்படத்தில் குறை சொல்ல ஒன்றுமே இல்லை. இதுமாதிரி ஆயிரம் குறைகள் சொன்னாலும் விஜய்யிடம் ஒரு தனி ஸ்க்ரீன் பிரசன்ஸ் இருக்கிறது என்பதுதான் உண்மை. இன்னும் சொல்லப்போனால் அஜித்திற்கு இருக்கும் டைஹார்ட் ஃபேன் பேஸ் விஜய்யிடம் கிடையாது; ஆனால் அதிக ரசிகர்கள் விஜய்க்குத் தான் இருக்கிறார்கள். இது சும்மா உட்டாலங்கடிக்காக சொல்லவில்லை; என்னதான் சமூக வலைத்தளங்களில் விஜய்யின் திரைப்படங்களை ஓட்டினாலும், கலெக்சன் ரீதியாக எப்போதும் விஜயக்கு ஒரு தனியிடம் உள்ளது. இதுவரை வந்த டாப் டென் தமிழ் திரைப்படங்களின் வசூலில் இரண்டு விஜய் திரைப்படங்கள் உள்ளது என்றபோதே விஜய்யின் வெற்றி தெரிந்துவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாபா திரைப்படத்தில் சூப்பர்ஸ்டாரிடம் தலைவர் கவுண்டர் ஒரு டயலாக் சொல்லுவார். பஞ்ச் பேசப்போகும் சூப்பர்ஸ்டாரைத் தடுத்து, ‘பாபா! பஞ்ச் பேசப்போரியா? இன்னைக்கு தமிழ்நாட்டுல நேத்து வந்த பசங்கள்லாம் பஞ்ச் பேசிட்டுத் திரியிராங்க’ என்று. உண்மையில் விஜய்யும், அஜித்தும் சிறிது கேப் விட்ட நேரத்தில் எக்கச்சக்கமான ஹீரோக்கள் தமிழ்சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்கள். கடந்த மூன்று, நான்காண்டுகளாகத்தான் இருவரும் தலையெடுத்து இருக்கிறார்கள். இக்காலக்கட்டம் இருவருக்குமே ஜாக்பெட் என்றே சொல்லலாம். விஜய்யின் ஒவ்வொரு திரைப்படத்தின் வசூலையும் அஜித்தின் திரைப்படமும், அஜித்தின் ஒவ்வொரு திரைப்படத்தின் வசூலையும் விஜய்யின் திரைப்படமும் மட்டும்தான் முறியடிக்கமுடியும் என்பதை ப்ரூவ் செய்யும்விதமாக இருவரும் போட்டிப்பொட்டுக்கொண்டு நல்ல திரைப்படங்களை ரசிகர்களுக்கு அளித்துவருகிறார்கள். புலியின் ரெக்கார்டை வேதாளம் அடித்ததுபோல் வேதாளத்தின் ரெக்கார்டை இந்த தெறி அடிக்குமா என்பதனைப் பார்க்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சத்ரியன் + பாட்ஷா + டெம்பர் + என்னை அறிந்தால் = இதுதாங்க தெறி. கேரளாவில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துவரும் பேக்கரிக்கடைக்காரரான ஜோசப் குருவிலா தன் மகள் நிவேதிதாவுடன் ஜாலியாக வாழ்கிறார். நிவேதிதாவின் ஸ்கூல்மிஸ்ஸான எமி ஜாக்சன், ஒருநாள் நிவேதிதாவைப் பள்ளிக்குக்கூட்டி செல்லும் வழியில் சில ரவுடிகளால் ஆக்சிடன்ட் ஆக, போலிசில் கேஸ் கொடுக்கிறார். போலிஸ் என்றதும் பதட்டமாகும் ஜோசப், எமியைத் திட்டிவிட்டு தயங்கித்தயங்கி ஸ்டேசன் செல்கிறார். அங்கு ஒரு போலிஸ்காரர் ஜோசப்பைப் பார்த்து விஜய்குமார் என்று அழைக்கிறார். இதனால் சந்தேகமாகும் எமி, ஜோசப் யாரென்று அறிய கூகுளில் பார்க்கிறார்; பார்த்ததும் ஷாக் ஆகி ஜோசப்பின் வீட்டிற்கு செல்கிறார். அதேநேரத்தில் ஜோசப் வீட்டில் மலையாள ரவுடிகள் ஜோசப்பைப் போட்டு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்நேரம் ஒருவன் குழந்தையைப் போட்டுத்தள்ளலாம் எனச்செல்ல விஷ்வரூபமெடுக்கிறார் ஜோசப். ஒவ்வொருத்தனையும் அடி பின்னிஎடுக்க, அதை எமி பார்க்க உடனே ப்ளாஷ்பேக். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விஜய்குமார் எனும் நேர்மையான போலிஸ் அதிகாரி ஒரு ரேப்கேஸில் மந்திரி வாணமாமலை ( இயக்குநர் மகேந்திரன்) மகனைக் கொடூரமாக கொன்றுவிடுகிறார். வானமாமலை, சாவைவிடக் கொடுமையான தண்டனையை உனக்குத் தருவேன் எனக்கூறிவிட்டு அதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் விஜய், மருத்துவர் சமந்தாவைச் சந்திக்க, காதல் டெவலப் ஆகி கல்யாணம் முடிந்து குழந்தை பிறந்து சந்தோசமாக வாழ்கின்றனர். திடீரென ஒருநாள் பட்டென்று சமந்தாவையும் விஜயின் தாய் ராதிகாவையும் விஜய்யின் கண்முன்னே போட்டுத்தள்ளிவிட்டு, வீட்டு கேஸை ஆன் செய்துவிட்டு கிளம்புகிறார் வில்லன். சமந்தாவின் கடைசி ஆசைப்படி குழந்தையை காப்பாற்றி யாருக்கும் தெரியாமல் மறைந்து கேரளாவில் வாழ்கிறார். இப்போது வில்லனுக்கும் உண்மை தெரியவருகிறது. மீண்டும் கொலைமுயற்சி; இதையெல்லாம் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் தெறி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த அட்லி இருக்காரே! அவரைப்போல் நூதனமாக திருடும் ஆசாமியை நான் பார்த்ததே இல்லை. மௌனராகத்தை உல்டா செய்து ராஜாராணியாக்கியவர் இதில் என்னென்ன திரைப்படத்தையெல்லாம் திருடி ரெடி பண்ணமுடியுமோ அத்தனையும் செவ்வனே செய்துள்ளார். முதல் அரைமணிநேரம் பாட்ஷா மற்றும் என்னை அறிந்தால் அடுத்த அரைமணிநேரம் டெம்பர். இடையில் காதல் காட்சிகள் எல்லா புதுவிசயம். அதேபோல் இரண்டாம்பாதியில் சத்ரியன்; கிளைமேக்ஸில் வரும் நாற்காலி சண்டைக்காட்சி ஊசரவள்ளி; சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சையெடுத்து சம்பாதிக்கும் ஆட்களை அடிப்பது விக்ரமார்க்குடுவில் விக்ரம் ராத்ததோரின் இன்ட்ரே சீன். ஆனால் இவ்வளவு பிரச்சனைகளுக்குமிடையில் திரைப்படம் எனக்கு பிடிக்கக்காரணம் விஜய். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையில் விஜய்யிடம் இவ்வளவு மேனரிசங்கள் உள்ளதா என்று ஆச்சரியப்படவைத்த திரைப்படம். ஜாலியான தகப்பனாக, மகனாக, காதலனாக, கணவனாக, தெறி போலிசாக என ஒவ்வொரு கேரக்டரையும் உள்வாங்கி செய்துள்ளார். சீன் போடாத, சீனான போலிசாக விஜய் வரும் காட்சிகள் எல்லாம் விசில் பறக்கிறது. டயலாக் டெலிவரி, பாடு மாடுலேசன், கெட்டப் என ஒவ்வொன்றிலும் விஜயை முழுமையாக காட்டிய திரைப்படம் இதுதான். உண்மையில் விஜய் ஹேட்டர்சைக் கூட விஜய் ஈர்த்துவிடும் அளவிற்கு செய்துள்ளார். சமந்தாவின் குடும்பத்தை முதலில் சந்திக்கும்போது அவருடைய ஆக்டிங் மற்றும் அந்த வசனங்கள் எல்லாம் சூப்பர் என்றால் அதைத்தொடர்ந்து வந்த சண்டைக்காட்சியை முடித்துவிட்டு நேராக வில்லனிடம் சென்று ‘எனக்கு உன்னவிட பெரிய பெரிய வில்லனுங்கள எல்லாம் சமாளிக்கனும். நான் வரேன்’ என்று பேசிவிட்டு வரும்போது கிளாஸ். சமந்தா, சாவதற்குமுன் இருவரும் பேசிக்கொள்ளும் காட்சி, கிளைமேக்ஸில் வில்லனுடைய ஆட்களையெல்லாம் அடித்து, துவம்சம் செய்துவிட்டு அசால்டாக பேசும் காட்சி, டூர் போக இருக்கும் தன் மகளிடம் அட்வைஸ் செய்யும் காட்சி என விஜய்க்கென்றே பார்த்து பார்த்து எடுத்திருக்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விஜய்யைத்தாண்டி வந்தால் மீனாவின் குழந்தை. அக்குழந்தை வரும் காட்சிகளும் அதுபேசும் வசனங்களும் அட்டகாசம். விஜய் ஒருபக்கம் அட்வைஸ் செய்துகொண்டிருக்கும்போது ‘நானும் வரட்டா பேபி’ என்று விஜய் கேட்க ‘டூர் என்னமாதிரி பேபிங்களுக்குத் தான் பேபி; நான் உன்ன பேபினு கூப்டரதுக்காகலாம் உன்ன விடமாட்டங்க பேபி’ என்று அது சொல்லும்போதெல்லாம் அழகாய் இருக்கும். மலையாள ரவுடிகள் பிரச்சனை செய்யும்போது ‘டேய் நில்லுங்கடா. சாரி சொல்லுங்கடா’ என மிரட்டும் காட்சி கிளாஸ். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மெயின் வில்லனாக மகேந்திரன்; விஜய்யின் குடும்பத்தைக்கொல்லும் காட்சியிலும், கிளைமேக்ஸ் காட்சியிலும் தன் நடிப்புத்திறமையைக் காட்டுகிறார். எல்லாரையும் அடித்துநொறுக்கும் விஜயைப்பார்த்து வெல் குட் என்று அவர்சொல்லிவிட்டு காட்டும் ரியாக்சன் அபரிதம். மொட்டை ராஜேந்திரன், எமி ஜாக்சனெல்லாம் படத்தின் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் என நினைக்கிறேன். இருவரும் படம் முழுக்க வந்தாலும் ஒருவேலையும் இல்லை. சமந்தாவிற்கு என்ன தான் நடிப்பு, அழகு இருந்தாலும் அவருடைய நீளமான வாய் அவர் அழகைக் கெடுத்துவிடுகிறது. ராதிகா வழக்கம்போல தான் ஒருமுதிர்ந்த வாணி-ராணி என்பதை அழகாய் நடித்து நிருபித்துள்ளார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் கலர்ஃபுல்லாகத்தான் எடுத்திருக்கிறார். ஆனால் சில காட்சிகள் அவுட் ஆஃப் போகஸ். எடிட்டர் ரூபன் முடிந்தவரை கத்தரித்து இருக்கிறார். ஆனால் ராங்கி பாடலை எதுக்கு படத்திலிருந்து எடுத்தார்கள் எனத்தெரியவில்லை. வெல் இசையமைப்பாளர் ஜ.வி.பிரகாஷ்தான் சமிபத்தில் எனக்குத்தெரிந்து எல்லா திரைப்படங்களிலும் ஹிட்டடித்துக்கொண்டிருக்கும் நபர். திரிஷா இல்லைனா நயன்தாரா, ஈட்டி, கொம்பன், காக்கா முட்டை என மியூசிக்கல் ஹிட் அடித்தவரின் 50-வது படம். பாடல்கள் வ்வந்த புதிதிலே எனக்கு டீனா,மீனா ஈக்கா பாடலும் ராங்கி மற்றும் ஜித்து ஜில்லாடி ஆகிய பாடல்கள் பிடித்திருந்தது. ஆனால் செல்லக்குட்டி எனும் விஜய் பாடிய பாடல்தான் சமீபத்தில் அவர் பாடியதிலேயே மொக்கையான பாடல். பேசாமல் டீனா மீனா பாடலை விஜய் பாடியிருக்கலாம். பிண்ணனி இசை அட்டகாசம். ஆனால் பில்டிங் சண்டைக்காட்சியில் மட்டும் கொஞ்சம் சொதப்பல். தெறி தீம் மியூசிக்கை சரியாக உபயோகப்படுத்தவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தின் பலங்களென பார்த்தால் விஜய், மீனாவின் மகள், மகேந்திரன், வசனம், பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, கேரக்டர் நேர்த்தி ஆகியவற்றை சொல்லலாம். படத்தின் பலவீனம் என்று பார்த்தால் இன்கம்ப்ளீட் ஃபீல், அட்லி கொடுத்த ஓவர்பில்டப், பல திரைப்படங்களில் இருந்து சுட்டு எடுத்து பட்டி, டிங்கரிங் பார்த்த திரைக்கதை ஆகியவற்றைக் கூறலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மொத்தத்தில் இது விஜய் திரைப்படம்; அட்லி திரைப்படம் என்றெல்லாம் சொல்லமுடியாது. இன்னும் சொல்லமப்போனால் அட்லி இந்த திரைப்படத்தில் சொதப்பியிருகிறார்; ஆனால் விஜய் சொதப்பவில்லை. விஜய்க்காக கண்டிப்பாக பார்க்கலாம். </div>
</div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-72881915028651453652016-03-26T14:48:00.000+05:302016-03-26T14:50:36.608+05:30BATMAN v SUPERMAN : DAWN OF JUSTICE – சினிமா விமர்சனம்<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDNEV254PUguuBE3uxib5EArUTP_2jtoEwyWa3z0ISMk21HBgyLaIuwv71d6DUpLsJyaJTVQWY4Vxw4alFMvsVVAReGfk2HURSod0ki0S4D11lgzMxP-PoOD4-_PLwOQe7_1kYet4sma0/s1600/batman-v-superman.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDNEV254PUguuBE3uxib5EArUTP_2jtoEwyWa3z0ISMk21HBgyLaIuwv71d6DUpLsJyaJTVQWY4Vxw4alFMvsVVAReGfk2HURSod0ki0S4D11lgzMxP-PoOD4-_PLwOQe7_1kYet4sma0/s640/batman-v-superman.jpg" width="640" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<o:p><br /></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<o:p><br /></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<o:p><br /></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">ஒவ்வொரு
வருடமும் ரிலிசாகும் படங்களில் கண்டிப்பாக இந்த இந்த படங்களுக்கெல்லாம் தியேட்டருக்குச்
சென்றே ஆகவேண்டும் என்ற ஒரு லிஸ்ட் நம்மிடம் இருக்கும்; நானும் அம்மாதிரியே தான் இருந்தேன்.
ஆனால் இந்த ஆண்டு, ஒரே ஒரு திரைப்படம் மட்டும் பார்க்கவே கூடாது என்று ஆண்டின் தொடக்கத்திலேயே
முடிவெடுத்தது இத்திரைப்படத்திற்குத்தான். முக்கிய காரணம் கிறிஸ்டோபர் நோலன். பேட்மேன்
எனும் சூப்பர்ஹீரோவை மக்கள் மத்தியில் ஒரு லெஜன்டாக உருவாக்கிவிட்டு அவர் சென்றார்.
பேட்மேனை ரீபூட் செய்த மாதிரி சூப்பர்மேனையும் ரீபூட் செய்தால் நன்கு கல்லா கட்டிவிடலாம்
என்று நினைத்த வார்னர் பிரதர்ஸ் அதையும் சக்ஸசாக நிறைவேற்றியது. சூப்பர் மேனின் ரீபூட்
வெர்சனனான மேன் ஆஃப் ஸ்டீல் 2013-ல் வெளிவந்து சூப்பர்மேனுக்கு உயிர்கொடுத்தது. சூப்பர்மேனின்
இரண்டாம் பாகத்திற்காக வார்னர் பிரதர்ஸ் செய்த கொடுமை தான் இந்த படம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">முதலில்
இந்த திரைப்படத்தைப் பார்க்கும்முன் அவசியம் பார்க்கவேண்டிய இரண்டு திரைப்படங்களை இங்கு
கூறிவிடுகிறேன். ஸ்னைடர் இயக்கத்தில்
2013-ல் வெளிவந்த மேன் ஆஃப் ஸ்டீல் மற்றும் ஜேய் ஓலிவா இயக்கத்தில் 2001-ல்
வெளிவந்த அனிமேசன் திரைப்படமான த டார்க் நைட் ரிட்டர்ன்சின் இருபாகங்கள். இவ்விரண்டு
திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வொன்டர் வுமனைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வது நல்லது.
முடிந்தால் ஃப்ராங் மில்லரின் சூப்பர்மேன் & பேட்மேன் காமிக்ஸ் வரிசைகளையும் ஆக்சன்
காமி்க்ஸ்களில் வந்த வில்லன் லெக்ஸ் லூதரின் கதைகளையும் படித்துவிட்டால் இன்னும் சிறப்பு.
என்னடா ஒரு படத்தைப் பார்க்க இவ்வளவு ஹோம்வொர்க் செய்யவேண்டுமா என நீங்கள் கேட்பது
புரிகிறது. இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் இப்படத்தைப் பார்த்தால், திரையரங்கில்
நீங்கள் தூங்கிவழியும் அபாயம் அதிகமாக இருப்பதால் வேறுவழியின்றி நானும் உங்களுக்கு
பரிந்துரைக்க வேண்டியுள்ளது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">இதற்கான
காரணம் வார்னர் பிரதர்ஸின் சரியான திட்டமின்மையே. மார்வெல் தனது அவெஞ்சரை வெளியிடுமுன்
அவெஞ்சர்களில் உள்ள ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு திரைப்படத்தை முன்பே கொடுத்துவிட்டு,
அவர்களைப் பற்றிய அறிமுகத்தைத் தந்த பின் தனது அவெஞ்சரை வெளியிட்டது. ஆனால் டி.சி.
காமிக்ஸின் சில கேரக்டர்களை ஒருங்கிணைத்து எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படமானது
அந்த கேரக்டர்களைப் பற்றிய எந்தவொரு அறிமுகத்தையும் நமக்குத்தராமல் இனிமேல்தான் அவர்களின்
இன்ட்ரோ என்று கிளைமேக்சில் கூறி நம்மை பெரிதளவாய் ஏமாற்றிவிட்டது. காமிக்ஸ் அனுபவமற்றவர்களுக்கு
அக்குவாமேன், தன்டர்ஸ்ட்ரோம் போன்ற டி.சியின் மியூட்டன்ட் ஹீரோக்களைப்பற்றி அறிந்து
கொள்வதற்கான வாய்ப்புகளே இல்லை. இவ்வளவு ஏன்? சூப்பர்ஹீரோ படங்களை தொடர்ந்து பார்த்துவரும்
நானே இத்திரைப்படத்தில் வொன்டர்வுமனைத் தவிர ஒருசில செகன்ட் வரும் மற்ற ஹீரோக்களை கண்டுபிடிப்பதற்குள்
போதும்போதுமென ஆகிவிட்டது. இதன் அடுத்த பாகமான ஜஸ்டிஸ் லீக்கில் அனைத்து சூப்பர்ஹீரோக்களும்
இணையப்போகிறார்கள். அந்த படமானது ஒரு அறிமுகப்படலமாக இருக்கும்பட்சத்தில் அவெஞ்சர்
முதல்பாகத்தின் முதல்பாதி போன்ற சோர்வினைத்தான் தரும். வொன்டர்வுமன் திரைப்படம்
2017-ல் வெளிவரும்பட்சத்தில் அதிலேயே மற்ற ஹீரோக்களின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம்.
ஆனால் முதலில் வொன்டர்வுமன் திரைப்படம் வந்திருந்தால் இத்திரைப்படமானது பார்க்கும்போது
வேறொரு உணர்வைத் தந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">சரி,
புரியாத பாஷையில் ஏதேதோ சொல்லி வெறுப்பேத்தாமல் திரைப்படத்திற்கு செல்லலாம். வியாழன்
அன்றே இத்திரைப்படத்தைப் பார்த்துவந்த ஆரூர்மூனா செந்தில் அண்ணன், படம் ஒன்றும் புரியவில்லை,
மொக்கையாக போகிறது என்றார். அதையும் தாண்டி திரைப்படத்திற்கு திரையரங்கிற்கு சென்றபோது
பார்த்துவிட்ட ஒவ்வொருவரும் தியேட்டரை விட்டு வெளியில் வரும்போதே கொட்டாவியுடன் வந்தார்கள்.
சரிதான் , வான்டேட்ட சைத்தானத் தூக்கி பைக்குள்ள போட்டுக்கினு தியேட்டருக்கு வந்துட்டோம்போலனு
நினைத்துக்கொண்டே போனேன். </span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">படத்தைப்பார்க்கும்முன்
முந்தைய பாகமான மேன் ஆஃப் ஸ்டீல்லை ஒருதபா, ஒருபத்தியில் பார்த்துவிடலாம். பூமியைவிட
நாகரீகத்தில் முன்னேறிய கிரிப்டான் எனும் கிரகத்தில் வாழ்ந்துவரும் கிரிப்டானியர்கள்
பார்ப்பதற்கு மனிதனைப் போன்ற தோற்றமுடையவர்கள். அவர்கள் வாழ்ந்துவரும் கிரிப்டான் கிரகம்
அழிவின் விழிம்பில் உள்ளது. அக்கிரகத்தின் ராணுவஜெனரலான ஸாட் (ZOD) , தன் கிரகத்தைக்
காப்பாற்ற ஒருவழி யோசிக்கிறார். கிரிப்டானியர்களுக்கு இயற்கையாக புணர்ந்து குழந்தைப்பெற்றுக்கொள்ளும்
தகுதி கிடையாது. அவர்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் கவுன்சிலை அணுகி அப்ரூவல்
வாங்கி, தனக்கு எப்படிப்பட்ட மகன் வேண்டும் என்று முன்பே சொல்லிவிட்டால் கோடெக்ஸ் எனும்
டெக்னாலஜியைப் பயன்படுத்தி குழந்தையை உருவாக்குவார்கள். ஜெனரல் ஸாட், அந்த கோடெக்சைக்
கைப்பற்றி, அதைக்கொண்டு வேறொரு உலகில் கிரிப்டானை மீண்டும் உருவாக்கிவிடவேண்டும் என்று
முனைகிறான். இதை எதிர்க்கும் சயின்டிஸ்ட் கால்,
கோடெக்சை என்க்ரிப்ட் செய்து , இயற்கை முறையில் பிறந்த தன் மகனின் உடலில் செலுத்திவிடுகிறார்.
கிரிப்டானின் எதிர்காலம் இவன்தான் என்றென்னும் தன் குழந்தையை, கால்லும் அவர் மனைவி
லாராவும் ஒரு ஸ்பேஷ் ஷிப்பில் வைத்து , வாழ்வதற்கு ஏற்ற உலகமான பூமிக்கு அனுப்பிவிடுகிறார்கள்.
கிரிப்டான் அழிகிறது; ஜெனரல் ஸாடும் அவனின் கூட்டாளிகளும் தண்டனை எனும் பெயரில் தப்பித்துவிடுகிறார்கள்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">பூமிக்கு
வந்த அந்த குழந்தையை ஜொனதன் , மார்த்தா தம்பதியினர் எடுத்து கிளார்க் எனப்பெயரிட்டு
வளர்க்கின்றனர். சிறுவயதுமுதலே கிளார்க்குக்கு ஏதோ அதீத சக்தி இருக்க, தன் தாயின் அரவணைப்பினால்
அதைக்கட்டுப்படுத்துகிறான். வளர்ந்தபின் தன்னை உலகினுருப்பவர்களுக்கு இடையே மறைத்துக்கொள்கிறான்.
அப்படியான காலகட்டத்தில் அவனின் ஒரிஜினல் தந்தையான கால்-லின் நினைவுகளைச் சந்திக்கும்
கிளார்க், தான் யாரென்று உணருகிறான். இன்னொருபுறம் ஜெனரல் ஸாட், கிளார்க்கின் உடலிலுள்ள
கோடெக்ஸை அடைவதற்காக பூமிக்கு வருகிறான். ஜெனரல் ஸாட் பூமியை, கிரிப்டானாக மாற்றிவிடலாமென
ஐடியா செய்ய, அதை சூப்பர்மேன் எப்படியெல்லாம் சண்டைபோட்டுத் தடுக்கிறார் என்பதனை கடைசி
43 நிமிடங்கள் கிராபிக்ஸ் கலக்கலாகக் காட்டியிருப்பார்கள். கடைசி 30 நிமிடத்தில் சண்டை
எனும் பெயரில் ஒரு பெரிய (சிகாகோ - மெட்ரோபோலிஸ்) நகரத்தையே அழித்துவிடுகிறார்கள்;
வில்லனும் அழிந்துவிடுகிறான். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">இப்போது
இந்த பாகத்திற்கு வரலாம். படத்தில் வரும் கேரக்ட்ர்களுக்கு ஒரு இன்ட்ரோ கொடுத்துவிட்டு
கதைக்குச் செல்லலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">லக்ஸ்
லூதர் – காமிக்ஸ் உலகின் 4வது மிகப்பெரிய வில்லன். இவன் ஒரு சைக்கோபாத். பேட்மேனுக்கு
ஜோக்கர் எப்படியோ அப்படி சூப்பர்மேனுக்கு இவன். கோடிஸ்வரனான இவன் தன் லேப்பை வைத்து
விதவிதமாக எதையாவது கண்டுபிடித்துக்கொண்டே இருப்பதுதான் வேலை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">ப்ரூஸ்
வெய்ன் – மெட்ரோபோலிஸ் நகரின் அருகிலிருக்கும் கோதம் நகரின் மிகப்பெரிய கோடிஸ்வரர்
ப்ரூஸ் வெய்ன். சிறுவயதில் ஒரு திருடனால் தன் தாய், தந்தையை இழந்துவிடும் சிறுவன் ப்ரூசுக்கு
வௌவால்கள் உதவிசெய்கின்றன. தன் அறிவைக்கொண்டு கோதம் நகரின் குற்றங்களைத் பேட்மேன் எனும்
பெயரில் இரவில் தடுத்துவந்த ப்ரூஸ் வெய்ன், பகல்நேரத்தில் ஒருகுடிகார ப்ளேபாய் மில்லியனராக உலாவருகிறார். இப்படத்தின்
கதைப்படி இப்போது ப்ரூசின் வயது 55. பேட்மேனின் விசுவாமான பட்லர் ஆல்ப்ரட். பேட்மேன்
பற்றி மேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள 3 பதிவுகளைப் படியுங்கள். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div align="center" class="MsoNormal" style="text-align: center;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><a href="http://vimarsanaulagam.blogspot.in/2014/12/cns-batman-begines.html" target="_blank">பேட்மேன் பிகைன்ஸ்</a><o:p></o:p></span></div>
<div align="center" class="MsoNormal" style="text-align: center;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><a href="http://vimarsanaulagam.blogspot.in/2015/01/cns-dark-knight.html" target="_blank">த டார்க் நைட்</a><o:p></o:p></span></div>
<div align="center" class="MsoNormal" style="text-align: center;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><a href="http://vimarsanaulagam.blogspot.in/2015/03/cns-dark-knight-rises.html" target="_blank">த டார்க் நைட் ரைசஸ்</a><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">க்ளார்க்
– ஜெனரல் ஸாடை அழித்தபின், சூப்பர்மேன் டெய்லி ஹன்ட் எனும் பத்திரிக்கையில் செய்தி
சேகரிப்பாளராக இருக்கிறார். கோதம் நகரில் நடக்கும்
குற்றங்களுக்கு பேட்மேன்தான் காரணம் என நம்பும் க்ளார்க், அதைத்தன் பத்திரிக்கையில்
வெளிக்கொணர முயற்சிக்கிறான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">லேன்
– சூப்பர்மேன் என்கிற க்ளார்க்கின் உயிர்க்காதலி. உலகமே ஒருபுறம் அழிந்துகொண்டிருந்தாலும்,
லேனுக்கு ஒரு சிறுகாயம்கூட வராமல் காப்பாற்ற எங்கிருந்தாலும் வந்துவிடுவார் சூப்பர்மேன்.
(பழைய சூப்பர்மேன் திரைப்படத்தில் லேன் இறந்துவிட, அவளைக்காப்பாற்ற அவளைத்தூக்கிக்கொண்டு
ரிவர்ஸில் பூமியைச்சுற்றி, காலத்தையே ரீவைன்ட் செய்துவிடுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
எவ்வளவு காதல் என்று).<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">டயானா
– 5000 வருடங்களாக வாழ்ந்து வரும் அழிவில்லா பெண்; வொண்டர் உமனுக்கும் சூப்பர்மேன்
போன்று பறக்கும் சக்தியோடு, கேடயம் மற்றும் கத்தியும் எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ். எப்போதெல்லாம்
படுபயங்கர தீய சக்திகள் வெளிவருகிறதோ அப்போதெல்லாம் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி காட்டு,காட்டென
காட்டிவிட்டுச்செல்வார். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">இப்போது
கதை என்னவென்றால், போனபாகத்தில் சூப்பர்மேன் செய்த சாகங்களால் அவருக்கு எந்தளவிற்கு
ரசிகர்கள் உருவானார்களோ, அதே அளவுக்கு எதிர்ப்பாளர்களும் உருவானார்கள். அந்த எதிர்ப்பாளர்களில்
மிகமுக்கியமான இருவர் லக்ஸ் லூதர் மற்றும் பேட்மேன். சூப்பர்மேன் மாதிரியான அதீதசக்தியுள்ளவர்களால்
என்றும் பூமிக்கு பேராபத்துதான் என்பதை இருவரும் உணருகிறார்கள். லக்ஸ் லூதர், போன பாகத்தில்
ஜெனரல் ஸாட் பூமியை அழிக்கப் பயன்படுத்திய கிரிப்டானிய உலோகங்களில் இருந்து ஒரு பவர்புல்
ஆயுதத்தைச் செய்யமுயற்சிக்கிறான். ஆனால் அதை பேட்மேன் அவனிடமிருந்து ஆட்டையைப்போடுகிறார்.
அதனால் பேட்மேன்மீது செம காண்டில் இருக்கிறான் லக்ஸ் லூதர்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">எதிர்ப்பாளர்கள்
ஒருபுறம்; ஆதரிப்பவர்கள் ஒருபுறம் என இருதலைக்கொள்ளியாய் இருக்கும் சூப்பர்மேனுக்கு
கோதம்நகரில் பெருகிவரும் குற்றங்களுக்கெல்லாம் காரணம் பேட்மேன் தான் என நினைக்கிறான்.
பேட்மேனைச் சந்தித்து நீ செய்வது தவறு ; இனி திருத்திக்கொள் என மிரட்டிவிட்டு செல்கிறார்.
பேட்மேன் லக்ஸ் லூதரின் ஆயுதத்தைத் திருடும்முன் அவனைப்பற்றி உளவு பார்க்கச்செல்கிறார்.
அப்போது டயானா எனும் பெண்ணைப் பார்க்கிறார். உளவு பார்த்த இடத்திலிருந்து பேட்மேன்
கண்டுபிடிப்பது, டயானா 1918-ல் தன் குழுவினருடன் போர்புரிவது போன்றதொரு புகைப்படம்.
மேலும் அதில் புதுப்புது சூப்பர்ஹீரோக்களைப் பற்றியும் அறிந்துகொள்கிறார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">காண்டில்
இருக்கும் லக்ஸ் லூதர், தனக்கு அல்வா கொடுத்த பேட்மேனைத் தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறான்.
சூப்பர்மேனின் தாயைக்கடத்தி வைத்துக்கொண்டு, பேட்மேனைப்போட்டுத் தள்ளினால் உன் தாய்
பிழைப்பாள் என மிரட்டுகிறான். இன்னொருபுறம் சூப்பர்மேனை அழிக்க ரெடியாகும் பேட்மேன்,
சூப்பர்மேனுக்கு அறைகூவல் கொடுக்கிறார். இதேநேரத்தில் ஆயுதம் கைவிட்டுப்போன லக்ஸ்,
முந்தைய பாகத்தில் மிச்சமான ஜெனரல் ஸாடின் உயிரற்ற பிரதேத்தைக்கொண்டு, கிரிப்டானிய
விண்கலத்தின் அதீத சக்தியைவைத்து ஒரு புது உயிரினத்தை உருவாக்குகிறான். இத்தனைப் பிரச்சனைகளையும்
சூப்பர்மேன் எதிர்கொள்ள, மீதி என்ன நடந்தது என்பதுதான் கடைசி அரைமணிநேரம். அதையும்
சொல்லிவிடலாம்தான்; 400 மில்லியன் டாலருக்கும்மேல் செலவு செய்து எடுத்திருக்கிறார்கள்
என்பதால் சொல்ல மனம்வரவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">உண்மையில்
பேட்மேன் கேரக்டரை சர்வநாசம் செய்துவிடுவார்கள் என நினைத்தேன்; ஆனால் பரவாயில்லை. பேட்மேனை
முடிந்தவரை சரியானபடியே உபயோக்கித்திருக்கிரார்கள். ஆனால் எந்நிலையிலும் யாரையும் கொல்லாத
பேட்மேனே இத்திரைப்படத்தில் சிலரைக்கொல்வது போல் காட்டியதை மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
என்னடா பேட்மேன் , பேட்மேன் என்று புலம்புகிறான்
என்று யோசிக்காதிர்கள். உண்மையில் காமிசைப்பொறுத்தவரை சூப்பர்மேன் வெஸ் பேட்மேன் என்பதே
டைட்டில். ஆனால் பேட்மேனிற்கு உலகளவில் இருக்கும் ரசிகர்களுக்கு மதிப்புக்கொடுக்கும்
வகையில் பேட்மேன் வெஸ் சூப்பர்மேன் என டைட்டிலிலேயே பேட்மேனுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள்.
அதேபோல் பேட்மேனுக்கு ஏற்ற சரியான நடிகராக பென் அஃப்லெக்கை செலக்ட் செய்திருக்கிறார்கள்.
ஓரிடத்தில்கூட பேட்மேனுக்கான கெத்தை விட்டுக்கொடுக்காமல் திரைப்படத்தை நகர்த்தியிருக்கிறார்கள்.
ஆனால் அது ஒரு சூப்பர்ஹீரோவுக்குண்டான மரியாதையைத் தந்திருக்கிறதே தவிர, பேட்மேன் எனும்
லெஜன்ட்டை இப்படிப்பார்ப்பது மனதிற்கு ஒவ்வாத ஒன்றாகிவிட்டது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">சூப்பர்மேன்
பற்றி என்ன சொல்ல? எல்லாம் அவர்தான். இல்லாத சக்தியே இல்லாத கிரிப்டானியர். இந்த படத்திலும் ஏதேதோ செய்திருக்கிறார்.
வொண்டர்வுமன் கேரக்டரை காமிக்ஸ் படிக்காமல், திரைப்படம் பார்க்காமல் ஒருமுடிவுக்கு
வருவது கடினம்தான். ஏதோ கிளைமேக்ஸ் ஃபைட்டில் பறந்து பறந்து செய்துகொண்டிருந்தார்.
ஒவ்வொரு சூப்பர்ஹீரோ திரைப்படத்திலும் ஹீரோயின் வடிவமைப்பு ஏன் இவ்வளவு மட்டமாக இருக்கிறது என்பதுதான் புரியவில்லை.
லேன் கதாபாத்திரமானது தானே தேடிச்சென்று வில்லனிடம் சிக்கிக்கொண்டு, ஹீரோவுக்கு பிரச்சனை
உண்டாக்குவதற்கென்றே அளவெடுத்து தைத்த ஒரு கேரக்டர். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">படத்தின்
இரு ப்ளஸ்கள் என்றால் பேட்மேனும் சூப்பர்மேனும் மோதிக்கொள்ளும் காட்சியும், கிளைமேக்ஸ்
20 நிமிடக்காட்சியுமே. பேட்மேன் அறிவாலும் தன் சமயோசிதத்தாலும் சூப்பர்மேனை பந்தாடும்போது
விசில் பறக்கிறது. ஆனால் பேட்மேன், சூப்பர்மேனைக் கொல்லப்போகும் சமயத்தில் சூப்பர்மேன்
ஒரேஒரு வார்த்தையில் அவர் மனதை மாற்றிவிடுவதெல்லாம் தியாகராஜ பாகவதர் காலத்து காட்சி.
படுமொன்னையான சீன் அது. இம்மாதிரியான மொன்னையான சீன்களை டைஜிஸ்ட் செய்வதற்காகவே ஹன்ஸ்
ஜிம்மரை இசையமைப்பாளராய் அமர்த்தியிருக்கிறார்கள். அவரும் தன்னால் முடிந்தளவு இசையால்
படத்தை நகர்த்திச்சென்றிருக்கிறார். பல இடங்களில் பிண்ணனி இசை மிரட்டல். ஒளிப்பதிவாளரும்
தன் பங்கைச் சிறப்பாக செய்துள்ளார். இருட்டில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் கூட
மிகத்தெளிவாக பார்க்கமுடிந்தது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">மைனஸ்கள்
என்று கோடிக்கணக்கில் சொல்லலாம். கதாசிரியர் டேவிட்.எஸ்.கோயர் நல்ல கதாசிரியர் தான்.
படத்திலும் நல்ல கதைதான். திரைக்கதையாசிரியர் க்றிஸ் டெர்ரியோ ஆர்கோ படத்திற்காக ஆஸ்கார்
வாங்கியவர். அதேபோல் இயக்குநர் ஸேக் ஸ்னைடரும் ஏற்கனவே 300, வாட்ச்மேன் போன்ற திரைப்படங்களை
எடுத்திருக்கிறார். எனினும் இவர்கள் மூவரும் ஒன்றிணைந்து உருப்படியான ஒரு திரைப்படத்தைக்கொடுக்க
முடியாமல் போய்விட்டது எனலாம். இதற்கு மிகமுக்கிய காரணம் இன்றைய காலகட்டத்து சூப்பர்ஹீரோ
திரைப்படங்கள். இப்போது எடுக்கப்படும் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் விசுவல் ரீதியாக மட்டுமில்லாமல்,
திரைக்கதை மற்றும் காட்சிகளை நகர்த்தும் விதத்திலும் பல்வேறு வகையில் வேறுபட்டு வருகிறது.
சூப்பர்ஹீரோக்களை பெரும்கடவுளாக சித்தரிப்பதற்கு பதில் மனிதர்களுக்கு நெருக்கமானவராக
சித்தரிக்கவேண்டும் என்று ஒவ்வொரு இயக்குநர்களும் முயன்று வருகின்றனர். அப்படியொரு
கட்டத்தில் , இந்த திரைப்படத்தில் மனிதர்களைப்பற்றிய காட்சிகள இல்லை எனலாம். எவ்வளவு
பேர் செத்தாலும் பரவாயில்லை, சூப்பர்மேன் தன் தாயையும், காதலியையும் தேடித்தான் முதலில்
செல்கிறார். அந்த இடத்திலேயே நமக்கும் சூப்பர்மேனுக்குமான இடைவெளி அதிகரிக்கிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">இவ்வளவு
சக்திகள் கொண்ட ஒருவருக்கு பிரச்சனை வருகிறது என்றால் அதைத்தீர்க்க வழியில்லாமல் சக்திகளே
இல்லாத பேட்மேனிடத்தில் அவர் உதவி கேட்பதெல்லாம் சும்மா உட்டாலங்கடி. காதலி எங்கே போயிருந்தாலும்
அவளைக் கண்டறிந்து தேடிவரும் சூப்பர்தேனால் தன்னை வளர்த்தத் தாயை எங்கு மறைத்து வைத்திருக்கிறார்கள்
என்பதை கண்டுபிடுக்க முடியவில்லையாம்!? கிரிப்டான் ஆயுதம் தன் அருகில் இருந்தாலே சக்தியிழக்கும்
சூப்பர்மேன் அதை எடுத்துக்கொண்டு பறந்துபோய் குத்தும்போதெல்லாம் போங்கய்யா போங்கு என்று
சொல்லத்தோன்றியது. அதேபோல் ஒரே வார்த்தையில் பேட்மேன் மனம் மாறுவது, கடைசியில் சூப்பர்மேன்
உயிரெழுத்தல் எல்லாம் சும்மானாச்சுக்கும் டெம்ப்ட் ஏற்ற எடுக்கப்பட்டது. நாங்க அதெல்லாம்
டார்க் நைட் ரைசசிலேயே பார்த்துவிட்டோம் பாஸ்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">அதேபோல்
திரைக்கதையின் தேக்கநிலையையும் ஒரு மைனசாக குறிப்பிடலாம். கிளைமேக்ஸ் ஃபைட் முடிந்தபின்
ஆங்காங்கே கொத்துபரோட்டா போட்டதுபோல் காட்டும் காட்சிகளும், அடுத்த பாகத்திற்கான ஹைப்
ஏற்றும் காட்சிகளும் அச்சு அசல் டார்க் நைட் ரைசஸின் உல்டா. முதல்பாதியில் பல காட்சிகளை
ஏதோ மிகமுக்கியமானதுபோல் காட்டிவிட்டு, அதைத்தொடர்ந்து என்ன நடந்தது என்ற கன்டினியுவேசனே
இல்லாமல் இஷ்டத்துக்கு நகர்த்திக்கொண்டே போனதெல்லாம் திரைக்கதை சொதப்பல். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">மொத்தத்தில்
ஜஸ்டிஸ் லீக்கை பெரிதும் எதிர்பார்ப்பவர்கள் , மேன் ஆஃப் ஸ்டீலைப் பார்த்தவர்கள் ஒருமுறைப்
பார்க்கலாம். அதுவும் அடுத்தபாகத்திற்கான கன்டினிவியுட்டி மிஸ் ஆகிடக்கூடாது என்ற ஒரே
காரணத்திற்காக. அதிதீவிர நோலனின் பேட்மேன் ரசிகர்கள், இந்த படத்திற்கு செல்லாமல் இருப்பதே
உத்தமம். மற்றபடி பெரிதாக சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. <o:p></o:p></span></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-61965908627595666182016-03-13T12:33:00.000+05:302016-03-13T12:34:06.719+05:30THE BUTTERFLY EFFECT – சினிமா விமர்சனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtbBgvwLmR57F4IEomvJY2BK1IItoOceolYQL9PwdNBtgmN0i5sEbhDfag4Iihm7J10vX26_q7odK0Wq_avO-OyPUZbPtrpf3328fyOwmzE5orCqbY4Q3nBtEBdrnK5m-JND2WfpzF3uc/s1600/be1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtbBgvwLmR57F4IEomvJY2BK1IItoOceolYQL9PwdNBtgmN0i5sEbhDfag4Iihm7J10vX26_q7odK0Wq_avO-OyPUZbPtrpf3328fyOwmzE5orCqbY4Q3nBtEBdrnK5m-JND2WfpzF3uc/s640/be1.jpg" width="452" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">என்.டி.ஆரின்
நானக்கு ப்ரேமதோ திரை விமர்சனத்தை எழுதும்போது இடையில் இத்திரைப்படத்தைப் பற்றி எதேச்சையாக
குறிப்பிட்டேன். இந்த திரைப்படம் நினைவுக்கு வந்ததும் உடனே இந்தபடத்தைப் பற்றி இத்தனை
நாள் எழுதாமல் விட்டுவிட்டோமே என்ற எண்ணம்தான் தோன்றியது. அப்படி ஒரு ஸ்பெசல் ட்ரீட்மென்ட்
தான் இத்திரைப்படம். உங்களுக்கு பல சர்ப்பரைஸ்களைக்கொடுக்கும் வல்லமை வாய்ந்தது இந்த
பட்டர்ப்ளை எஃபெக்ட். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஏற்கனவே
நானக்கு ப்ரேமதோ திரைப்படத்தைப் பற்றிய பதிவிலே கேயாஸ் தியரியைப்பற்றியும் அதன் கோட்பாடுகளில்
ஒன்றான பட்டர்ஃப்ளை எஃபெக்ட் பற்றியும் பார்த்தோம். அந்த கான்செப்டை அப்படியே வைத்து
ஒரு பக்காவான திரைக்கதையை எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் இந்த திரைப்படம். கேயாஸின்படி
குத்துமதிப்பான நிகழ்காலம் குத்துமதிப்பற்ற எதிர்காலத்தை உருவாக்காது என்பதைவைத்து
நாம் நம் இறந்தகாலத்தை மாற்றமுனைந்தால் என்னவாகும் என்பதே இத்திரைப்படம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">நினைத்துப்பாருங்கள்;
உங்கள் வாழ்க்கையின் மிகமுக்கியமான இறந்தகாலத்துக்கு இப்போது உள்ள நீங்கள் சென்றால்
என்ன செய்வீர்கள்? எடுத்துக்காட்டாக ஒரு ஐந்தாண்டுகளுக்குமுன் நீங்கள் ஒருகொலையைச்
செய்கிறீர்கள். அதற்காக ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் பெறுகிறீர்கள். திடீரென இன்றைய
உங்கள் நினைவுகள் ஐந்தாண்டுகளுக்குமுன் அந்த கொலை நடந்த இடத்திற்கும் நேரத்திற்கும்
செல்கின்றது. அப்போது உங்களின் இன்றைய நினைவுகள் கொலையை நடக்கவிடாமல் செய்யமுயலுமல்லவா?
அப்படியாக உங்கள் நினைவுகள் அந்த கொலையைத் தடுத்துவிட்டால் , அந்த கொலைக்குப்பின் உங்கள்
வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த ஐந்தாண்டுகாலமானது மாறிவிடும். ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கிவிடுமல்லவா?
ஆனால் உருவாகும் புதிய எதிர்காலமானது இந்த ஐந்தாண்டை விட மிகமோசமானதாக இருந்தால் என்ன
செய்வீர்கள்? மீண்டும் இறந்தகாலத்துக்கு சென்று வேறு எதாவது செய்ய முயற்சிப்பீர்கள்
அல்லவா? அதேதான் இந்த திரைப்படம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span style="font-family: "Latha","sans-serif";">ஒருமுக்கிய முன்குறிப்பு –
வித்தியாசமான திரைக்கதை கொண்ட திரைப்படங்களைப் பார்ப்பவர்கள் கீழே உள்ள கதையைப்படிக்காமல்
படத்தைப் பார்த்துவிடுங்கள். ஏனெனில் இவ்விமர்சனத்தில் கிளைமேக்ஸ் தவிர மற்ற அனைத்துக்காட்சிகளையும்
தெளிவாக கூறப்பட இருப்பதால் படித்துவிட்டு படம்பார்க்கும்போது படத்தின் முழுமையான எஃபெக்ட்
உங்களை வந்தடையாது. </span></b><span style="font-family: "Latha","sans-serif";">படம்
நிகழ்காலத்தில் துவங்கி இறந்தகாலத்திற்கு சென்று எதிர்காலத்தில் முடிகிறது. ஈவன் என்பவன்
ஒரு மருத்துவமனைக்குள் எங்கெங்கோ ஓடுகிறான். அவனை சிலர் துரத்த அவன் ஒரிடத்தில் அமர்ந்து
ஒருவிசயத்தை மிக அவசரமாக எழுதுகிறான். அதைத்தொடர்ந்து அவனது கடந்தகாலத்தை நோக்கி திரைப்படம்
பயணிக்கிறது. ஈவனுக்கு சிறுவயதில் ஒரு பிரச்சனை; அவனுக்கு திடீரென்று சிலகணங்கள் என்ன
நடந்ததென்று தெரியாமல் ப்ளாக் அவுட் ஆகிவிடுகிறது. மிகமுக்கியமான 5 நினைவிழப்புகளை
இங்கே வரிசைப்படுத்திவிடலாம். பின்னே வரும் கதையை புரிந்துகொள்ள இந்த வரிசை உங்களுக்கு
உதவும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoListParagraph" style="mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="font-family: "Latha","sans-serif"; mso-fareast-font-family: Latha;">1.<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;"> </span></span><!--[endif]--><span style="font-family: "Latha","sans-serif";">பள்ளியில் அவனுடைய ஆசிரியை அவன் தாயாரை அழைத்து
‘ஓவியம் வரையச்சொன்னால் உன்மகன் என்ன வரைந்திருக்கிறான் பாருங்கள்’ என்று ஒரு ஓவியத்தைக்காட்டுகிறார்.
அதில் கையில் கத்தியுடன் ஒருவன் இரண்டு பேரை கொலைச்செய்ததைப்போல் வரைந்திருக்க, ‘என்னடா
மவனே இது?’ என்று கேட்கும் தாயிடம் ‘எனக்கு எதுவுமே தெரியாது’ என்கிறான். சரி இவனுக்கு
ஏதோ பிரச்சனை என்று ஸ்கேன்னிங் எல்லாம் எடுத்துப்பார்க்கிறார் தாயார். மேலும் இம்மாதிரியான
நியாபக மறதியைச்சரி செய்யும் நோக்கில் டைரி எழுதச்சொல்கிறாள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoListParagraph" style="mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="font-family: "Latha","sans-serif"; mso-fareast-font-family: Latha;">2.<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;"> </span></span><!--[endif]--><span style="font-family: "Latha","sans-serif";">ஒருமுறை அவனது தாயார் ஈவனை அவனுடைய தோழி
கெய்லியின் தந்தையிடம் விட்டுச்செல்கிறார். கெய்லியின் தந்தையோ ஒரு Shithead Person (அந்த கேரக்டரை வேறு எப்படி சொல்வதென்று
தெரியவில்லை; வேண்டுமென்றால் ஒரு அரைபைத்தியம் பிடித்த சைக்கோ என்று வைத்துக்கொள்ளுங்கள்).
அவன் தன் மகளையும் ஈவனையும் வைத்து படமெடுப்பதாகக் கூறுகிறான். மறுபடியும் நினைவு மறக்கிறது;
விழித்துப்பார்த்தால் இரு குழந்தைகளும் நிர்வாணமாக இருக்கிறார்கள். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoListParagraphCxSpFirst" style="mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="font-family: "Latha","sans-serif"; mso-fareast-font-family: Latha;">3.<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;"> </span></span><!--[endif]--><span style="font-family: "Latha","sans-serif";">அடுத்ததாக ஈவன் மனநிலை மருத்துவமனையில் இருக்கும்
தன் தந்தையைப் பார்க்க ஆசையாய் செல்கிறான். அவர்களிருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது
மீண்டும் ப்ளாக் அவுட்; திடீரென பார்த்தால் அவனின் சொந்த தந்தையே அவனை கொல்ல முயற்சிக்கிறார். அப்போது
அவனின் தந்தை செக்யூரிட்டிகளால் தாக்கப்பட்டு இறக்கிறார். ஈவனுக்கு இப்போது டீன் ஏஜ்
பருவம் துவங்குகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoListParagraphCxSpLast">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoListParagraph" style="mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="font-family: "Latha","sans-serif"; mso-fareast-font-family: Latha;">4.<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;"> </span></span><!--[endif]--><span style="font-family: "Latha","sans-serif";">கெய்லி, கெய்லியின் சகோதரன் டாம், ஈவனின்
நண்பன் லென்னி ஆகியோர் ஒரு டைனமைட் வெடிகுண்டை ஒரு வீட்டின் போஸ்ட்பாக்ஸில் வைத்து
வெடிக்கவைக்கிறார்கள். வெடிக்கும்போது மீண்டும் ஈவனுக்கு ப்ளாக் அவுட். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-left: .25in; text-align: justify;">
<br /></div>
<div class="MsoListParagraph" style="mso-list: l0 level1 lfo1; text-align: justify; text-indent: -.25in;">
<!--[if !supportLists]--><span style="font-family: "Latha","sans-serif"; mso-fareast-font-family: Latha;">5.<span style="font-family: 'Times New Roman'; font-size: 7pt; font-stretch: normal;"> </span></span><!--[endif]--><span style="font-family: "Latha","sans-serif";">சிலநாட்களில் கெய்லியும் ஈவனும் காதலிப்பதை
அறியும் கெய்லியின் சகோதரன் டாம் கோவத்தில்
ஈவனின் செல்லநாயை உயிரோட கொழுத்த முயற்சிக்கிறான். அதைத்தடுக்க போகும் ஈவனுக்கு இம்முறையும்
ப்ளாக் அவுட்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">என்னடா
இத்தனை ப்ளாக் அவுட் என்று காண்டாகதீர்கள்; இதுவரை நான் சொன்ன கதை வெறும் 25 நிமிடங்களில்
நடப்பது மட்டுமே. மேலே சொன்ன நிகழ்வுக்குப்பின் ஈவனின் தாயார் அவனுடன் வேறொரு இடத்திற்கு
குடிப்பெயர, கண்டிப்பாக கெய்லியை வந்து சந்திப்பதாக கெய்லியிடம் வாக்களித்துவிட்டு
கிளம்புகிறான் ஈவன்; ஆனால் அவளைச்சந்திக்கவில்லை. காலங்கள் உருண்டோடுகிறது. கல்லூரியில்
படிக்கும் ஈவன் ஒருநிகழ்வில் தன் பழைய டைரியை எடுத்துப்படிக்கிறான். அந்த டைரியில்
குறிப்பிட்டிருக்கும் நிகழ்வு டாம், ஈவனின் செல்லநாயை எரிக்கப்போகும் நிகழ்ச்சிக்கு
அவனை அழைத்துச்செல்கிறது. அங்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்கிறான். இது உண்மைதானா
என்பதை கன்பார்ம் செய்ய ஈவனின் சிறுவயது தோழனான லென்னியிடம் செல்கிறான். அவன் ஏறத்தாழ
மனதளவில் பாதிக்கப்பட்டவனாக இருப்பதை அறிகிறான்; மேலும் அந்நிகழ்ச்சியை உண்மை என்றும்
அறிகிறான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அதன்பின்
மீண்டும் வேறொரு டைரியை எடுக்கிறான். அதிலிருக்கும் நிகழ்வுகளுக்கு தன் நினைவை பயணிக்க
வைக்கிறான். அதன்படி அவன் செல்லும் இடம் நால்வரும் இணைந்து டைனமைட்டை ஒரு வீட்டின்
போஸ்ட்பாக்ஸில் வைத்தார்கள் அல்லவா? அங்கு செல்கிறான். அந்த இடத்தில் நடக்கும் நிகழ்வு
என்னவெனில் போஸ்ட்பாக்ஸை நோக்கி அந்த வீட்டின் உரிமையாளரான ஒரு பெண் கைக்குழந்தையுடன்
வருகிறது. ஏற்படும் வெடிவிபத்தில் இருவரும் மரணமடைகின்றனர். உடனே விழித்தெழும் ஈவன்
தன்னுடைய இன்னொரு ப்ளாக் அவட்டான சிறுவயதில் கெய்லியுடன் நிர்வாணமாக இருந்ததைப் பற்றி
அறிய அவளைச் சந்திக்கச்செல்கிறான். அவளுடைய வாழ்க்கையோ மிகப்பரிதாபமான நிலையில் இருக்கிறது.
அவளிடம் வினவும் போது ‘என்னை ஏன் விட்டுச்சென்றாய்? உன்னை நம்பிதானே நான் என் தந்தையுடன்
இருந்தேன். நீ மட்டும் இல்லையென்றால் என் தாயாருடன் எங்கோ தொலைதூரத்தில் சென்று நிம்மதியாக
வாழ்ந்திருப்பேன்’ என்று அழுகிறாள். அன்று இரவே அவள் தற்கொலையும் செய்துகொள்கிறாள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இறந்தகாலத்திற்கு
தன்னால் செல்லமுடிகிறதென்றால் அக்காலத்தையும் மாற்றமுடியும் என நம்பும் ஈவன் இம்முறை
சிறுவயதின் அக்கோரமான நினைவுகளுக்கு தன் டைரியின்வழியே பயணிக்கிறான். அங்கு சென்று
கெய்லியின் தந்தையை திட்டி, மிரட்டி விடுகிறான். நிகழ்வு முடிகிறது; கண்விழித்துப்
பார்த்தால் இவன் ஒரு லேடிஸ் ஹாஸ்டலில் கெய்லியுடன் படுத்துக்கொண்டிருக்கிறான்; ஆம்
எதிர்காலம் மாறிவிடுகிறது. ஆனால் இங்கும் ஒரு
பிரச்சனை. கெய்லியை தொல்லை செய்யாத அவளின் தந்தை கெய்லியின் சகோதரன் டாமை தொல்லை செய்து
அவனை மனநோயாளியாக மாற்றிவிடுகிறான். ஈவனை வெறுக்கும் அவன் ஈவனுடன் சண்டையில் ஈடுபடும்போது
ஈவனால் கொல்லப்படுகிறான். ஜெயில் வாழ்க்கை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஜெயிலில்
இருந்து தன் தாயிடம் கேட்டு தன் பழைய டைரியை வாங்கும் ஈவனுக்கு அங்கிருக்கும் ஹோமோசெக்ஸ்
கைதிகளால் பிரச்சனை ஏற்படுகிறது. அதை சரிசெய்து அவன் இப்போது செல்லும் நினைவு டாம்,
ஈவனின் நாயை எரிக்கப்போகும் இடம். எப்படியும் டாம் எரிப்பதை முன்னாலே அறிந்திருக்கும்
ஈவன் அதைத்தடுக்கும் பொருட்டு தன் நண்பனான லென்னியிடம் சில முன்னேற்பாடுகளை சொல்கிறான்.
நாயைக்கொழுத்தப்போகும் முன் லென்னி, டாமை கொன்றுவிடுகிறான். எதிர்காலம் மீண்டும் மாறிவிடுகிறது.
இம்முறை ஈவன் கதையின் முதல்பாராவில் பார்த்த இடத்துக்கு வந்துவிடுகிறான். ஆனால் ஈவனின்
நண்பன் லென்னி, மனநோயாளிக்கான மருத்துவமனையில் கட்டப்பட்டிருக்கிறான். அதேநேரம் தன்
தந்தைக்கும் இப்படியான பிரச்சனைகள் இருந்ததை அறியும் ஈவன் தன் தந்தையிடம் உதவி கேட்க
கடந்காலத்துக்கு பயணிக்கிறான். அங்கு அவன் தந்தையிடம் ஹெல்ப் கேட்க, அவரோ நீ என்னதான்
மாற்றினாலும் யாரையாவது நீ இழந்தே ஆகவேண்டும். உன்னால் அது முடியாது, ஒழுங்காய் இதை
விட்டுவிடு என்று கூற அதைக்கேட்காமல் நான் பார்த்துக்கொள்வேன் நீங்கள் ஐடியா கொடுங்கள்
என்கிறான். இவனால் பெரும் ஆபத்து நிகழும் என்று ஊகித்த அவனது தந்தை அவனைக் கொல்ல வருகிறார்.
அதன்பின் நடப்பதை முன்பே பார்த்துவிட்டோம். செக்யூரிட்டிகளால் கொல்லப்பட்டு அவனது தந்தை
இறக்கிறார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">மீண்டும்
நிகழ்காலத்துக்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் வரும் ஈவன் , கெய்லியைச் சந்திக்கச்செல்கிறான்.
அவளோ ஹிப்பியாக மாறிவிடுகிறாள் (ஹிப்பி கலாச்சாரம் என்றால் ஜாலியாக போதைமருந்துகள்
எடுத்துக்கொண்டு தன் இஷ்டத்துக்கு வாழும் கலாச்சாரம் என்று சொல்லலாம்). இப்போது என்ன
செய்யலாம் என்று யோசித்த ஈவன் இம்முறை செல்வது போஸ்ட் பாக்ஸில் பாம் வைத்த நிகழ்விற்கு.
அங்கு சென்று கைக்குழந்தையுடன் இருக்கும் அப்பெண்ணை காப்பாற்ற முயலுகிறான். எதிர்காலம்
மீண்டும் மாறுகிறது. இம்முறை டாம், ஈவனின் தோழனாக மாறுகிறான். அவன்தான் அப்பெண்ணையும்
அக்குழந்தையையும் காப்பாற்றுகிறான் என்று எல்லோரும் புகழ்வதால் அவனுடைய தீய குணங்கள்
மாறி நல்லவனாக மாறுகிறான் டாம். ஆனால் பெரிய பிரச்சனை என்னவென்றால் வெடிவிபத்தில் ஈவனின்
இரு கைகளும் கால்களும் போய்விடுகிறது. இதைவிடக்கொடுமை என்னவென்றால் லென்னியும் கெய்லியும்
காதலிக்கிறார்கள். சரி, நமக்கு என்னவானாலும் சரி, மற்றவர்கள் அனைவரும் நல்ல நிலமையில்
இருக்கிறார்கள் என சந்தோஷமடையும் ஈவன் தன் தாயைச் சந்திக்கச்செல்கிறான். அவள் மருத்துவமனையில்
கேன்சரினால் பாதிக்கப்பட்டு சாகும்நிலையில் இருக்கிறாள். இவனுக்கு கை,கால் போனதிலிருந்து
சிகரெட் போன்ற போதைவஸ்துக்களின் பழக்கத்தால் இவள் இப்படி ஆகிவிட்டாள் என்பதை அறியும்
ஈவன் இம்முறை எப்படியாவது எல்லாவற்றையும் சரிசெய்தாகிவிடவேண்டுமென கிளம்புகிறான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அவன்
மீண்டும் செல்வது குழந்தைப்பருவ நிகழ்ச்சிக்கு. கெய்லியின் வீட்டில் அவளின் தந்தையை
மிரட்டும் நிகழ்விற்கு செல்கிறான். ஏற்கனவே அந்த போஸ்ட் பாக்ஸில் வெடிக்கவைக்கப்படும்
டைனமைட் கெய்லியின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது தான். அந்த டைனமைடை வைத்து பயமுறுத்தலாம்
என்றெண்ணும் ஈவனின் கால்குலேசன் தவறாகிப்போக, வெடிவிபத்தில் சிக்கி கெய்லி இறந்துவிடுகிறாள்.
இவனை மனநோயாளியாக சிறையில் அடைத்துவைத்து விடுகிறார்கள். இப்போது பெரும் பிரச்சனை என்னவென்றால்
அவனால் கடந்தகால நிகழ்வுகளுக்கு செல்லமுடியாது. ஏன் தெரியுமா? அவனுடைய டைரிகளை வைத்துத்தான்
அவனால் பழைய நிகழ்வுகளுக்கு செல்லமுடிந்தது. ஆனால் கெய்லியின் வீட்டில் நடந்த நிகழ்வுகளுக்கு
பின்தான் அவனது டைரியின் பெரும்பகுதி எழுதப்பட்டிருக்கும். ஆனால் கெய்லியின் வீட்டில்
நடந்த வெடிவிபத்தினால் அவன் அப்போதே ஜெயிலில் அடைக்கப்பட்டுவிட்டான் என்பதால் டைரியை
எழுதமுடியாது. இதையெல்லாம் எப்படி சரிசெய்து மீள்கிறான் என்பதே கிளைமேக்ஸ்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">க்ரப்பர்,
எரிக் ப்ரஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதி, இணைந்து இயக்கியுள்ள இந்த திரைப்படம் வெளிவந்த
ஆண்டு 2004. இருவரும் ஏற்கனவே ப்ளன்ட் எனும் திரைப்படத்தை எழுதிதயாரித்துள்ளனர். ஆனால்
இருவரின் பெயரும் வெளியில் தெரிய மிகமுக்கியமான காரணம் FINAL DESTINATION திரைப்படத்தின்
இரண்டாம் பாகம் தான். ஆம் அதை எழுதியவர்கள் இவர்களிருவரும் தான். அதைத்தொடர்ந்து இயக்கி
வெளிவந்த இத்திரைப்படம் விமர்சனரீதியாக பலத்த அடிவாங்கியது. ஆனால் வசூல் ரீதியில் நல்ல
ரிசல்ட். ஆனால் என்னைப்பொறுத்தவரை இத்திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் கொண்டாடப்படாமல்
போனதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. எல்லோரும் புரியவில்லை என்று சொல்வதுகூட
அபத்தம். வலிமையான திரைக்கதையில் எளிமையான உத்தியைக் கையாண்டுள்ளனர்; அவ்வளவே. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">படத்தில்
திரைக்கதையைத் தாண்டி கவனிக்கவைத்தவர் ஹீரோயின் எமி. ஒவ்வொரு காட்சியும் உள்வாங்கி
நடித்துள்ளார். பாரில் வேலை செய்யும் பெண்ணாக, ஹிப்பியாக, ரிச்சான கல்லூரி பெண்ணாக,
நல்ல தோழியாக, காதலியாக என அனைத்தையும் மிகச்சிறப்பாக செய்துள்ளார். பாரில் வேலைசெய்யும்போது
தெரியாமல் பொருளை கீழே தவறவிட்டு அதை மீண்டும் எடுக்கும்போது அருகிலிருப்பவன் அவளின்
பின்புறம் கையை வைத்ததும் உடனே கோவப்பட்டு, தன் நிலையை உணர்ந்து அமைதியாகி ஒரு வெறுமையான
சிரிப்பை உதிர்த்து விட்டு நகரும் இடத்தில் க்ளாஸ். அதைத்தொடர்ந்து ஹீரோவை பலநாட்களுக்குப்பின்
பார்த்ததும் முகத்தில் ஆச்சரியத்தைக்காட்டி, தொடர்ந்த காட்சிகளில் என்னை ஏன் விட்டுச்சென்றாய்
என அழும்போது காட்டும் முகபாவங்களும் அருமை. ஹீரோவைச்சுற்றியே படம் நகர்ந்தாலும், ஹீரோவின்
முகம் செட்டானாலும் நடிப்பு போதவில்லையோ என்று தோனும்படியான நடிப்பு ஆஷ்டனுடையது. ஆனால்
எப்படியோ சமாளித்துவிடுகிறார். படத்தின் இசை, ஒளிப்பதிவு எல்லாம் ஒரு லோ பட்ஜெட் திரைப்படத்துக்குண்டானதே.
கவனிக்கவைக்கும்படியானது எடிட்டிங். ஒரு காட்சியையும் மிஸ் செய்யாமல் தெளிவாய் கத்தரித்து
ஒட்டியுள்ளார் பீட்டர். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">திரைப்படம்
பார்க்கும்முன் கவனிக்கவேண்டியவை – படத்தின் ஓரிடத்தில் நிர்வாணக்காட்சி வருகிறது
(ஹீரோயினோடது இல்ல). டீன் ஏஜில் இருக்கும் இருக்கும் ஹீரோவும் ஹீரோயினும் முத்தமிடும்
காட்சி வருகிறது. ஹீரோவின் நண்பராக வரும் ஒரு காட்ஜில்லா மேட்டர் செய்யும் காட்சி இரண்டு
இடத்திலும், ஹீரோவின் நண்பரும் ஹீரோயினும் மேட்டர் செய்யும் ஒரு காட்சியும் இடம்பெறுகிறது.
அதனால் குடும்பத்துடன் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. முடிந்தால் சென்சார் கட்டுடன்
கூடிய ப்ரிண்ட் தரவிறக்கிக்கொள்ளவும். இதைத்தவிர படத்தை ஆரம்பித்துவிட்டால் நடுநடுவே
PAUSE செய்துவிட்டு போவதைத்தவிர்க்கவும். முழுதிரைப்படத்தையும் ஒரே மூச்சில் பார்த்துவிடுவது
நலம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
</div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-40230367052362969662016-03-12T08:25:00.001+05:302016-03-12T08:25:51.318+05:30காதலும் கடந்து போகும் - சினிமா விமர்சனம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmViZ4DtpVC3VHW0yF63iYHxMlGTY7jckXsZpYCDCdIdEBD1YsvMYlW0i6apKZ-D9vOJPmgTNvv_G4EGaaD-aK4Rocw4mIKp6p3BKW_yiyUF5m0EDXhhnA9F2jtUcoPPhy_hfzoObkiYs/s1600/maxresdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmViZ4DtpVC3VHW0yF63iYHxMlGTY7jckXsZpYCDCdIdEBD1YsvMYlW0i6apKZ-D9vOJPmgTNvv_G4EGaaD-aK4Rocw4mIKp6p3BKW_yiyUF5m0EDXhhnA9F2jtUcoPPhy_hfzoObkiYs/s640/maxresdefault.jpg" width="640" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">சில
பிறமொழித்திரைப்படங்களைப் பார்க்கும்போது ‘ச்சே! இப்படி ஒரு மேக்கிங் தமிழ்ல இல்லயே’
என்று நம்மையே ஃபீல் பண்ணவைத்துவிடும். ஆனால் அந்த மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள்
நம் மொழியில் ரீமேக் செய்யப்படும்போது கொத்திக்குதறி கொத்துப்பரோட்டா போட்டு கொடுப்பார்கள்.
என்னடா இது என்று நம்மை பந்தாடாத குறையாக தியேட்டரைவிட்டு அனுப்பி வைப்பார்கள். ஆனால்
ஒரு திரைப்படத்தின் மூலக்கதையை மட்டும் வைத்து அதை அழகியல் காட்சிப்படுத்தலுடன் ஸ்மூத்தாக
நகர்த்தியிருக்கிறார் நலன் குமாரசாமி.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">குறும்படத்திலிருந்து
சினிமாவிற்கு வந்தவர்களில் முதல் திரைப்படத்திலேயே கமர்சியல் ரீதியாகவும் சரி, விமர்சன
ரீதியாகவும் சரி; உச்சத்திற்கு சென்ற முதல் டைரக்டர் நலன். 2013-ல் சூது கவ்வும் வந்தபோது
எப்படியாவது முதல்நாளே பார்த்துவிடவேண்டும் என்று நைட்ஷோ சென்று பார்த்தபோது ‘ஓ.கே.
தமிழ்சினிமாவின் எதிர்காலம் இந்த திரைப்படத்தின்மூலம் வேறு லெவலுக்கு நகர்த்திச் செல்லப்படபோகிறது’
என்று மனதினுள் பிக்ஸ் செய்தேன். அதேபோல் அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட பல புதுமுக இயக்குநர்களின்
திரைப்படம் மட்டுமில்லாமல் பல மூத்த இயக்குநர்களும் தங்களின் திரைப்படங்களில் திரைக்கதைக்கு
முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக எண்ணற்ற திரைப்படங்களைக்கூறலாம்.
கிட்டத்தட்ட ஒரு ட்ரென்ட் செட்டர் திரைப்படம் என்றுகூட சூதுகவ்வும் திரைப்படத்தைக்
கூறலாம். அப்படியொரு திரைப்படத்தைக்கொடுத்த இயக்குநர் மூன்றாண்டுகளாக திரைப்படம் எடுக்காமல்
இருந்தது மன்னிக்கமுடியாத குற்றம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அடுத்து
என்ன திரைப்படம் எடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது காதலும்
கடந்து போகும் என்று யாருக்கும் தெரியாமல் படத்தை எடுத்து படக்கென்று ரிலிஸ் செய்துவிட்டார்.
முதல் திரைப்படத்தில் டார்க் ஹுயூமரை அள்ளித்தெளித்த ஒரு இயக்குநர் இரண்டாவதாக ரொமான்டிக்
மூவி என்றதும் எனக்கே ஒருநிமிடம் பக்கென்றாகிவிட்டது. சரி, எப்படியும் சினிமாவை நன்கு
ரசித்து வந்தவர் எடுக்கும் திரைப்படம் கண்டிப்பாக ஏமாற்றாது என்றுதான் தியேட்டருக்குச்
சென்றேன். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">விழுப்புரத்திலிருந்து
தந்தையிடம் கெஞ்சி வேலைக்காக சென்னை வருகிறார் யாழினி. ஒரு பெரிய கம்பெனியில் வேலை
பார்த்துக்கொண்டிருக்கும் யாழினியின் கம்பெனி திடீரென இழுத்து மூடப்படுவதால் கொஞ்ச
நாட்களில் கையிருப்பு குறைய ஆரம்பிக்கிறது. வேலை போன விசயத்தை வீட்டிற்கு தெரியப்படுத்தாமல்
அடுத்த வேலையைத்தேடுகிறார். இன்னொருபுறம் வீட்டை காலிசெய்துவிட்டு ஒரு லோக்கலான ஏரியாவில்
வீடுஎடுத்து கம்மி வாடகையில் தங்குகிறார். அந்த வீட்டின் எதிர் வீட்டில் கதிர் எனும்
அடியாள் இருக்கிறார். யாழினியின் வாழ்க்கையில் கதிர் செய்யும் மாற்றங்களே இத்திரைப்படம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">படத்தின்
கதையைவிட காட்சியமைப்பும் திரைக்கதையையுமே செம ஸ்ட்ராங். ஒரு குளிர்ச்சியான கஸாட்டா
ஐஸ்கீரிமை சாப்பிடும்போது தோன்றும் எண்ணங்களை அப்படியே இந்த படம் நம் மனதுக்குள் கடத்துகிறது.
சின்னச்சின்ன அழகான விசயங்களாகட்டும், ஒவ்வொருத்தரின் கேரக்டரைசேசனாகட்டும்; முடிந்தவரை
நுணுக்கமாக காட்டியிருப்பது பாராட்டத்தக்கது. ஒவ்வொரு காட்சியும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைப்போல்
பொறுமையாக ரசித்துப்பார்த்தால் படம் உங்களுக்கு மிகமிகப்பிடிக்கும். அழகியல் ஒளிப்பதிவு
மட்டுமின்றி, காட்சியிலும் திரைக்கதையிலும் அந்த உத்தியைக்கையாண்டிருக்கிறார் நலன்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">கதிர்
எனும் கேரக்டர் விஜய் சேதுபதியை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். படம்
முழுக்க கதிர் எனும் பாத்திரம் தெரியாமல் நமக்கு விஜய் சேதுபதி என்பவரே தெரிகிறார்.
பாரில் 4 பேருடன் சண்டை போடச்சென்று அவர்களிடம் செம அடிவாங்கி கீழே விழுந்தவுடன் படக்கென்று
எழுந்து வேகவேகமாக பாரைவிட்டு கெத்தாக வெளியேறும் காட்சியில் தியேட்டரில் விசில் சவுண்ட்
ஸ்க்ரீனையே கிழித்துவிடும்போலிருக்கிறது. அதே நான்கு பேரை மீண்டும் ஸ்கெட்ச்(!) போட்டு
அடிக்கும்போது கைத்தட்டாமல் இருக்கமுடியவில்லை. ஹீரோவும் ஹீரோயினும் சரக்கடிக்கும்
காட்சி தமிழ்சினிமாவில் பழசு என்றாலும் ஹீரோயினின் க்யூட்-காக அந்த காட்சி எத்தனைமுறை
பார்த்தாலும் சலிக்காது. ஹீரோயினை அழகென்றும் சொல்லமுடியாது; மொக்கை என்றும் சொல்லிவிடமுடியாது.
இரண்டுக்கும் இடைப்பட்ட ஒருவிதமான அழகு. நடிப்பிலும் விஜய் சேதுபதிக்கு இணையாக நடித்துள்ளார்.
ஹேர்ஸ்டைல் இருவருக்குமே அருமை. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">படத்தின்
சில காட்சிகள் செல்வராகவன் ஸ்டைல் மேக்கிங் என்றும் சொல்லலாம். ஆனால் ஓவராலாக பார்க்கும்போது
கொஞ்சம் புதுமையாக இருக்கும். சந்தோஷ் நாராயணனின் இசையைப் பற்றி தனிக்கட்டுரை எழுதவேண்டும்.
என்னைப்பொறுத்தவரை சந்தோஷ்நாராயணனின் பிண்ணனி இசை அமைக்கும் திறமைக்கு கண்டிப்பாக ஹாலிவுட்
திரைப்படங்களுக்கே செல்லலாம். ஒரு வேர்ல்ட் கிளாஸ் பிண்ணனி இசையை அசால்டாக தமிழில்
கொடுத்துள்ளார். ஒரு இடத்தில்கூட படத்தைத்தாண்டிய இசையைக்கொடுத்து நான் பெரிய இசைமேதை
என்று காட்டிக்கொள்ளாமல் , படத்திற்கு என்ன தேவையோ அதை சரிவரக்கொடுத்துள்ளார். படத்தைப்பார்க்கும்போது ஒரு கூலிங்கான ஃபீலிங் உங்களுக்குத்தோன்றும்;
அதற்கு முக்கியமான இரு விசயங்கள் ஒளிப்பதிவும் பிண்ணனி இசையுமே ஆகும். தினேஷ்குமாரின்
ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலம். படத்தின் வசனங்கள் படத்தின் ப்ளஸ்களில் மற்றொன்று.
டார்க் ஹுயூமரை ஆங்காங்கே தூவிவிட்டது அட்டகாசம். எடுத்துக்காட்டாக இன்டர்வயூ காட்சியில்
விஜய் சேதுபதி செய்யும் அட்டகாசங்களைக் கூறலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">சரி
படத்தில் மைனஸே இல்லையா என்று கேட்பவர்களுக்கென்று ஒரு விசயத்தை விட்டுவைத்துவிட்டார்
நலன். அது கிளைமேக்ஸ் ; வலிந்து திணிக்கப்பட்டது போன்றதொரு கிளைமேக்ஸ். நான் ரீசன்டாக
பார்த்த திரைப்படங்களிலே இது தான் எனக்கு அன்சாட்டிஸ்பைட் கிளைமேக்ஸ் என்றும் சொல்லலாம்.
அட்டகாசமாக நெகட்டிவ்வாகவோ, பாஸிட்டிவாகவோ முடிய வேண்டிய திரைப்படத்தை, எதற்கும் சம்பந்தமில்லாத
ஒரு கிளைமேக்ஸை வைத்து பத்தில் ஒன்றாக கடந்துபோகவைக்கும் திரைப்படமாக்கிவிட்டார் என்றே
சொல்லவேண்டும். கிளைமேக்ஸ் தவிர்த்துப் பார்த்தால் கண்டிப்பாக கொண்டாடக்கூடிய திரைப்படம்தான்
இது; ஆனால் பொறுமை மிக முக்கியம் அமைச்சரே!!!<o:p></o:p></span></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-77617931740048486032016-03-11T08:21:00.000+05:302016-03-11T08:22:23.218+05:30RATATOUILLE – சினிமா விமர்சனம்<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_ANmk8ihS62MznuQguphplWyuZjo0px-cB4TMQsmWAEb3_4KaLvSEQteALtAIPW6WvkM0UUbiOcGzYIq-8qqZg0TnQPBAGePNkgDmTJe3JgMGppXAfjuDQ2Rlf9XCA7suQ6quuBY4KTw/s1600/Ratatouille-16.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_ANmk8ihS62MznuQguphplWyuZjo0px-cB4TMQsmWAEb3_4KaLvSEQteALtAIPW6WvkM0UUbiOcGzYIq-8qqZg0TnQPBAGePNkgDmTJe3JgMGppXAfjuDQ2Rlf9XCA7suQ6quuBY4KTw/s640/Ratatouille-16.jpg" width="640" /></a></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அது
2005 என்று நினைக்கிறேன்; பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது நான் படித்துக்கொண்டிருந்த
பள்ளிக்கு, அருகிலுள்ள கல்லூரியில் இருந்து
எம்.பி.ஏ மாணவர்கள் தங்களின் ப்ராஜெக்ட்காக புத்தகங்களை விற்க வந்தார்கள்.
“Whitakers world of facts” எனும் அப்புத்தகத்தின் வண்ணப்படங்களைப் பார்த்ததுமே வாங்கிவிடவேண்டும்
என்ற ஆவல் எனக்குள் மலர்ந்தது. மேலும் அக்காலக்கட்டத்தில் பொது அறிவிலும் புத்தகங்கள்
படிப்பதிலும் எனக்கு அதீத ஆர்வம். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கல்லூரியில் பி.ஏ.
ஹிஸ்டரி படித்துக்கொண்டிருந்த என் சித்தப்பாவின் வரலாற்றுப் புத்தகங்களையெல்லாம் படித்து
முடித்துவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். காமிக்ஸ், அரசியல் வரலாற்றுக்கட்டுரைகள்,
ஆச்சரியங்கள், அதிசயங்கள், விண்வெளி என எதைப்பற்றிய செய்தி கிடைத்தாலும் படித்துவிட்டுத்தான்
மறுவேலை. அப்படியொரு அறிவுப்பசியில் (இப்போ இல்ல; அப்போ) திளைத்துக்கொண்டிருந்த எனக்கு
அப்புத்தகம் பெரும் பொக்கிசமாகவே பட்டது. ஆனால் விலை கொஞ்சம் அதிகம்; எப்படி வாங்குவது?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அன்று
வீட்டிற்கு வந்ததுமே என் நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்தேன்; முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு
சாப்பிடுவதைக்கூட விரும்பாதவனாக வீட்டில் உலாவினேன். என் முகத்தைப் பார்த்ததுமே அகத்தில்
ஏதோ பிரச்சனை என்றுணர்ந்த என் அன்னையார் தனியே அழைத்து என்னவென்று கேட்க ‘விடும்மா’
என்று மீண்டும் சோகமாய் பிகு பண்ணினேன். அப்படி சொன்னால்தான் மீண்டும் துருவித்துருவி
கேட்பார்கள் என்று எனக்குத் தெரியும். மீண்டும் கேட்கும்போது கண்ணில் ஆவலுடன் புத்தகத்தைப்
பற்றி கூறினேன். எங்கள் வீட்டில் அவ்வளவு எளிமையாக பணம் தந்துவிடமாட்டார்கள். தினமும்
பள்ளிக்குச் செல்ல டிப்ஸ் 1 ரூபாயிலிருந்து 2 ரூபாயைத் தாண்டிவிடாது. ஆனால் இரண்டே
இரண்டு விசயங்களுக்கு மட்டும் எவ்வளவு ஆனாலும் தந்துவிடுவார்கள். ஒன்று உணவு; மற்றொன்று
படிப்பு.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">புத்தகம்
என்றதும் பணத்தைத் தந்துவிட்டார்கள். அன்றைய நாள் பள்ளிக்கு போகும்போது பெருமகிழ்ச்சி
மற்றும் மிடுக்குடன் சென்றேன். என்னவோ அந்த புத்தகத்தின்மீதான ஈர்ப்பு என்னை ஒருவழி
ஆக்கிவிட்டிருந்தது. புத்தகத்தை அன்று வாங்கியபின் உடனே திறந்து பார்க்கவில்லை. தம்பிகளுடன்
சேர்ந்து திறந்துபார்க்கவேண்டும் என்ற எண்ணம். ஒரு அவஸ்தையான சந்தோசத்துடன் அன்றைய
நாளைக்கடத்திவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்ததும் தம்பிகளுடன் சேர்ந்து கண்ணை மூடிக்கொண்டு
ஒரு பக்கத்தைத் திருப்பினோம். சரி, இந்த ப்ளாஷ்பேக்கை
இங்கேயே நிறுத்திவிட்டு திரைப்படத்திற்கு செல்லலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ரெமி
எனும் எலியின் கதை இது. இயற்கையாகவே முகர்ந்து மணத்தை வைத்தே உணவு எப்படியானது என்பதைக்
கண்டறியும் திறமை வாய்ந்த ரெமி, தன் குடும்பம் மற்றும் குழுவுடன் ப்ரான்சின் ஒரு கிராமப்பகுதியில்
ஒரு வீட்டில் வசித்துவருகிறது. ரெமியைப்பொறுத்தவரை தான் எலியாக பிறந்ததைவிட தங்கள்
குழுவினருக்கு உணவைப்பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் கண்டதைச்சாப்பிடுகிறார்களே என்ற
வருத்தம் அதிகம். மனிதர்களைப்போல் நாமும் உணவைச்சமைத்து ரசித்து, ருசித்து சாப்பிடவேண்டும்
என்று நினைக்கிறது ரெமி. ரெமியிடம் இருக்கும் திறமையைச் சரிவரபுரிந்துகொள்ளாமல் ரெமியின்
தந்தை ரெமியை பாய்சன் செக்கராக பயன்படுத்துகிறார். இவர்கள் வசிக்கும்வீட்டின் சமையலறையில்
அவ்வப்போது சென்று உணவைத் திருடும் ரெமி டி.வியில் குஸ்டோ எனும் சமையல்கலைஞரின் சமையல்நிகழ்ச்சியைப்
பார்க்கிறது. அவரின் ஹோட்டல் 5 ஸ்டார்களைப்
பெற்று பாரிசின் சிறந்த ரெஸ்டாரன்டாக இருக்கிறது. குஸ்டோவின் தாரக மந்திரம்
“ANYONE CAN COOK”. அதே பெயரில் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் குஸ்டோ. அதிர்ஷ்டவசமாக
அந்த புத்தகம் ரெமி வசிக்கும் வீட்டிலேயே இருக்கிறது. அதைப்பார்த்து சமையலின் அனைத்துக்கலைகளையும்
தியரிட்டிக்கலாக கற்றுக்கொள்கிறது ரெமி. குஸ்டோவை
துரோணராக நினைத்து சமையல்கலையில ஒரு ஏகலைவனாக மாறுகிறது ரெமி. சிலநாட்களில் குஸ்டோவின் ரெஸ்டாரன்டிற்கு கொடுக்கப்பட்ட
ஐந்து ஸ்டார்களில் ஒன்று குறைக்கப்படுகிறது; அதேநேரம் குஸ்டோவும் இறந்துவிடுகிறார்.
இச்சமயத்தில் எதேச்சையாக வீட்டு ஓனரிடம் எலிகள் மாட்டிக்கொள்ள தப்பிக்கும் முயற்சியில்
ரெமி தன் குடும்பத்தையும் குழுவையும் பிரிந்து விடுகிறது. அப்போது அதன் இமாஜினரி தோழராக
குஸ்டோ தோன்றி ரெமியை வழிநடத்துகிறார். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">குஸ்டோவின்
வழிகாட்டுதலின்பேரில் ரெமி குஸ்டோவின் ரெஸ்டாரன்டை அடைகிறது. அங்கு ஸ்கின்னர் எனும்
தலைமை குக்கின் மேற்பார்வையில் குஸ்டோவின் ரெஸ்டாரன்ட் நடைபெற்று வருகிறது. குஸ்டோவின்
இறந்தபின் அவரது ரெஸ்டாரன்ட் மேலும் ஒரு ஸ்டாரை இழந்து 3 ஸ்டார் ஹோட்டலாக மாறிவிடுகிறது.
ரெமி அங்கு சென்ற நேரம் லுங்குய்னி எனும் வாலிபனைக் காண்கிறது. ரெஸ்டாரன்டின் கழிவுகளை
அகற்றும் நபராக பணியமர்த்தப்படும் லுங்குய்னி, யாருக்கும் தெரியாமல் அங்கு தயாராகிக்கொண்டிருந்த
சூப்பில் ஏதேதோ போட்டு நாஸ்தியாக்கிவிடுகிறான். சூப்பின் வாசத்தை வைத்து அது நாசகதியிலிருப்பதை
உணரும் ரெமி, தன் திறமையைப் பயன்படுத்தி யாருக்கும் தெரியாமல் அந்த சூப்பை சரிசெய்யமுயலுகிறது.
அது சரிசெய்வதை லுங்குய்னி பார்த்துவிடுகிறான். அதேநேரத்தில் லுங்குய்னி சூப்பை கிளறியபோது
பார்த்துவிடும் ஸ்கின்னர், லுங்குய்னியை வாங்கு வாங்கென வாங்கிக்கொண்டிருக்கும்போது
தவறுதலாக அந்த சூப் ரெஸ்டாரன்டில் ஒருவருக்கு பரிமாறப்படுகிறது. அந்த நபர் ஒரு உணவு
விமர்சகர். அவர் சூப் பிரமாதம் என சொல்ல, லுங்குய்னியை பரிசோதிக்க முடிவெடுக்கிறார்
ஸ்கின்னர். அதேநேரத்தில் எலியைப் பார்த்துவிடும் ஸ்கின்னர், அதை கொன்றுவிடும்படி லுங்குய்னியிடம்
கட்டளையிட, அவன் அதைக்கொல்லாமல் அதனிடம் டீல் பேசுகிறான். டீலின்படி ரெமி லுங்குய்னிக்கு
உதவ ஆரம்பிக்கிறது. ஆனால் எப்படி?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஏதேதோ
முயற்சிகளுக்குப்பின் ரெமியும் லுங்குய்னியும்
ஒரு ஐடியாவைக் கண்டறிகிறார்கள். லுங்குய்னியின் தலைமுடியை ஸ்டியரிங்காக பயன்படுத்தி
ரெமி அவனை இயக்க ஆரம்பிக்கிறது. அதன்மூலம் கிச்சனில் அவன் தொப்பிக்குள் ஒளிந்துகொண்டு
அவனை இயக்கி சமைக்க ஆரம்பிக்கிறது. குஸ்டோ ரெஸ்டாரன்டின் புகழ் பரவுகிறது; லுங்குய்னியின்
புகழும் தான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஒருகட்டத்தில்
குஸ்டோவின் வாரிசுதான் லுங்குய்னி எனும் உண்மையைக் கண்டறியும் ஸ்கின்னர், குறுக்கு
வழியில் அவனை ரெஸ்டாரன்டை விட்டுத் துரத்த முயற்சிக்கிறார். இதை அறியும் ரெமி குஸ்டோவின்
வாரிசு லுங்குய்னி என்பதற்கான டி.என்.ஏ ரிப்போர்டை ஸ்கின்னரிடம் இருந்து பறித்து லுங்குய்னியிடம்
தந்து அவனை ஓனராக மாற்றுகிறது. அதன்பின் பேரும்புகழும் அடையும் லுங்குய்னிக்கும் ரெமிக்கும்
ஒரு கட்டத்தில் பிரச்சனை வருகிறது. லுங்குய்னியின் மீதான கடுப்பில் இருக்கும் ரெமி
ஏதேச்சையாக தன் குடும்பத்தையும் குழுவையும் கண்டறிகிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">குஸ்டோ
ரெஸ்டாரன்டின் புகழ் மீண்டும் பரவ, அது ஆன்டன் ஈகோ எனும் உணவு விமர்சகரின் காதை எட்டுகிறது.
இவர்தான் குஸ்டோவின் 5 ஸ்டார் ரெஸ்டாரன்ட் 4 ஸ்டாராக மாற காரணமானவர். இவரை திருப்தி
படுத்துவது மிகக்கடினம். அவர் லுங்குய்னியைச் சந்தித்து உன் உணவுத்திறமையை நாளை என்னிடம்
வெளிப்படுத்து என்கிறார். ஆனால் அன்றிரவு ரெமிக்கும் லுங்குய்னிக்கும் பிரச்சனை பெரிதாக
, கோவமான ரெமி தன் குடும்பத்தையே கிச்சனுக்கு அனுப்பி கிடைத்ததைத் திங்க சொல்கிறது.
என்னதான் இருந்தாலும் ரெமியிடம் தான் நடந்துகொண்டது தவறு என உணரும் லுங்குய்னி அதனிடம்
மன்னிப்பு கேட்க வருகிறான். ஆனால் ரெமி தன் குடும்பத்தையே அழைத்துவந்து திருடுவதைப்
பார்க்கும் லுங்குய்னி கோபத்தில் ரெமியைத் திட்டி அனுப்பிவிடுகிறான். இன்னொருபுறம்
சோகமாக வெளியேறிய ரெமியை ஸ்கின்னர் கடத்திவிடுகிறான். அடுத்தநாள் ஆன்டன் ஈகோ வர, என்ன
நடந்தது என்பது கிளைமேக்ஸ்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">நல்ல
உணவு, நல்ல புத்தகம், நல்ல சினிமா இவை மூன்றும் நம்மை கடந்தகாலத்துக்கு உடனே அழைத்துச்சென்றுவிடும்.
எடுத்துக்காட்டாக நீங்கள் திரையரங்கில் பார்த்த நல்ல சினிமாவை எப்போதாவது நினைவுக்குக் கொண்டுவந்தால் அந்த சினிமா மட்டும் நினைவுக்கு வராது.
அதனுடன் அன்றைய நாளில் அந்த சினிமாவை நீங்கள் பார்க்கும்முன் நடந்த நிகழ்வுகளும் நினைவுக்கு
வரும். நான் சின்ன வயசில் தீவிர கேப்டன் ரசிகன். அவருடைய வல்லரசு திரைப்படம் வந்தபோது
அதைப்பார்க்க எங்கள் குடும்பத்துடன் (ஒரே டி.வி.எஸ் 50-ல் 5 பேர்) சென்ற காட்சிகள்
அப்படியே நினைவுக்கு வருகின்றது. முன்னே இருக்கும் கேப்பில் நானும் என் நடுத்தம்பியும்
அமர, அப்பா ஓட்ட, அம்மாவின் மடியில் கடைசித்தம்பியுடன் வண்டியில் செல்லும்போது ஏதோ
நான் ப்ளைட் ஓட்டும் விமானிபோல் வண்டியைப் பிடித்துக்கொண்டு ‘த்ர்ர்ர்ர்ர்ர்ரு’ என்று
சவுண்டு விட்டுக்கொண்டே போனது இப்போது நினைவுக்கு வருகிறது. திரையரங்கில் இடைவேளையில்
1 ரூபாய்க்கு 5 முறுக்கு என வாங்கி தம்பியிடம் இருந்து கடலை உருண்டைக்கு எக்ஸ்சேஞ்ச்
செய்தது; கேப்டன் சுவரில் கால்வைத்து விடும் பேக் கிக்கைப் பார்த்து அதே போல முன்னால்
இருப்பவர் மண்டையில் உதைத்தது என அந்நினைவுகள் என்றும் மறக்கமுடியாதவை. இத்தனைக்கும்
அப்போது எனக்கு என்ன வயதிருக்கும் என்பதைக்கூட என்னால் யோசிக்கமுடியவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இதேபோல்
பார்த்திபன் கனவு புத்தகம்; நான் பனிரென்டாம் வகுப்பு படிக்கும்வரை விடுமுறை என்றாலே
எனது பெரியம்மாவின் வீட்டுக்கு சென்றுவிடுவது வழக்கம். அங்கு தறிக்கு பாவு போடும் தொழில்
செய்வார்கள். நான் பாவுக்கான நூல்கட்டை சுற்றிக்கொண்டிருப்பேன். பத்தாம் வகுப்பு விடுமுறையில்
செல்லும்போது என் சின்ன அண்ணன் பார்த்திபன் கனவு புத்தகத்தை கொண்டுவந்தார். காலை 7
மணிக்கு நூல்கட்டை சுற்றிக்கொண்டே அதைப்படிக்க ஆரம்பித்த நான் 11 மணிக்கு தான் சாப்பிடவே
போனேன் முடித்துவிட்டு. எப்போது 8.30 மணிக்கே சாப்பிட்டுவிடும் நான் சாப்பாட்டைக்கூட
மறந்துவிட்டு படித்துக்கொண்டிருந்தேன். அதன்பின் வாங்கிய திட்டுகள் மறந்தாலும் ‘இவனுக்கு
என்ன ஆச்சு?’ என்று மனதினுள் நினைத்தவாறே கிட்டத்தட்ட ஐந்தாறுமுறை சாப்பிட அழைத்த பெரியம்மாவின்
பரிதாபமான முகம் இன்றும் மறக்காது. இதேபோல் அங்கு நான் தங்கியிருந்த காலங்களில் என்
கேர்ள் பிரண்ட் தந்தையின் பழைய புத்தகக்கடையும்
என்றும் மறக்கவே மறக்காது; அங்குதான் இரும்புக்கை மாயாவியிலிருந்து கிட்டத்தட்ட 500-க்கும்
மேற்பட்ட காமிக்ஸ்களைப் படித்திருப்பேன். இதேபோல் நல்ல உணவுக்கான எடுத்துக்காட்டாக
இட்லியைக்கூறுவேன். இப்போது கூட என் பேவரைட் இட்லி தான் . இட்லியைப் பார்த்ததும் ஒருகாலத்தில்
தனியொருவனாக இருந்து 46 இட்லிகளை ஒரேவேளையில் சாப்பிட்ட நினைவு கண்டிப்பாக வந்துவிடும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">எதற்கு
இப்படி என் சரிதத்தைக்கூறி உங்கள் நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறேன் என்றால் படத்தின்
கிளைமேக்ஸ் பற்றி கூறவே. ஆன்டன் ஈகோ, ரெமியின் உணவைச்சாப்பிடும்போது தன் சிறுவயது நினைவுக்குப்போவார்
அல்லவா? அந்த நேரத்தில் நானும் மெய்மறந்தேன். அந்த நேரத்தில் நான் முதல் மூன்றுபேராவில்
சொன்னேன் அல்லவா ? அந்த நினைவுக்குள் சென்றேன். நான் என் தம்பிகளோடு சேர்ந்து திறந்தபோது
நான் பார்த்த முதல் புகைப்படம் இத்திரைப்படத்தைப் பற்றியது. அதில் ரெமியும் லுங்குய்னியும்
சமைத்துக்கொண்டிருக்கும் காட்சி. இந்த படத்த எப்படியாச்சும் பாக்கனும்டா என்று என்
தம்பியிடம் நான் கூறியது நினைவுக்கு வந்தது. ஆம்; என்றோ நான் பார்க்கவேண்டும் என்று
நினைத்து மறந்த ஒரு திரைப்படம் என் வாழ்க்கையின் அதிஅற்புதமான ஒரு நிகழ்வை நினைவுக்குக்கொண்டுவந்தது.
என்னை அறியாமலே ஐந்து நிமிடம் ஒரு சிறுபையனைப்போல் உணர்ந்தேன். சாரி, விமர்சனத்துக்குப்
போகலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">படத்தின்
கதையைப் பற்றி பார்த்தாயிற்று; டெக்னிசீயன்களைப் பற்றியும் இசையைப்பற்றியும் பார்க்கலாம்
என்றால் இந்த பதிவு இன்னும் பத்து மடங்கு அதிகமாகும். பிக்சார் நிறுவனத்தின் படைப்பு
என்பதனால் தரத்து ஒருதுளிகூட குறைவில்லை. ரெமி தன் குடும்பத்தைப் பிரிந்தபின் குஸ்டோவின்
வழிகாட்டுதலைத்தொடர்ந்து பாரிஸின் அன்டர்க்ரவுண்டில் ஓடி மேலே வரும் காட்சியில் வரும்
அனிமேசன் ஒன்று போதும் தரத்தை விளக்க; அதி அற்புதமான அனிமேசன் . அதேபோல் படத்தின் திரைக்கதையும்
எந்த இடத்திலும் தொய்வில்லாமல் வேகவேகமாக முன்னேறிப்போய்க்கொண்டே இருக்கிறது. படத்தின்
மையக்கரு யார்வேண்டுமானாலும் வெற்றிபெறலாம் என்பதே; இன்னும் சிம்பிளாக சொல்லவேண்டுமெனில்
3 இடியட்ஸ் ,சாரி நண்பன் திரைப்படத்தில் வரும் ‘உனக்கு பிடிச்ச துறைய தேர்ந்தெடுத்துக்க;
அதுல உன் திறமைய வளத்துக; வெற்றியத்தேடி நீ ஓடாத; வெற்றி உன்னத்தேடி தானா வரும்’ என்பது
தான். அனிமேசன் ரசிகர்கள் மட்டுமின்றி மற்றவர்கள் உட்பட அனைவரும் கண்டிப்பாக தவறவிடக்கூடாத
படம். இந்த திரைப்படத்தை ஏற்கனவே பார்த்து, இதை மிக விரும்பியவர்களுக்கு நான் பரிந்துரைக்கும்
மற்றொரு திரைப்படம் The Hundred Foot Journey (2014). இதுவும் உணவு சம்பந்தமான அருமையான
திரைப்படம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">பின்குறிப்பு
– பிக்சார் பற்றி ஹாலிவுட் பாலா அண்ணனின் மின்புத்தகம் யாரிடமாவது இருந்தால் அதை எனக்கு
அனுப்பிவைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். Mail ID – </span><a href="mailto:Joinmegu@gmail.com"><span style="font-family: "Latha","sans-serif";">Joinmegu@gmail.com</span></a><span style="font-family: "Latha","sans-serif";">. <o:p></o:p></span></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-59949549786860784762016-03-03T10:21:00.003+05:302016-03-03T10:23:32.361+05:30NTR’s 25- NANNAKKU PREMATHO – சினிமா விமர்சனம்<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%; mso-bidi-font-size: 11.0pt;">(முன்குறிப்பு
– இக்கட்டுரை திரைப்படம் வந்தபோது எழுதியது.
வேலைப்பளுவின் காரணமாக போஸ்ட் செய்ய இயலவில்லை. இது கொஞ்சம் பெரிய கட்டுரை.
ஆனால் போர் அடிக்காமல் செல்லும் என நினைக்கிறேன். எனக்கு கட்டுரையெல்லாம் வேண்டாம்,
திரைப்படத்தைப்பற்றி மட்டும் பார்த்தால் போதும் என்பவர்கள் கடைசி 6 பாராவை மட்டும்
படியுங்கள்.)<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNzOLUb8xZ19hw-RlPmA2nQO6N8UzfmQEQBR6aXHxdbQ5bhPXLh2-5Zp4AMBv58H8q21K-Q3BVD-Ul4kaK-ilROxJRtRhW6gp-rIY1YIoRt8_1kXfpDONCQ7pzFNTNVShn8O_DlgTmOCs/s1600/nannakureleasedate.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="494" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNzOLUb8xZ19hw-RlPmA2nQO6N8UzfmQEQBR6aXHxdbQ5bhPXLh2-5Zp4AMBv58H8q21K-Q3BVD-Ul4kaK-ilROxJRtRhW6gp-rIY1YIoRt8_1kXfpDONCQ7pzFNTNVShn8O_DlgTmOCs/s640/nannakureleasedate.jpg" width="640" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">தெலுகு
சினிமா என்றாலே நம் ஊர் ஆட்களுக்கு சிறிது இளக்காரம் என்றே சொல்லலாம். ‘என்னய்யா படமெடுக்கறாய்ங்க? கிளிப்பச்ச கலர் சட்ட, கடல்நீல
கலர் ஃபேண்டுல அவிய்ங்கள பாத்தாலே சிரிப்பு தாங்கல. இது போதாதுனு பண்ணுவானுங்க பாரு
ராவடி, குதிரைய படுக்கப்போட்டு வீலிங் அடிக்கறது, தொடய தட்டி முன்னாடி போற ரயில்ல ரிவர்ஸ்ல
போக வைக்கறதுனு யப்பா! ஆளவிடுங்கடா சாமி’ என்பதே பெரும்பாலோனோர் தெலுகு சினிமாக்களைப்
பற்றிய பொது அபிப்ராயமாக இருக்கும். காரணம் நம் ஆட்கள் தெலுகு திரைப்படங்களில் இதுமாதிரி
வரும் அட்டுக் காட்சிகளை மட்டும் காட்டிவிட்டு இதுதான் தெலுங்கு படம் என்ற முடிவுக்கு
உடனுக்குடன் வந்துவிடுவதே. என்னிடம் யாராவது வந்து பக்காவான கமர்ஷியல் படம் ஏதாவது
இருந்தால் சொல்லுங்கள் பார்க்கவேண்டும் என்று கேட்டால் , அவர்களுக்கு நான் பரிந்துரைப்பது
தெலுங்கு சினிமாக்களாகத்தான் இருக்கும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">தெலுகு
சினிமாக்களுக்கென்று ஒரு எழுதப்படாத விதி உள்ளது;
படம் முடியும்முன்பு கடைசியில் தேவையே இல்லையெனினும் கண்டிப்பாக ஒரு குத்து
சாங் இருந்தே ஆகவேண்டும்; பெரிய ஹீரோ என்றால்
படுபயங்கரமான பில்டப்புடன் ஓப்பனிங் காட்சி இருக்கவேண்டும்; சிரஞ்சீவி குடும்பத்து
ஆட்கள் எனில் கண்டிப்பாக ஒரு இன்ட்ரோ சாங் போட்டே ஆகவேண்டும். அதன்பின் ஹீரோவின் குடும்ப
அறிமுகம், நண்பர்களுடன் சேர்ந்து காமெடி, ஹீரோயின் இன்ட்ரோ, ஹீரோயினுடன் லவ்; இதற்கிடையில்
பிட்டுபிட்டாக நாலைந்து ஆட்கள் ‘ரேய்! எக்கட
உண்ணார்ரா’னு அடித்தொண்டையில் இருந்து கத்திக்கொண்டு யாரையோ (!) தேடுவதும் நடக்கும்.
அவர்களெல்லாம் வில்லனின் ஆட்கள் என்று நான் சொல்லவேண்டியதில்லை. ஹீரோவும் வில்லனின்
ஆட்களும் சந்திக்கும்போது ஒரு ஃபைட். அதில்
ஹீரோ , வில்லனின் ஆட்களை டி-20-யில் கிறிஸ் கெய்ல், சிக்ஸ் விலாசுவது போல் பறக்கவிட்டதும்
இடைவேளை. இடைவேளை முடிந்தபின் ஒரு ப்ளாஷ்பேக்; ப்ளாஷ்பேக்கை தொடர்ந்து வில்லனுக்கும்
ஹீரோவுக்குமான மறைமுக மோதல். ப்ளாஷ்பேக் காட்சிகளிலோ அல்லது ப்ளாஷ்பேக் முடிந்த பின்னோ
கண்டிப்பாக பிரம்மானந்தம் வந்துவிடுவார். கடைசியில் வில்லனை அழித்து சுபம். இதிலும்
ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் ஹீரோ, நேராக வில்லனைக்கொன்று விட்டால், அவர் ஒரு அன்டர்கவர்
காப் என்பதனை ஊகித்துக்கொள வேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இது
டைப்-1 எனில் இன்னொன்று உள்ளது. அது ஒரு பெரிய வீடு, ஊரே மதிக்கும் பெரிய மனிதர். அவருக்கு
மனதில் ஏதாவது பிரச்சனை இருக்கும். அதனால் வீடே பொலிவிழந்து காஷ்மீர் பார்டரில் காவல்காக்கும்
எல்லைப்படையினரைப் போல் ஆளாளுக்கு இயந்திரத்தனமாக
இருப்பார்கள். கண்டிப்பாக அந்த வீட்டில்தான் ஹீரோயின் இருப்பார். ஹீரோயினுக்கு உதவ
ஹீரோ வருவார். அந்த வீட்டில் உள்ள அனைவரையும் திருத்தி நல்வழிப்படுத்தி ‘ஆசைஆசையாய்
இருக்கிறதே! இது போல் வாழ்ந்திடவே’ என்பது போன்று ஒரு பாட்டைப் போட்டு முடித்துவிடுவார்கள்.
இந்த டைப்பில் உள்ள முக்கிய விசயம், ஹீரோ உலகளவில் பெரும்பணக்காரராக இருக்கும் ஒருவரின்
மகனாகத்தான் வரவேண்டும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">தெலுகில்
வரும் 80% கமர்ஷியல் திரைப்படங்களை மேற்கூறிய இரண்டு டைப்களில் அடக்கிவிடலாம். ஆனால்
திரைக்கதை? ஒரே கதையைப் பலமுறை திருப்பிப்போட்டு எடுத்தாலும் அதன் ப்ரெஷ் மாத்திரம்
குறையாமல் பார்த்துக்கொள்வது தான் தெலுகின் ஆகச்சிறந்த செயல் என்றே கூறுவேன். உங்களுக்கு
டவுட்டாக இருக்கும்பட்சத்தில் அத்தாரின்டிக்கு தாரேடி, சன் ஆஃப் சத்யமூர்த்தி, ஸ்ரிமந்துடு,
கோவிந்துடு அந்தரிவாடலே, ப்ருந்தாவனம் போன்ற படங்களையும் விக்ரமார்க்குடு, தூக்குடு,
பாஷா, போக்கிரி, ராமய்யா வஸ்தாவய்யா போன்ற
படங்களையும் பாருங்கள். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">என்னதான்
தெலுகு திரைப்படங்களில் ஒரே கதையாயிருந்தாலும் அது எடுக்கப்படும் விதங்கள் ஹீரோக்களுக்கு
ஏற்றவாறு மாறுபட்டுக்கொண்டே இருக்கும். எவ்வளவு மொக்கையாக எடுக்கப்பட்டிருந்தாலும்
மினிமம் ஒருமுறையாவது பார்க்கும் அளவிற்காவது எடுத்து விடுவார்கள். அதேபோல் தெலுங்கில்
ஹீரோக்களும் ஓரளவு பார்க்கும் வண்ணமும், தாருமாறான நடனத்திறமைகளும் , உடலளவில் பிட்னெஸ்ஸுடனும்
இருப்பார்கள். தெலுகில் இருக்கும் ஒரே தலையாய பிரச்சனை என்னவெனில் வாரிசு சினிமா. இப்போதைய
காலகட்டத்தில் தெலுங்கில் சினிமா அறிமுகம் இல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர்
ஹீரோ ஆவதென்பது, சூரியனில் ஆழ்துளை கிணறு போட்டு நீர் எடுத்து, அதில் பருப்புசாம்பார்
செய்வது போன்றதொரு இயலா காரியம். ஆனால் ஒருவிஷயம்; ஒரு ஹீரோவை ஆந்திரவாலாக்களுக்கு
பிடித்துவிட்டால் அவருக்காக உயிர்விடவும் துணியுமளவிற்கு டைஹார்ட் ரசிகர்கள் சூழ்ந்திருக்கும்
மாநிலம் ஆந்திராவும், தெலுங்கானாவும் தான். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள்
இருப்பதும் அங்குதான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd3WB16lINvK0mX0JeJwWQz9SUY-jTIP2kSQuNLO11ZRGyE1hcHm5-y9Gy6vSwvafoGnIB4M3eSKXJbkuGGsrXGkgnOSola7BH2Kf8F9lpBJ5GIrQPuPbqZ0TiSTiz2SVrCJkOT1Aemrg/s1600/nannaku-prematho-first-day-collections.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="236" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd3WB16lINvK0mX0JeJwWQz9SUY-jTIP2kSQuNLO11ZRGyE1hcHm5-y9Gy6vSwvafoGnIB4M3eSKXJbkuGGsrXGkgnOSola7BH2Kf8F9lpBJ5GIrQPuPbqZ0TiSTiz2SVrCJkOT1Aemrg/s640/nannaku-prematho-first-day-collections.jpg" width="640" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">சரி
இப்போது மேட்டருக்கு வருவோம். என்.டி.ஆர் - இவர் பெயரைக் கேள்விப்படாதவர்கள் தென்னிந்திய அளவில்
யாரும் இருக்கமாட்டார்கள். நம் எம்.ஜி.ஆரைப் போல் ஆந்திர மக்களின் திலகமாக இருந்து
அரசியலில் தனக்கென்று ஒரு இடம்பிடித்து, அழிந்துகொண்டிருந்த டோலிவுட்டிற்கு உயிரூட்டி
, ஆந்திர மக்களின் நெஞ்சங்களில் இன்றும் ‘பெத்தத் தேவுடு’ வாக வாழ்ந்து கொண்டிருக்கும்
பெயர் இது. அவருக்கு 8 மகன்கள், 4 பெண்கள். இதில் 4-வது மகனான ஹரிகிருஷ்ணா திரைத்துறையில்
நடிக்க ஆரம்பித்த காலம் தெலுங்கு சினிமா வரலாற்றின் கருப்புப்பக்கங்கள் என்றே சொல்லலாம்.
‘அவன விடாதீக, கொல்லுக’ என்று வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சொல்லும் காதல் தண்டபாணி,
அவருடைய இளமைக்காலத்தில் ஹீரோவாக நடித்திருந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கும்
ஹரிகிருஷ்ணாவின் படங்கள். கன்னட ஹீரோக்களையோ அடித்துண்ணும் அளவிற்கு பர்சனாலிட்டியுடன்
ஹரிகிருஷ்ணா களமிறங்கிய படங்களைப் பார்த்து சீதபேதியில் ஆந்திரமக்கள் தவித்த காலமும்
உண்டு. ஆந்திரமக்களை அவதிக்குள்ளாக்குவதை விரும்பாத பெரியவர் மகனை ராஜ்யசபை எம்.பி
ஆக்கி அனுப்பிவிட்டார். ஹரிகிருஷ்ணாவின் தொல்லைகளுக்கு பாலகிருஷ்ணாவே தேவலை என்றெண்ணிய
மக்களுக்கு அப்போதைய நிலையில் சீரஞ்சீவி அருமையாகத்தெரிய மெகாஸ்டார் ஆனார் சீரஞ்சீவி.
பாலகிருஷ்ணாவோ ‘நேன் புட்டிண்தி’ என்று தொடர்ந்தாற்போல் டயலாக் பேசிப்பேசி தொடையைத்
தட்டித்தட்டி புண்ணாக்கிக்கொண்டே போனார். இருந்தாலும் பெரியவரின் மானம் காத்த பிள்ளையாய்
அவர் திரையுலகில் விளங்கினார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஹரிகிருஷ்ணாவுக்கு
இரண்டு மனைவிகள். முதல் மனைவியை ஊரறியத்திருமணம் செய்திருந்த ஹரிகிருஷ்ணா , இரண்டாம்
மனைவியைத் தனிமைப்படுத்தியே வைத்திருந்தார். இரண்டாம் மனைவிக்குப் பிறந்தவர்தான் தரக்
ராம். பின் என்ன பிரச்சனையாலோ இரண்டாம் மனைவியை முழுவதுமாக ஒதுக்கிவைக்க ஆரம்பித்தார்.
அப்போதைய காலகட்டத்தில் ஜூனியர் என்.டி.ஆர் குடும்பத்தைக் கவனிக்க யாருமில்லை. ஜூனியரின்
தாய், தனியே வேலைக்குச் சென்று தன் மகனை வளர்த்து வர, இதைக்கேள்விப்பட்ட பெரியவர் ஜூனியரைத்
தன்னுடனே அழைத்துச்சென்றார். ஆனால் சின்னவரை பெரியவரின் குடும்பத்தில் யாரும் ஆதரிக்கவில்லை.
இருந்தாலும் பெரியவருக்கு ஜூனியரைப் பார்த்ததும் ஒரு நம்பிக்கை வந்தது. தனக்குப் பின்
தன் பெயரைக் காப்பாற்றப்போவது இவன் என்றெண்ணி தரக் ராம் எனும் பெயரை நந்தமுரி தரக்
ராமாராவ் எனமாற்றி உண்மையான ஜூனியராக்கினார். தாத்தா இருக்கும் வரை ஓரளவு அவப்பெயரிலிருந்து
தப்பித்துக்கொண்டிருந்த ஜூனியரும் அவர் தாயாரும், தாத்தாவின் இழப்பிற்குபின் நிராதரவானார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அக்காலக்கடத்தில்
ஜூனியரின் தாயார் ஒரு சூளுரை எடுத்ததாகக்கூறப்படுகிறது. எந்த குடும்பத்தில் தன்னையும்
தன் மகனையும் ஏற்கவில்லையோ, அதே குடும்பமே வந்து தங்களை மீண்டும் அழைத்துப்போகச் செய்வேன்
என்பதே அது. அதற்காக ஜூனியரைத் தயார் படுத்தினார் அந்த அம்மையார். சிறுவயதிலிருந்தே
நடனத்தின் மீது தீராக்காதல் கொண்டிருந்த ஜூனியரை குச்சிப்புடி நடனவல்லுநராக மாற்றினார்.
பிறப்பினாலேயே இருந்த நடிப்புத் தாகமும் மிதமிஞ்சி இருக்க நடிப்புதான் தன்னுடைய இலக்கு
என்பதை ஜூனியரின் ஆழ்மனதில் விதைத்தார். இடையிடையே தாத்தா இருக்கும்போது சிறுவன் கேரக்டரில்
நடித்துக்கொண்டிருந்த ஜூனியர், தாத்தாவின் டைரக்சனில் வெளியான ராமாயணம் திரைப்படத்திற்காக
சிறந்த குழந்தைநட்சத்திரத்திற்கான தேசியவிருது வாங்கினார். அப்போதைய காலகட்டத்தில்
இயக்குநர் குணசேகர்(ருத்ரமாதேவி இயக்குநர்) பரிந்துரையின் பேரில் ராஜமௌலியைச் சந்தித்தார்
ஜூனியர். இருவரும் இணைந்து படம் செய்வதாக முடிவெடுத்த ஆண்டு 1999. ஆனால் ஜூனியருக்கு
முதலில் வந்த திரைப்படம் நின்னு சூடாளனி (2001). முதல் படம் வெளியாகும்போது ஜூனியரின்
வயது 18. படம் அட்டு ப்ளாப். யாருடா பால் குடிக்கிற
அமுல்பேபிய ஹீரோவா போட்டு படமெடுத்தது என்றளவிற்கு விமர்சனம். ஹீரோயினைப் போல் மூன்று
மடங்கு சைசில் இருக்கும் ஹீரோவைப் பார்த்ததும் இவர் ஹரிகிருஷ்ணா பார்ட்-2 என்று மக்கள்
தெறித்தோட ஆரம்பித்தார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஆனால்
அதை மாற்றினார் ராஜமௌலி. ப்ளான் செய்த மாதிரி என்.டி.ஆரின் நடிப்பில் ராஜமௌலி தன் முதல்
திரைப்படமான ஸ்டூடன்ட் நம்பர்.1ஐ இயக்கினார். ஓரளவு ஃபேமஸாக இருந்த எம்.எம்.கீரவாணி
இசையில் பாடல்கள் வெளியாகி அனைத்தும் செம ஹிட் அடிக்க, பாடல்களுக்காகவே படம் தாருமாறாக
ஓடியது. அதே ஆண்டில் வெளிவந்த சுப்பு எனும் திரைப்படமும் பேரைக் கெடுக்காமல் ஓரளவு
காப்பாற்றிக் கொடுத்தது. அதன்பின் 2002-ல் வெளிவந்து என்.டி.ஆரின் முதல் ஆக்சன் ப்ளாக்பஸ்டர்
ஆதி. விவிவி-யின் இயக்கத்தில் வெளிவந்து அந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிசை அடித்துத் துவைத்துப்
போட்டது. அதே ஆண்டில் வெளியான அல்லரி ராமுடு ஒரு ஆவரேஜாக அமைந்தது. ஜூனியர் என்.டி.ஆர்
வளரும் நடிகர்களில் அதிவேகமாக வளர்ந்து வருபவராக மாறினார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">மீண்டும்
ராஜமௌலியுடன் இணைந்த சிம்மாத்ரி 2003-ல் வெளிவந்து ஆந்திராவைத் தாக்கியது. ‘நூ விசிலேஸ்தே
ஆந்த்ரா சோடாபுட்டி’ பாடலில் என்.டி.ஆரின் ஆட்டத்தைப் பார்த்து அதிர்ந்தது ஆந்திரா
மட்டுமல்ல; முழுக்க முழுக்க ஆக்சனை மட்டும் முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம்
என்.டி.ஆரின் மிக முக்கியமான மூன்று படங்களில் ஒன்று எனலாம். இதன்பின் பூரி ஜெகந்நாத்
இயக்கத்தில் வெளியான ஆந்த்ராவாலா பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பெரிய பட்ஜெட்டில்
வெளியாகி மரண ப்ளாப் ஆகியது (இதற்கு காரணம் பூரி ஜெகந்நாத்தின் ராசி எனலாம். பூரி படம்
எடுத்தால் ஒன்று மெகா ப்ளாக்பஸ்டர் ஹிட் அல்லது படுபயங்கர ப்ளாப் எனும் இருவகையிலே
அடங்கும்). அதன்பின் தொடர்ந்தாற்போல் மூன்று ப்ளாப்களைத் தெவிட்டத் தெவிட்டக் கொடுத்தார்
என்.டி.ஆர். அதன்பின் அசோக் எனும் திரைப்படம்
வந்து ஓரளவு என்.டி.ஆரின் பெயரைக் காப்பாற்றியது. அதைத்தொடர்ந்து வந்த ராக்கி பெயர் சம்பாதித்தாலும்
பாக்ஸ் ஆபிசில் அவுட். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இம்முறை
மீண்டும் ராஜமௌலி வந்தார். இருவரும் யமதொங்கா-வில் இணைந்தனர். ஜூனியர் என்.டி.ஆரின் சினிமா வாழ்க்கையை அவர் உருவத்தை
வைத்து இரு காலக்கட்டங்களாக பிரிக்கலாம். யமதொங்காவிற்கு முன், யமதொங்காவிற்கு பின்.
முன் அவர் உருவத்தைப் பார்த்தால் செந்திலைப் பார்த்தது போல் இருக்கும். உருட்டுக்கட்டையைப்
போல் பார்க்க தந்தையின் ஜெராக்ஸாக இருந்தவர் 30 கிலோ எடையைக் குறைத்து எலும்பும்தோலுமாய்
வந்தார். யமதொங்காவில் நடித்ததும் சிம்மாத்ரியில் நடித்ததும் ஒருவரே என்று கூறினால்
நம்புவதற்கே கடினமாய் இருக்கும்படியான உருவமாற்றம். அதுமட்டுமா? என்.டி.ஆரின் நடனத்
திறமையை உலகறியச்செய்த படமென்றால் அது யமதொங்கா தான். ரம்பாவுடன் வரும் டிஸ்கோ பாடலில்
என்.டி.ஆர் போட்டிருக்கும் ஸ்டெப்களில் பத்து சதவீதம்தான் எல்லாபுகழும் பாடலில் விஜய்
போட்டிருப்பார் எனில் என்.டி.ஆரின் டான்ஸ் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.
டான்ஸ் மட்டுமில்லாமல் நடிப்பிலும் தன்னை மேன்மேலும் இம்ப்ரூவ் செய்த என்.டி.ஆர் ,
ஒரு முழுப்படத்தையும் தான் ஒருவன் மட்டுமே தாங்க முடியும் என்பதை ஸ்க்ரீன் ப்ரசென்ஸில்
காண்பித்த திரைப்படம் எமதொங்கா.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அதைத்தொடர்ந்து
2008-ல் வெளிவந்த கான்ட்ரி ஊத்திக்கொள்ள திடுதிப்பென்று ஓராண்டு நடிப்புக்குத் தடைவிதித்து
விட்டு தாத்தாவின் கட்சியான தெலுங்கு தேசத்தில் இணைந்து கட்சிக்காக பிரச்சாரம் செய்யக்கிளம்பினார்.
பிரச்சாரம் முடிந்துவிட்டு வரும் வழியில் ஒரு பெரிய விபத்து நடந்து பலத்த காயங்களுடன்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் (பின்குறிப்பு – கட்சியில் ஏற்றுக்கொள்ள காரணம்
சந்திரபாபு நாயுடுவுக்கு என்.டி.ஆரின் மீது மிகுந்த மரியாதை இருந்தது. மேலும் நாயுடுவின்
உறவினர் மகளை என்.டி.ஆர் மணமுடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் நந்தமுரி
குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை). அந்த விபத்திலிருந்து என்.டி.ஆரின் பொதுவாழ்க்கை
மாறியது எனலாம். அன்றிலிருந்து இன்றுவரை தன் திரைப்படங்களில் ‘குடி, குடியைக்கெடுக்கும்’
என்று சொல்வதற்குமுன் ‘சாலைகளில் பார்த்து பயணியுங்கள்; உங்களுக்காக உங்கள் குடும்பம்
காத்துக்கொண்டிருக்கும்’ என்று அட்வைஸ் சொல்லாமல் படத்தை ஆரம்பிக்கமாட்டார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இரண்டாண்டு
இடைவெளிக்குப் பின் 2010-ல் வெளிவந்த ப்ருந்தாவனம், அதுர்ஸ் இரண்டும் தாருமாரு ஹிட்
அடித்து என்.டி.ஆரை மீண்டும் உச்சத்திற்கு கொண்டுவந்தது. டாப் 3 நடிகர்களில் ஒருவரான
என்.டி.ஆர் அதே காலகட்டத்தில் பொது வாழ்விலும் மிக முக்கியமான இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள
ஆரம்பித்தார். சித்தப்பா பாலகிருஷ்ணா எம்.எல்.ஏ ஆகி மக்களுக்கு தொண்டு செய்தார் என்றால்,
இவரோ தன் ஆதரவாளர்களை எம்.எல்.ஏ ஆக்கி தொண்டு செய்தார். கட்சியில் தனக்கென்று தனியிடம்
பிடித்துக்கொண்ட என்.டி.ஆர் , பெரியவரைத் தெய்வமாக நினைக்கும் மக்கள் மனதிலும் ‘சின்னத்
தேவுடு’ என்றழைக்கும் வண்ணம் பெயர் பெற்றார். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அதன்பின்
தென்னிந்திய அளவில் பெரிய பட்ஜெட்டில் படம் செய்யலாம் என்று இயக்குநர் மெஹர் ரமேஷை
அனுகினார் ஜூனியர். இவர் ஒரு கர்நாடக்ககாரர். என்.டி.ஆரின் ஆந்த்ராவாலா திரைப்படத்தைக்
கன்னடத்தில் இயக்கியவர். எதுக்கு சம்பந்தமே இல்லாம கன்னடத்துக்காரரிடம் ஜூனியர் என்.டி.ஆர்
படம் கொடுத்தார் என்று யோசிக்கத்தோன்றுகிறதா? ஜூனியர் என்.டி.ஆரின் தாயார் கர்நாடகத்தைச் சார்ந்தவர். 2011-ல் வெளிவந்தது சக்தி. தமிழ், தெலுங்கு,
கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக முதல் வாரம் தாருமாறாக ஓடி இரண்டாவது
வாரம் தியேட்டரை விட்டு ஓடியது. அதே ஆண்டு ஊசரவெள்ளி ரிலிசாகி ஆவரேஜாக ஓடியது (இதைத்தான்
வேதாளமாக்கி ப்ளாக்பஸ்டராக்கினார் சிவா). <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">என்ன
செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த என்.டி.ஆரிடம் வந்தார் போயபட்டி சீனு. இவர்
ஆந்திராவின் ஹரி+பேரரசு இணைந்த கலவை. பாலகிருஷ்ணாவுக்கு சிம்மா எனும் அல்டிமேட் ஹிட்டைக்
கொடுத்து டோலிவுட்டைக் கதிகலக்கியவர். அவ்வெற்றியின் சூடு தணிவதற்குள்ளே என்.டி.ஆரிடம்
ஓ.கே செய்துவிட்டார். கீரவாணியின் பாடல்கள் அனைத்தும் செம குத்து குத்தியிருக்க, அதை
டவுன்லோட் செய்து கேட்ட எனக்கு வீடியோ சாங் பார்க்கும் ஆவல் வர, வீடியோ சாங் எங்கும்
கிடைக்காமல் போக, படத்தையே டவுன்லோட் செய்து பார்த்தேன். நான் பார்த்த முதல் என்.டி.ஆர்
திரைப்படம் தம்மு. படத்தை சும்மா ஓட்டி ஓட்டி பார்க்க, ஒரு பேரதிர்ச்சியைக் கண்டு தொண்டை
விக்கித்து நின்றேன். ஹீரோவுக்கும் வில்லனுக்குமான சண்டையில் என்டிஆர் 4 அடி நீள அருவாளை
வைத்து பறந்தவாறே ஒரு சுழற்று சுற்றி வில்லனை நோக்கி வீச, வில்லனோடு சேர்ந்து தென்னைமரம்
துண்டாக சரியும். அடப்பாவிகளா என்று விழுந்து விழுந்து சிரித்தேன். முதல் பாராவில்
சொன்ன லைன் நியாபகம் வருகிறதா? அதே மனநிலையில்தான் நானும் அப்போது இருந்தேன். ஆனால்
யதேச்சையாக தம்மு திரைப்படத்தை முழுவதுமாக பார்க்கும்போது அந்த பனைமரம் வெட்டும் காட்சி
எனக்கு சிரிப்பை மூட்டவில்லை; மாறாக சரியான மசாலா காட்சியாகவே தெரிந்தது. அதன்பின்
ஊசரவெள்ளி பார்த்து என்.டி.ஆர் ரசிகனாக மாறியது பெருங்கதை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஆந்திர
உணவு சாப்பிட்டால் ஒன்று புரியும்; அவர்கள் இனிப்பு செய்தால் அதீத இனிப்பாக இருக்கும்;
காரமென்றால் அதீத காரமாக இருக்கும். எதிலும் அதிகமாக விரும்புவார்கள் திரைப்படத்திலும்
அந்த வழக்கத்திற்கு மாறான அதீதத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவ்வளவே! இதை உலகமகாக்காரணமாக
கொண்டு நாம் அவர்களை மட்டம் தட்டுகிறோம். ஆனால் இந்தித் திரையுலகமே ஆந்திரப்படங்களை
ரசித்து, ருசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் எந்த படத்தை சுட்டு
நடிக்கலாம் என்று பல கான்கள் பரிதவித்துக்கொண்டிருக்கார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">சரி
மீண்டும் நடப்புக்கு வருவோம். போயபட்டி சீனுவுடன் இணைந்த தம்முவும் ஆவரேஜ் சக்ஸஸையே
கொடுக்க உடனடியாக ஒரு சூப்பர்ஹிட் தேவைப்பட்டுக்கொண்டிருந்த என்.டி.ஆர் இம்முறை அனுகியது
சீனு வைட்லா. சீனு வைட்லா எப்படி என்றால் கதை என்னவென்று இவரிடம் கேட்கவே தேவையில்லை.
ஏனென்றால் எல்லா படமும் ஒரேமாதிரியாக எடுக்கும் படுபயங்கர இயக்குநர் இவர். டான் சீனுவானாலும்
சரி, தூக்குடுவானாலும் சரி; ஒரே கதை. ஆனால் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்கு இவர் கேரண்டி.
தூக்குடுவை பாலிஷ் செய்து இவர் பாஷாவை இயக்கினார். தமன் இசையில் பாடல்கள் ஒருபக்கம்
தாருமாறாக ஹிட் அடிக்க, இன்னொருபுறம் என்.டி.ஆரின் ஸ்டைலிஷ் ஆக்சன் மற்றும் ப்ரம்மானந்தம்+நாசர்&கோ
உடனான என்.டி.ஆரின் காமெடியால் படம் பெரிய வசூல் சாதனை செய்தது. இப்படத்திற்குப்பின்
ஜப்பானில் சூப்பர்ஸ்டாரைத் தொடர்ந்து ரசிகர்மன்றம் என்.டி.ஆருக்கு அமைத்தார்கள். பாஷாவின்
ஹிட்டைத் தொடர்ந்து இந்துவில் ஒரு ப்ரத்யோகமான கட்டுரையில் சூப்பர்ஸ்டாரின் அடுத்த
போட்டி ஜுனியர் என்.டி.ஆர் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை என்.டி.ஆரை உயரத்திற்கு
தூக்கிச்சென்றது. அதேநேரத்தில் இந்த காலகட்டத்தில் நந்தமுரி குடும்பத்திற்கு போதாத
காலம் எனலாம். பாலகிருஷ்ணாவிற்கு வழக்கம்போல லயன், சிம்மா கைக்கொடுத்தாலும் குடும்ப
உறுப்பினர்களான கல்யான்ராம் போன்றோர் சினிமாவில் பலத்த அடி வாங்கியிருந்தார்கள். மற்றொருபுறமோ
அல்லு குடும்பத்தினர்களான (அல்லது சிரஞ்சீவி குடும்பத்தவர்) அல்லு அர்ஜூன், ராம் சரண், பவன் கல்யாண் போன்றோர்
அடுத்தடுத்து ஹிட்டடித்து நந்தமுரி குடும்பத்தையே ஒதுங்கவைத்துவிட்டார்கள். இப்படியொரு
நிலையில் நந்தமுரி குடும்பத்தினரின் பெயரைக் காக்கும் ஒரே ஆளாக என்.டி.ஆர் மாத்திரமே
விளங்கினார். அதனாலோ என்னவோ பாலகிருஷ்ணாவுக்கு எப்போதும் இல்லாத கரிசனம் என்.டி.ஆரின்
மீது விழுந்து ‘வாடு நா வம்சத்து மகாடு’னு ஓப்பன் பேட்டி கொடுத்து அணைத்துக்கொள்ள ஆரம்பித்தார்.
எந்த குடும்பம் ஒதுக்கியதோ அதே குடும்பம் மீண்டும் ரெட்கார்பெட் போட்டு அணைத்துக்கொண்டது.
அதே நேரத்தில் தன்னை ஒதுக்கியவர்கள் என்று அவர்கள்மீது என்றும் வஞ்சத்தோடு என்.டி.ஆர்
இருந்ததில்லை. இதற்கு சான்றாக இப்போது திரைக்கு வரவிருக்கும் தோழா திரைப்படத்தை கூறலாம்.
நாகார்ஜூனா, கார்த்தி இணைந்து நடிக்கும் இத்திரைப்படத்தில் முதலில் கமிட்டான என்.டி.ஆர்
, பாலகிருஷ்ணாவுக்கும் நாகார்ஜூனாவுக்கும் இருக்கும் பழையபகையை நினைவில் கொண்டு திரைப்படத்திலிருந்து
விலகிவிட்டார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஆனால்
மீண்டும் பழைய குருடி கதவத்தொரடி என்பதுபோல் ஹைடெக் படத்திலிருந்து விலகி ஒரு பழிவாங்கும்
கதையைத் தேர்ந்தெடுத்தார் என்.டி.ஆர். கப்பர்சிங் (தபாங் தெலுங்கு ரீமேக்) புகழ் ஹரிஷ்
இயக்கிய இந்த படத்தை பார்க்கவிரும்புபவர்கள் நேரே பிரபாஸ் நடித்த மிர்ச்சி படத்தை சிடியில்
வாங்கி பார்த்துவிடுவது நலம்; அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் ஏழே ஏழு வேற்றுமைகள்
தான். மத்தபடி அதே படத்தை, அதே மெத்தேடில், அதே கதையை வைத்து என்.டி.ஆருக்கு வேட்டு
வைத்தார் ஹரிஷ். சரி, போய்த்தொலையுது அடுத்ததாவது ஒழுங்கான படமாக பிடிக்கலாம் என்றெண்ணி
ரபாஷாவில் சைன் செய்தார் என்.டி.ஆர். ரபாஷா ஏதோ தப்பித்து ஓடியது போன ஜென்மத்தில் என்.டி.ஆர்
செய்த புண்ணியம் எனலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">உடனடி
ப்ளாக்பஸ்டர் மீண்டும் தேவைப்பட, அதேநேரத்தில் பூரி கையில் ஒரு கருத்தாழமிக்க கதையுடன்
வந்து சேர்ந்தார். பூரி ஜெகந்நாத்துடன் இணைவது ஒருசக்கர சைக்கிளில் இங்கிருந்து காஷ்மீருக்கு
போவது போன்றது. போய் சேர்ந்தால் பெரும்புகழ்; பாதியிலே விழுந்தால் பலத்த அடி. ரிஸ்க்கை
எடுத்தார் என்.டி.ஆர். அதுவரை ஸ்லிம்மாக இருந்தவர் திடுதிப்பென்று சிக்ஸ்பேக்குடன்
வந்து நிற்க ஒருங்கிணைந்த ஆந்திரா ஸ்தம்பித்தது. குங்க் ஃபூ பாண்டா திடுதிப்பென்று
சிக்ஸ் பேக் உடலுடன் வந்து நின்றால் ஆச்சரியப்படாமல் இருக்கமுடியுமா? டெம்பர் வெளியாகி
மீண்டும் என்.டி.ஆரின் வெற்றிக்கணக்கைத் துவக்கிவைத்தது. டெம்பர் முடிந்ததும் யோசித்தபோது
தான் தன்னுடைய 25-வது படம் அடுத்தது என்ற நினைவுக்கு அவருக்கு வந்தது. ஒரு மாஸ் ஹீரோவாக
உலாவரும் என்.டி.ஆர் இம்முறை தேர்ந்தெடுத்தது த்ரில்லர்+குடும்பக்கதை. அதுதான் நானாக்கு
ப்ரேமதோ. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஒரு
சின்ன கேப். இதுவரை என்.டி.ஆர் நடித்த திரைப்படங்களை ஓரளவு வரிசைக்கிரமமாக பார்த்துவிட்டோம்.
ஆனால் அவர் எப்படி திரைப்படங்களை சூஸ் செய்கிறார் என்பதையும் ஒரு பத்தியில் பார்த்துவிடலாம்.
தெலுங்கில் ஹீரோக்கள் தங்களின் படங்களை தேர்ந்தெடுப்பது செம காமெடியாக இருக்கும். தான்
ஒரு படத்தை ஹிட் கொடுக்கவேண்டுமெனில் இப்போது பேமஸாக இருக்கும் ட்ரென்ட் எதுவோ அதை
அப்படியே மாற்றம் செய்யாமல் எடுத்து ஹிட்டாக்கிவிடுவது. இம்மாதிரிக்கு எடுத்துக்காட்டு
ப்ருந்தாவனத்தை முதன்மையாக கொண்டு அத்தாரின்டிக்கி தாரேடி, கோவிந்துடு அந்தவாரில்லே
போன்ற படங்களும், மகதீராவை முதன்மையாக கொண்டு பத்ரிநாத், ஓம் சக்தி, பத்ரா போன்ற படங்களையும்
குறிப்பிடலாம். மிர்ச்சியை வைத்து ராமய்யா வஸ்தாவய்யா , தூக்குடுவை வைத்து பாஷா போன்ற
படங்களும் அடக்கம். இரண்டாவது தனக்கு எந்த மாதிரி செட் ஆகுமோ அதையே பாலோ செய்வது. இதற்கு
எடுத்துக்காட்டாக மகேஷ்பாபுவை சொல்லலாம். மகேஷ்பாபு தன்னுடைய ட்ரென்டிலிருந்து எப்போது
மாறி நடிக்கவே மாட்டார்; நடித்தாலும் அது ஊத்திக்கொள்ளும். ஆனால் இவ்விரண்டு தாண்டி
மற்றொன்று சுயமாக யோசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது. இந்த விஷயத்தை தெலுங்கில்
செய்யும் இரண்டே இரண்டு ஹீரோக்கள் என்.டி.ஆரும் பவன்கல்யாணும் மட்டுமே. தொடர்ச்சியாக
இவர்கள் இருவரின் 5 படங்களை எடுத்தப்பார்த்தால்
இது விளங்கும். இரண்டு படங்கள் ட்ரென்டை பாலோ செய்தும், இரண்டு படங்கள் தங்களின் இமேஜை
வெளிப்படுத்துவதாகவும் ஒரு படம் தங்களின் பரிட்சார்ந்த முயற்சியாகவும் இருக்கும். என்.டி.ஆரின்
பரிட்சார்ந்த முயற்சிகளை நோக்கினால் ஸ்டூடன்ட் நம்பர்-1, அசோக், நா அல்லுடு, ப்ருந்தாவனம்,
கான்ட்ரி, டெம்பர், ஊசரவெள்ளி. அதூர்ஸ், ஆந்த்ராவாலா
போன்ற படங்களைச் சொல்லலாம். அந்த வரிசையில் நானக்கு ப்ரேமதோ என்.டி.ஆரின் மற்றொரு பரிட்சார்ந்த
முயற்சி எனலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">சரி,
படத்தை ஆரம்பிப்பதற்குமுன் இயக்குனர் சுகுமாரைப் பற்றியும் ஒரு பத்தியில் பார்த்துவிடலாம்.
டென்சனாக வேண்டாம்; எனக்கு ராஜமௌலிக்கு அடுத்து தெலுங்கில் மிகமிக பிடித்த இயக்குநர்
சுகுமார். தெலுகு சினிமாக்களை ஓரளவு தரமாக்க முயற்சியில் ஈடுபடும் ஓரிரு இயக்குனர்களில்
ஒருவர் சுகுமார். ஆர்யா எனும் தனது முதல் திரைப்படத்தின்மூலம் தெலுங்கு மாத்திரமில்லாமல்
தென்னிந்திய திரையுலகையே திரும்பிப்பார்க்கவைத்த சுகுமார் உடனே ராமை வைத்து ஜகடம் எடுத்து
வெற்றியாக்கினார். அதனைத் தொடர்ந்தாற்போல் ஆர்யா-2 வையும் இயக்கி, தன் பெயரை என்றும்
தெலுங்கு சினிமாவில் நிலைத்திருக்கும்படி செய்த சுகுமார் 100% லவ் திரைப்படத்தை இயக்கி
அதிலும் வெற்றி கண்டார். அடுத்து அவருக்கு அடித்தது ஜாக்பட். மகேஷ்பாபுவை வைத்து நேநொக்கடைனே
எனும் தெலுங்கின் முதல் இன்டர்நேசனல் லெவல் சைக்கலாஜிக்கல் த்ரில்லரை இயக்கினார். ஆனால்
படம் எதிர்பார்த்தபடி போகவில்லை. காரணம் படம் தரத்திலும் திரைக்கதையிலும் ஹாலிவுட்
ஆட்களையே மூக்கின்மேல் விரல்வைக்கும் வண்ணம் எடுக்கப்பட்டிருக்கும். ஊத்திக்கொண்டதற்கு
முக்கியமான காரணம் படத்தின் கிளைமாக்ஸில் நல்ல குத்து சாங் இல்லாமல் போனது தான். இப்படியொரு
திரைப்படத்தை ப்ளாப்பாக்கி விட்டார்களே ஆந்த்ராவாலாக்கள் என்று கடுப்பாக்கும் வண்ணம்
மிகச்சிறந்த திரைக்கதை வாய்ந்த திரைப்படம். படம் ஆவரேஜ் என்றதும் சிறிது கேப் விட்டு
குமாரி 21F-ஐ தயாரித்தார் சுகுமார். இந்த திரைப்படம்தான் தெலுகில் பூத்த அற்பூதம் என்று
கொஞ்ச நாட்களுக்குமுன் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. என்.டி.ஆருடன் நானக்கு ப்ரேமதோ
கமிட் ஆனதும் முதல்வேலையாய் சுகுமார் செய்தது கிறிஸ்டோபர் நோலன் செய்த விஷயத்தையே.
இன்செப்சன் திரைப்படத்தை தன் திரைக்கதை டேலன்ட் வெளிப்படுத்தும் வண்ணமும் அதேசமயம்
பாக்ஸ் ஆபிசில் கலக்கும்படியாகவும் அமைய நோலன் என்னென்ன முயற்சிகளைக் கையாண்டாரோ அதையே
சுகுமாரும் பின்பற்றினார். எளிமையான, அதேநேரத்தில் வலிமையான திரைக்கதை. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">கேயாஸ்
தியரி பற்றி தசாவதாரத்தில் கமல் சொல்லியிருப்பது உங்கள் நினைவிற்கு வரலாம். அந்த தியரியின்படி
பட்டர்ப்ளை எஃபெக்ட் என்ற ஒரு சம்பவத்தை அறிமுகப்படுத்தினார் எட்வர்ட் லோரன்ஸ். கேயாஸ்
தியரி (ஒழுங்கின்மை விதி) என்பது என்னவெனில் குத்துமதிப்பான நிகழ்காலம், குத்துமதிப்பான
எதிர்காலத்தை உண்டாக்காது. இப்படிச்சொன்னால் நமக்குப்புரியாது என்பதானல் தான் பட்டர்ஃப்ளை
எபெக்டைக் கூறி எளிமையாக்கினார் வில்லியம் ஜேம்ஸ். பிரபஞ்சத்தைப் பொருத்தவரை எந்தவொரு
சிறுவிளைவுகளும் மாபெரும் விளைவுகளுக்கு அடிப்படையாக அமையும் என்பதே மையக்கருத்து.
இது கணிதத்தில் பயன்படுத்தும் தியரி எனினும் டைனமிக்ஸின் மிகமுக்கிய கோட்பாடுகளில்
இதுவும் ஒன்று. சரி குழப்பாமல் படத்தில் சொல்வதையே உங்களிடமும் சொல்லிவிடுகிறேன். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">காற்று
வெப்பத்தினால் ஆவியாகும்போது அவ்விடத்தை நிரப்ப வேறொரு இடத்திலிருந்து காற்று வரும்.
இதன் அடிப்படையில்தான் பருவக்காற்றுகள், சூறாவளிக்காற்றுகள் போன்றவை இயங்குகின்றன.
இப்போது ஒரு பட்டாம்பூச்சியானது தானாக பறந்துகொண்டிருக்கும்போது சாதாரண அழுத்தத்தை
நிறைவு செய்யும்பொருட்டு வேறொரு இடத்திலிருந்து காற்று பெயர்ந்து அவ்விடத்திற்கு வரும்.
இது இயல்பானாது;ஆனால் அதே பட்டாம்பூச்சியை யாராவது பிடிக்க முயன்றால் வேகமாக சிறகை
அடிக்கும். அப்போது காற்றின் தேவை அவ்விடத்தில் அதிகரிக்கிறது. அதை நிறைவு செய்யும்
பொருட்டு தொடர் இனைப்பில் காற்றானது இடம்பெயருகிறது. இவ்வாறு தொடர் இணைவானது எங்கோ ஒரு மூலையில் முடிவடையும். அவ்விடமானது
அதிக காற்றுத்தேவையை உள்ளடக்கியிருக்கும். அதைநிறைவு செய்யும் பொருட்டு பேரதிகமான காற்றுச்சுழல்
உண்டாகி பெரிய புயலையே உண்டாக்கக்கூடும். இதுதான் அந்த தியரி. இதை அடிப்படையாகக்கொண்டு
எழுதப்பட்டதே இத்திரைப்படத்தின் திரைக்கதை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">படத்தின்
கதை தந்தையிடமிருந்த சொத்துகளைப் பறித்து அவரின் அடையாளத்தை அழித்த வில்லனின் அடையாளத்தை
அழிக்கப்போகும் மகன். இதைத்தான் கேயாஸ் தியரியைக்கொண்டு அருமையாக எடுத்து இருக்கிறார்
சுகுமார். இதுவரை இருந்த என்.டி.ஆருக்கும்
இந்த படத்தில் அபியாக வரும் என்.டி.ஆருக்கும் குறைந்தபட்சம் 100 வித்தியாசங்களையாவது
காணலாம். அவ்வளவு சேஞ்ச். கெட்டப் முதல் பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி, ஸ்டைல் என
அனைத்திலும் ஹைடெக்கான என்.டி.ஆர். தெலுங்கைப் பொறுத்தவரை என்.டி.ஆர் போன்று சிறந்த
நடிகரைக் காண்பதறிது. எந்தவொரு சிச்சுவேஷனையும் சமாளிக்ககூடிய திறமை என்.டி.ஆருக்கு
இருப்பதால் தான் படம் முழுமைக்கும் தன் ஸக்ரீன் ப்ரசென்சால் நகர்த்தி ஜெயித்திருக்கிறார்.
படத்தில் மற்ற நடிகர்களுக்கும் நடிக்கும்படியான வாய்ப்பிருந்தும் , அவர்களை எல்லாம்
ஓவர்டேக் செய்துள்ளார். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">படத்தின்
பெரும்பலங்களில் ஒன்று ப்ரில்லியன்டான ரசிக்கும்படியான வசனங்கள். படத்தின் கதையைப்
பொறுத்தவரை வில்லன் புத்திசாலி; ஹீரோ வில்லனைவிட புத்திசாலி. இவர்களிருவரும் சந்திக்கும்
காட்சியானது எப்படி இருக்கும்? இந்த படத்தைப் பார்த்தால் உங்களுக்கு புரியும். தெலுகு
சினிமாக்களில் இவ்வளவு ஸ்மார்ட்டான அதிபுத்திசாலித்தனமான வசனங்களை நான் இப்போது தான்
பார்க்கிறேன். வில்லன் ஹீரோவிடம் கேம் விளையாடலாமா என்று கேட்டுவிட்டு ‘இதுவரை இந்த
கேமில் நான் தோற்றதேயில்லை’ என்று கூறும்பொது,
ஹீரோ ‘நான் இதுவரை தோற்றுப்போன கேம் விளையாடியதே இல்லை’ என்பார். வில்லனும் ஹீரோவின்
தந்தையும் சந்திக்கும் காட்சியில் ஒரு கேள்வியை வில்லன் கேட்பார்; அந்த கேள்விக்கான
விடையை கண்டுபிடிக்க கிட்டத்தட்ட எனக்கு இரண்டு மணி நேரம் ஆயிற்று. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இதேபோல்
இப்படத்தின் இசையைப் பற்றி கண்டிப்பாக சொல்லவேண்டும்; இசையென்றால் பாடல்கள் இல்லை;
பிண்ணனி இசை. பாடல்கள் வழக்கம்போல நம் டி.எஸ்.பி எல்லா ட்யூனையும் மிக்ஸ் செய்து போட்டுவிட்டார்.
ஆனால் பி.ஜி.எம் பின்னி எடுத்துள்ளார். இதுவரை டி.எஸ்.பி பி.ஜி.எம் போட்ட திரைப்படங்களையும்
இந்த படத்திற்கு அவர் போட்டிருக்கும் இசைக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். ஸ்லோவாக செல்லும்
காட்சிகளைக் கூட தன் இசைத்திறமையால் அடுத்து என்ன என்று எதிர்பார்க்கவைக்கும் இசை.
வில்லனின் பர்த்டே பார்ட்டிக்கு என்.டி.ஆர் என்டர் ஆகும்போது வயலின் வைத்து ஒரு சிம்பனி
ஆர்க்கெஸ்ட்ராவே வாசித்திருப்பார் டி.எஸ்.பி. பாடல்கள் படத்துடன் பார்க்கும்போது கேட்கலாம்;
படத்தைத் தாண்டி வெளிவந்தாலும் மனதில் நிற்கும்படியாக இறந்த தன் தந்தைக்கு சமர்ப்பித்த
‘நானாக்கு ப்ரேமத்தோ’ பாடல் உண்மையில் அருமை. அப்பாடலின் வரிகள் அப்படியே டி.எஸ்.பியின்
உள்ளத்திலிருந்து கொட்டிருக்கவேண்டும். அவரின் இழப்பை அப்பாடலின்வழி நமக்குக் காட்டியிருப்பார்.
இது தவிர இரண்டு பாடல்கள் ‘லவ் தெப்பா’ மற்றும் ‘ஐ வான்ன பாலோவ்’ ஆகிய பாடல்களும் சுமார்
ரகத்திற்கு மேல்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">நான்
என்.டி.ஆரைப் பார்த்து வியந்த ஒரு விஷயம் நடனம். தென்னிந்திய அளவில், ஏன் இந்திய அளவில்
பிரபுதேவாவிற்கு அடுத்தபடியாக எவ்வளவு கடினமான ஸ்டெப் என்றாலும் அதை முகத்தில் எள்ளளவும்
காட்டாமல் அசால்டாக போடும் திறமை வாய்ந்தவர். யமதொங்கா (டிஸ்கோ பாடல்), ப்ருந்தாவனம்
(சின்னதோ வைப்பு), பாஷா (அனைத்துப் பாடல்களும்), டெம்பர் (டெம்பர் சாங்) போன்ற பாடல்களில்
அவர் ஆடியிருக்கும் ஸ்டெப் சான்ஸ்லெஸ் எனலாம். ஆனால் அவரின் நடனத்திறமையை ராஜமௌலிக்குப்பின்
சரியாக பயன்படுத்தியவர் சீனுவைட்லா. மற்ற இயக்குநர்கள் படத்தின் ஒரே குத்துபாடலில்
மட்டும் அவருக்கு கடினமான ஸ்டெப் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றிவிடுவார்கள். சுகுமாரும்
அப்படியே செய்துவிட்டார். 5-ல் 4 பாடல்களில் மிகச்சுமாரான நடனத்தைக்கொடுத்து ஏமாற்றிய
சுகுமார், லவ் தெப்பா பாடலில் போட்டு பிழிந்து எடுத்துள்ளார். இன்னும் யூட்யூப்பில்
அந்த பாடல் வரவில்லை. வந்தால் பாருங்கள்; அட்டகாசமான நடனஅசைவுகள்; தமிழில் அப்படியொரு
நடனத்தைக் கண்டிப்பாக காணமுடியாது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">எனக்கு
என்.டி.ஆரை பர்சனலாக மிகவும் பிடிக்க காரணம் தெலுங்கில் எந்தவொரு வேடத்தையும் ஏற்று
நடிக்கும் திறமை வாய்ந்த ஒரே நடிகர் என்.டி.ஆர். மேலும் தெலுங்கை அழுத்தம் திருத்தமாக
எவரும் எளிமையாக உணரும்படியான உச்சரிப்பு அவர் படத்தில் மட்டுமே வரும். அதேபோல் தன்
படங்களில் முடிந்தவரை மது அருந்தும் காட்சிகள், சிகரெட் பிடிக்கும் காட்சிகளை அவாய்ட்
செய்து நல்ல கமர்ஷியலைக் கொடுக்கும் ஒரே தென்னிந்திய நடிகர். சினிமாவைத் தாண்டி மனிதநேயமிக்க
நடிகர்களில் ஒருவர். பாஷா திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் , கூட்டநெரிசலில்
சிக்கி உயிரிழந்த தன் ரசிகனின் குடும்பத்தை அதே மேடையில் தத்து எடுத்துக்கொண்டு, இன்றளவும்
அக்குடும்பத்தை பராமரித்து வரும் தன்மையானவர். இதெல்லாம் புகழுக்காக செய்கிறார் என்று
ஒரேவார்த்தையில் அவரின் மனிதாபிமானத்தைக் கொச்சைப்படுத்திவிட முடியாது. சென்னை வெள்ளத்திற்கு
முதன்முதலில் நிவாரண நிதி வழங்கி அதை வெளியில் சொல்லவிரும்பாமல் அமைதிகாத்தவர். இன்றளவும் அவருடன் பழகியவர்கள் அவரை விட்டு பிரிந்ததில்லை.
இம்மாதிரியான குணம் இயற்கையிலேயே ஒருசிலருக்கு அமையும். அம்மாதிரியான மனிதர் தான் என்.டி.ஆர்.
இன்னும் 15 வருடங்களுல் ஆந்திர முதல்வராகும் வாய்ப்பு அவருக்கிருந்தாலும் தன் சொந்தவிஷயங்களுக்காக
கட்சியைப் பயன்படுத்தியதில்லை. வெளியில் மட்டுமல்லாமல் சினிமாவிற்குள்ளேயும் கனிவுடன்
இருப்பவர். அவரை வைத்து படம் எடுக்கும் இயக்குநர்களில் ஒருவர்கூட அவரைப் பற்றி குறை
சொல்லியதில்லை. சினிமாவிற்குள்ளேயும் தன்னால் இயன்ற அளவு கமர்சியல் படங்களின் தன்மையை
மாற்ற முயற்சி எடுத்து வருபவர். ‘ராஜமௌலியின் பேமஸிற்கு காரணம் நாங்கள் தான்’ என்று
தெலுங்கின் முண்ணனி ஹீரோக்கள் ராஜமௌலியை மட்டம் தட்ட முயன்றபோது ஈகா (நான் ஈ) எடுத்து
எல்லாருடைய வாயையும் அடைத்தார். ஈகா திரைப்படத்திற்கு முதல் ஆளாய் வந்து வாழ்த்து தெரிவித்தவர்
என்.டி.ஆர். தனக்கு சரியெனத் தோனும் விஷயங்களைத் தாமதிக்காமல் செய்துவிடுவார். படத்தின்
வெற்றிக்கு யார் காரணம் என்று கேட்டால் தன் படத்தில் பணியாற்றிய அனைவருமே என்று யாரையும்
விட்டுக்கொடுக்காமல் பேசும் தன்மையானவர். இம்மாதிரியான பண்புகளைக்கொண்டிருக்கும் ஒரு
சிறந்த நடிகரை யாருக்குத்தான் பிடிக்காது?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">என்னைப்பொறுத்தவரை
என்.டி.ஆரின் 25 பெரும் வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை. தமிழிலும் படம் ரிலிசாகப்போகிறது
என்கின்றனர். தமிழில் வந்தால் மிஸ் பண்ணாமல் பார்த்துவிடுங்கள். வெறும் கேம் மாதிரியாக
மட்டும் நகராமல் காதல், குடும்ப பாசம், சின்ன சின்ன காமெடி வசனங்கள் என்று ஸ்மூத்தாக
செல்கிறது. ப்ரில்லியன்டான கமர்ஷியல் திரைப்படத்திற்கு
ஒரு ஆகச்சிறந்த உதாரணம் இந்த நானாக்கு ப்ரேமதோ. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-57094784313672482122016-01-15T12:12:00.000+05:302016-01-15T12:12:07.772+05:30கொலை - சிறுகதை<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRvJjv2WFYxj2ujUzvcJijVwrw0uRXU_q81eQGxb9f5iFRilCZQvZ1D6SDIeOsp2rROnLWF6pM2JG-RqzY3slZi0Kyo3wfEJD-vPluJrD3GG8MejX5Hduaqf-gTlVi2k4qzYGp9MmnRxI/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B2%25E0%25AF%2588+-+%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%2588.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="210" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRvJjv2WFYxj2ujUzvcJijVwrw0uRXU_q81eQGxb9f5iFRilCZQvZ1D6SDIeOsp2rROnLWF6pM2JG-RqzY3slZi0Kyo3wfEJD-vPluJrD3GG8MejX5Hduaqf-gTlVi2k4qzYGp9MmnRxI/s320/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B2%25E0%25AF%2588+-+%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%2588.jpg" width="320" /></a></div>
<br />
<br />
நான் அப்படிச் செய்திருக்கக்கூடாது; ஓருயிரின் அருமைத் தெரியாமல் இருந்தது எவ்வளவு பெருந்தவறு ! ஏன் அதைச் செய்தேன் என்று யோசித்தால் ஒருபக்கம் சூழ்நிலை எனும் காரணி இருப்பினும் மறுபுறம் அதை நான் என் முழுமனதுடன்தான் செய்துள்ளேன்.<br />
<br />
சிறிதுநேரத்திற்குமுன் இதே இடம்; இதே அறை; இதே இருளை விரட்டும் மின்குழல் விளக்கு. ஆனால் சிறு மாற்றம் , மனிதர்களுக்காக கணக்கிடப்படும் இல்லாவொன்றான காலமும் நானும் தான். அப்போதைக்கும் இப்போதைக்குமான என் சிந்தனை வெவ்வேறு. எனக்குள் ஒரு மாற்றம். நல்லதா? கெட்டதா ? எனப்பகுத்தறியக் கடினமான மாற்றம். ஆனால் இம்மாற்றாத்தால் எனக்கு நன்மையோ இல்லையோ, என்னைச் சுற்றியிருப்பவைகளுக்குச் சிறிதேனும் நன்மையைத் தரும் என எண்ணுகிறேன்.<br />
<br />
என் ஆசைப் பூனை; இதோ, என் மடிமேல் இறுகிய கம்பளிப் போர்வையில் சுருண்டு படுத்திருக்கும் இந்த பூனையால்தான் எல்லாம். அது மட்டும் அப்போது சத்தமிடவில்லையெனில் என்மனம் இவ்வளவு பாதிப்புக்குள்ளாகி இருக்காது.<br />
<br />
என்வேலைகளை முடித்துவிட்டு அறையில் நுழையும்போது இதே பூனைதான் கத்தியது. ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் என்னையும், அறையின் மேற்பகுதியையும் பார்த்து, தொடர்ந்தாற்போல் கத்தியது. ஆம்! அது தன் இரையைக் கண்டுவிட்ட சந்தோஷத்திலும் என்னால் அதற்கு உதவமுடியும் என்ற நம்பிக்கையிலும் கத்தியது.<br />
<br />
‘இனிமேல் அந்த பூன தூங்குனமாதிரி தான். நைட்டு முழுக்க அத பாத்துக்கிட்டே ஏங்கிக் கிடக்கும்’ என் தாயின் குரல் அப்பூனைக்கு சாதகமாகிவிட்டது. ஒருவேளை மறைமுகமாக என்னை அதற்கு உதவிபுரியவைக்க அந்த பரிதாப வார்த்தைகளை உதிர்த்திருக்கலாம். எப்படியாயினும் அவ்வார்த்தைகள் என்னை அச்செயலைச் செய்வதற்கான முனைப்பை ஊட்டியிருக்கவேண்டும்.<br />
<br />
பூனையின் இரையை நான் பார்த்தேன். பெரிய, கம்பீரமான தும்பி. படபட-வென அதன் சிறகுகள் அடித்தபடி மேலுள்ள அம்மின்குழல் விளக்கைச் சுற்றிச் சுற்றி வந்தது. கருப்பும் இளம்பச்சையும் கலந்த சிறிது பெரிதான தட்டான். அதன் சிறகுச்சத்தம் பக்கத்து வீட்டில் ஓடும் தறியின் சத்தத்தைத் தாண்டி கேட்டது. ஒரு பெருமிதத்துடன் அது பறந்துகொண்டிருக்கலாம். கடவுளின் அதிசயப் படைப்பு என சின்னஞ்சிறியவனாய் இருக்கும்போது பார்த்துப் பார்த்து ரசித்து, கயிற்றில் கட்டி விளையாட, தட்டான் வேட்டைக்கு சென்றது நினைவுக்கு வந்தது.<br />
<br />
அதைப் பிடிப்பது சற்று கடினமான காரியம் தான்; ஆனால் என்னை மாத்திரமே நம்பி , என்னிடம் தன் ஈனக்குரலால் உதவிகேட்டுக் கதறும் பூனையின் இரைச்சலை அடக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஒரு சட்டையை எடுத்தேன்; பூனையைப் பார்த்தேன். அதன் கண்ணில் சந்தோஷம் வெளிப்பட்டிருக்கலாம் அல்லது அதுமாதிரியான பிரமை எனக்குள் தோன்றியிருக்கலாம். ஒருநிமிடம் யோசித்தேன்; எதனால் என்று தெரியவில்லை.<br />
<br />
படாரென்று ஒரு சத்தம் வந்தது. நான் அத்தட்டானை நோக்கிவீசிய துணியின் பிடியில் அது சிக்கி பறக்க இயலாமல் கீழே மெதுவாக விழுந்தது. பூனைத் தயாரானது. தும்பி கீழிறங்கிய அடுத்த நொடி அதன் முழு உடலும் என் பூனையின் விரல்களுக்கு இடையில் இருந்தது. அதன் இறக்கைகள் என் பூனையின் விரல்களால் பிடித்தமுக்கப்பட்டு, பூனை தன் வாயால் அதைக் கவ்விக் கொண்டது. யோசித்த விடயம் நினைவுக்கு வந்தது. எதற்காக அதை அடித்தோம்?<br />
<br />
இத்தனைக்கும் தட்டானைப் பூனை சாப்பிடாது என்று எனக்குத் தெரியும். என் வீட்டுப் பூனை ஆட்டூனையேச் சாப்பிடாது என்பது கூடுதல் தகவல். அப்படியாயின் நான் அதை அடித்து கீழே வீழ்த்தியது எதற்காக ?<br />
<br />
பூனை அந்த தும்பியை அங்குமிங்குமாக தூக்கிப் பிடிக்க, அத்தும்பி பூனையின் கொடூர நகங்களிடமிருந்து தப்பிக்க படபட-வென துடித்தது. ஆனால் இம்முறை அப்படபடப்பில் பெருமைக்குப் பதில் தப்பியாகவேண்டும் என்ற போராட்டகுணம். ஆனால் அதனால் பறக்க முடியவில்லை. நான் அடித்தது அதன் இறக்கைகளுக்கு பலமாய் இருந்திருக்கவேண்டும். ஒவ்வொருமுறை பூனையிடமிருந்துத் தப்பிக்கும் பொருட்டு அது உயரப்பறக்க முயலும்; ஆனால் பாதியிலேயே கீழே விழுந்துவிடும். பூனை ஓடிச்சென்று மீண்டும் நகங்களுக்கும் பற்களுக்குமிடையே வைத்து சித்திரவதைச் செய்ய ஆரம்பித்துவிடும்.<br />
<br />
எதற்காக அதை அடித்தேன்? போயும்போயும் பூனையின் விளையாட்டு ஆர்வத்திற்காக சுதந்திரமாக பறந்து திரிந்த அந்த தும்பியை வீழ்த்தி, இப்போது அதனை அணுஅணுவாக சித்திரவாதைக்குள்ளாக்கியிருக்கும் இப்பாவச்செயலின் முழுபொறுப்பும் என்னையல்லவா வந்து சாரும். உயிருக்காக எப்படியாவது தப்பிக்கமுடியாதா எனத்தவிக்கும் அத்தட்டான் என்ன தவறு செய்திருக்கமுடியும்? என் அறைக்கு வந்தது தான் தவறா? அதன் படபட சத்தம் என்னைப் பல்வேறுவகையான மனக்குமுறலுக்கு உள்ளாக்கியது. ஒரு முடிவு செய்தேன்.<br />
<br />
பூனையிடம் சென்று தட்டானைப் பிடித்தேன். பூனை விடவில்லை; நன்றியும் மதியும் கெட்ட பூனையே! இதை உனக்குப் பிடித்துத் தந்தவன் நானல்லவா? திரும்பக்கொடு அதனை என்னிடம். ஆனால் தரவில்லை அது. என்னிடமும் விளையாட்டுக் காட்டியது. மூடமனிதனே! கொடுத்தப்பொருளை திரும்பக்கேட்கும் மனித வழக்கத்தை என்னிடம் காட்ட முயற்சிக்காதே என்று என்னிடம் அது சொல்லியிருக்கும். விடாமுயற்சியில் அந்த தட்டானை அதனிடமிருந்து காப்பாற்றினேன்; மனிதனல்லவா!!! என்னை ஓர் ஐந்தறிவு ஜீவன் வெல்லமுடியுமா? என் காலதர் அருகில் சென்றேன்; உயிருள்ளதா? எப்படி பரிசோதிப்பது?<br />
<br />
ஆ! இறக்கைகள் அசைகின்றன; காப்பாற்றிவிட்டேன். காலதரின்வழி வெளி உலகிற்கு அனுப்பிவைத்தேன். பெரியகாயம் ஆகியிருக்கலாம். ஆனால் உயிர்பிழைத்துவிட்டது; அதுவரை போதும். மனம் நிம்மதியடைந்தது. கட்டிலில் படுத்தவாறு ஒருவித மனநிம்மதியில் ஆழ்ந்தேன்! பாவம்! பூனையின் நிலை?<br />
<br />
பரவாயில்லை. பால் சேர்த்து ஊர்த்திவிடலாம் அல்லது கருவாடு போட்டு சமாதானப்படுத்திவிடலாம். பூனையைத் தேடினேன். கட்டிலுக்குக் கீழே ஏமாற்றமடைந்து எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது. அதை அழைத்தேன்; வரவில்லை. பிடித்தேன்; என் பிடியிலிருந்து நழுவி மீண்டும் அது வெறித்த இடத்திற்கேச் சென்றது.<br />
<br />
அங்கு சென்று பார்த்தேன். என்ன அது? ஏதோ உருண்டையாக குண்டுமணி அளவில். அருகில் சென்று பார்த்தேன்; அந்த தும்பியின் தலை.<br />
<br />
<br />
( ஆட்டூன் – ஆட்டுக்கறி; காலதர் – ஜன்னல்; தும்பி – தட்டான்பூச்சி )மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-29413601318991528572015-12-09T22:53:00.001+05:302015-12-09T22:53:09.369+05:3078 ரூபாய் – சிறுகதை<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_12kwTz0JFXrbZ8XvHAL2GeeCEy5Pr5IB81M7_3fDL1BCp-FxGV6FjEdKYMCfd911CdGcJl3B2Ju7QEp_y8_lWB1VMD1tdgvt9UteLAIV-V2lkZ4BpRgCj-Q2VHW9se3NRezAJWGLxlI/s1600/78+%25E0%25AE%25B0%25E0%25AF%2582%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D+%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%2588.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_12kwTz0JFXrbZ8XvHAL2GeeCEy5Pr5IB81M7_3fDL1BCp-FxGV6FjEdKYMCfd911CdGcJl3B2Ju7QEp_y8_lWB1VMD1tdgvt9UteLAIV-V2lkZ4BpRgCj-Q2VHW9se3NRezAJWGLxlI/s640/78+%25E0%25AE%25B0%25E0%25AF%2582%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D+%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%2588.jpg" width="640" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘அது
1985னு நினைக்கிறேன். அப்போதான் வேலையில சேர்ந்தேன். அப்போலாம் வொயர்மேனுக்கு பேன்ட்லாம்
கிடையாது. டவுசர் போட்டுக்கிட்டுதான் ஏறனும். எம்.ஜி.ஆர் பீரிடு. இங்கதான் சேலத்துல
புதுரோட்டுல வேல பாத்துக்கிட்டு இருந்தேன்.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அவரின்
குரல் என்னை ஈர்த்தாலும் என்னுடைய அப்போதைய நிலை அவர் கூறுவதை ஒன்றமறுத்தது. ஒரு அவசரகாரியமாக
வெளியில் கிளம்பிய எனக்கு மழையின் வடிவில் தடை ஏற்பட ஒரு வீட்டின் முற்றத்தில் அடைக்கலமானேன்.
ஓரிரு நிமிடங்களில் அவரும் தன்னுடைய டி.வி.எஸ் எக்ஸலில் நனைந்தும் நனையாமலும் நான்
இருக்குமிடத்தை அடைந்தார். அவ்வீட்டின் உரிமையாளர் எனக்கு சொந்தமென்பதால் அவருடன் துளிகூட
ஈடுபாடில்லாமல் மழையைப் பற்றிய மொன்னையான விவாதங்களை விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர்
வந்து சேர்ந்தார். அவரின் காக்கி பேண்டும் சர்ட்டும் அவர் வொயர்மேன் என்பதைத் தெள்ளத்தெளிவாக
எடுத்துக்காட்டியது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘புதுசா
வந்துருக்கிங்களா சார்’ எனது அருகிலிருந்த வீட்டின் உரிமையாளன் அவரிடம் கேட்டான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘ஆமா
தம்பி. அத்தனூர்ல இருந்து ட்ரான்ஸ்ஃபர். அதுக்குமுன்னாடி…..’ என்று ஆரம்பித்து பல்வேறு
விதமான அனுபவங்களைக் கூறிக்கொண்டே இருந்தார். அவரின் அனுபவங்கள் அனைத்தும் டாம் ஹேங்ஸின்
ஃபீல்குட் படங்களை ஒத்திருந்தாலும் சிலவற்றை நம்பமுடியவில்லை. அப்போதுதான் அவரை நான்
உற்றுகவனித்தேன்.வாட்டசாட்டமாக, பத்துநிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு கிங்ஸ் சிகரெட், கழுத்தில்
2 பவுன் தங்கச்சங்கிலி, மின்னுவதைப் பார்த்தால் எடுத்து ஓரிரு ஆண்டுகளுக்குள் இருக்கலாம்;
கையில் ஒரு மோதிரம். அவரது சட்டைப் பையில் பணக்காகிதங்கள் நிறைந்திருந்தன. நடுவே ஒரு
பழங்கால ரிலையன்ஸ் சி.டி.எம்.ஏ மொபைல்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘நமக்கு
லஞ்சம் வாங்குர பழக்கமெல்லாம் கிடையாது தம்பி. யாருகிட்டயும் ஒருபைசா வாங்கமாட்டேன்.
ஒத்தரூவாவ கொடுத்துபுட்டு ஏழாயிரம் சாபத்த விடுவாங்க. அந்த சாபமெல்லாம் நமக்கெதுக்கு?’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இவ்வார்த்தையைக்
கூறியதும் என்னவோ அவரின் பேச்சுகளைக் கவனிக்கவேண்டும் என்று என் உள் மனது என்னை பணித்தது.
என்னைப்போலவே வீட்டு உரிமையாளனுக்கும் இருந்திருக்கவேண்டும். மேற்கொண்டு அவரே தொடர்ந்தார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘அது
1985னு நினைக்கிறேன். அப்போதான் வேலையில சேர்ந்தேன். அப்போலாம் வொயர்மேனுக்கு பேன்ட்லாம்
கிடையாது. டவுசர் போட்டுக்கிட்டுதான் ஏறனும். எம்.ஜி.ஆர் பீரிடு. இங்கதான் சேலத்துல
புதுரோட்டுல வேல பாத்துக்கிட்டு இருந்தேன். அப்போ ஒத்த லைட்டுனு கவர்மென்ட்ல ஒரு ஸ்கீமு
வந்துச்சி. ’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘ஆமா
சார். இப்போ நாயக்கம்பட்டில கூட ஒரு வீட்டுல தான் இருக்குனு நினைக்கிறேன்.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘அந்த
ஸ்கீமுலாம் இப்போ இல்ல பா. எடுத்துட்டாங்க. எங்கயாச்சும் ஒன்னு, ரெண்டு இருக்கலாம்.
அதான் எல்லாரும் வீட்டு சர்வீஸே எடுத்துக்கிறாங்களே’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">வீட்டு
உரிமையாளனின் நினைவாற்றல் எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஏதோ ஒரு முனைப்பான விஷயத்தை
அவர் கூற முற்படும்போது பேச்சை திசைத்திருப்பும் தோணியிலேயே இவன் பேசுகிறானே என்ற எரிச்சல்
வேறு எனக்குள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘அப்போ
புதுரோட்டுல நா கம்பம் ஏறுர வேல பாத்துகிட்டு இருந்தேன். இந்த ஸ்கீம் வந்தபின்னாடி
ஒரு ஏரியாவுக்கு நானும் என்னோட சீனியரும் போனோம். அந்த ஸ்கீம்படி வூட்டுக்கு ஒரு லைட்டு
கவர்மென்ட் காசுல போட்டுக்கொடுக்கும். அதுக்கு கரண்ட்பில்லுலாம் வராது.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அடுத்த
சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவாறே தொடர்ந்தார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘எங்கூட
வந்த சீனியரு , இவங்கலாம் இனிமே கரண்ட்பில்லுதான் கட்டப்போறதில்லையே! அதுனால வூட்டுக்கு
100ரூபா வாங்கிகிட்டு கனெக்சன கொடுத்துடலாம்னு சொன்னாரு. எனக்கு காசப் பத்தி கவலையே
இல்ல. எங்களுக்கு என்ன வேலைனா வூட்டுக்கு ஒரு கம்பத்த வச்சி, அதுல ஒரு லைட்ட போட்டு
கனென்கசன் கொடுக்கனும். அப்படியே கொடுத்துகிட்டு வந்தோம். அவரும் நூறுநூறா வசூல் பண்ணிக்கிட்டே
வந்தாரு.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">திடீரென
அவருக்கு ஒரு போன் வர, அதை எடுத்து காதில் வைத்து சத்தமாகவே பேசினார். அவரின் அந்த
போன் பேச்சு வழக்கமான மழை விசாரணைகளும் , குடும்ப விசாரனைகளுமாக கடந்தது. அப்பேச்சில்
உருப்படியானதொரு விஷயமும் இல்லாவிடினும் அது அவரின் குடும்பத்திற்குள் ஒரு பிணைப்பை
ஏற்படுத்தும் சிறு நூலாக அவரைப் பொறுத்தவரை இருந்திருக்கும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘என்னோட
அத்தமவ. பவானில இருக்கா. ரெண்டாந்தாரமா ஒருத்தருக்கு கட்டிக் கொடுத்துட்டுங்க. அவங்க
வூட்ல வசதி கெடயாது. அதுனால எனக்குக் கட்டிக்கொடுக்கல. அவ புருசனும் நல்ல மனுசன்தான்;
ஆனா வயசானவரு. சீக்கிரமா இறந்துபோய்ட்டாரு. பாவம், ஒத்தையா நின்னு ரொம்ப கஷ்டப்படுரா
’ <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அப்போது
அவரின் முகத்தில் ஒரு தோற்றுப்போனவரின் சாயல் மின்னியதை என்னால் உணரமுடிந்தது. அதன்பின்
இரண்டு நிமிடங்கள் இடைவெளிக்குப்பின் மீண்டும் தொடர்ந்தார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘ஒவ்வொரு
வூட்டுக்கும் நூறு ரூபா அவரு வாங்கிப்பாரு. நா கம்பத்துல ஏறி கனெக்சன் கொடுத்துட்டு
இருந்தேன். மதியானத்துக்குள்ள 30, 35 வூட்டுக்கு லைட்டு மாட்டிட்டோம். அப்போ சேரிக்குப்
பக்கத்துல ஒரு வூட்டுக்கு லைட்டு மாட்டிட்டு இருந்தோம். நா கம்பத்துல ஏறி கனக்சனு கொடுத்துட்டு
இருந்தேன். அப்போ கீழயே நின்னுகிட்டு ஒரு அம்மா பாத்துக்கிட்டு இருந்துச்சி. எப்படியும்
அதுக்கு ஒரு 70 வயசு இருக்கும். என்னோட சீனியருகிட்ட அது வந்துச்சி.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘யெய்யா
மவராசா!னு அது கூப்ட, என்னோட சீனியரும் அத பாத்தாரு. அவருக்கு தெரிஞ்சிடுச்சி. அந்தம்மா
சேரிக்கார அம்மானு.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘என்னா?னு
வேகமா கோவமா கேட்டாரு. அந்தம்மா கொஞ்சம் பயந்துபோச்சு.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘அது
கையில கசங்கி, நைஞ்சு போன காச வச்சிருந்துச்சி. ஐயா சாமி! எங்கிட்ட 78 ரூவாதாம்யா இருக்கு.
எங்கூட்டுக்கு ஒரு விளக்கப் போடுயா! உனக்குப் புண்ணியமா போவும். அந்த அம்மா தலகுனிஞ்சிகிட்டு
கெஞ்சுற மாதிரி கேட்டுச்சி. அத்து கண்ணுலாம் கலங்கி கிடந்துச்சி. அதோட குரலு இன்னமும்
என்னோட காதுலயே இருக்கு. ஒருமாதிரி பாவத்தோட அழுகை. ஏழப்பட்டவங்களோட கெஞ்சல். எனக்கு
மனசு ஒருமாதிரி ஆயிருச்சி.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘ந்தா!
நூற கொடுத்தா கொடு. இல்லாட்டி ச்சும்மா போய் கெட. சாவுர வயசுல உனக்கு என்னாத்துக்கு
லைட்டு? அப்படினு கத்திட்டாரு’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘அவரு
பேச்சக் கேட்டதும் கலங்கிப்போன கண்ணுல இருந்து தண்ணி வந்துடுச்சி. அழுதுகிட்டே அந்தம்மா
பொலம்ப ஆரம்பிச்சிடுச்சி. ஐயோ மவராசா! எம்பன்னாடி வேற சந்தைக்கு போய்ட்டாரே. அவரு வந்ததும்
கொடுத்துப்புடரேயா. ’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘ஹங்.
உம்பன்னாடி வந்து மிச்சத்த அவுத்து வச்சிட்டுதா மறுவேலை பாப்பாப்படி. போ! போ! உங்களப்பத்தில்லாம்
தெரியாதா எங்களுக்குனு அந்த சீனியரு மூஞ்சுல அடிச்ச மாதிரி பேசிப்பிட்டாரு.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘யெய்யாச்
சாமீ. எல்லா வூட்டுலயும் ராத்திரிலகூட சூரியனாட்டும் மின்னுதே! எங்கூட்டுல இல்லையே.
இருட்டுல இந்த ரெண்டுச்செவமும் செத்தாக்கூட யாருக்கும் கண்ணுத்தெரியாதே. யெய்யா கொஞ்சம்
கருண காட்டுயா. உம் வம்சமே நோய்நொடியில்லாம நல்லா இருக்கும்யா. கம்பத்து மேல இருக்க
யெய்யா! கொஞ்ச இந்தச் சாமிகிட்டச் சொல்லி கருணக்காட்டச் சொல்லுயா. உனக்குப் புண்ணியமா
போவட்டும் னு அந்தம்மா என்ன பாத்து கெஞ்சுது.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘எஞ்
சீனியரோ அத கண்டுக்கடல. என்னாலயும் எதுவும் பண்ணமுடில. புதுசா வேலைக்குச் சேந்துருக்க
எனக்கு என்னாப் பண்றதுனு தெரில. அது பொலம்பிகிட்டே அதோட குடிசைக்குப் போயி ஒரு செம்பு
அண்டாவ எடுத்துகிட்டு பக்கத்துல ஒரு குடியான வூட்டு வாசலுக்கு போச்சு.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘யம்மா
மவராசி! எம்பண்ணையக்காரம்மானு அது கூப்டதும் உள்ளயிருந்து ஒரு பொம்பள வந்துச்சி. தாயி!
இந்தண்டாவ வச்சிகிட்டு 25ரூவா கந்தா குடு தாயி. நா வாரவாரம் கட்டிப்புட்ரனு அது சொன்னுச்சி.
அந்த வூட்டுக்காரம்மாவும் ஒரு பொம்பள தான. சரி அண்டாவ கொண்டுபோய் பொறத்தால வச்சிட்டு
வானு அது சொன்னதும் இந்தம்மாவும் அண்டாவ கொண்டுபோய் கொல்லைல வச்சிட்டு வந்துச்சி. ஏன்னா
அவுங்க பொருள வூட்டுக்குள்ள குடியானவங்க பொழங்கமாட்டாங்கள்ல ’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘ஆம்’
என்பதுபோல் நானும் வீட்டின் உரிமையாளனும் தலையை ஆட்டினோம். பிறகு என்ன என்பதை எங்கள்
பார்வையாலயே அவரிடம் கேட்டோம். அவரும் புரிந்துகொண்டு தொடர்ந்தார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘அந்த
பண்ணையக்காரிச்சிக்கிட்ட காச வாங்கிட்டு வந்து எண்ணிக்கூட பாக்கமா எஞ் சீனியர்கிட்ட
கொடுத்துச்சி. எப்படியோ அதோட வூட்டுக்கும் லைட்டு வரப்போவுதுங்ற சந்தோஷம் அது மூஞ்சில.
கொஞ்சநேரத்துக்கு முன்னாடி அந்த வையுவஞ்ச சீனியருகிட்டியே வந்து இந்தா சாமீனு அது சிரிச்சிகிட்டே
கொடுத்துச்சி. ’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘என்னோட
சீனியரும் அந்த காச வாங்கிக்கிட்டு மிச்சக்காச எடுத்தாரு. அந்தம்மா மடிய விரிச்சி நின்னுச்சி.
பிச்சப்போட்ர மாதிரி அது மடியில மிச்ச 3ரூவாய போட்டாரு. எனக்கு மனசே கனத்துப்போச்சு.
அதுல இருந்து யாருகிட்டயும் நா காசு வாங்குரதில்ல.’<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அவருக்கு
மட்டுமல்ல! எனக்கும் மனம் கனத்தது. வெளியில் தூறிய மழை இப்போது எனக்குள்ளும் தூற ஆரம்பித்தது.
என்ன காரணம் என்று சொல்லாமலே ஒரு வித அவமான உணர்ச்சி என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது. அதற்குமேல்
அவர் கூறியதைக் கேட்க மனம் விரும்பவில்லை. என்னை நானே மறைத்தாக வேண்டும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘சரிங்ணா!
நா கிளம்புறேன்’ என்றவாறு அவரிடமிருந்து எப்பதிலையும் எதிர்பார்க்காமல் மழையில் நனைந்தவாறே
நடக்க ஆரம்பித்தேன். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">‘தம்பி
மழையில ஏன்யா போற? இருயா மழ விட்டதும் நானே கொண்டு போய் வுடறேன்’ என்று அவர் கூறியது
கேட்டது. வெளியில் பெய்யும் மழை மட்டுமே அவருக்குத் தெரியும்; என் கண்ணிலும் மனதிலும்
பெய்யும் மழை, அம்மழைக்கு மட்டும்தான் தெரியும்.<o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-85480270880226025392015-10-02T12:50:00.004+05:302015-10-02T12:53:18.158+05:30புலி – சினிமா விமர்சனம்<div class="MsoNormal" style="text-align: center;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="color: red; font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-bidi-font-size: 11.0pt;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLFDIF9qm-qHFAFgaWMQsK3jTz-0xB30lkedoBCE1DVmpkoQI1AWunkfG22sCpAaFUFQFWlvrmpoKASGAX-FZnReaPFfvJB7fbpdPespGTUnhLbnWE9F9U-h3k40XUufMMXWOjr9CuUPg/s1600/381264-puli-poster.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLFDIF9qm-qHFAFgaWMQsK3jTz-0xB30lkedoBCE1DVmpkoQI1AWunkfG22sCpAaFUFQFWlvrmpoKASGAX-FZnReaPFfvJB7fbpdPespGTUnhLbnWE9F9U-h3k40XUufMMXWOjr9CuUPg/s640/381264-puli-poster.jpg" width="626" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="color: red; font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-bidi-font-size: 11.0pt;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="color: red; font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-bidi-font-size: 11.0pt;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="color: red; font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-bidi-font-size: 11.0pt;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="color: red; font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-bidi-font-size: 11.0pt;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="color: red; font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-bidi-font-size: 11.0pt;">எச்சரிக்கை – இந்த திரைப்படம் ஒரு ஃபேன்டசி என்பதால் , இதற்கான என் விமர்சனமும்
ஃபேன்டசியாகவே இருக்கும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அங்கே,
இங்கே என்று சுற்றிவளைத்து , உங்களின் நேரத்தை வீணடித்து, உங்களை ரணமாக்காமல் நேராக
விஷயத்திற்கு வந்துவிடுகிறேன். பொதுவாக நான் விஜய் படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை.
காரணம், என்னை நான் அஜித் ரசிகன் என்று பொதுவெளியில் பிரகடனப்படுத்தியபின்பு , விஜய்
திரைப்படங்களுக்கு எழுதப்படும் விமர்சனம் கண்டிப்பாக நடுவுநிலையில் இருக்காது என்று
மற்றவர்களால் கூறப்படும் துர்பாக்கியநிலைக்குத் தள்ளப்படும் நிலை உள்ளது. ஒருவேளை படம்
நன்றாக இல்லை என்பதனை அப்படியே எழுதினால் , ‘நீ ஒரு அஜித் ரசிகன்; அதனால் தான் எங்கள்
தளபதி படத்தைத் தரக்குறைவாக எழுதுகிறாய் ’ என்ற கம்ப்ளைன்ட் வரும். இங்கே நான் குறிப்பிடவேண்டிய
விஷயம் என்னவெனில் நான் அஜித் ரசிகன்; ஆனால் விஜய் ஹேட்டர் கிடையாது. காவலன் திரைப்படத்திலிருந்து
அனைத்து விஜய் திரைபடங்களையும் முதல்நாள் முதல்ஷோ என்ற ரேஞ்சில் (ஜில்லா தவிர) பார்த்துவருகிறேன்.
சமூகவலைத்தளங்களில் பெரும்பாலானோர் தன்னை அஜித் ரசிகன் என்று கொக்கரித்துவிட்டு, எப்போது
பார்த்தாலும் விஜயை ஓட்டுவதையே பிழைப்பாக கொண்டிருப்பார்கள்; காரணம் தங்களை ஒரு விஜய்
ஹேட்டர் என்று வெளிப்படையாக கூறாமல் , அதற்கென ஒரு காரணத்தைக் கற்பிக்கும் பொருட்டு
அஜித் ரசிகன் என்ற சாயத்தைப் பூசிக்கொண்டு இப்படியெல்லாம் செய்துவருகிறார்கள். இதே
எதிர்வினை அஜித்திற்கும் உண்டு. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">சுற்றிவளைக்காமல்
மேட்டருக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு இவ்வளவு சுற்றி வந்து உங்களைக் கடுப்பாக்குவதற்கு
காரணம் நான் விஜய் ஹேட்டர் இல்லை என்பதை உங்களுக்கு விளக்கவே! இவ்வளவு நாள் விஜய் திரைப்படத்திற்கு
விமர்சனம் எழுதாமல் இப்போது மட்டும் என்ன கூந்தலுக்கு எழுதுகிறாய் என்று நீங்கள் கேட்பது
புரிகிறது. என்ன செய்ய ? இது ஒரு நார்மல் திரைப்படமாக இருந்திருந்தால் நான் எழுதியிருக்கமாட்டேன்.
இது ஒரு ஃபேன்டசி அட்வெஞ்சர் திரைப்படமாயிற்றே ! இதற்கு நான் விமர்சனம் எழுதவில்லை
என்றால் ஆத்தா ஃபேன்டசி காளியத்தாள் என் கனவில் வந்து என் கண்ணைக் குத்திவிடுவாள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">பொதுவாக
ஃபேன்டசி படங்களுக்கு அவ்வளவாக தமிழகத்தில் வரவேற்பில்லை என்பது என் ஆதங்கம்; இத்தனைக்கும்
தமிழ்சினிமாவின் ஆரம்பகாலகட்டங்கள் பேன்டசி எனும் மாயவலையத்தில் சிக்கிக்கொண்டிருந்தது.
அன்று வந்த பல ஃபேன்டசி திரைப்படங்களை இப்போது ஹாலிவுட்டில் பட்டி, டிங்கரிங் செய்து
கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் , பேன்டசியில் தாயான நம் தமிழ்சினிமா , அப்படியே
அதைமறந்து விட்டு வேறெங்கெங்கோ பயணிக்க ஆரம்பித்துவிட்டது. ஏன் என்றால் நம்மவர்கள்
ஃபேன்டசி கதைகளைக் குழந்தைகளுக்கானது என்று எண்ணத்துவங்கியது தான். நாமும் ஒரு காலத்தில்
குழந்தையாகத் தானே இருந்தோம்?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">கிட்டத்தட்ட
சாவுமணியடித்து ஃபேன்டசி எனும் பெயரே தமிழ்நாட்டில் மறையத்துவங்கும் வேளையில் ஒரு பக்கா
ஃபேன்டசியைக் கொடுத்து திரையுலகில் ஒரு புரட்சி செய்தார் இயக்குநர் சிம்புதேவன். இம்சை
அரசன் திரைப்படத்தை இன்றளவும் என் லேப்டாப்பில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்றால்
பாருங்கள். அவரின் வரவுக்குப் பின் பேன்டசி சித்திரங்கள் மறுபடியும் கொஞ்சம் உயிர்பெற்றது
எனலாம். தொடர்ந்தாற்போல் சில பேன்டசி திரைப்படங்களாக எடுத்து சிம்புதேவன் தன்னை ஃபேன்டசி
இயக்குநராகவே காட்ட ஆசைப்பட்டார். அதன் வெளிப்பாடு அறை எண் 305-ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் , ஒரு கன்னியும்
மூன்று களவாணிகளும் என வரிசையாக ஃபேன்டசி திரைப்படங்களைக் கொடுத்தார். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இன்னொருபுறம்
நான்கு ஆண்டுகளுக்குமுன் வாங்கிய சறுக்கலில் இருந்து பரிபூரணமாக வெளிப்படும் பொருட்டு
இளையதளபதி தனக்கேற்ற கதைகளாக தேடித்தேடி நடித்தார் . ஜில்லா கூட ரசிகர்களைத் திருப்திப்படுத்தியது.
சுறாவிற்கு பின் மரணமொக்கைத் திரைப்படங்களைத் தவிர்த்து வந்த இளையதளபதிக்கு வேறொரு
வடிவில் பிரச்சனை வந்தது உலகத்தமிழர்கள் அனைவரும் அறிந்ததே ! ஒவ்வொரு படமும் ரிலிசாகுமா
? ஆகாதா ? என்று பணம்போட்ட ப்ரொடியூசர்களை விட , பர்ஸ்ட்ஷோக்கு டிக்கெட் எடுத்து ,
ரீஃபண்ட் பண்ணுவானுங்களா ? மாட்டாங்களா ? என்று அதீத புலம்பலில் தவித்தவர்கள் நிறையபேர்.
ஆனாலும் அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்குமிடையே படம் ஹிட் ஆனது தனிக்கதை. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">வரிசையாக
ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்துவந்த இளையதளபதிக்கு கொஞ்சம் போர் அடித்திருந்தாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை. பகவதியில் ஆரம்பித்து (இடையில் காவலன், நண்பன் தவிர்த்து)
கடைசியாக வந்த கத்தி வரை தளபதி முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படங்களிலேயே தான் நடித்துவருகிறார்.
இந்த காரணங்களால் வெரைட்டி எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த தளபதியிடம் சிம்புதேவன்
தன் கற்பனையை முன்வைக்க , இம்ப்ரஸ் ஆன விஜய் ஓ.கே செய்து உருவானது தான் புலி.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">பொதுவாக
ஃபேன்டசி திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி இலக்கணம் கிடையாது என்பதே இலக்கணம். கதை
எப்படி வேண்டுமானாலும் போகலாம், கற்பனை எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் ; ஆனால் திரைக்கதை
பக்காவாக இருக்கவேண்டும். எனக்குத் தெரிந்து எப்படியும் ஃபேன்டசி திரைப்படங்களை குறைந்தபட்சம்
ஒருமுறையாவது பார்க்கும்படியாகத் தான் இருக்கும். இந்த ஆவலில் சேலத்தில் என்னுடைய இன்ப்ளூயன்ஸை
(?) வைத்து எப்படியோ 15 டிக்கெட்களை வாங்கிக்கொண்டு முதல்காட்சிக்கு நண்பர்கள் படைசூழ
கிளம்பினோம். அங்கேபோனால் ஸ்பெஷல்ஷோ ரத்து என்றும் , எங்களுடைய 11 மணி ஷோவை ஸ்பெஷல்
ஷோவாகவும், எங்களின் ஷோ டைமை 2.30 மணிக்கு என்றும் மாற்றிவிட்டார்கள். காலை 7 மணிக்கு
ரசிகர்ஷோவிற்கு வந்த ரசிகர்களால் ஏற்பட்ட பிரச்சனையில் தியேட்டர் வாசலெங்கும் பிய்ந்துபோன
செருப்புகளாகவே இருந்தது. கடனே என்று 2 மணிவரை காத்திருந்த நாங்கள் , ஸ்பெஷல் காட்சி
முடித்துவிட்டு வந்திருந்த ரசிகர்களிடம் ச்சும்மானாச்சுக்கும் படம் எப்படி இருக்கு
பாஸ் என்று கேட்க , அவர்களோ முகத்தில் சக்தியே இல்லாமல் எங்கோ பார்ரத்தபடி நல்லா இருக்கு
பாஸ் என்று கூறிவிட்டுபறந்துவிட்டார். உடனே என் நண்பன், ‘இவனுங்க நல்லா இருக்குனு சொன்னா
, சுமாரா இருக்குனு அர்த்தம்’ என்றுசொல்ல , நானோ வாயைவைத்துக்கொண்டு சும்மா இல்லாமல்
‘இவனுங்களுக்கு ஃபேன்டசி படத்தையெல்லாம் ரசிக்கத் தெரியாது டூட். ஆளாளப்பட்ட செல்வாவோட
படங்களையே ப்ளாப் ஆக்கி, போங்கடா நீங்களும் உங்க ஃபேன்டசியும் என செல்வாவையே பித்துபிடிக்க
வச்ச ஆளுங்க டூட் இவனுங்க’ என்றேன். எப்படியோ அடித்துப்பிடித்து போய் அமர்ந்தோம். இளையதளபதியின்
ரசிகர்கள் தயவு செய்து அப்படியே கடைசி நான்கு பேராவிற்கு சென்று படிக்குமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன். கீழே உள்ள பத்தி உங்கள் மனதைப் புண்படுத்துவதற்காக அல்ல; என் மனதில்
புண்பட்ட காயத்தை ஆற்றிக்கொள்ள .<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">படத்தின்
கதை என்னவென்று சிம்புதேவனிடம் தான் கேட்க வேண்டும் . ஏதோ அப்படி, இப்படியென்று ஒட்டவைத்து
, பூதக்கண்ணாடி , மைக்ராஸ்கோப், டெலஸ்கோப் என்று வைத்து நான் கண்டுபிடித்த கதை என்னவெனில்
வேதாளக்கோட்டை எனும் ராஜ்ஜியம்; அதன் கொடூர ஆட்சியின்பிடியில் சிக்கித்தவிக்கும் கிராமங்கள்;
அந்த கிராமங்களில் ஏதோ ஒரு கிராமத்தில் , ஐ மீன்
ஹீரோவின் கிராமம்; அக்கிராமத்தின் பெரியவர் பிரபு . ‘உங்கள் ஆட்கள் இப்படியெல்லாம்
அநியாயம் செய்கிறார்கள் ’ என்று ராணி ஶ்ரீதேவியிடம் கோர்த்துவிடச்செல்லும் பிரபுவின்
ஒருகையை வெட்டி அனுப்பிவிடுகிறார் படுபாதக கொடூர தளபதி சுதீப். அப்போதே நமக்கெல்லாம்
சுதீப்பின் வெறித்தனங்களைப் பார்த்து அதீத பயத்தினால் சீட்டின் உச்சியில் அமர்ந்துகொண்டு
நடுங்கிக்கொண்டிருக்கிறோம். பிரபுவின் கிராமத்தில் ஒருமுறை வேதாளங்கள் வந்து ராவடி
செய்ய , கடுப்பான ஒரு சிறுவன் கல்லை எடுத்து எறிந்துவிடுகிறான். அவர்தான் நம் ஹீரோ
என்று யாருக்கும் அப்போது தெரியாது. வேதாளங்கள் டென்சனாகி யாரென்று கேட்க , அச்சிறுவனின்
அக்கா நான் தான் எறிந்தேன் என்று சொல்ல அச்சிறுமியையும் கொன்றுவிடுகிறார்கள். இப்போது
அந்த கிராமத்தைக் காட்க யாருமே இல்லையே என்று தவிக்கும் அக்கிராம மக்களுடன் நாமும் மனதைக் கல்லாக்கிக்கொண்டு
தவிக்கிறோம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அதன்பின்
வருடங்கள் உருண்டோட சிறுவன் வளருகிறார்; அவ்வப்போது அட்டூழியம் செய்யலாம் என்று ஆசையோடு
வரும் வேதாளங்களை , தன் ராஜதந்திரத்தால் தலைத்தெறித்தோடச் செய்கிறார் ஹீரோ. உடனே நமக்கெல்லாம்
உடல், சட்டை, செருப்பு என எல்லா இடத்திலும் புல்லரிக்கச் செய்யும் டி.எஸ்.பியின் புலி,
புலி , புலி பாடல் வருகிறது. பாடல்முடிந்ததும் தமிழ்சினிமா வரலாற்றில் யாரும் செய்யாத
ஒரு அறிய விஷயத்தை ஊடாலே புகுத்தி நம்மை குப்புறப்படுத்து கும்பிடவைத்திருக்கிறார்
இயக்குநர்; ஆம் இதுவரை யாருமே கண்டிராத வகையில் ஹீரோயினின் இன்ட்ர’டொக்’சனை வைத்து
நம் மனதை அள்ளிவிடுகிறார். இப்போது என்ன செய்யவேண்டும் ? ஹீரோவையும் காட்டியாகிவிட்டது,
ஹீரோயினையும் காட்டியாகிவிட்டது ; அடுத்து , டூயட் என்று நாமெல்லாம் ஏங்கித்தவித்துக்கொண்டிருக்கும்
போது இமயமலை அளவிற்கு ஒரு பெரும் ட்விஸ்டை நம் தலையில் வைத்து சீட்டோடு நம்மை அமுக்கிவிடுகிறார்
இயக்குநர் ; வச்சோஸ்கி சகோதரர்கள் மேட்ரிக்ஸ் எனும் படத்தில் வைத்த சண்டைக் காட்சிகளையெல்லாம்
அள்ளித்தூக்கி மென்று ஏப்பம் விடும் அளவிற்கு அந்த முரட்டு சண்டை காட்சி இருக்கிறது.
ஐயகோ! அவசரப்பட்டு தளபதி வேதாளங்களை அடித்துவிட்டாரே
? இனிமேல் வேதாளங்களை கடவுள் தான் காப்பாற்றவேண்டுமென நாம் இரக்கமழை பொழிந்துகொண்டிருக்க
, திடீரென தளபதி பாடிய பாடலைப் போட்டு நம் இரக்கமனதைக் காதல் ரசம், காம சாம்பார் என்று
எல்லாம் பிழிந்தோட செய்துவிட்டார்கள். அப்பாடல் காட்சியில் ஸ்ருதிஹாசனின் தொப்பையைப்
பார்த்து தியேட்டரில் இருந்தவர்களும் ஏன்டி , ஏன்டி எங்கள கொல்லுற? என்று பாடினார்கள்
என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அடுத்த
காட்சியில் ஸ்ருதிஹாசனின் சேவை இப்போதைக்கு போதுமென்று அவரை வேதாளக்கேட்டைக்கு கடத்திச்
சென்றுவிடுகிறார்கள் வேதாளங்கள். அதைத்தடுக்க போன பிரபுவை இரக்கம் சிறிதுமின்றி வயிற்றில்
கத்தியை இறக்கிவிடுகிறார்கள். ஹீரோ வரும்வரை தன் உயிரை சட்டைப் பாக்கெட்டில் பத்திரமாக
வைத்திருந்து , ஹீரோ வந்ததும் தான் செய்த சாகசங்களை அவரிடம் சொல்லிவிட்டு செத்துப்போகிறார்
பிரபு. அங்கிருந்தவர்களைக் காட்டிலும் தியேட்டரில் இருந்தவர்கள் பிரபுவின் இழப்பைத்
தாங்க முடியாமல் நெஞ்சு நெஞ்சாய் அடித்துக்கொண்டு , தியேட்டரின் கீழே காலை வைக்கமுடியாத
அளவிற்கு கண்ணீர் ஆற்றினை ஓடவிட்டுக் கொண்டிருந்தார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">நல்லவேளையாக
தியேட்டருக்கு வெளியே லைப்ஜாக்கெட்டை முன்னேற்பாடாக கொடுத்திருந்ததால் அதைப்போட்டு
அந்த ஆற்றினுள் இருந்து தப்பித்தோம். அதன்பின் நடப்பது நம் கற்பனைக்கு அப்பால் , தொலைதூரத்தில்,
ரொம்ப தூரத்தில் நடக்கும் விஷயங்கள். இடையிடையே உங்களிடம் சொல்லமறந்துவிட்டேனே! படத்திற்கு போகும்முன் ஜெலுசில் மாத்திரை மூன்று,
வயிற்றுவலி மாத்திரை மூன்று ஆகியவற்றை முன்னேற்பாடாக
எடுத்துக்கொண்டு செல்லுங்கள் . தம்பிராமையாவும் , சத்யனும் சேர்ந்து செய்யும் காமெடியால்
பக்கத்து வரிசையில் இருந்த பலர் வயிற்று வலி அதிகரித்து , வாயில் ரத்தவாந்தி எடுத்துவிட்டனர்.
இதைப்பார்த்த தியேட்டர் நிர்வாகம் உடனே அருகில் இருந்த பச்சிலை மருத்துவர் பச்சிலைக்
கண்ணனை தியேட்டரில் வயிற்றுவலி எடுப்பவர்களுக்கு மருத்துவம் பார்க்க நிரந்தரமாக நியமித்துவிட்டது.
படம் முடியும் முன்பே பச்சிலைக் கண்ணன் தியேட்டருக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய
மல்டிஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலை விலைக்கு வாங்கிவிட்டார் என்ற வாய், செவி, கண்வழி செய்திகள்
வெளிவந்தன. எனக்கோ பெருத்த சந்தேகம்; ‘ஏங்க ? அல்லோபதி டாக்டர கூட்டிட்டுவராம இவர எதுக்குங்க
கூட்டிட்டு வந்திங்க?’ என்று வினவ , தியேட்டர் நிர்வாகமோ ‘தம்பி ! இந்த படத்துல எங்கனாச்சும்
அந்தமாதிரி டாக்டர் வராங்களா? இல்லல! அதனால முள்ள முள்ளால தான் எடுக்கனும்’ எனும் அரியமொழியினை
உதிர்த்துவிட்டு என்னிடமிருந்து அவரும் உதிர்ந்தார். நல்லவேளையாக நான் காமெடிக்காட்சிகளில்
காதைப்பொத்திக்கொண்டதால் என் வயிற்றையும் கொண்டு போன சில்லரையையும் காப்பாற்றிக்கொண்டு
வந்தேன். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">சத்யன்,
தம்பிராமையாவின் காமெடியால் கதிகலங்கி, நிலை ஸ்தம்பித்து போன பார்வையாளருக்கு , உலகசினிமா
வரலாற்றிலேயே யாரும் கண்டிராத ஒரு பெரிய விஷயத்தைப் பட்டிணத்தில் பூதம் திரைப்படத்திற்குப்பின்
தன் திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பார் இயக்குநர். ஆம், நீங்கள் நினைப்பது சரிதான்.
நாம் யாருமே மனக்கண், அகக்கண், பூனைக்கண், யானைக்கண் என்று எந்த கண்ணிலும் கண்டிராத
சித்திரக்குள்ளர்களை திரையில் உலவவிட்டு நம்மை டர்ராக்கிவிட்டார்கள். சித்திக்குள்ளர்களைக்
கண்டதும் பக்கத்தில் இருந்த எழுபது வயது பெரியவர் , திடீரென சிறுகுழந்தையாக மாறி பக்கத்தில்
இருந்த தன் சகாவிடம் ‘மாமா ! பிஸ்கோத்து’ என்று கேட்ட அதிசயமும் அப்போது அங்கே நடந்தேறியது.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">பெரியவர்தான்
சிறுகுழந்தையாக மாறினார் என்றால் , ஹீரோவோ சித்திரக்குள்ளனாகவே மாறி ஒரு முரட்டுக்
குத்து சாங்கிற்கு ஆடியேவிட்டார். அந்த பாடலைக் கண்ட ரசிகர்கள் தியேட்டர் திரையின்
அருகே சென்று ஆட, ஒருகட்டத்தில் வேதாளங்களைப் போன்று சக்திபெற்ற ஆட்டக்காரர்கள் தியேட்டரின்
சீலிங்கில் ஏறி தலைகீழாக ஆட ஆரம்பித்துவிட்டார்கள். தலைகீழாக ஆடுபவர்களுக்கு வசதியாக
தியேட்டர் ஆபரேட்டர் , பாடலை தலைகீழாக ஒளிபரப்பி அந்த ரசிகர்களின் குஷயை பன்மடங்கு
பெரிதாக்கிவிட்டிருந்தார். பாடல் முடிந்ததும் சித்திரக்குள்ளர்களின் தலைவர் வழிகாட்டுதலின்படி
, ஒரு மாபெரும் ஆமையைச் சந்திக்கிறார்கள்.
தமிழ்மொழி வரலாற்றிலேயே யாரும் கண்டறியமுடியாத பல புதிர்களை கவிதைகளாக கோர்த்துத்
தருகிறது அந்த ஆமை ஐயா. அந்த புதிர்களுக்கு விடை கண்டுபிடிக்க சில ரசிகர்கள் எழுந்து
சென்று தமிழ்மொழியின் புதிர்களும் விடுகதைகளும் போன்ற புத்தகங்களை மணிக்கணக்காக திருப்பித்திருப்பி
படித்தார்கள். ஒருசிலர் அதில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் வாங்கி விட்டதாக இன்றைய
செய்தித்தாள்களில் செய்திவெளியானது. ஆனால் டாக்டர் பட்டம் வாங்கியவர்களாலும் அந்த விடுகதைக்கான
விடையை கண்டுபிடிக்கமுடியவில்லை என்பது தான் சரித்திரசோகம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அதன்பின்
ஹீரோ, அவருடன் வந்த ஒரு பேசும் பறவை மற்றும்
தன் இரு காமெடி சகாக்கள், 3 சித்தரக்குள்ளர்கள், சட்டையில் ஒட்டியிருந்த நான்கு பாக்டிரியாக்கள்,
ஷூவினுள் சாரி பாதணியில் இருந்த ஐந்து வைரஸ்கள் போன்றவற்றுடன் தன் சாகசப்பயணத்தைத்
தொடர்கிறார். சாகசம் என்றால் சாகசம் ; அப்படி ஒரு சாகஸம். சிந்துபாத் சாகஸம், ஹாத்தீம் தாய் சாகஸம் எல்லாவற்றையும்
கமட்டையில் மென்று துப்பினாலும் புலிசாகஸத்திற்கு ஈடாகாது. இந்த சாகஸ காட்சிகளைப் பார்த்து
ஆவி சிலிர்த்து குப்ரிக், ஹிட்ச்காக், விட்டலாச்சார்யா போன்றோர் மேலோகத்தில் இப்படிப்பட்ட
சாகஸத்திரைப்படத்தை எடுக்கவில்லையே என்று இந்திரனிடம் புலம்பியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இதற்கிடையில்
இடைவேளை விட , தியேட்டரை விட்டு நகரவே மனமில்லாத ரசிகர்கள் ஆவலோடு இடைவேளையின் அந்த
20 நிமிடத்தை மிக ரணமாக ஒவ்வொரு வினாடியும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
அதன்பின்தான் அகிலவேதாள உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ராணி ஶ்ரீதேவியின் இன்ட்ரோ.
அவரின் கெட்டப்பைப் பார்த்து வாயைப் பிளந்த சிலரின் வாயில் ஈ, எறும்பு எல்லாம் தாண்டி
அருகிலிருக்கும் குருவம்பட்டியில் இருந்து தப்பிவந்த ஒரு கரடியும், ஐந்து மான்களும்
புகுந்துவிட்டன. அதை எப்படி வெளியில் எடுப்பது என்று வனத்துறை அலுவர்களும், மருத்துவர்களும்
தங்களின் மண்டை, சட்டை, பக்கத்தில் நின்றிருக்கும் ஆட்களின் சட்டை என எல்லாவற்றையும்
பிடித்து கிழித்துப் புலம்பிக்கொண்டிருந்தார்கள்.
கடைசியில் வேறு வழியே இல்லாமல் மீண்டும் ராணியின் இன்ட்ரோ காட்சியைப் போட்டு
, மறுபடியும் அவர்களின் வாயைப்பிழக்கவைத்து , உள்ளே இருந்த விலங்குகளை பத்திரமாக மீட்டார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அதன்பின்
மயிர், தலை, உடம்பு, கத்தி, சுத்தி, தரை, வானம், தண்ணீர் என எல்லாவற்றியும் கூச்சரியச்செய்யும்
காட்சிகளை பலத்த, கனத்த இதயத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களை , இடியென தாக்கியது
அந்த காட்சி. திடீரென யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் வந்தது அது ; அவர் தான் புலி.
அவர் தான் ஹீரோவின் தந்தை என்றும் தெரிந்தது. தியேட்டரில் இருந்த பலரும் புலியாக நடித்தவர்
யாரென்று தெரியாமல் முழிபிதுங்கிக்கொண்டிருந்தனர். பலர் பக்கத்திலிருக்கும் போலிஸ்
ஸ்டேசன், இந்திய உளவுத்துறை அமைப்பான ரா, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, , ஷெர்லாக் ஹோம்ஸ்,
ஐ.எம்.எஃப் போன்ற உளவுத்துறை அமைப்புகள் மற்றும் ஏஜென்ட்களிடம் புலியாக நடித்திருந்தவர்
யாரென கண்டுபிடித்துத் தருமாறு பெட்டிசன் போட்டார்கள். இவர்களெல்லாம் கைவிரிக்க வேறுவழியே
இன்றி ஜேம்ஸ்பாண்டை அனுக , அவரும் தன்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று சோகங்கலந்து
குரலில் கண்ணீருடன் சொன்னார். அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. அகதா கிறிஸ்டியின்
நாவல்களில் வரும் மாபெரும் துப்பறிவாளர் பொய்ரெட் தன் குள்ள உடலையும் பெருத்த தொப்பையும்
உருட்டிக்கொண்டு தியேட்டருக்கு வந்து அந்த ரகசியத்தைக் கூறினார்; அப்பா வேடத்தில் நடித்ததும்
விஜய் என்று தெரிந்ததும் தியேட்டரில் சோ-வென கூச்சலிட்டார்கள். மாறுவேடத்தில் ஏற்கனவே
வந்த கெட்டப்பைக் கண்டுபிடிக்கத் தடுமாறிய ரசிகர்களை ஒரேயடியாக வியப்பில் ஆழ்த்திவிட்டது
தந்தையின் கெட்டப்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இந்த
சந்தோஷம் அதிகநேரம் நீடிக்கவில்லை; ஒருகட்டத்தில் அந்த துக்ககரமான விஷயம் நடந்தது.
பிரபுவின் இறப்புக்கே கண்ணீரை காலி செய்திருந்ததால்
, கண்ணீர் ஆறு அங்கு ஓடவில்லை என்பதே ஆறுதல். ஆனால் ஐ.சி.யூ-வில் சேர்க்கப்படும் நிலைக்குப்
பலர் ஆளாகிவிட்டார்கள் . இதற்குமேல் கதையைச் சொல்லிவிட்டால் படம் முடிந்துவிடும். அதனால் இதுவே போதும். இதுவரை படத்தில் ஃபேன்டசி என்ற
வஸ்து சரிவர இல்லாததால் என் விமர்சனத்தில் அதைக் கொஞ்சம் தூக்கலாக்கிவிட்டேன். இனி
கொஞ்சம் சீரியஸாக பார்க்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">விஜய்
எனும் மாஸ் ஹீரோவை வைத்து கோலிகுண்டு விளையாடினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது
படம். எல்லோரும் விஷுவல் ட்ரீட், விஷூவல் ட்ரீட் என்று சொல்லும்போது எனக்கு இன்னும்
செம காண்டுதான் வருகிறது. மயக்கம் என்ன திரைப்படம் விஷுவல் ட்ரீட். இந்த படத்தில் காட்டப்படும்
காடுகள் எல்லாம் ‘நட்புக்காக’ படத்தில் வயதான சரத்குமார் இன்ட்ரோ ஆகி சண்டைப்போடும்
காடுகள் போலுள்ளது . இதில் விஷுவல் ட்ரீட் எங்கிருக்கிறது? முந்தைய விஜயின் படங்களை எடுத்துப் பார்த்தால் அழகிய தமிழ்மகன் சினிமாட்டோகிராபி
சுமாராகத்தான் இருக்கும்; இந்த படம் அதைவிட செம சுமார் ஒளிப்பதிவு. ஆயிரத்தில் ஒருவன்
அட்வென்சர்காக தேர்ந்தெடுக்கப்பட்ட லொகேசன்களைப் பார்த்தவர்கள் இதைப் பார்த்தால் வாய்விட்டு
சிரிப்பார்கள். இது என்ன புதுஹீரோ நடிப்பில் வெளியாகும் படமா? இருக்கின்ற பணத்தை வைத்து
எடுக்க? 100 கோடி ரூபாய் பிஸினஸ் நடத்தும் விஜய்யின் படத்திற்கான தரம் என்பதும் அதிகமாகத்தான்
இருக்கவேண்டும். 2 கோடி, 3 கோடியில் திரைப்படம் எடுப்பவர்களே விஷுவலில் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மிகச்சுமாரான விஷுவலை காமித்துவிட்டு , இது விஷுவல் ட்ரீட் என்றால் செம காண்டுதான்
வருகிறது. நட்டுவுக்கு என்ன கோவமோ தெரியவில்லை. இந்தி சினிமாக்களில் கலக்கு கலக்கு
என்று கலக்கியவர் தமிழில் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. காட்சிகளில் ஏதோ கடமைக்கு ஆங்காங்கே
ரிச் லுக் கொடுத்திருக்கிறார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இரண்டு
ஹீரோயின்கள் எதற்கு என்று கேட்க தோன்றினாலும் படத்தில் விஜயைத்தவிர்த்து வேறு எந்த
கேரக்டருமே தேவையில்லை என்பதைப் போல் தான்
உள்ளது. சரி, காதலி கேர்கடர் கடத்தப்படுகிறாள், படத்திற்கு அவசியமென்றால் , இளவரசி
ஹன்ஸிகா கேரக்டர் எதற்கு? அவளின்மூலம் அரண்மனையில் நுழைவதற்கா? அப்படியெனில் இந்த சின்ன
கேரக்டரைசேசனுக்கு எதற்கு ஹன்ஸிகா ? தேவையில்லாத செலவு . எதற்கு செய்யவேண்டுமோ அதற்கு
செய்யவேண்டும். இன்னும் படத்தில் பல கேரக்டர்கள் எதற்கு என்று தெரியாமலேயே வருகிறார்கள்.
விஜயகுமார் கட்டப்பாவாக வரும்போது செம செட்டப்பா இருக்கிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இவ்வளவு
மொன்னையான வசனங்களை நான் எந்தவொரு படத்திலும் பார்த்ததோ , கேட்டதோ இல்லை. நேற்று ப்ளாக்
தொடங்கி , சிறுகதை எழுதுபவர்களின் வசனங்கள் இதைவிட பிரமாதமாக இருக்கும். இசை ஒன்றும்
பெரிதும் எடுபடவில்லை என்றாலும் பிண்ணனியில் முடிந்தளவு ஏதேதோ போட்டிருக்கிறார் டி.எஸ்.பி.
ஶ்ரீதேவி கேரக்டர் பற்றியும் பெரிதாக சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. சுதீப் ? பாவம் அந்த
ஆள். நல்ல நடிகரை வைத்து மொக்கையடித்து விட்டார்கள். பிரபுவுக்கு வழக்கம்போல துளிகூட
வேலையில்லாத ஒரு கேரக்டர். கிராபிக்ஸ் ஒற்றைக்கண்ணன் எதற்கு ? தண்டச்செலவு. கேஸ்டிங்
செலவைக் குறைத்திருந்தாலே படத்தின் தரத்தை அதிகரித்திருக்கலாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">குழந்தைகளுக்கு
விருப்பமான கதையை செலக்ட் செய்து பெரியவர்களை ரசிக்கவைக்கும் திரைக்கதையை எழுதி , நல்ல
டெக்னீசியன்களை வைத்து எடுக்கப்பட்டிருந்தால் இந்த புலி கொண்டாடப்பட்டிருக்கும்; கதை செலக்ட் செய்தவிதத்தை , திரைக்கதை எழுதுவதிலும்
காட்டியிருக்கவேண்டும். அதைவிட தன் திரைப்படத்தின் அவுட்புட் எந்தளவிற்கு இருக்கிறது
என்பதை ஒரு இயக்குநர்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். இங்கோ படுமட்டமான கிராபிக்ஸ் காட்சிகளையும்,
அபத்தப்போக்கிலான விஷுவலையும் பார்க்கும்போது இது விஜய் படமா என்று கேட்கத்தோன்றுகிறது.
இத்தனைக்கும் படத்தின் கிராபிக்ஸ் நல்லாயில்லை என்று விஜய் கூறி , மீண்டும் கிராபிக்ஸ்
காட்சிகளை வடிவமைத்தார்களாம். எதிர்பார்ப்பில்லாமல் பார்த்தால் பிடிக்கும் என்பதற்கு
இது யாரோ நடித்த திரைப்படம் இல்ல! மாஸ் ஹீரோக்களின் திரைப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பில்லாமல்
எப்படி பார்க்கமுடியும்?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">தனக்குக்
கிடைத்தப் ‘புலி’யங்கொம்பை கோட்டைவிட்டுவிட்டார் சிம்புதேவன். முழுத்தவறும் இயக்குநரின்
பேரில்தான் சுமத்தமுடியும். அவ்வளவு கேர்லெஸ் விஷயங்கள் படத்தில் நிறைந்திருக்கின்றன.
கதையைக்கேட்டு ஒப்புக்கொள்வதை எல்லா மாஸ் ஹீரோகளும்
நிறுத்திவிட்டு ஹாலிவுட்டைப்போல் திரைக்கதை முழுமையும் படித்துப் பின் நடிக்க ஆரம்பிக்கவேண்டும் என்பதைத்தான் புலி வலியுறுத்துகிறது. குழந்தைகள்
கூட ரசிப்பது கடினம் தான். இதைவிட சிறந்த அட்வெஞ்சர்களையும் பேன்டசிகளையும் சோட்டாபீமில்
தினசரி பார்க்கும் குழந்தைகளுக்கு பிடிப்பது கடினம். மற்றபடி ஏதோ போலாம் என்றால் போலாம். <o:p></o:p></span></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-16726075946099897022015-09-04T10:16:00.000+05:302015-09-04T10:16:47.877+05:30தெருவில் ஒரு சிறுவன் – குறும்பட விமர்சனம் <div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">உங்களுக்கெல்லாம், ஐ மீன் என் ப்ளாக்கை வாசித்து வருபவர்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியாக இல்லாவிட்டாலும்
சிறிய ஆச்சரியாமாவது கண்டிப்பாக இருக்கும்; என்னடா இவன், ஒலகசினிமா, ஹாலிவுட் சினிமா என்றெல்லாம் எழுதிக்கொண்டிருந்தவன் திடுதிப்பென
குறும்படத்திற்கு விமர்சனம் எழுதவந்துவிட்டானென்று. ஏற்கனவே பலமுறை யோசித்து எழுதாமல்
விட்ட டாபிக் குறும்பட விமர்சனம். நேற்றிரவு மூறையின் ஏதோவொரு நியூரானில் உறங்கிக்கிடந்த
அந்த யோசனையைத் தட்டியெழுப்பி, அதற்கு விட்டமின் ஊட்டி வளர்த்தி, இப்போது எழுதவைத்துவிட்டார்
இப்படத்தின் இயக்குநர் சனாதனன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஏற்கனவே
சாதித்தவர்களைப் பற்றியே எழுதிக்கொண்டிருந்தால் , சாதிக்கப் போகிறவர்களைப் பற்றி எப்போது
எழுதப்போகிறீர்கள் என்று சைலன்டாக அவர் கேட்ட கேள்வி பசுமரத்தாணி போன்று மூளையில் பதிந்துவிட்டது. அவர் கேட்பதும் வாஸ்தவம் தான். சினிமாவிற்கு இருக்கும் மீடியா சப்போர்ட்டில் 0.1
சதவீதம் கூட குறும்படங்களுக்கு இல்லை என்பதே 100 சதவீத உண்மை. சரி, இன்றிலிருந்து
மாதம் ஒரு குறும்படத்தையாவது நம் வாசகர்களுக்கு (?) அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்ற
தலையாய கொள்கையை நெஞ்சினுள் விதைத்து, அதை இன்றிலிருந்து அறுவடைச் செய்யத் தயாராகிவிட்டேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">நான்
ஒரு அதிதீவிர குறும்பட ரசிகன்; எந்தளவிற்கு என்றால் ஓ.சியில் யாராவது டவுன்லோட் பண்ணிக்கொடுத்தால்
1000 படங்களென்றாலும் அசராது பார்ப்பேன். என்னுடைய மாபெரும் பிரச்சனையே நெட் தான். எங்கள் ஊருக்கு ப்ராட்பேன்ட் வசதியில்லாமையால்
டேட்டா கார்ட் வாங்கி, மாதாமாதம் அதற்கு சாபத்துடன் தண்டம் கட்டி, கண்ணீர் வராத குறையாக
தலையைச் சுற்றித் தூக்கி எறிந்ததால் வந்த வினை. சரியான நெட் வசதியில்லாததாலே குறும்படங்கள்
பார்க்கும் வாய்ப்பும் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்தது எனலாம். என்னது மொபைலா?
என்னவோ நான் ஒருவன் தான் இந்த சேலத்திலேயே மொபைல் உபயோகிக்கிறேன் என்றும், எனக்காகவே
ஊரெல்லாம் டவர் கட்டி வைத்திருக்கிறார்கள் என்றும் நான் உபயோகிக்கும் செல்போன் நிறுவனம்
நினைத்திருக்கும் போல. பாவம், அவர்களின் வறுமையைத் தீர்த்துக்கொள்ள நெட் பேக்கை எவ்வளவு
முடியுமோ அவ்வளவு ஏற்றி வைத்திருக்கிறார்கள். இந்த நெட்பேக்கை வைத்துக்கொண்டுதான்
மாதமாதம் அந்த வறுமையான கம்பனியின் முதலாளி
சோறு தின்பார் என நினைக்கிறேன். நானோ பரமகஞ்சன். 60 kbக்கு மேலிருந்தால் போட்டோவையே டவுன்லோட் செய்யமாட்டேன். பொத்தி பொத்தி உபயோகித்தாலே மாதம் 200 ரூபாயைத் தாண்டிவிடுகிறது. இந்த லட்சணத்தில்
யூட்யூப் சென்று குறும்படம் பார்க்க என் குறுமனது சம்மதிக்குமா? <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">நேற்றிரவு
சனாதனன் அவர்களுடன் முகநூலில் உரையாடிக் கொண்டிருக்கும்போதுதான்
லிங்கை அனுப்பி, என்னோட குறும்படம் ப்ரோ! எப்படி இருக்குனு கொஞ்சம் கமெண்ட்ஸ் கொடுங்க
என்று கேட்டார். ஆளே இல்லாத இடத்தில், ஆலமரத்தடியில் துண்டைப் போட்டு ‘செல்லாது செல்லாது’
என பஞ்சாயத்து செய்யும் நம்மிடம், ஜூரி பொறுப்பை ஒருவர் ஒப்படைத்திருக்கிறாரே! ச்சும்மா
விட்ருவமோ! கொள்கைக்கு பத்துநிமிடம் பைபை சொல்லி விட்டு டவுன்லோடி பார்த்தேன். உண்மையாகவே
ஒரு குறும்பட இயக்குநராக வலம்வர வேண்டிய அத்துனை
திறமைகளையும் தன்னகத்தில் பதுக்கிவைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இத்திரைப்படத்தில்
அவ்வளவு வித்தைகளையும் இறக்காமல் விட்டுவிட்டாரோ என்றெண்ணவும் வைத்து விட்டார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">படத்தின்
கதை என்னவென்றால் , ஒரு ஆர்வக்கோளாறான இளைஞன்; எழுத்தாளனாக ஆசைப்படுகிறான் (கிட்டத்தட்ட
என்ன மாதிரினு வச்சுக்கோங்களே). ஒருமுறை அவன் தனக்கு விருப்பமான எழுத்தாளரை எதேச்சையாக
சந்திக்கும்போது தன் ஆசையை அவரிடத்தில் வெளிப்படுத்துகிறான். தானும் ஒரு பெரிய கதாசிரியராகவேண்டும்; அதற்கு தங்களின் ஆதரவும் உதவியும் வேண்டும் என்று கேட்கும் அவனுக்கு, மனதைத் தொடும்படியான
ஒரு கதையை எழுதி வா! உனக்கு உதவுகிறேன் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார் அந்த எழுத்தாளர். அதைத்தொடர்ந்து நடக்கும் விஷயங்களை நானே சொல்லிவிட்டால், சனாதனன் காண்டாகக்கூடும். எனவே அந்த ஆர்வக்கோளாறு இளைஞன் என்ன செய்தான் என்பதை படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">படத்தின்
சப்ஜெக்ட் மற்றும் கான்செப்ட் ரீதியாக வலுவான ஒரு பிண்ணனியை உடையது.; அதற்கான டெக்னிக்கல்
டிபார்ட்மென்டும், ஆர்ட்டிஸ்ட் சப்போர்ட்டும் அருமையாக அமைந்துள்ளது ; அட , இவ்வளவு
ஏங்க? திரைக்கதை மற்றும் வசனங்களும் சரியானபடி பொருந்தத்தக்கதாக அமைந்துள்ளது. ஆனால், படத்தின் முடிவானது சப்ஜெக்டைத் தாண்டி வேறெங்கோ
சென்று முடிந்ததாகவே எனக்குள் தோன்றியது. அழுத்தமான கிளைமேக்ஸ் வரவேண்டிய இடத்தில், ஜாலியானபடி முடித்துவிட்டாரோ என்று தோன்றியது. மற்றவர்களுக்கு எப்படியென்று தெரியவில்லை, இது படத்தின் பெரிய குறையாக நான் உணர்ந்தேன். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">மற்றபடி
படத்தின் ப்ளஸ் என்றால், கேமரா ஆங்கிள், இசை (கிளைமேக்ஸில் வரும் லோக்கல் பீட் தவிர) மற்றும் நேர்த்தியான எடிட்டிங் என இவரது டீம் இவருக்கு
பெரிதும் கைக்கொடுத்திருக்கிறது. கதைநடக்கும் சூழல் மற்றும் லொகேசன், கேமராவினுள்
உலாவரும் பாத்திரங்களை முடிந்தவரை தத்ரூபமாக கையாண்டிருப்பது, நடிகர்கள் தேர்வு என
அத்தனையும் கனகச்சிதமாகவே செய்திருக்கிறார் இயக்குநர். நடிகர்களும், குறிப்பாக செருப்புத்
தைக்கும் சிறுவனாக வரும் அந்த பையனின் ஏக்கமான பார்வை மிகச்சிறப்பாக வந்துள்ளது என்பதை
மறுக்க முடியாது; ஆனால் அவ்விடத்தில் மீண்டும் மீண்டும் அதேபோல அவன் பார்க்கிறான் என்பது
வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இயக்குநருக்குத் தெரியாததொன்றுமில்லை! எப்போதுமே
ஒருபவர்புல் காட்சியென்பது ஒருமுறை வந்தால் தான் ஆடியன்ஸ் மனதில் பதியும். எடுத்துக்காட்டாக
ஒரு ஹீரோயின் படம் முழுக்க கண்டங்கி சேலைக் கட்டிக்கொண்டு வந்து, ஒரே ஒரு சீனில் மாத்திரம்
கிளிவேஜ் தெரிய பத்து செகன்ட் வந்து போனால், ஆடியன்ஸுக்கு அந்த கிளிவேஜ் மேட்டர் பெருசாக
தெரியும்; ஆனால், படம் முழுக்க அப்படியே வந்தால் அது எப்படி இருக்கும் என்று உங்களுக்கேத்
தெரியும். மற்ற நடிகர்களும் தத்தம் பங்கைச்
சிறப்பாக செய்திருக்கிறார்கள். கிளைமேக்ஸில் வரும் நடிகையின் மூவ்மென்ட் மற்றும் டயலாக்
டெலிவரி மட்டும் கொஞ்சம் ட்ராமேடிக்காக இருக்கிறது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">மொத்தத்தில்
பெரிய அளவில் ரீச் ஆக வேண்டிய குறும்படம் சில மிஸ்ஸிங்குகளால் கவனிக்கப்படாமல் போய்விட்டது. ஆனால் கண்டிப்பாக நமது ஒன்பது நிமிடங்களை வேஸ்ட் செய்யாது. தாராளமாக பார்க்கவேண்டிய
குறும்படம் தான் இந்த தெருவில் ஒரு சிறுவன். என்னைப் போலவே 2G-யில் காலம் தள்ளுபவர்கள்
en.savefrom.net சைட்டில் சென்று இத்திரைப்படத்தை உங்களுக்கேற்ற அளவில் டவின்லோட் செய்து
பாருங்கள். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span style="color: red; font-family: "Latha","sans-serif";">குறும்படத்தின்
யூட்யூப் லிங்க் .<o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span style="color: red; font-family: "Latha","sans-serif";"><br /></span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/-4whT9tGIFY/0.jpg" src="https://www.youtube.com/embed/-4whT9tGIFY?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span style="color: red; font-family: "Latha","sans-serif";">படத்தின் மீது கிளிக்
செய்து பார்க்கவும் .<o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அடுத்து
இந்த மெகா சீரியல்களை ஒளிபரப்பி என் மனநிம்மதியைக் கொன்றெடுத்து, ரத்தவெறிபிடித்த
சைக்கோவாக மாற்றிக்கொண்டிருக்கும் டி.வி சேனல்களே! மனிதநேயமென்று ஒன்று உங்களிடமிருந்தால்
தயவு செய்து என்போன்ற இளைஞர்களை பி.பி.யின் கோரப்பிடியிலிருந்தும், மனச்சிதைவுப் பிரச்சனைகளிலிருந்தும்
காப்பாற்றுவதற்காகவாது அந்த இழவெடுத்த மெகாசீரியல்களைக் குறைத்துக்கொள்ளுங்கள் . உங்களால்
மாலை ஆறு மணியிலிருந்து 11.30 மணி வரை, ரெஸ்டே இல்லாமல் டென்சனில் தவித்துக்கொண்டிருக்கிறேன். தமிழ் மெகா சீரியல்களாவது பரவாயில்லை! இந்த இந்தி சீரியல்கள் இருக்கிறதே! நான்
பார்த்த மகா கழிசடையான நாடகங்கள் என்றால் இந்த தமிழ் டப்பிங் நாடகங்கள் தான். அதுவும்
மூன்று முடிச்சி என்று ஒரு உலகமகா காவியம் பாலிமரில் ஓடுகிறது. அந்த கருமத்தைப் பார்த்து
எனக்கு வரும் ஆத்திரத்தின் அளவினைக் கணக்கிடவே தனி மெஷின் கண்டுபிடிக்கவேண்டும். அது
போன்றதொரு குப்பையினை என்வாழ்நாளிலேயே எங்கும் பார்த்ததில்லை; அந்த நாடகத்தைப் பார்ப்பதற்கு
பதில் சுறா, அசல், அலை, சுள்ளான் போன்ற படங்களையே பார்த்துத் தொலைக்கலாம் என்பது
போல் இருக்கின்றது. இங்கே நான் மற்றவர்களின் ரசனையை குறைத்து மதிப்பிட வரவில்லை.
என்போன்றே ஆத்திரத்துடன் அந்த நாடகத்தைப் பார்த்தவர்களெல்லாம் தங்களின் ஆத்திரத்தை
ஓரங்கட்டிவிட்டு, அந்நாடகமெனும் கொடுமைக்குள் மூழ்கி ஒன்றிணைந்து பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இது ஒரு மனவலிமையைக் குறைக்கும் சைக்கலாஜிக்கல் பிரச்சனையாகவே நான் கருதுகிறேன்
. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இப்போது
நான் கூற விளைந்தது என்னவென்றால், இதுபோன்ற குப்பைகளுக்கு இடையில் ஒரு அரைமணிநேரம்
ஒவ்வொரு டி.வி.சேனலும் குறும்படங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை வழங்கலாம்;
அதான் நாளைய இயக்குநர் மாதிரியான ப்ரோகிராம் இருக்கே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ப்ரோகிராம் வைத்து எதற்கு பணத்தை வேஸ்ட் செய்துகொண்டு? யூட்யூப்பில் பார்த்து சிறந்த
மூன்று திரைப்படங்களை, அப்படத்தின் இயக்குநரிடம் ஒரு மெயில் போட்டுவிட்டு ஒளிபரப்பட்டும். இதற்கு எந்த குறும்பட இயக்குநராவது மறுப்பு தெரிவிக்கப் போகிறாரா என்ன? அவ்வாறு
செய்யும்போது சேனல்களும் ஒருபைசா செலவில்லாமல் சம்பாத்திக்கொள்ளலாம்; அதேநேரம் ஒரு
குறும்பட இயக்குநருக்குண்டான க்ரெடிட்டும், அதன்மூலம் அப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு
சிலபல வாய்ப்புகள் கிடைக்கும் சூழ்நிலையும் உண்டாகும். இப்படிச் செய்தால் டி.வி. என்றாலே
அலறியடித்துக் கொண்டு ஓடும் என்போன்றோரும் அவ்வப்போது டி.வி.யைப் பார்க்க ஆரம்பிப்பார்கள்.
ஆனால் நல்லதைச் செய்ய நம் சேனல்களுக்கு வழி தெரியாது என்ற காரணத்தினால் இது மாதிரியான
விஷயங்களை மனதிலேயே வைத்துப் பூட்டிவைக்கவேண்டியுள்ளது. <o:p></o:p></span></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-82071639986751946762015-09-03T09:57:00.000+05:302015-09-03T09:57:20.054+05:30தனி ஒருவன் – சினிமா விமர்சனம்<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirYLD8eVuvSCeseLluRXqw_0wNsM6RAmDoWu1udZZz3y0PkCqXKd409Db7RjfPW2xO5F_fsVIL6W80L76zDz5FP0oawzhVKz54KpsBRn8SIqdIYr5lpNvQbuaSUkIgHiW_nEXHN37Mmxk/s1600/%25E0%25AE%25A8%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25A4%25E0%25AF%2580%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%2587%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AF%2587-%25E0%25AE%25A8%25E0%25AE%259F%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E2%2580%2598%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AE%25BF-%25E0%25AE%2592%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E2%2580%2599.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirYLD8eVuvSCeseLluRXqw_0wNsM6RAmDoWu1udZZz3y0PkCqXKd409Db7RjfPW2xO5F_fsVIL6W80L76zDz5FP0oawzhVKz54KpsBRn8SIqdIYr5lpNvQbuaSUkIgHiW_nEXHN37Mmxk/s640/%25E0%25AE%25A8%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25A4%25E0%25AF%2580%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%2587%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AF%2587-%25E0%25AE%25A8%25E0%25AE%259F%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E2%2580%2598%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AE%25BF-%25E0%25AE%2592%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E2%2580%2599.jpg" width="640" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஒரு
பக்கா ஆக்சன் - திரில்லருக்கு என்னவெல்லாம் செய்யவேண்டும்? அதற்குமுன் ஒரு குட்டி
ப்ளாஷ்பேக் . நானும் என் நண்பனும் தினமும் மாலை வேளையில் ஜிம்மிற்கு செல்வோம். வியாழன்
மாலை அப்படிச்செல்லும் போது வழயில் தனி ஒருவன் போஸ்டரைப் பார்த்தோம். ‘ரவி வரிசையா படம் நடிச்சே தள்ளிட்ருப்பாரு போல இருக்கே’
என்றவாறு;பாரேன்! ரவி கூட வரிசையா படமா நடிச்சி தள்ளுறாரு. இவரு அண்ணன் வேலாயுதத்தோட
போனவரு! இன்னும் ஆள காணோம்’ என்றவாறு பரிதாபப்பட்டுக்கொண்டே வந்துவிட்டோம். எப்போதும்
டி.வியே பார்க்காத நான் எதேச்சையாக அன்றிரவு டி.வி பார்க்கும் துர்பாக்கியநிலைக்குத்
தள்ளப்பட்டு, மனதுக்குள் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தேன். அப்போது தான் தனிஒருவன்
ட்ரைலரைப் பார்த்தேன். ட்ரைலர் செம ஸ்டைலாக இருக்கிறதே! படமும் நன்றாக இருக்குமோ? என்றவாறே நினைத்துக் கொண்டு என் நண்பனிடம் அன்றிரவே கூறினேன். அவன், ‘யாரு டூட்
டைரக்டர்?’ என்று கேட்க, தெரியவில்லை என்று கூறிவிட்டால், நீயெல்லாம் ஒரு சினிமா
அனலைசர் என்று காறித்துப்பி விட்டால் என்ன செய்வதென்பதற்காக, புதுடைரக்டர் போல இருக்குடா
என்று கூறினேன். ரிசல்ட் வரட்டும் டூட்! பாக்கலாம் என்று அவன் கூற அத்துடன் நிறுத்திக்கொண்டேன் . <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அடுத்த
நாள் படத்தின் ரிவியூக்களை ஒன்றுதிரட்டி படித்தபோது , படம் சூப்பராக இருக்கிறது என்பதைவிட, படத்தின் இயக்குனர் ஜெயம் இயக்கிய ராஜா என்பதை படித்தபோது தான் பேரதிர்ச்சிக்குள்ளானேன். அடப்பாவிகளா! பேர மாத்துனா, சொல்லவேண்டியதுதான? இது என்ன ஹாலிவுட்டா? அப்படி
இப்படியென்று மனதுக்குள் கேள்வியெழுந்தாலும், சரி நாம நியூஸ் படிக்கறதுமில்ல, பாக்கறதுமில்ல! அப்பறம் எங்க இதெல்லாம் தெரியப்போகுது என்றவாறு அமைதியாகிவிட்டேன். படத்தின் மீதான
எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம் இது ரீமேக் இல்லை, சொந்த சரக்கு என்ற ராஜாவின் பேட்டி.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அப்படி
என்ன சரக்க உள்ள வச்சிருக்காருனு திரையரங்கில் சென்று அமர்ந்தால், ஒரு பக்காவான ஸ்கிரிப்டோடு
அதகளம் செய்திருக்கிறார் . பொதுவாக ஆக்சன் த்ரில்லரைப் பொறுத்தவரை பெரும்பான்மையான
படங்கள், ஆடியன்ஸை வில்லனின் கண்ணோட்டத்திலிருந்தோ அல்லது ஹீரோவின் கண்ணோட்டத்திலோ ஒன்ற வைத்து பார்க்கவைக்கும்படியாக
இருக்கும். ஆனால் இது அம்மாதிரியல்ல. ஆடியன்ஸான நாம், ஆடியன்ஸாகவே இருப்போம் . நம்முடைய
வேலை, திரையில் நடக்கும் நிகழ்வுகளை பார்ப்பது மட்டுமே! அந்தளவிற்கு நம்மை படத்துடன்
கட்டிப்போட்டு, பரபரவென்று திரைக்கதையால் நகர்த்திக்கொண்டே போகிறார் இயக்குநர் . <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">படத்தின்
கதையை எல்லாரும் எழுதிவிட்டாலும் மனதுகேட்காத காரணத்தினால், நானும் என் பார்வையில்
எழுதிவிடுகிறேன் . புத்திசாலி ஹீரோவுக்கும், அதிபுத்திசாலி வில்லனுக்குமான விளையாட்டே
இத்திரைப்படம். கிட்டத்தட்ட டார்க் நைட்டின் நியாபகம் உங்களுக்கு வந்திருக்கலாம்.
அதேபோல் தான் இத்திரைப்படமும். வில்லனை எந்தளவு பவர்ஃபுல்லாக காட்டவேண்டுமோ, அந்தளவு
பவர்ஃபுல்; சயின்டிஸ்ட், பெரும் கோடிஸ்வரர், தொழிலதிபர், அமைச்சரின் மகன் போன்றவைகளில்
ஏதேனும் ஒன்றோ, இரண்டோ வில்லனுக்குரிய அடையாளங்களாக இருக்கும்; ஆனால் இத்திரைப்படத்திலோ
மேற்கண்ட அத்தனை அம்சங்களையும் ஒன்றிணைந்த
வில்லனாக அரவிந்த் சாமி. பத்மஶ்ரீ விருதெல்லாம் வாங்கியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்; எந்தளவுக்கு அறிவை கெட்டவழியில் பயன்படுத்த முடியுமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் பயன்படுத்தும்
அதிபுத்திசாலி. அவரின் உண்மைமுகத்தை உறித்துக்காட்டுவதாக சபதமிடும் போலிஸ் அதிகாரி
ஜெயம் ரவி. அவருடன் ட்ரைனிங்கில் கலந்துகொண்டு நண்பர்களாகும் சில போலிஸ் நண்பர்கள்
+ நயன்தாரா . இவர்கள் தான் படம் நெடு்கிலும் .<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஹாலிவுட்டில்
பெரும்பாலான பக்கா வில்லன்களை உடைய திரைப்படங்களில், ஆரம்பிக்கும் காட்சியே வில்லனிடமிருந்து
ஆரம்பிப்பார்கள். அதேபோல, இப்படத்திலும் வில்லன் ப்ளாஷ்பேக்கில் ஆரம்பித்து, ஹீரோ
இன்ட்ரடக்சனிலேயே ஹீரோவின் கேரக்டரை தெளிவாக விளக்கி, பின் செம சைலன்டாக வில்லனை அறிமுகப்படுத்தி, அவர்களிருவருக்கும் ஒரு தொடர்பை உருவாக்கி, அதனையொட்டித் தொடரும் விளையாட்டுகள்
என பக்காவாக படத்தை நகர்த்தியிருக்கிறார் ராஜா.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அது
என்னவோ தெரியவில்லை! நிஜவாழ்வில் நம்மால் முடியாத காரியத்தை ஸ்டைலாக செய்துபார்ப்பவனைத்
தாம் நாம் ரசிக்கிறோம் . அதேபோல, இத்திரைப்படத்திலும் வில்லத்தனங்களைச் செய்யும் அரவிந்த்
சாமியையே நம் கண்கள் தேடி ஓடுகின்றன. ஜெயம் ரவி உயிரைக் கொடுத்து நடித்தாலும் , அந்த
ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் எனும் விஷயத்தில் ஜெம்மாக சுழன்று நம் மனதில் இடம்பிடித்துவிடுகிறார்
.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஜெயம்
ரவி, தன் பாத்திரத்தின் திறனேற்று சிறப்பாக நடித்திருக்கிறார் . நயன்தாராவின் முகத்தில்
எண்ணெய் வடிவதுபோன்றுதான் மேக்கப் போடுவாங்களா? அல்லது முகமே அப்படித்தானா? நானும்
வில்லு படத்திலிருந்து பார்க்கிறேன் . எண்ணெய் வடிவது போன்றே இருக்கிறது அவரது முகம். என் கண்ணில் குறைபாடா ? அல்லது அவரின் கன்னத்தில் குறைபாடா என்றே தெரியவில்லை. வம்சி
கிருஷ்ணாவிற்கு பெரிய வேலையொன்றுமில்லை . ஹீரோவின்
நண்பர்களாக வரும் கனேஷ் வெங்கட்ராம், ஶ்ரீசரண் போன்றோர்களின் தேர்வும், நடிப்பும்
சரியான அவுட்புட்டைக் கொடுத்திருக்கிறது. தம்பி ராமையா அப்பாவி மினிஸ்டராக ஆங்காங்கே
வந்து சிரிக்கவைக்கிறார். நாசருக்கு பெரிய காட்சிகள் தரப்படவில்லை . <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஒருசில
காட்சிகள் நாம் கெஸ் செய்துவிட்டாலும் பல காட்சிகளில் நம்மையும் திணறடிக்கின்றன . சின்ன
சின்ன கேம்மாக காட்டப்படும் காட்சிகள் ஆங்காங்கே
சலிப்படையச் செய்தாலும் படத்திற்கு பெரிய தடையாக இல்லை. படத்தில் லாஜிக் மிஸ்டேக்
எண்ணிலடங்காதவைகள் இருந்தபொழுதினும் அவையெல்லாம் பெரிய குறையாக தெரியவில்லை என்பதே
உண்மை . <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">படத்தின்
ப்ளஸ்களைக் கணக்கிட்டால் ராம்ஜியின் அட்டகாசமான ஒளிப்பதிவு, ஹிப் ஹாப் தமிழாவின் பிண்ணனி
இசை. ஹிப் ஹாப் தமிழா, பிண்ணனி நன்றாக போட்டிருந்தாலும் பாடல்களில் இரைச்சலை ஏற்றி,
காதை அறுப்பது எதனால் என்று புரியவில்லை; அனிரூத்திடம் இருந்து வந்த பழக்கமோ என்னவோ? ஆங்! சொல்லமறந்துவிட்டேனே! படத்தில் டைட்டில் சாங தவிர ஒரே ஒரு மெலடி மட்டும் தான். அதனால் தம்மடிப்பவர்களுக்கான வாய்ப்புகள்
மிகமிகக் குறைவே !<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இது
ஒரு பக்கா ஆக்சன்-த்ரில்லர் என்னறு சொல்லிவிட முடியாது. குறைகள், பிழைகள் காணப்படும்
திரைப்படம் தான். ஆனால் எதிர்காலத்தில் வரவிருக்கும் இன்டெலிஜென்ஸ் சினிமாக்களுக்கு
ஒரு முன்னோடியாக இத்திரைப்படம் வென்றுவிட்டது என்று கூறலாம். கண்டிப்பாக பார்க்கவேண்டிய
திரைப்படங்களின் வரிசையில் இதையும் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம் . <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 11.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US;">பின்குறிப்பு – படத்தில் காட்டப்படும் ஸ்லைடுகள் படபடவென்று
காட்டப்பட்டுவிடுவதால் , சில இடங்களில் புரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது . கொஞ்சம்
கூர்ந்து பார்த்தால் மட்டுமே ஸ்லைடுகள் வி</span></div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7596312256044809690.post-91843838282046527342015-08-07T22:22:00.003+05:302015-08-07T22:24:58.228+05:30MISSION IMPOSSIBLE 5 – சினிமா விமர்சனம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwnKkftqugPtvHYB0GQlMprv08A0jJCr3xdf2gZF8GQYQ7ru6OFjK47mjpic7uQIHFhYyWaDQZx1AYKEov-A-aRc1fprPWXv-IuZ95hiRbeiFYt2SCo2IEKsQn9jrC2TO0EGtF1-aYFWU/s1600/maxresdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwnKkftqugPtvHYB0GQlMprv08A0jJCr3xdf2gZF8GQYQ7ru6OFjK47mjpic7uQIHFhYyWaDQZx1AYKEov-A-aRc1fprPWXv-IuZ95hiRbeiFYt2SCo2IEKsQn9jrC2TO0EGtF1-aYFWU/s640/maxresdefault.jpg" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div>
<div style="text-align: justify;">
ROUGH NATION</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலில் ஒரு மன்னிப்பு ! வெறித்தனமாக ப்ளாக்கில் இயங்கிவந்த நான் சிலகாலமாக ப்ளாக்கில் எழுதுவதையே மிகமிக குறைத்துவிட்டேன் . காரணம் பெரிதொன்றுமில்லை ; ஒருபக்கம் பர்சனலாக பற்பல பக்கங்களுக்கு எழுதிக்கொண்டிருப்பதாலும் , வலைச்சரத்தில் தொடர்ச்சியாக இருவாரங்கள் எழுதிவந்தமையாலும் ஏற்பட்ட சோர்வே ! இனிவரும் காலங்களில் தொடர்ந்தாற்போல் எழுத உங்களின் ஊக்கம் தேவையென்பதை வேண்டிக்கேட்டுக் கொண்டு இத்திரைப்படத்தினைப் பற்றிப் பார்க்கலாம் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என் சோம்பேறித்தனத்தின் உச்சப்பட்சம் எதுவென்றால் இன்றைய மாதம் தான் . தொடர்ந்தாற்போல் நான்கு மிஷன் இம்பாஸிபிள் சீரிஸையும் , ஜேம்ஸ் பாண்ட் சீரிசையும் தொடர்பதிவாக எழுத மூன்று மாதங்களுக்கு முன்பே ப்ளான் பண்ணியிருந்தாலும் எழுதமுடியாமல் போய்விட்டது . மிக முக்கியமாக நான் விரும்பும் சீரிஸ்களில் மிஷன் இம்பாஸிபளுக்கு என்றும் தனியிடம் உண்டு . என்ன காரணமென்று யோசித்தால் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை ; நம்மை ஆச்சரியப் படுத்தவைக்கும் கதையோ , திரைக்கதையோ இதுவரை வந்த எம்.ஐ சீரிஸ் படங்களில் இல்லை . அதிலும் குறிப்பாக லாஜிக் என்ற வஸ்துவை நீங்கள் கண்டறிந்தால் நோபல் பரிசே அளிக்கலாம் . இவ்வளவு ஓட்டையிருப்பினும் எம்.ஐ சீரிஸ் எனக்குப் பிடித்ததற்கு காரணமென்றால் டாம் க்ரூஸ் மற்றும் நம்பவே முடியாத விஷயங்களை 2 மணிநேரம் நம்பவைத்து நம்மை ஏமாற்றும் வித்தை . அதற்காக இந்த சீரிஸின் அனைத்துப் படங்களும் எனக்கு மிகமிக பிடிக்கும் . குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் என்றால் உயிர் எனக்கு . இரண்டாம் பாகத்தை ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ்களில் பெஸ்ட்டாக நான் நினைக்கும் டை அனதர் டேயுடன் ஒப்பிடும் அளவுக்கு எனக்கு பிடிக்கும் . இப்படிப்பட்ட படத்தினைப் பற்றி தொடர்பதிவு எழுதாமல் போனால் நானெல்லாம் ஹாலிவுட் திரை விமர்சகன் (?) என்று சொல்வதே கேவலம் . ஆனால் ஒரே ஒரு ஆறுதல் , மிஷன் சீரிஸுக்கும் , ஜேம்ஸ் பாண்ட் சீரிஸுக்கும் தொடர்பதிவு எழுதி விளக்கவேண்டிய அவசியமில்லை என்பதே ! </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த MI சீரிஸின் எல்லா பாகங்களையும் கவனித்துப் பார்த்தவர்களுக்கு ஒன்று கண்டிப்பாக விளங்கும் ; அது துரோகம் . ஏற்கனவே ஏஜென்டாக இருப்பவர்கள் அரசின் நடவடிக்கையின்மேல் ஏற்படும் வெறுப்பு காரணமாகவோ , அல்லது பணத்தாசை காரணமாகவோ தங்கள் ஏஜென்ட் திறமையைத் தவறான வழிகளில் ஈடுபடுத்துவார்கள் . அதை நம் ஈதன் ஹன்ட் (டாம் க்ரூஸ்) அட்டகாசமான விட்ஜெட் மற்றும் கேட்ஜெட்களைக்கொண்டு கண்டுபிடிப்பதே திரைப்படம் . இதில் மிகமுக்கியமான விஷயமென்னவெனில் தலைவர் சார்ந்திருக்கும் இம்பாசிபிள் மிஷன் ஃபோர்ஸ் (IMF) பெரும்பாலும் ஹீரோவையே குற்றவாளியாக எண்ணி , வில்லன்களை விட்டுவிட்டு ஹீரோவை வேட்டையாடத் துரத்தும் . கடைசியில் ஹீரோ நல்லவர் என்று சான்றிதழ் கொடுத்து மறுபடியும் வேலையில் சேர்த்துக்கொண்டு அடுத்த பாகத்தினில் மீண்டும் ஹீரோவை வில்லனாக்கி அழகு பார்க்கும் . ஹீரோவோ வழக்கம்போல ஐ.எம்.எஃப்க்கு டிமிக்கி கொடுத்துவிட்டி ரியல் வில்லனைக் கண்டுபிடிப்பார் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ROUGH NATION-ஐ பார்க்கும்முன் முந்தைய MI சீரிஸ்களை ஒருநோட்டம் விட்டு வந்துவிடலாம் . ஏன்டா இப்படி எங்கள சாவடிக்கற என்று புலம்புபவர்கள் , படத்தின் கதையைப்பற்றி தெரிந்துகொள்ள இந்த பாராவையும் இதற்கடுத்த பாராவையும் ஸ்கிப்பிவிட்டுச் செல்லுங்கள் . முதல்பாகத்தில் தமக்கு கமேன்ட் ஆபிசராக இருப்பவரே வில்லனாகிவிட , அவரைச் சுரங்கப்பாதையில் ஓடும் ரயிலில் , ஹெலிகாப்டரில் பறதுகொண்டு முறியடிக்க , படமோ மெகாப்ளாக் பஸ்டர் ஹிட்டைப் பெற்றது . அதுவரை ஜேம்ஸ்பான்ட் சீரிஸில் மட்டும் வந்த ஸ்பை கம் ஆக்சன் வகையறாவை பக்காவாக உள்வாங்கி முதல்பாகத்தில் வெற்றிக்கொடியை நாட்டினார் ப்ரைன் டீ பால்மா . பெரும்பாலும் முதல்பாகத்தில் மாபெரும் வெற்றிபெறும் திரைப்படங்கள் , இரண்டாம் பாகத்தில் மரண அடி வாங்கிவிடும் . எடுத்துக்காட்டாக ஃபென்டாஸ்டிக் போர் , ஹல்க் , ஆரம்பகால பேட்மேன் திரைப்படங்கள் போன்ற படங்களைக் குறிப்பிடலாம் . ஆனால் முதல்பாகத்திற்கு இணையாக , ஏன் அதைவிடச் சிறப்பாக எடுக்கப்பட்டது இந்த சீரிஸின் இரண்டாம் திரைப்படம் . ராபர்ட் டௌன் திரைக்கதையை , செம ஸ்டைலிஷாக , பரபர ஆக்சனுடன் இயக்கி மற்றொரு ப்ளாக்பஸ்டரைக் கொடுத்து , எம்.ஐ சீரிஸை கிளர்ந்தெழச் செய்தார் ஜான் வூ . அதன்பின் வந்த மூன்றாம் மற்றும் நான்காம் பாகங்களில் என்னதான் டாம்க்ரூஸின் அட்டகாசமான சண்டைக்காட்சிகள் இருப்பினும் , இரு திரைப்படங்களும் முதலிரண்டு பாகங்கள் அளவுக்கு இல்லை என்பதே உண்மை . நான்காம் பாகத்தில் மெய்சிலிர்க்கவைக்கும் புர்ஜ் ஹோட்டல் ஸ்டன்ட் நம்மைப் பரவசப்படுத்திய அளவுக்கு , அத்திரைப்படம் பரவசப்படுத்தியதா என்றால் இல்லை . டாம் க்ரூஸ் தன்னை நிருபித்தாகவேண்டிய கட்டாயம் அதிகமாயிருந்ததாலோ என்னவோ , எனக்கு இத்திரைப்படம் ஒருபெரும் எதிர்பார்ப்பு லிஸ்ட்டில் ஒன்று</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி எம்.ஐ சீரிஸுக்கு சாவு மணி அடிக்க இருக்கும் நேரத்தில் வந்த திரைப்படம்தான் ROUGH NATION ( டைட்டில் தமிழில் எவன் ட்ரான்ஸ்லேட் பண்ணினானோ , அவன் மண்டையைப் பிழக்கவேண்டுமென்று தோன்றுகிறது எனக்கு . முரட்டு தேசம் ! எப்படி டைட்டில் ? இவர்களின் தமிழார்வத்துக்கு ஒரு வரைமுறையே இல்லை ) . படத்தை பக்காவாக எடுக்கவேண்டும் என்ற முழுமூச்சுடன் டாம் க்ரூஸ் இம்முறை வாய்ப்பளித்தது ஏற்கனவே நடித்த ஜாக் ரீச்சர் திரைப்படத்தின் இயக்குநர் க்றிஸ்டோபர் மெக்கோரே . இவரைப்பற்றியும் சாதாரணமாக சொல்லிவிடமுடியாது ; ஹிட்லர் காலத்திய பிக்சனான VALKYRIE , செத்து செத்து விளையாடிய EDGE OF TOMMORROW , ப்ரைன் சிங்கருக்கு வாழ்வளித்த USUAL SUSPECTS , செவ்வாயில் நடத்திய அட்வெஞ்சர் திரைப்படமான ஜாக் த ஜெய்ன்ட் போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் . ஆனால் இயக்கிய திரைப்படங்கள் கைகொடுக்கவில்லை என்பது வேறு .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏதேதோ எழுதிவிட்டு படத்தின் கதையை எழுதாமல் விட்டுவிட்டேனே ! சின்டிகேட் எனும் தீவிரவாத அமைப்பு இருப்பதாக டாம்க்ரூஸ் கண்டறிகிறார். ஆனால் அப்படிஒரு அமைப்பே இல்லையென்றும் ஐ.எம்.எஃப்-ன் மோசமான நடத்தையினால் தான் ரஷ்யாவில் க்ரெம்ளின் (சென்ற பாகம்) மாளிகை வெடிக்கப்பட்டது என்றெல்லாம் கூறி , சி.ஐ.ஏ-வுடன் ஐ.எம்.எஃப் இணைக்கப்படுகிறது . ஈதன் ஹன்ட் குற்றவாளியாகிறார் . அவர் எப்படி சின்டிகேட் இருப்பதை அம்பலப்படுத்தி , ஐ.ம்.எஃபை மீண்டும் மீட்கிறார் என்பதே கதை . ஆனால் அதை எடுத்தவிதம் , நிச்சயமாக இம்பாஸிபிள் தான் . முதல்காட்சியில் ப்ளைட்டில் பறந்துகொண்டு டாம் க்ரூஸ் இன்னும் தனக்கு 52 வயதாகவில்லை என்பதை கெத்தாக நிருபித்திருக்கிறார் . ச்சும்மா இல்லை ! இருமுறை இந்த ஷாட் 5000 அடியில் பறந்துகொண்டு எடுக்கப்பட்டது . தண்ணீருக்குள் சிப் இன்செர்ட் செய்யப்போகும் காட்சிகள் , பைக் ஸ்டன்ட் , கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகள் எல்லாம் கிளாஸ் . ஆங்காங்கே ஹுயுமரும் நம்மைப் பரவசப்படுத்துகிறது . </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு படத்தில் வில்லன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு , இப்படம் சிறந்த உதாரணம் . இத்தனைக்கும் , வில்லன் ஒருகொலைகூட செய்யமாட்டார் . ஆனால் அவரைப் பார்த்தால் நமக்கும் ஒரிஜினல் வில்லனைப் பார்ப்பது போலிருக்கும் . ஹீரோயினை மிகச்சிறப்பாக உபயோகித்த சில படங்களில் இதுவும் ஒன்று . ஜேம்ஸ் பான்ட் படங்களில் வரும் அழகிகளைப் போல் ஆண்களை அங்கடித்து வீழ்த்தாமல் , ரியலாகவே சண்டை போட்டு நம்மை பரவசப்படுத்துகிறார் ரிபாக்கா. அதுவும் அவரின் அழகிருக்கிரதே !என்ன காரணத்தாலோ பாகுபலியில் தமன்னாவின் ஆடைஅவிழ்ப்பு காட்டப்பட்டதைப் போன்றே இப்படத்திலும் ஒரு காட்சி வருகிறது ; அதைப்பார்த்தால் நமக்கு ஏக்கப்பெருமூச்சு தான் வரும் . பெஞ்சாக வரும் சைமனுக்கு இப்படத்தில் நடிக்க நிறைய வாய்ப்பு ; கிட்டத்தட்ட செகன்ட் ஹீரோவே இவர்தான் . ஹுயுமர் எட்டிப்பார்ப்பதும் இவர்பேசும் வசனங்களில்தான் . முதல் பாகத்தில் லூதராக வந்த விங்க் ரேம்ஸ் , இப்படத்திலும் வருகிறார். இருப்பினும் அவரது மூப்பு ஆங்காங்கே எட்டிப்பார்க்கினது. வில்லன் லேனாக சீன் ஹாரிஸ் . போன் டாக்டர் என்றவொரு அல்லக்கை ஆங்காங்கே வருகிறது . அவனுடன் டாம் க்ரூஸ் போடும் சண்டைக்காட்சியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் அல்வாகொடுத்துவிடுகிறார்கள் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ராபர்ட் எல்ஸ்விட்டின் ஒளிப்பதிவு படத்தின் பெரும்பலங்களில் ஒன்று. ஸ்டன்ட் காட்சிகளைத் தத்ரூபமாகவும் , சிஜிக்கு ஏற்றவாறும் எடுத்திருப்பதில் இவரது பங்கு தெரிகிறது .ஜோ க்ரீமரின் பிண்ணனி இசை படத்திற்கு கூடுதல் பலம் . டைட்டில் போடும்போதே ஒலிக்கும் இசையும் , அதைத்தொடர்ந்து டாம் க்ரூஸ் ஊசரவல்லி என்.டி.ஆர் போல் ஓடி வந்து இன்ட்ரோ கொடுக்கும் இடமும் அதகளம் . அதைத்தொடர்ந்தாற்போல் , உங்களுக்கு ஒரு மிஷன் என்று ஐ.எம்.எஃப் சொல்வதுபோன்றதொரு டிஸ்க்கில் வில்லன் பேசும்போது டாம் க்ரூஸினைப் போன்றே நாமும் அதிர்ச்சியாகிறோம் . பைக் ஜேசிங் காட்சியில் டாம் க்ரூஸின் ஸ்டைலிருக்கிறதே ! இதுதான் டாம் க்ரூஸ் . ரேபான் கிளாஸினை மாட்டிக்கொண்டு , சூப்பரான ஒரு பாரின் பைக்கில் ஏறி படுத்துக்கொண்டு , படுவேகமாக ஓட்டிக்கொண்டு வரும்போது முடிபறக்கும் பாருங்கள் ; அதுதான் க்ரூஸ் . இரண்டாம் பாகத்தில் இதேபோன்றதொரு பைக் ஸ்டன்டில் பங்க் விட்டுக்கொண்டு வரும் டாம் க்ரூஸைப் பார்த்து ஜொள்ளுவிட்ட பெண்களை விட ஆண்கள் அதிகம் . அதைவிடச்சிறப்பான பைக் சேசிங் ; ஆனால் பங்க் மட்டும் மிஸ்ஸிங் . இருந்தாலும் அந்த ஸ்டைல் துளிகூட குறையவில்லை . அந்த ஸ்டன்டைப் பார்த்ததும் எனக்கு படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் பேசிய வசனம் தான் நியாபகம் வந்தது .கூடுதல் செய்தி – அந்த ஸ்டன்டில் ஏற்பட்ட விபத்தில் தலைவர் , தன் முட்டிகளை உடைத்துக்கொண்டார் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எப்படி இருப்பினும் எம்.ஐ சீரிஸின் மற்றொரு எழுச்சியாக இத்திரைப்படம் எனக்குத் தோன்றுகிறது கடந்த இருபாகங்களில் கைவிட்டதை இம்முறை டாம் க்ரூஸ் பிடித்துவிட்டார் . முதல் பாகத்தை விஞ்சி இருந்தாலும் இரண்டாம் பாகத்தை மிஞ்ச முடியாது என்பது வேறு கதை . எம்.ஐ-யின் ரசிகர்களுக்கு இது ஒரு அட்டகாசமான ஆக்சன் திரைப்படம் . டாம் க்ரூஸின் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ஆக்சன் விருந்து . சாதாரண ரசிகர்களுக்கு இது ஒருமுறை பார்க்கக்கூடிய , பரவசப்படுத்தக்கூடிய ஆக்சன் திரைப்படம் . தமிழ் டப்பிங் சுமார் தான் . இன்னொருமுறை ஆங்கிலத்தில் படத்தினைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலிருந்தாலும் சேலத்தில் ஆங்கிலத்தில் ரிலிசாகவில்லை .முடிந்தவரை ஆங்கிலத்தில் பார்க்கமுயலுங்கள் . நல்ல சப்-டைட்டில் திரையரங்கு என்றால் உத்தமம் .</div>
</div>
மெக்னேஷ் திருமுருகன்http://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.com8